சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

4.001 திருநாவுக்கரசர் - தேவாரம் -கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல  (திருவதிகை வீரட்டானம்)  
4.002 திருநாவுக்கரசர் - தேவாரம் -சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்  (திருவதிகை வீரட்டானம்)  
4.003 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்  (திருவையாறு)  
4.004 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்  (திருவாரூர்)  
4.005 திருநாவுக்கரசர் - தேவாரம் -மெய் எலாம் வெண் நீறு  (திருவாரூர்)  
4.006 திருநாவுக்கரசர் - தேவாரம் -வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்  (திருக்கழிப்பாலை)  
4.007 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
4.008 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிவன் எனும் ஓசை அல்லது,  (பொது - சிவனெனுமோசை)  
4.009 திருநாவுக்கரசர் - தேவாரம் -தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  (பொது - திருஅங்கமாலை)  
4.010 திருநாவுக்கரசர் - தேவாரம் -முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,  (திருவதிகை வீரட்டானம்)  
4.011 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்  (பொது - நமசிவாயத் திருப்பதிகம்)  
4.012 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல் மாலை பயில்கின்ற குயில்  (திருப்பழனம்)  
4.013 திருநாவுக்கரசர் - தேவாரம் -விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்  (திருவையாறு)  
4.014 திருநாவுக்கரசர் - தேவாரம் -பருவரை ஒன்று சுற்றி அரவம்  (பொது -தசபுராணம்)  
4.015 திருநாவுக்கரசர் - தேவாரம் -பற்று அற்றார் சேர் பழம்  (பாவநாசத் திருப்பதிகம்)  
4.016 திருநாவுக்கரசர் - தேவாரம் -செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி  (திருப்புகலூர்)  
4.017 திருநாவுக்கரசர் - தேவாரம் -எத் தீப் புகினும் எமக்கு  (திருவாரூர்)  
4.018 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்று கொல் ஆம் அவர்  (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம்)  
4.019 திருநாவுக்கரசர் - தேவாரம் -சூலப் படை யானை; சூழ்  (திருவாரூர்)  
4.020 திருநாவுக்கரசர் - தேவாரம் -காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்  (திருவாரூர்)  
4.021 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்து விதானம்; மணி பொன்  (திருவாரூர்)  
4.022 திருநாவுக்கரசர் - தேவாரம் -செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா  (கோயில் (சிதம்பரம்))  
4.023 திருநாவுக்கரசர் - தேவாரம் -பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!  (கோயில் (சிதம்பரம்))  
4.024 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரும்பு கொப்பளித்த யானை ஈர்  (திருவதிகை வீரட்டானம்)  
4.025 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெண் நிலா மதியம் தன்னை  (திருவதிகை வீரட்டானம்)  
4.026 திருநாவுக்கரசர் - தேவாரம் -நம்பனே! எங்கள் கோவே! நாதனே!  (திருவதிகை வீரட்டானம்)  
4.027 திருநாவுக்கரசர் - தேவாரம் -மடக்கினார்; புலியின்தோலை; மா மணி  (திருவதிகை வீரட்டானம்)  
4.028 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்பு எலாம் இளைய காலம்  (திருவதிகை வீரட்டானம்)  
4.029 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு  (திருச்செம்பொன்பள்ளி)  
4.030 திருநாவுக்கரசர் - தேவாரம் -நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை  (திருக்கழிப்பாலை)  
4.031 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொள்ளத்த காயம் ஆய பொருளினை,  (திருக்கடவூர் வீரட்டம்)  
4.032 திருநாவுக்கரசர் - தேவாரம் -உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர  (திருப்பயற்றூர்)  
4.033 திருநாவுக்கரசர் - தேவாரம் -இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
4.034 திருநாவுக்கரசர் - தேவாரம் -தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
4.035 திருநாவுக்கரசர் - தேவாரம் -காடு உடைச் சுடலை நீற்றார்;  (திருவிடைமருதூர்)  
4.036 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆடினார் ஒருவர் போலும்; அலர்  (திருப்பழனம்)  
4.037 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலனை வீழச் செற்ற கழல்  (திருநெய்த்தானம்)  
4.038 திருநாவுக்கரசர் - தேவாரம் -கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்  (திருவையாறு)  
4.039 திருநாவுக்கரசர் - தேவாரம் -குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்  (திருவையாறு)  
4.040 திருநாவுக்கரசர் - தேவாரம் -தான் அலாது உலகம் இல்லை;  (திருவையாறு)  
4.041 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொய் விராம் மேனி தன்னைப்  (திருச்சோற்றுத்துறை)  
4.042 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்  (திருத்துருத்தி)  
4.043 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறை அது பாடிப் பிச்சைக்கு  (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்))  
4.044 திருநாவுக்கரசர் - தேவாரம் -நம்பனை, நகரம் மூன்றும் எரியுண  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
4.045 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத  (திருவொற்றியூர்)  
4.046 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து  (திருவொற்றியூர்)  
4.047 திருநாவுக்கரசர் - தேவாரம் -கனகம் மா வயிரம் உந்தும்  (திருக்கயிலாயம்)  
4.048 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடல் அகம் ஏழினோடும் பவனமும்  (திருஆப்பாடி)  
4.049 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,  (திருக்குறுக்கை வீரட்டம்)  
4.050 திருநாவுக்கரசர் - தேவாரம் -நெடிய மால் பிரமனோடு நீர்  (திருக்குறுக்கை வீரட்டம்)  
4.051 திருநாவுக்கரசர் - தேவாரம் -நெற்றி மேல் கண்ணினானே! நீறு  (திருக்கோடி (கோடிக்கரை))  
4.052 திருநாவுக்கரசர் - தேவாரம் -படு குழிப் பவ்வத்து அன்ன  (திருவாரூர்)  
4.053 திருநாவுக்கரசர் - தேவாரம் -குழல் வலம் கொண்ட சொல்லாள்  (திருவாரூர்)  
4.054 திருநாவுக்கரசர் - தேவாரம் -பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,  (திருப்புகலூர்)  
4.055 திருநாவுக்கரசர் - தேவாரம் -தெண் திரை தேங்கி ஓதம்  (திருவலம்புரம்)  
4.056 திருநாவுக்கரசர் - தேவாரம் -மா-இரு ஞாலம் எல்லாம் மலர்  (திருவாவடுதுறை)  
