sivasiva.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=qhtteaiYfA4
7.100
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
7 th/nd Thirumurai (பஞ்சமம் Location: திருக்கயிலாயம் God: Goddess: ) திருக்கயிலாயம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.sivasiva.org/audio/7.100 Thaan Enai Padaiththaan.mp3
தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே
நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து,
வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்)
ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே.
[ 1]
ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ-
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன்,
வானை மதித்த(அ)மரர் வலம்செய்து, எனை ஏற வைக்க
ஆனை அருள் புரிந்தான், நொடித்தான்மலை உத்தமனே?
[ 2]
மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்;
சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்தது-
உம்தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே.
[ 3]
வாழ்வை உகந்த நெஞ்சே! மடவார் தங்கள் வல்வினைப் பட்டு,
ஆழ முகந்த என்னை அது மாற்றி, அமரர் எல்லாம்
சூழ அருள் புரிந்து(த்), தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வேழம் அருள் புரிந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
[ 4]
மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி அடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்;
விண்ணுலகத்தவர்கள் விரும்ப(வ்) வெள்ளையானையின் மேல்
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.
[ 5]
Go to top
அஞ்சினை ஒன்றி நின்று(வ்) அலர் கொண்டு அடி சேர்வு அறியா
வஞ்சனை என் மனமே வைகி, வான நன் நாடர் முன்னே!
துஞ்சுதல் மாற்றுவித்து, தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வெஞ்சின ஆனை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
[ 6]
நிலை கெட, விண் அதிர(ந்), நிலம் எங்கும் அதிர்ந்து அசைய,
மலை இடை யானை ஏறி(வ்) வழியே வருவேன் எதிரே,
அலைகடல் ஆல் அரையன்(ன்) அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச,
உலை அணையாத வண்ணம்-நொடித்தான்மலை உத்தமனே.
[ 7]
அர ஒலி, ஆகமங்கள்(ள்) அறிவார் அறி தோத்திரங்கள்,
விரவிய வேத ஒலி, விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப,
வரம் மலி வாணன் வந்து(வ்) வழிதந்து, எனக்கு ஏறுவது ஓர்
சிரம் மலி யானை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
[ 8]
இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர் மிகு தேவர், எல்லாம்
வந்து எதிர்கொள்ள, என்னை மத்தயானை அருள்புரிந்து,
மந்திர மா முனிவர், இவன் ஆர்? என,-எம்பெருமான்
நம்தமர் ஊரன் என்றான்நொடித்தான்மலை உத்தமனே.
[ 9]
ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை,
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன,
ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்,
ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கயிலாயம்
1.068
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி கொள் உருவர், புலியின்
Tune - தக்கேசி
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
3.068
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாள வரி கோள புலி
Tune - சாதாரி
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
4.047
திருநாவுக்கரசர்
தேவாரம்
கனகம் மா வயிரம் உந்தும்
Tune - திருநேரிசை
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.055
திருநாவுக்கரசர்
தேவாரம்
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
Tune - குறிஞ்சி
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.056
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொறை உடைய பூமி, நீர்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.057
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாட்டு ஆன நல்ல தொடையாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
7.100
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தான் எனை முன் படைத்தான்;
Tune - பஞ்சமம்
(திருக்கயிலாயம் )
11.008
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
திருக்கயிலாய ஞான உலா
Tune -
(திருக்கயிலாயம் )
11.009
நக்கீரதேவ நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
Tune -
(திருக்கயிலாயம் )
This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000