துள மதி உடை மறி தோன்று கையினர் இளமதி அணி சடை எந்தையார், இடம் உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய, வள மதி தடவிய, மாடக்கோயிலே.
| [ 1]
|
மெய் அகம் மிளிரும் வெண்நூலர், வேதியர் மைய கண் மலைமகளோடும் வைகு இடம் வையகம் மகிழ்தர, வைகல் மேல்-திசை செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே.
| [ 2]
|
கணி அணி மலர்கொடு, காலை மாலையும் பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர், தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே.
| [ 3]
|
கொம்பு இயல் கோதை முன் அஞ்ச, குஞ்சரத்- தும்பி அது உரி செய்த துங்கர் தங்கு இடம் வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல்-திசை, செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே.
| [ 4]
|
விடம் அடை மிடற்றினர், வேத நாவினர் மடமொழி மலைமகளோடும் வைகு இடம் மட அனம் நடை பயில் வைகல் மா நகர்க் குட திசை நிலவிய மாடக்கோயிலே.
| [ 5]
|
Go to top |
நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடை இறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரி மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில், திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே.
| [ 6]
|
எரிசரம் வரிசிலை வளைய ஏவி, முன் திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்வு இடம் வரி வளையவர் பயில் வைகல் மேல்-திசை, வரு முகில் அணவிய மாடக்கோயிலே.
| [ 7]
|
மலை அன இருபது தோளினான் வலி தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் வலம் வரு மலை அன மாடக்கோயிலே.
| [ 8]
|
மாலவன், மலரவன், நேடி மால் கொள மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் மாலைகொடு அணி மறைவாணர் வைகலில், மால் அன மணி அணி மாடக்கோயிலே.
| [ 9]
|
கடு உடை வாயினர், கஞ்சி வாயினர் பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் வடமலை அனைய நல் மாடக்கோயிலே.
| [ 10]
|
Go to top |
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை, சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்- பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை சிந்தை செய்பவர், சிவலோகம் சேர்வரே.
| [ 11]
|