4.057 திருநாவுக்கரசர் - தேவாரம் -மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்  (திருவாவடுதுறை)  
4.058 திருநாவுக்கரசர் - தேவாரம் -கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))  
4.059 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்  (திருஅவளிவணல்லூர்)  
4.060 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறை அணி நாவினானை, மறப்பு  (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை))  
4.061 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,  (திருஇராமேச்சுரம்)  
4.062 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!  (திருஆலவாய் (மதுரை))  
4.063 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்  (திருவண்ணாமலை)  
4.064 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;  (திருவீழிமிழலை)  
4.065 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோடு உலாம் மலர்கள் தூவித்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))  
4.066 திருநாவுக்கரசர் - தேவாரம் -கச்சை சேர் அரவர் போலும்;  (திருநாகேச்சரம்)  
4.067 திருநாவுக்கரசர் - தேவாரம் -வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்  (திருக்கொண்டீச்சரம்)  
4.068 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள்ள நீர்ச் சடையர் போலும்;  (திருவாலங்காடு (பழையனூர்))  
4.069 திருநாவுக்கரசர் - தேவாரம் -செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,  (திருக்கோவலூர்)  
4.070 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்  (திருநனிப்பள்ளி)  
4.071 திருநாவுக்கரசர் - தேவாரம் -மனைவி தாய் தந்தை மக்கள்  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
4.072 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்  (திருஇன்னம்பர்)  
4.073 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருந் திரு இமவான் பெற்ற  (திருச்சேறை (உடையார்கோவில்))  
4.074 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்  (பொது -நினைந்த திருநேரிசை)  
4.075 திருநாவுக்கரசர் - தேவாரம் -தொண்டனேன் பட்டது என்னே! தூய  (பொது -தனித் திருநேரிசை)  
4.076 திருநாவுக்கரசர் - தேவாரம் -மருள் அவா மனத்தன் ஆகி  (பொது -தனித் திருநேரிசை)  
4.077 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடும்பகல் நட்டம் ஆடி, கையில்  (பொது -தனித் திருநேரிசை)  
4.078 திருநாவுக்கரசர் - தேவாரம் -வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்  (பொது -குறைந்த நேரிசை)  
4.079 திருநாவுக்கரசர் - தேவாரம் -தம் மானம் காப்பது ஆகித்  (பொது -குறைந்த நேரிசை)  
4.080 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாளை உடைக் கமுகு ஓங்கி,  (கோயில் (சிதம்பரம்))  
4.081 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரு நட்ட கண்டனை, அண்டத்  (கோயில் (சிதம்பரம்))  
4.082 திருநாவுக்கரசர் - தேவாரம் -பார் கொண்டு மூடிக் கடல்  (சீர்காழி)  
4.083 திருநாவுக்கரசர் - தேவாரம் -படை ஆர் மழு ஒன்று  (சீர்காழி)  
4.084 திருநாவுக்கரசர் - தேவாரம் -எட்டு ஆம் திசைக்கும் இரு  (பொது -ஆருயிர்த் திருவிருத்தம்)  
4.085 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலை எழுந்து, கடிமலர் தூயன  (திருச்சோற்றுத்துறை)  
4.086 திருநாவுக்கரசர் - தேவாரம் -செற்றுக் களிற்று உரி கொள்கின்ற  (திருவொற்றியூர்)  
4.087 திருநாவுக்கரசர் - தேவாரம் -மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்  (திருப்பழனம்)  
4.088 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாலினை மால் உற நின்றான்,  (திருப்பூந்துருத்தி)  
4.089 திருநாவுக்கரசர் - தேவாரம் -பார் இடம் சாடிய பல்  (திருநெய்த்தானம்)  
4.090 திருநாவுக்கரசர் - தேவாரம் -கையது, கால் எரி நாகம்,  (திருவேதிகுடி)  
4.091 திருநாவுக்கரசர் - தேவாரம் -குறுவித்தவா, குற்றம் நோய் வினை  (திருவையாறு)  
4.092 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து  (திருவையாறு)  
4.093 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானவர் தானவர் வைகல் மலர்  (திருக்கண்டியூர்)  
4.094 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்  (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்))  
4.095 திருநாவுக்கரசர் - தேவாரம் -வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்  (திருவீழிமிழலை)  
4.096 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்  (திருச்சத்திமுற்றம்)  
4.097 திருநாவுக்கரசர் - தேவாரம் -அட்டுமின், இல் பலி! என்று  (திருநல்லூர்)  
4.098 திருநாவுக்கரசர் - தேவாரம் -அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,  (திருவையாறு)  
4.099 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதுவித்தாய், முன் அற உரை;  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
4.100 திருநாவுக்கரசர் - தேவாரம் -மன்னும் மலைமகள் கையால் வருடின;  (திருஇன்னம்பர்)  
4.101 திருநாவுக்கரசர் - தேவாரம் -குலம் பலம் பாவரு குண்டர்முன்னே  (திருவாரூர்)  
4.102 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,  (திருவாரூர்)  
4.103 திருநாவுக்கரசர் - தேவாரம் -வடிவு உடை மாமலைமங்கை பங்கா!  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
4.104 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாசு இல் ஒள்வாள் போல்  (திருவதிகை வீரட்டானம்)  
4.105 திருநாவுக்கரசர் - தேவாரம் -தன்னைச் சரண் என்று தாள்  (திருப்புகலூர்)  
4.106 திருநாவுக்கரசர் - தேவாரம் -நெய்தல் குருகு தன் பிள்ளை  (திருக்கழிப்பாலை)  
4.107 திருநாவுக்கரசர் - தேவாரம் -மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த  (திருக்கடவூர் வீரட்டம்)  
4.108 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாணிக்கு உயிர் பெறக் கூற்றை  (திருமாற்பேறு)  
4.109 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொன் ஆர் திருவடிக்கு ஒன்று  (திருத்தூங்கானைமாடம்)  
4.110 திருநாவுக்கரசர் - தேவாரம் -சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,  (பசுபதித் திருவிருத்தம்)  
4.111 திருநாவுக்கரசர் - தேவாரம் -விடையும் விடைப் பெரும் பாகா!  (பொது -சரக்கறை திருவிருத்தம்)  
4.112 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;  (பொது -தனித் திருவிருத்தம்)  
4.113 திருநாவுக்கரசர் - தேவாரம் -பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்  (பொது -தனித் திருவிருத்தம்)  

