எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார் தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும், கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன் வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.
| [ 1]
|
தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக் காம்! என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான் ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.
| [ 2]
|
நன் நெஞ்சே! உனை இரந்தேன்; நம்பெருமான் திருவடியே உன்னம் செய்து இரு கண்டாய்! உய்வதனை வேண்டுதியேல், அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும் பன், அம் சீர் வாய் அதுவே! பார், கண்ணே, பரிந்திடவே!
| [ 3]
|
சாம் நாள் இன்றி(ம்), மனமே! சங்கைதனைத் தவிர்ப்பிக்கும் கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு!  எத்தனையும் தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீவணனை, நா, நாளும் நன்நியமம் செய்து, சீர் நவின்று ஏத்தே!
| [ 4]
|
கண் நுதலான், வெண் நீற்றான், கமழ் சடையான், விடை ஏறி, பெண் இதம் ஆம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர்பல உடையான், விண் நுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரம் தொழ விரும்பி எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே.
| [ 5]
|
Go to top |
எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும், தன் அடியார்க்கு இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான், எருது ஏறி, கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும் சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே
| [ 6]
|
சிலை அதுவே சிலை ஆகத் திரி புரம் மூன்று எரிசெய்த இலை நுனை வேல் தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன், அலை புனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடி பணிந்தால், நிலை உடைய பெருஞ்செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே.
| [ 7]
|
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க, தோளொடு தாள நெரித்து அருளும் சிவமூர்த்தி, நீறு அணிந்த மேனியினான், உரித்த வரித்தோல் உடையான், உறை பிரமபுரம் தன்னைத் தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே.
| [ 8]
|
கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உரு ஆய் அரியான் ஆம் பரமேட்டி, அரவம் சேர் அகலத்தான், தெரியாதான், இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர உரியார்தாம் ஏழ் உலகும் உடன் ஆள உரியாரே.
| [ 9]
|
உடை இலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்; முடையில் ஆர் வெண்தலைக் கை மூர்த்தி ஆம் திரு உருவன்; பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் உறையும் சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே.
| [ 10]
|
Go to top |
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை, கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை, முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே.
| [ 11]
|
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|