சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர பண் - திருநேரிசை (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4bt4zrxddYA |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.032  
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர
பண் - திருநேரிசை (திருத்தலம் திருப்பயற்றூர் ; (திருத்தலம் அருள்தரு காவியங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு திருப்பயத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட; விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித் தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும் சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே. | [1] |
உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம் வைத்தவர்; ஊழி ஊழி பவர்ந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றி, கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி, சிவந்திட்ட கண்ணர் போலும்-திருப் பயற்றூரனாரே. | [2] |
நங்களுக்கு அருளது என்று நால்மறை ஓதுவார்கள் தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்; தழலன்; தன்னை; எங்களுக்கு அருள்செய்! என்ன நின்றவன்; நாகம் அஞ்சும் திங்களுக்கு அருளிச் செய்தார்-திருப் பயற்றூரனாரே. | [3] |
பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை ஆட வைத்தார் சாத்தனை மகனா வைத்தார்; சாமுண்டி சாம வேதம் கூத்தொடும் பாட வைத்தார்; கோள் அரா, மதியம், நல்ல தீர்த்தமும், சடைமேல் வைத்தார்-திருப் பயற்றூரனாரே. | [4] |
மூவகை மூவர்போலும்; முற்று மா நெற்றிக்கண்ணர் நா வகை நாவர்போலும்; நால்மறை ஞானம் எல்லாம் ஆ வகை ஆவர்போலும்; ஆதிரைநாளர் போலும்; தேவர்கள் தேவர் போலும்-திருப் பயற்றூரனாரே. | [5] |
ஞாயிறுஆய், நமனும் ஆகி, வருணனாய், சோமன் ஆகி, தீ அறா நிருதி வாயுத் திப்பி(ய) ஈசானன் ஆகி, பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன், எந்தை பெம்மான், தீ அறாக் கையர் போலும்-திருப் பயற்றூரனாரே. | [6] |
ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம் ஆய், பெருக்கம் ஆகி, பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய், பிரமன் ஆகி, காவி அம் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார்- திருப் பயற்றூரனாரே. | [7] |
தந்தையாய், தாயும் ஆகி, தரணி ஆய், தரணி உள்ளார்க்கு எந்தையும் என்ன நின்ற ஏழ் உலகு உடனும் ஆகி, எந்தை! எம்பிரானே! என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும் சிந்தையும் சிவமும் ஆவார்- திருப் பயற்றூரனாரே. | [8] |
புலன்களைப் போக நீக்கி, புந்தியை ஒருங்க வைத்து(வ்) இனங்களைப் போக நின்று, இரண்டையும் நீக்கி, ஒன்று ஆய் மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகிச் சினங்களைக் களைவர் போலும்-திருப் பயற்றூரனாரே. | [9] |
மூர்த்தி தன் மலையின் மீது போகாதா, முனிந்து நோக்கி, பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்து, உடன் மலையைப் பற்றி, ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத் தேத்தெத்தா என்னக் கேட்டார்-திருப் பயற்றூரனாரே. | [10] |