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.001  
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல  
Tune - கொல்லி   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[1]
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்!
புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,
என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.002  
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்  
Tune - காந்தாரம்   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

[1]
சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும்,
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற
வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.003  
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்  
Tune - காந்தாரம்   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.



[1]
திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன்,
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!



[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.004  
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்  
Tune - காந்தாரம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,
ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,
ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.

[1]
பை அம் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும்,
கை அஞ்சு -நான்கு உடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐ-அஞ்சின் அப் புறத்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.005  
மெய் எலாம் வெண் நீறு  
Tune - காந்தாரம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யல் ஆம் என்று எண்ணி, உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு,
கொய் உலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால்-தொழாது ஒழிந்து,-கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே!

[1]
மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்-ஐந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித்த விசின் மிசை இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை, ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை, கருதாதே,-கரும்பு இருக்க இரும்பு கடித்து எயத்த ஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.006  
வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்  
Tune - காந்தாரம்   (Location: திருக்கழிப்பாலை God: பால்வண்ணநாதர் Goddess: வேதநாயகியம்மை)

வன பவளவாய் திறந்து, வானவர்க்கும் தானவனே! என்கின்றாளால்;
சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன் என்கின்றாளால்;
அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால்-
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ!

[1]
அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே! என்கின்றாளால்;
சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான் என்கின்றாளால்-
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.007  
கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;  
Tune - காந்தாரம்   (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)

கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால்
விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை;
அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி,
இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

[1]
அடுத்த ஆனை உரித்தானை; அருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானை; குலவரையே சிலை ஆகக் கூர் அம்பு
தொடுத்தானை, புரம் எரிய; சுனை மல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை;-என் மனத்தே வைத்தேனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.008  
சிவன் எனும் ஓசை அல்லது,  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: பொது - சிவனெனுமோசை God: Goddess: )

சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில்-திரு நின்ற செம்மை உளதே?-
அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்;
கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்;
அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.

[1]
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது, ஒர் காது சுரிசங்கம் நின்று புரள,
விதி விதி வேத கீதம் ஒரு பாடும் ஓத, ஒரு பாடு மெல்ல நகுமால்;
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர்
இது இவர் வண்ண வண்ணம்; இவள் வண்ண வண்ணம்; எழில் வண்ண வண்ணம்,  இயல்பே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.009  
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  
Tune - சாதாரி   (Location: பொது - திருஅங்கமாலை God: Goddess: )

தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!

[1]
உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது,
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.010  
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,  
Tune - காந்தாரம்   (Location: திருவதிகை வீரட்டானம் God: Goddess: )

முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, வெள்ள நீா
வளைத்து எழு சடையினர்; மழலை வீணையர்;
திளைத்தது ஓர் மான் மறிக் கையர்-செய்ய பொன்
கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே.

[1]
பூண்ட தேர் அரக்கனை, பொரு இல் மால்வரைத்
தூண்டு தோள் அவை பட, அடர்த்த தாளினார்
ஈண்டு நீர்க் கமலவாய், மேதி பாய் தர,
கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.011  
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்  
Tune - காந்தாரம்   (Location: பொது - நமசிவாயத் திருப்பதிகம் God: Goddess: )

சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!

[1]
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ,
நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.012  
சொல் மாலை பயில்கின்ற குயில்  
Tune - பழந்தக்கராகம்   (Location: திருப்பழனம் God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)

சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே-
பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்,
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப்
பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ?

[1]
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்,
பஞ்சிக்கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய்!-கோடு இயையே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.013  
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்  
Tune - பழந்தக்கராகம்   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும்
இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்;
தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான்,
அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[1]
கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத்
திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி,
பெருவரை சூழ் வையகத்தார், பேர் நந்தி என்று ஏத்தும்
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.014  
பருவரை ஒன்று சுற்றி அரவம்  
Tune - பழம்பஞ்சுரம்   (Location: பொது -தசபுராணம் God: Goddess: )

பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயம் ஆய்,
திரு நெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட, மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய், பிரானே! எனலும்,
அருள் கொடு மா விடத்தை, எரியாமல், உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே.

[1]
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக, நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை, எந்தை பெருமான், உகந்து மிகவும்
சுடர் அடியான் முயன்று சுழல் வித்து, அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி, ஆழியவனுக்கு அளித்த அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.015  
பற்று அற்றார் சேர் பழம்  
Tune - பழம்பஞ்சுரம்   (Location: பாவநாசத் திருப்பதிகம் God: Goddess: )

பற்று அற்றார் சேர்| பழம் பதியை,| பாசூர் நிலாய| பவளத்தை,
சிற்றம்பலத்து எம் |திகழ்கனியை,| தீண்டற்கு அரிய |திரு உருவை,
வெற்றியூரில்| விரிசுடரை,| விமலர்கோனை, |திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் | உத்தமனை,| உள்ளத்துள்ளே | வைத்தேனே.

[1]
புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை,
வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை,
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை,
வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.016  
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி  
Tune - இந்தளம்   (Location: திருப்புகலூர் God: அக்கினீசுவரர் Goddess: கருந்தார்குழலியம்மை)

செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.

[1]
கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி
இறுத்தார், இலங்கையர் கோன் முடிபத்தும்,
அறுத்தார், புலன் ஐந்தும்; ஆயிழை பாகம்
பொறுத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.017  
எத் தீப் புகினும் எமக்கு  
Tune - இந்தளம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை;
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்;
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.

[1]
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன் அருள் சூடி எள் காதும் இராப்பகல்,
மன்னவர் கின்னரர் வானவர் தாம், தொழும்
அன்னவர்-ஆரூர் அரநெறியாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.018  
ஒன்று கொல் ஆம் அவர்  
Tune - இந்தளம்   (Location: பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் God: Goddess: )

ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை;
ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்;
ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது;
ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.

[1]
பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்;
பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன;
பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை;
பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.019  
சூலப் படை யானை; சூழ்  
Tune - சீகாமரம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

சூலப் படை யானை; சூழ் ஆக வீழ் அருவி
கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை;
பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை; பாங்கு ஆய
ஆலத்தின் கீழானை;-நான் கண்டது ஆரூரே.

[1]
தாள் தழுவு கையன், தாமரைப் பூஞ்சேவடியன்,
கோள் தால வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான்,
ஆடு அரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை,
ஆடும் தீக் கூத்தனை,-நான் கண்டது ஆரூரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.020  
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்  
Tune - சீகாமரம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய்; கழல் அடி
பூண்டு கொண்டொழிந்தேன்; புறம் போயினால் அறையோ?-
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகைமேல் எழு கொடி வான் இள (ம்) மதி
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே!

[1]
நாடினார், -கமலம்மலர் அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன்,
நாடிக் காணமாட்டாத் தழல் ஆய நம்பானை,
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடிக் கண்டு கொண்டேன்; திரு ஆரூர் அம்மானே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.021  
முத்து விதானம்; மணி பொன்  
Tune - குறிஞ்சி   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[1]
பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த,
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து,
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.022  
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா  
Tune - காந்தாரம்   (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)

செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம்; நறவம் நாறும்
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடும் ஆறே!

[1]
பாலனாய், விருத்தன் ஆகி, பனி நிலா எறிக்கும் சென்னி,
காலனைக் காலால் காய்ந்த, கடவுளார்; விடை ஒன்று ஏறி;
ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே-
நீலம் சேர் கண்டனார் தாம்- நீண்டு எரி ஆடும் ஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.023  
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!  
Tune - கொல்லி   (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)

பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! பரம யோகீ!
எத்தினால் பத்தி செய்கேன்? என்னை நீ இகழவேண்டா;
முத்தனே! முதல்வா! தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே!

[1]
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ, வானவர் தலைவனே! நீ;
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அம் சொலாள் காண நின்று, அழக! நீ ஆடும் ஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.024  
இரும்பு கொப்பளித்த யானை ஈர்  
Tune - கொப்பளித்ததிருநேரிசை   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன் சொல் காரிகை பாகம் ஆக,
சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையில் ஏற்ற,
அரும்பு கொப்பளித்த சென்னி, அதிகை வீரட்டனாரே.

