சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீல மா மணிகண்டத்தர்; நீள்
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FhvymcfqvFA

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.051   நீல மா மணிகண்டத்தர்; நீள்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருப்பாலைத்துறை ; (திருத்தலம் அருள்தரு தவளவெண்ணகையம்மை உடனுறை அருள்மிகு பாலைவனநாதர் திருவடிகள் போற்றி )
நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக்
கோல மா மதி கங்கையும் கூட்டினார்;
சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப்
பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே.

[1]
கவள மா களிற்றின்(ன்)உரி போர்த்தவர்;
தவள-வெண்நகை மங்கை ஓர் பங்கினர்;
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவளமேனியர்- பாலைத்துறையரே.

[2]
மின்னின் நுண் இடைக் கன்னியர் மிக்கு, எங்கும்
பொன்னிநீர் மூழ்கிப் போற்றி அடி தொழ,
மன்னி நால்மறையோடு பல்கீதமும்
பன்னினார் அவர்-பாலைத்துறையரே.

[3]
நீடு காடு இடம் ஆய், நின்ற பேய்க்கணம்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே,
ஆடினார் அழகு ஆகிய நால்மறை
பாடினார் அவர்-பாலைத்துறையரே.

[4]
சித்தர், கன்னியர், தேவர்கள், தானவர்,
பித்தர், நால்மறை வேதியர், பேணிய
அத்தனே! நமை ஆள் உடையாய்! எனும்
பத்தர்கட்கு அன்பர்-பாலைத்துறையரே.

[5]
விண்ணினார் பணிந்து ஏத்த, வியப்பு உறும்
மண்ணினார் மறவாது, சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர்-பாலைத்துறையரே.

[6]
குரவனார்; கொடுகொட்டியும், கொக்கரை
விரவினார், பண் கெழுமிய வீணையும்;-
மருவு நாள்மலர் மல்லிகை, செண்பகம்,
பரவு நீர்ப் பொன்னிப் பாலைத்துறையரே.

[7]
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து
அடரும்போது, அரனாய் அருள்செய்பவர்;
கடலின் நஞ்சு அணி கண்டர்-கடிபுனல்
படரும் செஞ்சடைப் பாலைத்துறையரே.

[8]
மேகம் தோய் பிறை சூடுவர்; மேகலை
நாகம் தோய்ந்த அரையினர்; நல் இயல்
போகம் தோய்ந்த புணர்முலை மங்கை ஓர்-
பாகம் தோய்ந்தவர்-பாலைத்துறையரே.

[9]
வெங் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்;
அம் கணார்; அடியார்க்கு அருள் நல்குவர்;
செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர்;
பைங்கண் ஏற்றினர்-பாலைத்துறையரே.

[10]
உரத்தினால் அரக்கன்(ன்) உயர்மாமலை
நெருக்கினானை நெரித்து, அவன் பாடலும்
இரக்கமா அருள்செய்த பாலைத்துறை
கரத்தினால்-தொழுவார் வினை ஓயுமே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list