வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி வந்து இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு காவிரிக் கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்! உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே??
| [ 1]
|
அடுத்து அடுத்து அகத்தியோடு, வன்னி, கொன்றை, கூவிளம், தொடுத்து உடன் சடைப் பெய்தாய்! துருத்தியாய்! ஓர் காலனைக் கடுத்து, அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம் எடுத்து எடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில், நல்லமே.
| [ 2]
|
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செஞ்சடைச் சங்கு இலங்கு வெண்குழை சரிந்து இலங்கு காதினாய்! பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா! துருத்தி புக்கு, எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்கொ
| [ 3]
|
கருத்தினால் ஒர் காணி இல்; விருத்தி இல்லை; தொண்டர் தம் அருத்தியால், தம்(ம்) அல்லல் சொல்லி, ஐயம் ஏற்பது அன்றியும், ஒருத்திபால் பொருத்தி வைத்து, உடம்பு விட்டு யோகியாய் இருத்தி நீ, துருத்தி புக்கு; இது என்ன மாயம் என்பதே!
| [ 4]
|
துறக்குமா சொலப்படாய்! துருத்தியாய்! திருந்து அடி மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து, இம் மண்ணின்மேல் பிறக்கும் ஆறு காட்டினாய்! பிணிப்படும் உடம்பு விட்டு இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே?
| [ 5]
|
Go to top |
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில் துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய்! மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூ எயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே?
| [ 6]
|
கணிச்சி அம்படைச் செல்வா! கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் துணிச் சிரக் கிரந்தையாய்! கரந்தையாய்! துருத்தியாய்! அணிப்படும் தனிப் பிறைப் பனிக் கதிர்க்கு அவாவும் நல் மணிப் படும் பைநாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே?
| [ 7]
|
சுடப் பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன் இடர்ப்படக் கடந்து, இடம் துருத்தி ஆக எண்ணினாய்! கடல் படை உடைய அக் கடல் இலங்கை மன்னனை, அடல் பட, அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே?
| [ 8]
|
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும், மாலும் ஆய், வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்; துளங்கு இளம்பிறைச் செனித் துருத்தியாய்! திருந்து அடி, உளம் குளிர்ந்த போது எலாம், உகந்து உகந்து உரைப்பனே.
| [ 9]
|
புத்தர், தத்துவம் இலாச் சமண், உரைத்த பொய்தனை உத்தமம் எனக் கொளாது, உகந்து எழுந்து, வண்டு இனம் துத்தம் நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம் பித்தர் பித்தனைத் தொழ, பிறப்பு அறுத்தல் பெற்றியே.
| [ 10]
|
Go to top |
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ் சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால், பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே, குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே.
| [ 11]
|