[1]
தொண்டை கொப்பளித்த செவ்வாய், துடி இடை, பரவைஅல்குல்,
கொண்டை கொப்பளித்த கோதை, கோல்வளை பாகம் ஆக-
வண்டு கொப்பளித்த தீம்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டை கொப்பளித்த தெண் நீர்க் கெடில வீரட்டனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.025  
வெண் நிலா மதியம் தன்னை  
Tune - திருநேரிசை   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்)
உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,
விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே.

[1]
ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்,
வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்;
நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று
அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.026  
நம்பனே! எங்கள் கோவே! நாதனே!  
Tune - திருநேரிசை   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி!
பங்கனே! பரமயோகி! என்று என்றே பரவி நாளும்,
செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான்,
அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

[1]
திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும்,
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா
ஒருவனே! எம்பிரானே! உன் திருப்பாதம் கண்பான்,
அருவனே! அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.027  
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி  
Tune - திருநேரிசை   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

மடக்கினார்; புலியின்தோலை; மா மணி நாகம் கச்சா
முடக்கினார்; முகிழ் வெண்திங்கள் மொய்சடைக் கற்றை தன் மேல்-
தொடக்கினார்; தொண்டைச் செவ்வாய்த் துடி இடைப் பரவை அல்குல்
அடக்கினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.028  
முன்பு எலாம் இளைய காலம்  
Tune - திருநேரிசை   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி,
கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி,
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்;
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.029  
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு  
Tune - திருநேரிசை   (Location: திருச்செம்பொன்பள்ளி God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே

[1]
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்,
செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.030  
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை  
Tune - திருநேரிசை   (Location: திருக்கழிப்பாலை God: பால்வண்ணநாதர் Goddess: வேதநாயகியம்மை)

நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[1]
மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ,
காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.031  
பொள்ளத்த காயம் ஆய பொருளினை,  
Tune - சாளரபாணி   (Location: திருக்கடவூர் வீரட்டம் God: அமிர்தகடேசுவரர் Goddess: அபிராமியம்மை)

பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர்
வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.

[1]
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்-
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய,
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி
கந்திருவங்கள் கேட்டார்-கடவூர்வீரட்டனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.032  
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர  
Tune - திருநேரிசை   (Location: திருப்பயற்றூர் God: திருப்பயத்தீசுவரர் Goddess: காவியங்கண்ணியம்மை)

உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே.

[1]
மூர்த்தி தன் மலையின் மீது போகாதா, முனிந்து நோக்கி,
பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்து, உடன் மலையைப் பற்றி,
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்-திருப் பயற்றூரனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.033  
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்  
Tune - திருநேரிசை   (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)

இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்;
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே.

[1]
பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்,
பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே;
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும், தோகை அஞ்ச,
மணி முடிப்பத்து இறுத்தார்-மா மறைக்காடனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.034  
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்  
Tune - திருநேரிசை   (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)

தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை,
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து
காரிகை, அஞ்சல்! என்பார்-கலி மறைக்காடனாரே.

[1]
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட,
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை,
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட,
அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.035  
காடு உடைச் சுடலை நீற்றார்;  
Tune - திருநேரிசை   (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)

காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல்
பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில்
தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த
ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே.

[1]
மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத்
தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி,
சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்-
இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.036  
ஆடினார் ஒருவர் போலும்; அலர்  
Tune - திருநேரிசை   (Location: திருப்பழனம் God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)

ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே.

[1]
குடை உடை அரக்கன் சென்று, குளிர் கயிலாய வெற்பின்
இடை மட வரலை அஞ்ச, எடுத்தலும், இறைவன் நோக்கி
விடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படை கொடை அடிகள்போலும்- பழனத்து எம் பரமனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.037  
காலனை வீழச் செற்ற கழல்  
Tune - திருநேரிசை   (Location: திருநெய்த்தானம் God: நெய்யாடியப்பர் Goddess: வாலாம்பிகையம்மை)

காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே.

[1]
இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத்
தலைஉடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து,
சிலை உடன் கணையைச் சேர்த்து, திரிபுரம் எரியச் செற்ற
நிலை உடை அடிகள் போலும்-நின்ற நெய்த்தானனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.038  
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்  
Tune - திருநேரிசை   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.

[1]
இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.039  
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்  
Tune - திருநேரிசை:கொல்லி   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற
அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே!
தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே.

[1]
அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று,
முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ,
அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.040  
தான் அலாது உலகம் இல்லை;  
Tune - திருநேரிசை   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

தான் அலாது உலகம் இல்லை; சகம் அலாது அடிமை இல்லை;
கான் அலாது ஆடல் இல்லை; கருதுவார் தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை; வார் குழல் மங்கையோடும்
ஆன் அலாது ஊர்வது இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

[1]
மலை அலால் இருக்கை இல்லை; மதித்திடா அரக்கன் தன்னைத்
தலை அலால் நெரித்தது இல்லை; தடவரைக் கீழ் அடர்த்து;
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை-
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.041  
பொய் விராம் மேனி தன்னைப்  
Tune - திருநேரிசை:கொல்லி   (Location: திருச்சோற்றுத்துறை God: தொலையாச்செல்வர் Goddess: ஒப்பிலாம்பிகை)

பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி
மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா!
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன்
செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே!

[1]
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்!
கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க,
செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.042  
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்  
Tune - திருநேரிசை:கொல்லி   (Location: திருத்துருத்தி God: வேதேசுவரர் Goddess: முகிழாம்பிகையம்மை)

பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா;
இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்!
ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே!

[1]
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை
கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த
துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.043  
மறை அது பாடிப் பிச்சைக்கு  
Tune - திருநேரிசை:கொல்லி   (Location: திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) God: திருமேற்றளிநாதர் Goddess: திருமேற்றளிநாயகி)

மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.

[1]
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.044  
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண  
Tune - திருநேரிசை   (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)

நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ-
கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை;
செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே.

[1]
துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்து(வ்)
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.045  
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத  
Tune - திருநேரிசை:கொல்லி   (Location: திருவொற்றியூர் God: மாணிக்கத்தியாகர் Goddess: வடிவுடையம்மை)

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

[1]
வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே!
மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய!
பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.046  
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து  
Tune - திருநேரிசை   (Location: திருவொற்றியூர் God: மாணிக்கத்தியாகர் Goddess: வடிவுடையம்மை)

ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து
காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்;
பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.047  
கனகம் மா வயிரம் உந்தும்  
Tune - திருநேரிசை   (Location: திருக்கயிலாயம் God: கயிலாயநாதர் Goddess: பார்வதியம்மை)

கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச,
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்;
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

[1]
கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த ஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.048  
கடல் அகம் ஏழினோடும் பவனமும்  
Tune - திருநேரிசை   (Location: திருஆப்பாடி God: பாலுவந்தநாயகர் Goddess: பெரியநாயகியம்மை)

கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து, விண்ணும்
உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று,
தடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகி,
மடல் அவிழ் கொன்றை சூடி, மன்னும்-ஆப்பாடியாரே.

