ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப் பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.
| [ 1]
|
ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.
| [ 2]
|
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்; கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்; துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
| [ 3]
|
பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப் பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப் பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே.
| [ 4]
|
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில் ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம் மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.
| [ 5]
|
Go to top |
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியனும் வெட்ட வெளியனு மாமே.
| [ 6]
|
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச் சங்கே குறிக்கத் தலைவனு மாமே.
| [ 7]
|
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
| [ 8]
|
மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப் பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
| [ 9]
|
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண் டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.
| [ 10]
|
Go to top |
இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப் புட்டி படத்தச நாடியும் பூரித்துக் கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து நட்டங் கிருக்க நமனில்லை தானே.
| [ 11]
|
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
| [ 12]
|
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம் நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே.
| [ 13]
|
பன்னிரண் டானை பகல்இர வுள்ளது பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே. 6,
| [ 14]
|