நத்தார் புடை ஞானன்; பசு ஏறிந்(ன்); நனை கவுள் வாய்ப் மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன்; பத்து ஆகிய தொண்டர் தொழு, பாலாவியின் கரைமேல், செத்தார் எலும்பு அணிவான்-திருக்கேதீச்சுரத்தானே.
| [ 1]
|
சுடுவார் பொடி-நீறும், நல துண்டப் பிறை, கீளும், கடம் ஆர் களியானை உரி, அணிந்த(க்) கறைக் கண்டன்; பட ஏர் இடை மடவாளொடு, பாலாவியின் கரை மேல்- திடமா உறைகின்றான்-திருக்கேதீச்சுரத்தானே.
| [ 2]
|
அங்கம் மொழி அன்னார் அவர், அமரர், தொழுது ஏத்த, வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில் பங்கம் செய்த பிறை சூடினன்; பாலாவியின் கரைமேல்- செங்கண்(ண்) அரவு அசைத்தான் திருக்கேதீச்சுரத்தானே.
| [ 3]
|
கரியக் கறைக்கண்டன்(ன்); நல கண்மேல் ஒரு கண்ணான்; வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நன் நகருள் பரிய திரை எறியா வரு பாலாவியின் கரைமேல்- தெரியும் மறை வல்லான்திருக்கேதீச்சுரத்தானே.
| [ 4]
|
அங்கத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில் பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்- தெங்கு அம்பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சுரத்தானே.
| [ 5]
|
Go to top |
வெய்ய வினை ஆய அடியார்மேல் ஒழித்துஅருளி வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்ய சடை முடியான்-திருக்கேதீச்சுரத்தானே.
| [ 6]
|
ஊனத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி, வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நன் நகரில் பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்து எயிறு அணிந்தான் திருக்கேதீச்சுரத்தானே.
| [ 7]
|
அட்டன்(ந்) அழகு ஆக (வ்) அரைதன் மேல் அரவு ஆர்த்து மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நன்நகரில் பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல சிட்டன் நமை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே.
| [ 8]
|
மூவர் என, இருவர் என, முக்கண் உடை மூர்த்தி; மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்நகரில் பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்- தேவன்; எனை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே.
| [ 9]
|
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன் நகருள் சிறை ஆர் பொழில் வண்டு யாழ் செயும் கேதீச்சுரத்தானை மறை ஆர் புகழ் ஊரன்(ந்)-அடித் தொண்டன்(ந்)-உரை செய்த குறையாத் தமிழ்பத்தும் சொலக் கூடா, கொடுவினையே.
| [ 10]
|
Go to top |