[1]
திண் திறல் அரக்கன் ஓடி, சீ கயிலாயம் தன்னை
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும், ஏழை அஞ்ச,
விண்டு இற நெறிய ஊன்றி, மிகக் கடுத்து அலறி வீழ,
பண் திறல் கேட்டு உகந்த பரமர்-ஆப்பாடியாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.049  
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,  
Tune - திருநேரிசை   (Location: திருக்குறுக்கை வீரட்டம் God: வீரட்டேசுவரர் Goddess: ஞானாம்பிகையம்மை)

ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், அடி இணைக்கீழ்;
ஓதிய வேத நாவர் உணரும் ஆறு உணரல் உற்றார்
சோதியுள் சுடர் ஆய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார்-பல்பூக்
கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே.

[1]
எடுத்தனன் எழில் கயி(ல்)லை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற, அலறிப் போய் அவனும் வீழ்ந்து,
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட,
கொடுத்தனர், கொற்றவாள் நாள்; குறுக்கை வீரட்டனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.050  
நெடிய மால் பிரமனோடு நீர்  
Tune - திருநேரிசை   (Location: திருக்குறுக்கை வீரட்டம் God: வீரட்டேசுவரர் Goddess: ஞானாம்பிகையம்மை)

நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள
அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.051  
நெற்றி மேல் கண்ணினானே! நீறு  
Tune - திருநேரிசை   (Location: திருக்கோடி (கோடிக்கரை) God: கோடீசுவரர் Goddess: வடிவாம்பிகையம்மை)

நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே!
கற்றைப் புன் சடையினானே! கடல் விடம் பருகினானே!
செற்றவர் புரங்கள் மூன்றும் செவ் அழல் செலுத்தினானே!
குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே!

[1]
பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ நாசா!
மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே! அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.052  
படு குழிப் பவ்வத்து அன்ன  
Tune - திருநேரிசை   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்
கெடுவது இம் மனிதர் வாழ்க்கை; காண் தொறும் கேதுகின்றேன்;
முடுகுவர், இருந்து உள் ஐவர் மூர்க்கரே; இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!

[1]
தடக்கை நால்-ஐந்தும் கொண்டு தட வரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க, ஓடி இரிந்தன, பூதம் எல்லாம்;
முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி
அடர்த்து, அருள் செய்தது என்னே? ஆரூர் மூலட்டனீரே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.053  
குழல் வலம் கொண்ட சொல்லாள்  
Tune - திருநேரிசை   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல் கண்ணி தன்னைக்
கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்கள்; அக் கணங்கள் ஆர
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல், வலம் கொண்டல், செய்வான் தோன்றினார் தோன்றினாரே.

[1]
ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.054  
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,  
Tune - திருநேரிசை:காந்தாரம்   (Location: திருப்புகலூர் God: அக்கினீசுவரர் Goddess: கருந்தார்க்குழலியம்மை)

பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ,
புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித்
திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[1]
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.055  
தெண் திரை தேங்கி ஓதம்  
Tune - திருநேரிசை   (Location: திருவலம்புரம் God: வலம்புரநாதர் Goddess: வடுவகிர்க்கண்ணம்மை)

தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழுங்காலை,
தொண்டு இரைத்து அண்டர் கோனைத் தொழுது, அடி வணங்கி, எங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம் புரத்து அடிகள் தம்மைக்
கொண்டு, நல் கீதம் பாடக் குழகர் தாம் இருந்த ஆறே!

[1]
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம் தன்னை
ஆள் வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக் கீழ், அன்று,
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி,
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.056  
மா-இரு ஞாலம் எல்லாம் மலர்  
Tune - திருநேரிசை:காந்தாரம்   (Location: திருவாவடுதுறை God: மாசிலாமணியீசுவரர் Goddess: ஒப்பிலாமுலையம்மை)

மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்;
பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்;
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்-
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[1]
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்;
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்;
கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.057  
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்  
Tune - கொல்லி   (Location: திருவாவடுதுறை God: மாசிலாமணியீசுவரர் Goddess: ஒப்பிலாமுலையம்மை)

மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்)
அஞ்சல்! என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!

[1]
மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத்
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்)
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.058  
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி  
Tune - திருநேரிசை:காந்தாரம்   (Location: திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) God: பருப்பதேசுவரர் Goddess: மனோன்மணியம்மை)

கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[1]
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.059  
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்  
Tune - திருநேரிசை   (Location: திருஅவளிவணல்லூர் God: சாட்சிநாயகேசுவரர் Goddess: சவுந்தரநாயகியம்மை)

தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்ல, சிக்கெனத் தவிரும்! என்று,
வீற்றினை உடையன் ஆகி வெடு வெடுத்து எடுத்தவன் தன்
ஆற்றலை அழிக்க வல்லார்-அவளி வணல்லூராரே.

[1]
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன் தன்னைத்
தாக்கினான், விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி;
நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி
ஆக்கினார், அமுதம் ஆக-அவளி வணல்லூராரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.060  
மறை அணி நாவினானை, மறப்பு  
Tune - திருநேரிசை   (Location: திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) God: பிரியாதநாதர் Goddess: மின்னனையாளம்மை)

மறை அணி நாவினானை, மறப்பு இலார் மனத்து உளானை,
கறை அணி கண்டன் தன்னை, கனல்-எரி ஆடினானை,
பிறை அணி சடையினானை, பெருவேளூர் பேணினானை,
நறை அணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே.

[1]
பொருகடல் இலங்கை மன்னன் உடல் கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத்தானை, கதிர் இளங்கொழுந்து சூடும்
பெருகிய சடையினானை, பெருவேளூர் பேணினானை,
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.061  
பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,  
Tune - திருநேரிசை   (Location: திருஇராமேச்சுரம் God: இராமநாதேசுவரர் Goddess: பர்வதவர்த்தனி)

பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, தக்க
வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு, மதியினால் மால் செய் கோயில்
நேசம் மிக்கு அன்பினாலே நினைமின், நீர், நின்று நாளும்!
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுர(ம்)மே.

