திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர், உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் ஏர் ஆர் மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.
| [ 1]
|
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார, வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே.
| [ 2]
|
கட்டு வடம் எட்டும் உறு வட்டமுழவத்தில் கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு இட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் சீர் வட்டமதிலுள் திகழும் வண் திரு ஐயாறே.
| [ 3]
|
நண்ணி ஒர் வடத்தின்நிழல் நால்வர்முனிவர்க்கு, அன்று, எண் இலிமறைப்பொருள் விரித்தவர் இடம் சீர்த் தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே.
| [ 4]
|
வென்றி மிகு தாருகனது ஆர் உயிர் மடங்க, கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ, நின்று நடம் ஆடி இடம் நீடு மலர்மேலால் மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே.
| [ 5]
|
Go to top |
பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி, பாத முதல் பைஅரவு கொண்டு அணி பெறுத்தி, கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே.
| [ 6]
|
துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த, பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே, என்ன சதி? என்று உரைசெய் அங்கணன் இடம் சீர் மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே.
| [ 7]
|
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம்போர் அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத் துரக்க, விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர் வரக் கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே.
| [ 8]
|
பருத்துஉருஅது ஆகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப் பெருத்த உருஅது ஆய் உலகு இடந்தவனும், என்றும் கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே.
| [ 9]
|
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர், புத்தர் சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம், நோக்கரிய தத்துவன் இடம் படியின்மேலால் மாகம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே.
| [ 10]
|
Go to top |
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள் ஈசனை, எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப் பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார், நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே.
| [ 11]
|
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|