கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல், கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்- கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!
| [ 1]
|
நடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக் கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக் கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை இடுக்கண் செய்யப் பெறீர், இங்கு நீங்குமே!
| [ 2]
|
கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் ஆர்கள் ஆகினும் ஆக; அவர்களை நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே!
| [ 3]
|
சாற்றினேன்: சடை நீள் முடிச் சங்கரன், சீற்றம் காமன்கண் வைத்தவன், சேவடி ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய், போற்றி! என்று உரைப்பார் புடை போகலே!
| [ 4]
|
இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்! பிறையும் பாம்பும் உடைப் பெருமான் தமர், நறவம் நாறிய நன்நறுஞ் சாந்திலும் நிறைய நீறு அணிவார், எதிர் செல்லலே!
| [ 5]
|
Go to top |
வாமதேவன் வள நகர் வைகலும், காமம் ஒன்று இலராய், கை விளக்கொடு தாமம், தூபமும், தண் நறுஞ் சாந்தமும், ஏமமும், புனைவார் எதிர் செல்லலே!
| [ 6]
|
படையும் பாசமும் பற்றிய கையினீர்! அடையன்மின், நமது ஈசன் அடியரை! விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் புடை புகாது, நீர், போற்றியே போமினே!
| [ 7]
|
விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும், நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே; அச்சம் எய்தி அருகு அணையாது, நீர், பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே!
| [ 8]
|
இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய மன்னன் பாதம் மனத்து உடன் ஏத்துவார், மன்னும் அஞ்சு எழுத்து ஆகிய மந்திரம்- தன்னில் ஒன்று வல்லாரையும், சாரலே!
| [ 9]
|
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச் சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம், ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால் பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!
| [ 10]
|
Go to top |
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால் நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும், சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர் சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.
| [ 11]
|