[1]
வன்கண்ணர், வாள் அரக்கர், -வாழ்வினை ஒன்று அறி(ய்)யார்
புன் கண்ணர் ஆகி நின்று-போர்கள் செய்தாரை மாட்டி,
செங்கண் மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம், தலைவன் பாலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.062  
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!  
Tune - கொல்லி   (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)

வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா! என்று என்று
ஓதியே, மலர்கள் தூவி, ஒடுங்கி, நின் கழல்கள் காண-
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்! படர்சடை மதியம் சூடும்
ஆதியே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[1]
பொடிக்கொடு பூசி, பொல்லாக் குரம்பையில் புந்தி, ஒன்றி,
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி, நான் இருக்கமாட்டேன்-
எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும், இருபது(த்) தோள
அடர்த்தனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.063  
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்  
Tune - திருநேரிசை   (Location: திருவண்ணாமலை God: அருணாசலேசுவரர் Goddess: உண்ணாமுலையம்மை)

ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க
சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!
ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.

[1]
இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்!
உரத்தினால் வரையை ஊக்க, ஒரு விரல் நுதியினாலே!
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய்! அமரர் ஏறே!
சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.064  
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;  
Tune - திருநேரிசை   (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)

பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; பூண நூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர்; நஞ்சு அழுந்து கண்டர்;
கீதத்தின் பொலிந்த ஓசைக் கேள்வியர்; வேள்வியாள
வேதத்தின் பொருளர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[1]
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி தடை நிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண் ஆய்
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ, தம் வாள
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.065  
தோடு உலாம் மலர்கள் தூவித்  
Tune - திருநேரிசை   (Location: திருச்சாய்க்காடு (சாயாவனம்) God: சாயவனேசுவரர் Goddess: குயிலின்நன்மொழியம்மை)

தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன்
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன்
பாடு தான் செலலும், அஞ்சி, பாதமே சரணம் என்ன,
சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே.

[1]
புயம் கம் ஐஞ்-ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடிச்
சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச,
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி, மீண்டே
சயம் பெற நாமம் ஈந்தார்-சாய்க்காடு மேவினாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.066  
கச்சை சேர் அரவர் போலும்;  
Tune - திருநேரிசை   (Location: திருநாகேச்சரம் God: சண்பகாரண்ணியேசுவரர் Goddess: குன்றமுலைநாயகியம்மை)

கச்சை சேர் அரவர் போலும்; கறை அணி மிடற்றர் போலும்;
பிச்சை கொண்டு உண்பர் போலும்; பேர் அருளாளர் போலும்;
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[1]
வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்;
தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்;
வன்மையால் மலை எடுத்தான் வலியினைத் தொலைவித்து, ஆங்கே
நன்மையால் அளிப்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.067  
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்  
Tune - திருநேரிசை   (Location: திருக்கொண்டீச்சரம் God: பசுபதீசுவரர் Goddess: சாந்தநாயகியம்மை)

வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப்
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்;
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே! அஞ்சல்! என்னாய்
திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[1]
விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள
வெருவர, இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று,
பருவரை அனைய தோளும் முடிகளும் பாரி வீழத்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.068  
வெள்ள நீர்ச் சடையர் போலும்;  
Tune - திருநேரிசை   (Location: திருவாலங்காடு (பழையனூர்) God: ஊர்த்ததாண்டவேசுவரர் Goddess: வண்டார்குழலியம்மை)

வெள்ள நீர்ச் சடையர் போலும்; விரும்புவார்க்கு எளியர் போலும்;
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்;
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்-
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே.

[1]
மத்தனாய் மலை எடுத்த அரக்கனைக் கரத்தோடு ஒல்க
ஒத்தினார், திருவிர(ல்)லால் ஊன்றியிட்டு அருள்வர் போலும்;
பத்தர் தம் பாவம் தீர்க்கும் பைம்பொழில் பழனை மேய
அத்தனார்; நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.069  
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,  
Tune - திருநேரிசை   (Location: திருக்கோவலூர் God: வீரட்டானேசுவரர் Goddess: சிவானந்தவல்லியம்மை)

செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்;
எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!

[1]
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி,
பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.070  
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்  
Tune - திருநேரிசை   (Location: திருநனிப்பள்ளி God: நற்றுணையப்பர் Goddess: பர்வதராசபுத்திரி)

முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை,
சொல்-துணை ஆயினானை, சோதியை, ஆதரித்து(வ்)
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு
நல்-துணை ஆவர்போலும், நனிபள்ளி அடிகளாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.071  
மனைவி தாய் தந்தை மக்கள்  
Tune - திருநேரிசை   (Location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) God: காயாரோகணேசுவரர் Goddess: நீலாயதாட்சியம்மை)

மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள் சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து, அழுந்தி, வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யல் ஆம்-நெஞ்சினீரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.072  
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்  
Tune - திருநேரிசை   (Location: திருஇன்னம்பர் God: எழுத்தறிந்தவீசுவரர் Goddess: கொந்தார்பூங்குழலம்மை)

விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்;
பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்;
வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்;
எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[1]
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்;
பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்;
தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்;
ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.073  
பெருந் திரு இமவான் பெற்ற  
Tune - திருநேரிசை   (Location: திருச்சேறை (உடையார்கோவில்) God: சென்னெறியப்பர் Goddess: ஞானவல்லியம்மை)

பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.074  
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்  
Tune - கொல்லி   (Location: பொது -நினைந்த திருநேரிசை God: Goddess: )

முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும்
வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[1]
உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர்
நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள்
குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்-
அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.075  
தொண்டனேன் பட்டது என்னே! தூய  
Tune - கொல்லி   (Location: பொது -தனித் திருநேரிசை God: Goddess: )

தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி,
இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை,
கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!

[1]
பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு இலங்க அங்காந்து
அரு வரை அனைய தோளான் அரக்கன், அன்று, அலறி வீழ்ந்தான்;
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்க, நான் திரியும் ஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.076  
மருள் அவா மனத்தன் ஆகி  
Tune - திருநேரிசை   (Location: பொது -தனித் திருநேரிசை God: Goddess: )

மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்;
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும்
அருள் அவாப் பெறுதல் இன்றி, அஞ்சி, நான் அலமந்தேற்குப்
பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே!

[1]
நடு இலாக் காலன் வந்து நணுகும் போது அறிய ஒண்ணா;
அடுவன, அஞ்சு பூதம்; அவை தமக்கு ஆற்றல் ஆகேன்;
படுவன, பலவும் குற்றம்; பாங்கு இலா, மனிதர் வாழ்க்கை;
கெடுவது, இப் பிறவி சீ! சீ!-கிளர் ஒளிச் சடையினீரே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.077  
கடும்பகல் நட்டம் ஆடி, கையில்  
Tune - திருநேரிசை   (Location: பொது -தனித் திருநேரிசை God: Goddess: )

கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
இடும் பலிக்கு இல்லம் தோறும் உழி தரும் இறைவனீரே!
நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.078  
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்  
Tune - திருநேரிசை   (Location: பொது -குறைந்த நேரிசை God: Goddess: )

வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்;
நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ!
இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே!

