வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்? கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத் தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!
| [ 1]
|
விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு சடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்? கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த, தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே!
| [ 2]
|
தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச் சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்? பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே!
| [ 3]
|
பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து, அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்? வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!
| [ 4]
|
நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம் ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்? ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி, தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!
| [ 5]
|
Go to top |
கொல் நவின்ற மூ இலைவேல், கூர் மழுவாள் படையன், பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பு என்னை கொல் ஆம்? அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து, அரை சேர் துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம் மேயவனே!
| [ 6]
|
குற்றம் இன்மை, உண்மை, நீ என்று உன் அடியார் பணிவார், கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்? வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில் துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே!
| [ 7]
|
விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர் குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்? இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால் துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே!
| [ 8]
|
விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர் கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்? இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும், தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே!
| [ 9]
|
புத்தரோடு புன்சமணர் பொய் உரையே உரைத்து, பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்? மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல் துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே!
| [ 10]
|
Go to top |
சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை, சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான், ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே.
| [ 11]
|