கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா, இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம், அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.
| [ 1]
|
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி, விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்- கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.
| [ 2]
|
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து, பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.
| [ 3]
|
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல் நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.
| [ 4]
|
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல், கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் மாடு முழவம் அதிர, மட மாதர் ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.
| [ 5]
|
Go to top |
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால் ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்- வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.
| [ 6]
|
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை, கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும் அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.
| [ 7]
|
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி, படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி, கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.
| [ 8]
|
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும், பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை; சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம் அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.
| [ 9]
|
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர், நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல் வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.
| [ 10]
|
Go to top |
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.
| [ 11]
|