மன சந்தியில் கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தங் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.
| [ 1]
|
கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை அரியன் பெரியன்என்(று) ஆட்பட்ட தல்லால் கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.
| [ 2]
|
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.
| [ 3]
|
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.
| [ 4]
|
விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே அசும்பினின் நூறும் ஆரமு தாகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.
| [ 5]
|
Go to top |
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம் ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.
| [ 6]
|
நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும் நானென்று தானென் றிரண்டில்லை என்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.
| [ 7]
|
ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல் ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.
| [ 8]
|
உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம் உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.
| [ 9]
|
காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும் காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும் பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.
| [ 10]
|
Go to top |
ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல் மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே. 18,
| [ 11]
|