மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை கொள் கண்டம் உடைய கபாலியார்; துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்; பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.
| [ 1]
|
கணக்கு இலாரையும், கற்று வல்லாரையும், வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும், தணக்குவார்; தணிப்பார்; எப்பொருளையும் பிணக்குவார் அவர்-பேரெயிலாளரே.
| [ 2]
|
சொரிவிப்பார், மழை; சூழ் கதிர்த் திங்களை விரிவிப்பார்; வெயில் பட்ட விளங்கு ஒளி எரிவிப்பார்; தணிப்பார்; எப்பொருளையும் பிரிவிப்பார் அவர்-பேரெயிலாளரே.
| [ 3]
|
செறுவிப்பார், சிலையால் மதில்; தீர்த்தங்கள் உறுவிப்பார்; பலபத்தர்கள் ஊழ்வினை அறுவிப்பார்; அது அன்றியும் நல்வினை பெறுவிப்பார் அவர்-பேரெயிலாளரே.
| [ 4]
|
மற்றையார் அறியார்; மழுவாளினார்; பற்றி ஆட்டி ஓர் ஐந்தலைப்பாம்பு அரைச் சுற்றியார் அவர்; தூ நெறியால் மிகு பெற்றியார் அவர்-பேரெயிலாளரே.
| [ 5]
|
Go to top |
திருக்கு வார்குழல் செல்வன சேவடி- இருக்கு வாய்மொழியால்-தனை ஏத்துவார் சுருக்குவார், துயர்; தோற்றங்கள் ஆற்றறப் பெருக்குவார் அவர், பேரெயிலாளரே.
| [ 6]
|
முன்னையார்; மயில் ஊர்தி முருகவேள்- தன் ஐயார் எனில்-தான் ஓர் தலைமகன்; என்னை ஆளும் இறையவன்; எம்பிரான்; பின்னையார் அவர்-பேரெயிலாளரே.
| [ 7]
|
உழைத்தும், துள்ளியும், உள்ளத்துளே உரு இழைத்தும், எந்தைபிரான் என்று இராப்பகல் அழைக்கும் அன்பினர் ஆய அடியவர் பிழைப்பு நீக்குவர்-பேரெயிலாளரே.
| [ 8]
|
நீர் உலாம் நிமிர்புன்சடையா! எனா ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய, வார் உலாம் வனமென்முலையாளொடும், பேர் உளார் அவர்-பேரெயிலாளரே.
| [ 9]
|
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்; தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்; மாணியாய் மண் அளந்தவன், நான்முகன், பேணியார் அவர் பேரெயிலாளரே.
| [ 10]
|
Go to top |
மதத்த வாள் அரக்கன் மணிப் புட்பகம் சிதைக்கவே, திருமாமலைக்கீழ்ப் புக்கு, பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே.
| [ 11]
|