[1]
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட
அட்ட மா மூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும்
எள்-தனை எட்ட மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.079  
தம் மானம் காப்பது ஆகித்  
Tune - திருநேரிசை   (Location: பொது -குறைந்த நேரிசை God: Goddess: )

தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து
அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய
செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.080  
பாளை உடைக் கமுகு ஓங்கி,  
Tune - திருவிருத்தம்   (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)

பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும்
வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள்,
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே?

[1]
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து,
அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.081  
கரு நட்ட கண்டனை, அண்டத்  
Tune - திருவிருத்தம்   (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)

கரு நட்ட கண்டனை, அண்டத் தலைவனை, கற்பகத்தை,
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை, செந் தீ முழங்கத்
திரு நட்டம் ஆடியை, தில்லைக்கு இறையை, சிற்றம்பலத்துப்
பெரு நட்டம் ஆடியை, வானவர் கோன் என்று வாழ்த்துவனே.

[1]
சாட எடுத்தது, தக்கன் தன் வேள்வியில் சந்திரனை;
வீட எடுத்தது, காலனை; நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது,-தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ,-நம்மை ஆட்கொண்டதே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.082  
பார் கொண்டு மூடிக் கடல்  
Tune - திருவிருத்தம்   (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம்
கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே?

[1]
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர் கோன் தன் முடி சிதறத்
தொலையா மலர் அடி ஊன்றலும், உள்ளம் விதிர் விதிர்த்துத்
தலை ஆய்க் கிடந்து, உயர்ந்தான் தன் கழுமலம் காண்பதற்கே-
அலையாப் பரிசு இவை நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.083  
படை ஆர் மழு ஒன்று  
Tune - திருவிருத்தம்   (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில்,
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்-
மடைவாய்க் குருகு இனம், பாளை விரிதொறும் வண்டு இனங்கள்
பெடை வாய் மது உண்டு, பேராது இருக்கும்-பெரும்பதியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.084  
எட்டு ஆம் திசைக்கும் இரு  
Tune - வியாழக்குறிஞ்சி   (Location: பொது -ஆருயிர்த் திருவிருத்தம் God: Goddess: )

எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும்(ம்) இறைவா, முறை! என்று
இட்டார் அமரர் வெம் பூசல் எனக் கேட்டு, எரிவிழியா,
ஒட்டாக் கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால்
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[1]
பைம் மாண் அரவு அல்குல் பங்கயச் சீறடியாள் வெருவக்
கைம்மா, வரிசிலைக் காமனை, அட்ட கடவுள்; முக்கண்
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த
அம்மான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.085  
காலை எழுந்து, கடிமலர் தூயன  
Tune - திருவிருத்தம்   (Location: திருச்சோற்றுத்துறை God: தொலையாச்செல்வர் Goddess: ஒப்பிலாம்பிகை)

காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த
சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[1]
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்து அழித்த
துலங்கல் மழுவினான், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இலங்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.086  
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற  
Tune - திருவிருத்தம்   (Location: திருவொற்றியூர் God: மாணிக்கத்தியாகர் Goddess: வடிவுடையம்மை)

செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று
இற்றுக் கிடந்தது போலும், இளம்பிறை; பாம்பு, அதனைச்
சுற்றிக் கிடந்தது, கிம்புரி போலச் சுடர் இமைக்கும்;
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால்-ஒற்றியூரனுக்கே.

[1]
அம் கள் கடுக்கைக்கு முல்லைப் புறவம்; முறுவல் செய்யும்
பைங்கண்-தலைக்கு சுடலைக் களரி; பரு மணி சேர்
கங்கைக்கு வேலை; அரவுக்குப் புற்று; கலை நிரம்பாத்
திங்கட்கு வானம்-திரு ஒற்றியூரர் திருமுடியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.087  
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்  
Tune - திருவிருத்தம்   (Location: திருப்பழனம் God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)

மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்;
ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!-
கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே!

[1]
அடுத்து இருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள் நெரியக்
கெடுத்து இருந்தாய்; கிளர்ந்தார் வலியைக் கிளையோடு உடனே-
படுத்திருந்தாய்;-பழனத்து அரசே!-புலியின்(ன்) உரி-தோல்
உடுத்திருந்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.088  
மாலினை மால் உற நின்றான்,  
Tune - திருவிருத்தம்   (Location: திருப்பூந்துருத்தி God: புஷ்பவனநாதர் Goddess: அழகாலமர்ந்தநாயகி)

மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய
பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல்
போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும்
ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.

[1]
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு; சடை இடையே
வைக்கையும் வான் இழி கங்கையும்; மங்கை நடுக்கு உறவே
மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி(ய்) உறையும்
மிக்க நல்வேத விகிர்தனை-நான் அடி போற்றுவதே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.089  
பார் இடம் சாடிய பல்  
Tune - திருவிருத்தம்   (Location: திருநெய்த்தானம் God: நெய்யாடியப்பர் Goddess: வாலாம்பிகையம்மை)

பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருள
கார் அடைந்த(க்) கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இவ் உலகில் பலி கொள்வது நாம் அறியோம்-
நீர் அடைந்த(க்) கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

[1]
ஊட்டி நின்றான், பொரு வானில் அம் மும்மதில் தீ; அம்பினால்
மாட்டி நின்றான்; அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டி நின்றான்; கதமாக் கங்கை பாய ஓர் வார்சடையை
நீட்டி நின்றான்திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.090  
கையது, கால் எரி நாகம்,  
Tune - திருவிருத்தம்   (Location: திருவேதிகுடி God: வேதபுரீசுவரர் Goddess: மங்கையர்க்கரசியம்மை)

கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம் அது;
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரிசடை விண்ணவர் கோன்,
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதி குடி
ஐயனை, ஆரா அமுதினை, நாம் அடைந்து ஆடுதுமே.

[1]
வருத்தனை, வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப்படை உடைய
திருத்தனை, தேவர் பிரான் திரு வேதி குடி உடைய
அருத்தனை, ஆரா அமுதினை,-நாம் அடைந்து ஆடுதுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.091  
குறுவித்தவா, குற்றம் நோய் வினை  
Tune - திருவிருத்தம்   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி! குறுவித்த நோய்
உறுவித்தவா! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அறிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
செறிவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[1]
கறுத்து மிட்டார், கண்டம்; கங்கை சடை மேல் கரந்து அருள
இறுத்து மிட்டார், இலங்கைக்கு இறை தன்னை இருபது தோள்
அறுத்து மிட்டார், அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே;
பொறுத்தும் இட்டார்-தொண்டனேனைத் தன் பொன் அடிக் கீழ் எனையே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.092  
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து  
Tune - திருவிருத்தம்   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன-பாம்பு சுற்றி
அந்திப்பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.

[1]
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன-பாங்கு அறியா
என் போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.093  
வானவர் தானவர் வைகல் மலர்  
Tune - திருவிருத்தம்   (Location: திருக்கண்டியூர் God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான்,
ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.

