சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.051
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீல மா மணிகண்டத்தர்; நீள் பண் - திருக்குறுந்தொகை (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=FhvymcfqvFA |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.051  
நீல மா மணிகண்டத்தர்; நீள்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருப்பாலைத்துறை ; (திருத்தலம் அருள்தரு தவளவெண்ணகையம்மை உடனுறை அருள்மிகு பாலைவனநாதர் திருவடிகள் போற்றி )
நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக் கோல மா மதி கங்கையும் கூட்டினார்; சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப் பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே. | [1] |
கவள மா களிற்றின்(ன்)உரி போர்த்தவர்; தவள-வெண்நகை மங்கை ஓர் பங்கினர்; திவள வானவர் போற்றித் திசைதொழும் பவளமேனியர்- பாலைத்துறையரே. | [2] |
மின்னின் நுண் இடைக் கன்னியர் மிக்கு, எங்கும் பொன்னிநீர் மூழ்கிப் போற்றி அடி தொழ, மன்னி நால்மறையோடு பல்கீதமும் பன்னினார் அவர்-பாலைத்துறையரே. | [3] |
நீடு காடு இடம் ஆய், நின்ற பேய்க்கணம் கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே, ஆடினார் அழகு ஆகிய நால்மறை பாடினார் அவர்-பாலைத்துறையரே. | [4] |
சித்தர், கன்னியர், தேவர்கள், தானவர், பித்தர், நால்மறை வேதியர், பேணிய அத்தனே! நமை ஆள் உடையாய்! எனும் பத்தர்கட்கு அன்பர்-பாலைத்துறையரே. | [5] |
விண்ணினார் பணிந்து ஏத்த, வியப்பு உறும் மண்ணினார் மறவாது, சிவாய என்று எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் பண்ணினார் அவர்-பாலைத்துறையரே. | [6] |
குரவனார்; கொடுகொட்டியும், கொக்கரை விரவினார், பண் கெழுமிய வீணையும்;- மருவு நாள்மலர் மல்லிகை, செண்பகம், பரவு நீர்ப் பொன்னிப் பாலைத்துறையரே. | [7] |
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து அடரும்போது, அரனாய் அருள்செய்பவர்; கடலின் நஞ்சு அணி கண்டர்-கடிபுனல் படரும் செஞ்சடைப் பாலைத்துறையரே. | [8] |
மேகம் தோய் பிறை சூடுவர்; மேகலை நாகம் தோய்ந்த அரையினர்; நல் இயல் போகம் தோய்ந்த புணர்முலை மங்கை ஓர்- பாகம் தோய்ந்தவர்-பாலைத்துறையரே. | [9] |
வெங் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்; அம் கணார்; அடியார்க்கு அருள் நல்குவர்; செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர்; பைங்கண் ஏற்றினர்-பாலைத்துறையரே. | [10] |
உரத்தினால் அரக்கன்(ன்) உயர்மாமலை நெருக்கினானை நெரித்து, அவன் பாடலும் இரக்கமா அருள்செய்த பாலைத்துறை கரத்தினால்-தொழுவார் வினை ஓயுமே. | [11] |