எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளியவே ஓதின் சிவாயநம என்னும் குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.
| [ 1]
|
தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று) உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும் வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர் துள்ளிய நீர்போற் சூழல்கின்ற வாறே.
| [ 2]
|
சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.
| [ 3]
|
சிவனரு ளாய சிவன்திரு நாமம் சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச் சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவம தகன்று பரசிவ னாமே.
| [ 4]
|
நமாதி நனாதி திரோதாயி யாகித் தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச் சமாதித் துரியந் தமதாகம் ஆக நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே. 7,
| [ 5]
|
Go to top |