சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன
சலசம் அலர்த்தியிடு அருணாச்சலா !
சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான்
சாந்தமாய்ப் போவன் அருணாச்சலா !
சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத
வாயைத்திற அருண்மதி அருணாச்சலா !
சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள்
சீரை அழித்து அருள் அருணாச்சலா !---- 30
சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச்
சும்மா பொருந்திடு அங்கு அருணாச்சலா !
சூது செய்து என்னைச் சோதியாது இனி உன்
ஜோதி உருக்காட்டு அருணாச்சலா !
செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு
உருப்படு வித்தை காட்டு அருணாச்சலா !
சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர்
ஆற்று அழிவேன் அருணாச்சலா !
சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்
உய்வகை ஏது உரை அருணாச்சலா !---- 35
சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாச்சலா !
சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
சொல் வேறு என்கதி அருணாச்சலா !
சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
சலியாது இருந்தாய் அருணாச்சலா !
ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
நாடி நின் உறுவேன் அருணாச்சலா !
ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
ஞானம் தெரித்தருள் அருணாச்சலா !---- 40
ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே
நேர் நின்றனை என் அருணாச்சலா !
தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய்
தத்துவம் இது என் அருணாச்சலா !
தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் அருணாச்சலா !
திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாச்சலா !
தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான்
திரும்ப உற்றேன் அருள் அருணாச்சலா !---- 45
துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன்
ஒப்பிட வாய் ஏன் அருணாச்சலா !
தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம்
தோயவே அருள் என் அருணாச்சலா !
தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாச்சலா !
தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத்
தியக்கம் தீர்த்து அருள் அருணாச்சலா !
தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான்
தட்டழிந்தேன் அருள் அருணாச்சலா !---- 50
தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான்
நட்டமாவேன் அருள் அருணாச்சலா !
தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும்
சந்தோடம் ஒன்றிட அருள் அருணாச்சலா !
நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள்
நகையிட்டுப் பார் நீ அருணாச்சலா !
நாணிலை நாடிட நானாய் ஒன்றி நீ
தாணுவாய் நின்றனை அருணாச்சலா !
நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன்
நின் அருள் மழை பொழி அருணாச்சலா !---- 55
நீ நான் அறப்புலி நிதம் களிமயமாய்
நின்றிடும் நிலை அருள் அருணாச்சலா !
நுன்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
எண்(ண) அலை இறும் என்று அருணாச்சலா !
நூலறிவு அறியாப் பேதையன் எந்தன்
மால் அறிவு அறுத்து அருள் அருணாச்சலா