தூ வாயா! தொண்டு செய்வார் படு துக்கங்கள் காவாயா? கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும், நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு ஆவா! என் பரவையுள் மண்டளி அம்மானே!
| [ 1]
|
பொன்னானே, புலவர்க்கு! நின் புகழ் போற்றல் ஆம்- தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி! மின்னானே! செக்கர்வானத்து இள ஞாயிறு அன்னானே! பரவையுள் மண்டளி அம்மானே!
| [ 2]
|
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார் போம் ஆறு என்? புண்ணியா! புண்ணியம் ஆனானே! பேய் மாறாப் பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு ஆம் ஆறு என்?-பரவையுள் மண்டளி அம்மானே!
| [ 3]
|
நோக்குவேன், உன்னையே; நல்லன நோக்காமைக் காக்கின்றாய்; கண்டு கொண்டார் ஐவர் காக்கினும், வாக்கு என்னும் மாலைகொண்டு உன்னை என் மனத்து ஆர்க்கின்றேன் பரவையுள் மண்டளி அம்மானே!
| [ 4]
|
பஞ்சு ஏறும் மெல் அடியாளை ஓர்பாகம் ஆய், நஞ்சு ஏரும் நல் மணிகண்டம் உடையானே! நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை, அஞ்சேல்! என்பரவையுள் மண்டளி அம்மானே,
| [ 5]
|
Go to top |
அம்மானே! ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன் தம்மானே! தண்தமிழ்நூல் புலவாணர்க்கு ஓர் அம்மானே! பரவையுள்மண்டளி அம்மானே!
| [ 6]
|
விண்டானே! மேலையார் மேலையார் மேல் ஆய எண்தானே! எழுத்தொடு சொல்பொருள் எல்லாம் முன் கண்டானே! கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே!- அண்டானே! பரவையுள் மண்டளி அம்மானே!
| [ 7]
|
காற்றானே! கார்முகில் போல்வது ஒர் கண்டத்து எம் கூற்றானே! கோல்வளையாளை ஓர்பாகம் ஆம் நீற்றானே! நீள்சடைமேல் நிறை உள்ளது ஓர் ஆற்றானே! பரவையுள் மண்டளி அம்மானே!
| [ 8]
|
செடியேன், நான்; செய்வினை நல்லன செய்யாத கடியேன், நான் கண்டதே கண்டதே காமுறும் கொடியேன், நான்; கூறும் ஆறு உன் பணி கூறாத அடியேன், நான்பரவையுள் மண்டளி அம்மானே!
| [ 9]
|
கரந்தையும், வன்னியும், மத்தமும், கூவிளம், பரந்த சீர்ப் பரவையுள் மண்டளி அம்மானை நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.
| [ 10]
|
Go to top |