சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர
பண் - திருநேரிசை   (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4bt4zrxddYA

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.032   உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருப்பயற்றூர் ; (திருத்தலம் அருள்தரு காவியங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு திருப்பயத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே.

[1]
உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம் வைத்தவர்; ஊழி ஊழி
பவர்ந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றி,
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
சிவந்திட்ட கண்ணர் போலும்-திருப் பயற்றூரனாரே.

[2]
நங்களுக்கு அருளது என்று நால்மறை ஓதுவார்கள்
தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்; தழலன்; தன்னை;
எங்களுக்கு அருள்செய்! என்ன நின்றவன்; நாகம் அஞ்சும்
திங்களுக்கு அருளிச் செய்தார்-திருப் பயற்றூரனாரே.

[3]
பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்; சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார்; கோள் அரா, மதியம், நல்ல
தீர்த்தமும், சடைமேல் வைத்தார்-திருப் பயற்றூரனாரே.

[4]
மூவகை மூவர்போலும்; முற்று மா நெற்றிக்கண்ணர்
நா வகை நாவர்போலும்; நால்மறை ஞானம் எல்லாம்
ஆ வகை ஆவர்போலும்; ஆதிரைநாளர் போலும்;
தேவர்கள் தேவர் போலும்-திருப் பயற்றூரனாரே.

[5]
ஞாயிறுஆய், நமனும் ஆகி, வருணனாய், சோமன் ஆகி,
தீ அறா நிருதி வாயுத் திப்பி(ய) ஈசானன் ஆகி,
பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன், எந்தை பெம்மான்,
தீ அறாக் கையர் போலும்-திருப் பயற்றூரனாரே.

[6]
ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம் ஆய், பெருக்கம் ஆகி,
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய், பிரமன் ஆகி,
காவி அம் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்- திருப் பயற்றூரனாரே.

[7]
தந்தையாய், தாயும் ஆகி, தரணி ஆய், தரணி உள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழ் உலகு உடனும் ஆகி,
எந்தை! எம்பிரானே! என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும்
சிந்தையும் சிவமும் ஆவார்- திருப் பயற்றூரனாரே.

[8]
புலன்களைப் போக நீக்கி, புந்தியை ஒருங்க வைத்து(வ்)
இனங்களைப் போக நின்று, இரண்டையும் நீக்கி, ஒன்று ஆய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகிச்
சினங்களைக் களைவர் போலும்-திருப் பயற்றூரனாரே.

[9]
மூர்த்தி தன் மலையின் மீது போகாதா, முனிந்து நோக்கி,
பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்து, உடன் மலையைப் பற்றி,
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்-திருப் பயற்றூரனாரே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list