sivasiva.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.010
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் இந்தளம் (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=FGwyom8Wso4 |
5.073
திருநாவுக்கரசர்
தேவாரம்
தங்கு அலப்பிய தக்கன் பெரு திருக்குறுந்தொகை (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=BJKSky-aB2U |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.010  
சீரின் ஆர் மணியும்(ம்) அகில்
பண் - இந்தளம் (திருத்தலம் திருமங்கலக்குடி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு புராணவரதேசுவரர் திருவடிகள் போற்றி )
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப் பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே. | [1] |
பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே, மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட, அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே. | [2] |
கருங்கையானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார், மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடு விரும்பி ஏத்த வல்லார் வினைஆயின வீடுமே. | [3] |
பறையினோடு ஒலிபாடலும் ஆடலும் பாரிடம், மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக் குறைவு இலா நிறைவே! குணம் இல் குணமே! என்று முறையினால் வணங்கு(ம்)மவர் முன்நெறி காண்பரே. | [4] |
ஆனில் அம்கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி, ஓர் மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி ஊன் இல்வெண்தலைக் கை உடையான் உயர் பாதமே ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே. | [5] |
தேனும் ஆய் அமுதுஆகி நின்றான், தெளி சிந்தையுள வானும் ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக் கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார் ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும் வகை, அதே. | [6] |
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில் ஆகவே வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி ஆளும் ஆதிப்பிரான், அடிகள் அடைந்து ஏத்தவே, கோளும் நாள் அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே | [7] |
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட, வலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப் புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வான் உலகம் புக வல்லவர்; காண்மினே! | [8] |
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன், மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே. | [9] |
மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர், பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச் செய்யமேனிச் செழும் புனல்கங்கை செறி சடை ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே. | [10] |
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய எந்தையை, எழில் ஆர் பொழில் காழியர்காவலன் சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல் முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.073  
தங்கு அலப்பிய தக்கன் பெரு
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருமங்கலக்குடி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு புராணவரதேசுவரர் திருவடிகள் போற்றி )
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு மங்கலக்குடி மேய மணாளனே. | [1] |
காவிரி(ய்)யின் வடகரைக் காண்தகு மா விரி(ய்)யும் பொழில் மங்கலக்குடித் தே அரி(ய்)யும் பிரமனும் தேட ஒணாத் தூ எரிச்சுடர்ச் சோதியுள் சோதியே! | [2] |
மங்கலக்குடி ஈசனை மாகாளி, வெங்கதிர்ச் செல்வன், விண்ணொடு மண் உளோர், சங்கு சக்கரதாரி, சதுமுகன், அங்கு அகத்தியனும்(ம்), அர்ச்சித்தார் அன்றே. | [3] |
மஞ்சன், வார்கடல் சூழ் மங்கலக்குடி, நஞ்சம் ஆர் அமுது ஆக நயந்து கொண்டு, அஞ்சும் ஆடல் அமர்ந்து, அடியேன் உடை நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே! | [4] |
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி- செல்வம் மல்கு சிவநியமத்தராய், செல்வம் மல்கு செழு மறையோர் தொழ, செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே. | [5] |
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய பின்னுவார் சடைப் பிஞ்ஞகன் தன் பெயர் உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் துன்னுவார், நன்நெறி தொடர்வு எய்தவே. | [6] |
மாதரார் மருவும் மங்கலக்குடி ஆதி நாயகன், அண்டர்கள் நாயகன், வேதநாயகன், வேதியர் நாயகன பூதநாயகன், புண்ணியமூர்த்தியே. | [7] |
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி, விண்ட தாதையைத் தாள் அற வீசிய சண்ட நாயகனுக்கு அருள்செய்தவன் துண்ட மாமதி சூடிய சோதியே. | [8] |
கூசுவார் அலர், குண்டர், குணம் இலர், நேசம் ஏதும் இலாதவர், நீசர்கள், மாசர்பால்- மங்கலக்குடி மேவிய ஈசன் வேறுபடுக்க-உய்ந்தேன் அன்றே! | [9] |
மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன், தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து, அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே! | [10] |