சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
7.032
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கடிது ஆய்க் கடல் காற்று பண் - கொல்லி (திருக்கோடிக்குழகர் அமுதகடநாதர் மையார்தடங்கணம்மை) Audio: https://www.youtube.com/watch?v=t_QtO4-9Rrk |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.032  
கடிது ஆய்க் கடல் காற்று
பண் - கொல்லி (திருத்தலம் திருக்கோடிக்குழகர் ; (திருத்தலம் அருள்தரு மையார்தடங்கணம்மை உடனுறை அருள்மிகு அமுதகடநாதர் திருவடிகள் போற்றி )
கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல் குடி தான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ? கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்! அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே? | [1] |
முன் தான் கடல் நஞ்சம் உண்ட அதனாலோ? பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ? குன்றாப் பொழில் சூழ் தரு கோடிக் குழகா! என் தான் தனியே இருந்தாய்? எம்பிரானே! | [2] |
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால் பத்தர் பலர் பாட இருந்த பரமா! கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! எத்தால்-தனியே இருந்தாய்? எம்பிரானே! | [3] |
காடேல், மிக வலிது; காரிகை அஞ்ச, கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற, வேடித் தொண்டர் சாலவும் தீயர்; சழக்கர்; கோடிக் குழகா! இடம் கோயில் கொண்டாயே? | [4] |
மை ஆர் தடங்கண்ணி பங்கா! கங்கையாளும் மெய் ஆகத்து இருந்தனள்; வேறு இடம் இல்லை; கை ஆர் வளைக் காடு காளோடும் உடன் ஆய்க் கொய் ஆர் பொழில் கோடியே கோயில் கொண்டாயே? | [5] |
அரவு ஏர் அல்குலாளை ஓர் பாகம் அமர்ந்து, மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்பால் குரவம் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! இரவே துணை ஆய் இருந்தாய்; எம்பிரானே! | [6] |
பறையும் குழலும்(ம்) ஒலிபாடல் இயம்ப, அறையும் கழல் ஆர்க்க, நின்று ஆடும் அமுதே! குறையாப் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! இறைவா! தனியே இருந்தாய்; எம்பிரானே! | [7] |
ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ? அற்றப் பட ஆரூர் அது என்று அகன்றாயோ? முற்றா மதி சூடிய கோடிக் குழகா! எற்றால்-தனியே இருந்தாய்? எம்பிரானே! | [8] |
நெடியானொடு நான்முகனும்(ம்) அறிவு ஒண்ணாப் படியான்! பலி கொள்ளும் இடம் குடி இல்லை; கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரைமேல்; அடிகேள்! அன்பு அது ஆய் இடம் கோயில் கொண்டாயே! | [9] |
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால் ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகை ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர் தாமே. | [10] |