[1]
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி
உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக்
கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.094  
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்  
Tune - திருவிருத்தம்   (Location: திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) God: வீரட்டேசுவரர் Goddess: மங்கைநாயகியம்மை)

ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.

[1]
திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர்
இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.095  
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்  
Tune - திருவிருத்தம்   (Location: திருவீழிமிழலை God: தோன்றாத்துணையீசுவரர் Goddess: தோகையம்பிகையம்மை)

வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள
நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[1]
கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும் மெய்யும்
நெறுக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர்
வெறிக் கொன்றைமாலை முடியீர்! விரிநீர் மிழலை உள்ள
இறக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.096  
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்  
Tune - திருவிருத்தம்   (Location: திருச்சத்திமுற்றம் God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)

கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன்
பூ ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில்
மூவா முழுப்பழி மூடும்கண்டாய்-முழங்கும் தழல் கைத்
தேவா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[1]
பொறித் தேர் அரக்கன் பொருப்பு எடுப்பு உற்றவன் பொன்முடி தோள்
இற, தாள் ஒருவிரல் ஊன்றிட்டு, அலற இரங்கி, ஒள்வாள்
குறித்தே கொடுத்தாய்; கொடியேன் செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.097  
அட்டுமின், இல் பலி! என்று  
Tune - திருவிருத்தம்   (Location: திருநல்லூர் God: சிவக்கொழுந்தீசுவரர் Goddess: பெரியநாயகியம்மை)

அட்டுமின், இல் பலி! என்று என்று அகம் கடைதோறும் வந்து,
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?-
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும்
நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே.

[1]
திரு அமர் தாமரை, சீர் வளர் செங்கழுநீர், கொள் நெய்தல்,
குரு அமர் கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி,
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர்
உரு அமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.098  
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,  
Tune - திருவிருத்தம்   (Location: திருவையாறு God: பெரியாண்டேசுவரர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)

அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும், பொய் என்பனோ?-
சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.099  
ஓதுவித்தாய், முன் அற உரை;  
Tune - திருவிருத்தம்   (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே
காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப்
போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே!

[1]
உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச் சூளைகள்; வாய்தல் பற்றித்
துன்றி நின்றார், தொல்லை வானவர் ஈட்டம்; பணி அறிவான்
வந்து நின்றார், அயனும் திருமாலும்;-மதில் கச்சியாய்!-
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ, வந்து இறைஞ்சுவதே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.100  
மன்னும் மலைமகள் கையால் வருடின;  
Tune - திருவிருத்தம்   (Location: திருஇன்னம்பர் God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)

மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.

[1]
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது,
உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன்
இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.101  
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே  
Tune - திருவிருத்தம்   (Location: திருவாரூர் God: எழுத்தறிந்தவீசுவரர் Goddess: கொந்தார்பூங்குழலம்மை)

குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[1]
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு,
உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.102  
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,  
Tune - திருவிருத்தம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, வினை பெருக்கி,
தூம்பினைத் தூர்த்து, அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர், தொண்டீர்!
ஆம்பல் அம்பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழல் கீழ்,
சாம்பலைப் பூசி, சலம் இன்றி, தொண்டுபட்டு உய்ம்மின்களே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.103  
வடிவு உடை மாமலைமங்கை பங்கா!  
Tune - திருவிருத்தம்   (Location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்!
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!
பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.104  
மாசு இல் ஒள்வாள் போல்  
Tune - திருவிருத்தம்   (Location: திருவதிகை வீரட்டானம் God: காயாரோகணேசுவரர் Goddess: நீலாயதாட்சியம்மை)

மாசு இல் ஒள்வாள் போல் மறியும் மணி நீர்த் திரைத் தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கல் உற்றால்,
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு,
வீசும் கெடில வடகரைத்தே-எந்தை வீரட்டமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.105  
தன்னைச் சரண் என்று தாள்  
Tune - திருவிருத்தம்   (Location: திருப்புகலூர் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய,
புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ!
என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து
என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.106  
நெய்தல் குருகு தன் பிள்ளை  
Tune - திருவிருத்தம்   (Location: திருக்கழிப்பாலை God: அக்கினீசுவரர் Goddess: கருந்தார்க்குழலியம்மை)

நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று,
கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்!
பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்;
எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.107  
மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த  
Tune - திருவிருத்தம்   (Location: திருக்கடவூர் வீரட்டம் God: பால்வண்ணநாதர் Goddess: வேதநாயகியம்மை)

மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த மாணிமார்க்கண்டேயற்கு ஆய்-
இருட்டிய மேனி, வளைவாள் எயிற்று, எரி போலும் குஞ்சி,
சுருட்டிய நாவில்-வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[1]
தேன் திகழ் கொன்றையும், கூவிளமாலை, திருமுடிமேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான்; மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடிபத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.108  
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை  
Tune - திருவிருத்தம்   (Location: திருமாற்பேறு God: அமிர்தகடேசுவரர் Goddess: அபிராமியம்மை)

மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன; மாவலிபால்
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன; கண்ட தொண்டர்
பேணிக் கிடந்து பரவப்படுவன; பேர்த்தும் அஃதே;
மாணிக்கம் ஆவன-மாற்பேறு உடையான் மலர் அடியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.109  
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று  
Tune - திருவிருத்தம்   (Location: திருத்தூங்கானைமாடம் God: மால்வணங்குமீசர் Goddess: கருணைநாயகியம்மை)

பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல
மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல்
துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.110  
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,  
Tune - கொல்லி   (Location: பசுபதித் திருவிருத்தம் God: Goddess: )

சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி,
ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும்
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல்
பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.111  
விடையும் விடைப் பெரும் பாகா!  
Tune - திருவிருத்தம்   (Location: பொது -சரக்கறை திருவிருத்தம் God: Goddess: )

விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்-
படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்-
உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[1]
வேதித்த வெம்மழு ஆளீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சோதித் திருக்கும், நல் சூளாமணியும், சுடலை நீறும்,
பாதிப்பிறையும், படுதலைத்துண்டமும், பாய் புலித்தோல்,
சாதித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.112  
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;  
Tune - திருவிருத்தம்   (Location: பொது -தனித் திருவிருத்தம் God: Goddess: )

வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு
வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து,
வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே.

[1]
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்? இகலி, உன்னை
நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று, நின் பெருமை-
பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவி, செம்மானம் செற்று,
மின்னை ஒப்பாரி, மிளிரும் சடைக்கற்றை வேதியனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 - Thirumurai   Pathigam 4.113  
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்  
Tune - திருவிருத்தம்   (Location: பொது -தனித் திருவிருத்தம் God: Goddess: )

பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே
பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல்
பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும்,
பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே.

[1]
கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி,
பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், பஞ்சம் உண்டு என்று
என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண்
பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே.

[10]

This page was last modified on Sun, 10 Mar 2024 22:40:27 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai number