தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார் அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.
| [ 1]
|
ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே.
| [ 2]
|
மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
| [ 3]
|
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.
| [ 4]
|
சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன் அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர் நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள் பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.
| [ 5]
|
Go to top |
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை கூறும் கருமயிர் வெண்மயி ராவதும் ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.
| [ 6]
|
துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.
| [ 7]
|
இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய் உண்பது வாச மதுபோல் உயிர்நிலை இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே.
| [ 8]
|
ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம் போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின் ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர் ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.
| [ 9]
|
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.9,
| [ 10]
|
Go to top |