Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Gujarathi Oriya Singala Tibetian Thai Urdu Cyrillic/Russian
Nalam Tharum (Wordly Beneficial) Thiruppugazh Songs |
70 திருச்செந்தூர் திருப்புகழ் நாலும் ஐந்து வாசல் |
தான தந்த தான தான - தான தந்த தான தான தான தந்த தான தான ...... தனதான |
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி நாட றிந்தி டாம லேக ...... வளராமுன் நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர் காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே. |
நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால்கை யாகி நாரி யென்பில் ஆகும் ஆகம் அதனூடே நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்க ளான ஆடி நாடறிந்திடாமல் ஏக வளராமுன் நூல் அநந்த கோடி தேடி மால்மிகுந்து பாருளோரை நூறு செஞ்சொல் கூறி மாறி விளைதீமை நோய்கலந்த வாழ்வுறாமல் நீகலந்து உள் ஆகு ஞான நூல் அ டங்க ஓத வாழ்வு தருவாயே காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து ஓலம் ஓலம் எனும் ஆதி காமன் ஐந்து பாணமோடு வேமின் என்றுகாணு மோனர் காள கண்ட ரோடு வேத மொழிவோனே ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே ஆரணங்கள் தாளை நாட வாரணம் கை மேவும் ஆதியான செந்தில் வாழ்வதான பெருமாளே. |
166 பழநி திருப்புகழ் தலைவலி மருத்தீடு |
தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன ...... தனதான |
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம் உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும் அலைகட லடைத்தேம காகோர ராவணனை மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே அறுகினை முடித்தோனை யாதார மானவனை மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய் பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில் வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர் பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே. |
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம் வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறி யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம் உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம் உளமது தரித்தே வினாவோடு பாடியருள் வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும் அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு மருகோனே அறுகினை முடித்தோனை யாதார மானவனை மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் வருவோனே பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை இருசரண வித்தார வேலாயுதா உயர்செய் பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு மணவாளா பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர் பழநிவரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. |
Audio/Video Link(s) |
https://www.youtube.com/watch?v=koMDP9QU8hQ |
196 பழநி திருப்புகழ் வாதம் பித்தம் |
தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன ...... தனதான |
வாதம் பித்தமி டாவயி றீளைகள் சீதம் பற்சனி சூலைம கோதர மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர் சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய் சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித் தூசின் பொற்சர மோடுகு லாயுல கேழும் பிற்பட வோடிடு மூடனை தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய் தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி சேடன் சொக்கிட வேலைக டாகமெ லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா வேதன் பொற்சிர மீதுக டாவிந லீசன் சற்குரு வாயவர் காதினில் மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே வேஷங் கட்டிபி னேகிம காவளி மாலின் பித்துற வாகிவி ணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே. |
வாதம் பித்த மிடாவயிறு ஈளைகள் சீதம் பற்சனி சூலை மகோதரம் ஆசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணியோடும் தத்துவ காரர்தொணூறறு வாருஞ் சுற்றினில் வாழ் சதி காரர்கள் வெகுமோகர் சூழ் துன் சித்ர கபாயை முவாசைகொடு ஏதுஞ் சற்றுணராமலெ மாயைசெய் சோரம் பொய்க்குடிலே சுகமாமென இதின்மேவி தூசின் பொற்சரமோடு குலாய் உலகேழும் பிற்படவோடிடு மூடனை தூவஞ் சுத்தடி யாரடி சேரநினருள்தாராய் தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட வெனபேரி சேடன் சொக்கிட வேலைக டாகமெலாமஞ் சுற்றிடவே அசு ரார்கிரி தீவும் பொட்டெழவே அனல் வேல்விடு மயில்வீரா வேதன் பொற்சிர மீதுகடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே வேஷங் கட்டிபின் ஏகி மகாவ(ள்)ளி மாலின் பித்துறவாகி விணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய பெருமாளே. |
232 சுவாமிமலை திருப்புகழ் வாதமொடு சூலை |
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம் வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின் மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும் பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து பாயலைவி டாது மங்க ...... இவையால்நின் பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து பாவமது பான முண்டு ...... வெறிமூடி ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான் ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன் ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய் சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத் தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே. |
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம் வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு பூஷணங்கள் என ஆகும் பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க இவையால் நின் பாத மலரானதின் கண் நேயம் அறவே மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான் ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய் சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமி மலை வாழ வந்த பெருமாளே. |
243 திருத்தணிகை திருப்புகழ் இருமலு ரோக |
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான |
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே. |
இருமலு ரோக முயலகன் வாதம் எரிகுண நாசி விடமே நீரிழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறுமுளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி உன தாள்கள் அருள்வாயே வருமொரு கோடி யசுரர்பதாதி மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவின்நடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே. |
Audio/Video Link(s) |
https://www.youtube.com/watch?v=xahVyoHSGXU |
431 திருவருணை திருப்புகழ் தோதகப் பெரும் |
தான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த ...... தனதான |
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும் வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப வீர பத்ர கந்த ...... முருகோனே மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே. |
தோதகப் பெரும் பயோதரத்து இயங்கும் தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி கணங்கள் அணுகாதே பாதகச் சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து பிடியாதே பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம் சொல் தர வேணும் வேதம் மிக்க விந்து நாதம் மெய்க் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே மேருவைப் பிளந்து சூரனைக் கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமளக் குரும்பை புணர்வோனே கோலம் உற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து அமர்ந்த பெருமாளே. |
485 சிதம்பரம் திருப்புகழ் எலுப்புத் தோல் |
தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான |
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள் இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி உளைப்புச் சூலையொ டேவலு வாகிய இரைப்புக் கேவல மூலவி யாதியொ ...... டண்டவாதங் குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ...... கண்டமாலை குடிப்புக் கூனமி தேசத மாமென எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய் கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள் கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ...... பங்கின்மேவும் வலித்துத் தோள்மலை ராவண னானவன் எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே. |
எலுப்புத் தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்குச் சீ புழுவோடு அடை மூளைகள் இரத்தச் சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை இளைப்புச் சோகைகள் வாதம் விலா வலி உளைப்புச் சூலையொடே வலுவாகிய இரைப்பு கேவல மூல வியாதியொடு அண்ட வாதம் குலைப்புக் காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை குருட்டுக் கால்முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை குடிப் புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் இடத்துத் தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய் கெலிக்கப் போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்தச் சேறு எழ தேர் பரி யாளிகள் கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா கிளர் பொன் தோளி சராசரம் மேவி எய் அசைத்துப் பூசைகொள் ஆயி பராபரி கிழப் பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும் வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்தப் போது உடல் கீழ் விழவே செய்து மகிழ்ப் பொன் பாத சிவாய நமோ அர சம்பு பாலா மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து சீர் புலியூர் பரமாகிய வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே. |
487 சிதம்பரம் திருப்புகழ் வாத பித்தமொடு |
தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான |
வாத பித்தமொடு சூலை விப்புருதி யேறு கற்படுவ னீளை பொக்கிருமல் மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை மாச டைக்குருடு காத டைப்பு செவி டூமை கெட்டவலி மூல முற்றுதரு மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம் வேத வித்துபரி கோல முற்றுவிளை யாடு வித்தகட லோட மொய்த்தபல வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே வீடு கட்டிமய லாசை பட்டுவிழ வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி நீறு பட்டலற சூர வெற்பவுண ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா ஓந மச்சிவய சாமி சுத்தஅடி யார்க ளுக்குமுப காரி பச்சையுமை ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே ஆதி கற்பகவி நாய கர்க்குபிற கான பொற்சரவ ணாப ரப்பிரம னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே ஆசை பெற்றகுற மாதை நித்தவன மேவி சுத்தமண மாடி நற்புலியு ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே. |
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம் வேத வித்து பரிகோலம் உற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல வேடம் இட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுணரோடு பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி பச்சை உமை ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த சேயே ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா பர பிரமன் ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியூர் ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே. |
766 சீகாழி திருப்புகழ் ஊனத்தசை தோல்கள் |
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த ...... தனதான |
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே. |
ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும் கோலம் எழுந்து ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி கூனித் தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூளச் சடம் ஈதை உகந்து புவி மீதே கூசப் பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று கோலக் கழலே பெற இன்று அருள்வாயே சேனக் குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச் சமணோர் கழுவின் கண் மிசை ஏற தீரத் திரு நீறு புரிந்து மீனக் கொடியோன் உடல் துன்று தீமைப் பிணி தீர உவந்த குருநாதா கானச் சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர் காணக் கணியாக வளர்ந்து ஞானக் குற மானை மணந்து காழிப் பதி மேவி உகந்த பெருமாளே. |
790 பாகை திருப்புகழ் ஈளை சுரங்குளிர் |
தான தனந்தன தான தனந்தன தான தனந்தன ...... தனதான |
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற ...... இளையாதே ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு காடு பயின்றுயி ...... ரிழவாதே மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் ...... முழுகாதே மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே வாளை நெருங்கிய வாவியி லுங்கயல் சேல்கள் மறிந்திட ...... வலைபீறா வாகை துதைந்தணி கேதகை மங்கிட மோதி வெகுண்டிள ...... மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனந்தலை சாடி நெடுங்கடல் ...... கழிபாயும் பாகை வளம்பதி மேவி வளஞ்செறி தோகை விரும்பிய ...... பெருமாளே. |
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற இளையாதே ஈடுபடுஞ் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் முழுகாதே மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலைபீறா வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனம் தலைசாடி நெடுங்கடல் கழிபாயும் பாகை வளம்பதி மேவி வளஞ்செறி தோகை விரும்பிய பெருமாளே. |
858 திருவிடைமருதூர் திருப்புகழ் அறுகுநுனி பனி |
தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா ...... தனதன தனதான |
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய் அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி ஆவி யாயவோர் தேவி மாருமாய் விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென வீடு வாசலாய் மாட கூடமாய் அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில் மேலை வீடுகேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு வார்கள் போகுவார் காணு மோஎனா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில் வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில வாத மூதுகா மாலை சோகைநோய் பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில் மாதர் சீயெனா வாலர் சீயெனா கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு காடு வாவெனா வீடு போவெனா வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ ஏழை மாதராள் மோதி மேல்விழா எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற ஈமொ லேலெனா வாயை ஆவெனா இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும் ஏசி டார்களோ பாச நாசனே இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயு நானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில் ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே. |
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் அரு மதலை குதலை மொழி தனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமை இட மொளு மொளு என உடல் வளர ஆளு(ம்) மேளமாய் வால ரூபமாய் அவர் ஒரு பெரியோராய் அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய் விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசி வாசியாய் அவி உறு(ம்) சுடர் போலே வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளி போல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியார் சொ(ல்)லே மேலது ஆயிடா விதி தனை நினையாதே மினுகு மினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனின் வருவார்கள் போகுவார் காணுமோ எனா விடு துறவு பெரியவரை மறையவரை வெடு வெடு என மேளமே சொலாய் ஆளி வாயராய் மிடை உற வரு நாளில் வறுமைகளு(ம்) முடுகி வர உறு பொருளு(ம்) நழுவ சில வாதம் ஊது காமாலை சோகை நோய் பெரு வயிறு வயிறு வலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா வழ வழ என உமிழும் அது கொழ கொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் மனையவள் மனம் வேறாய் மறுக மனை உறும் அவர்கள் நணுகு நணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா கனவு தனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடு காடு வா எனா வீடு போ எனா வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் மனிதர்கள் பல பேச இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா எனது உடைமை எனது அடிமை எனும் அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா இடுகு பறை சிறு பறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடும் வாழ்வே இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே இரு வினை மு(ம்)மலமும் அற இறவி ஒடு பிறவி அற ஏக போகமாய் நீயு(ம்) நானுமாய் இறுகும் வகை பரம சுக மதனை அருள் இடை மருதில் ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே. |
Audio/Video Link(s) |
https://www.youtube.com/watch?v=.html#audio |
894 குறட்டி திருப்புகழ் நீரிழிவு குட்டம் |
தானன தனத்த தான தானன தனத்த தான தானன தனத்த தான ...... தனதான |
நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள் நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய் பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத நாயக ரிடத்து காமி ...... மகமாயி நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாணுத லளித்த வீர ...... மயிலோனே மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே. |
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் வேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ பாரிய நவத் துவார நாறும் மு(ம்) மலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதானபாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத நாயகரிடத்து காமி மகமாயி நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத நாயகி உமைச்சி நீலி திரிசூலி வார் அணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே. |
983 இராமேசுரம் திருப்புகழ் வாலவயதாகி |
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான |
வாலவய தாகியழ காகிமத னாகிபணி வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல் வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ் வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த் தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற் சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல் சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம் வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே. |
வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல் வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமோடு பொருள் தேடி வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி விலைமாதர்களை மேவி அவர் ஆசை தனில் சுழல சில நாள் போய் தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரி உறு நாளில் சூலை சொறி ஈளை வலி வாதமோடு நீரிழிவு சோகைகள மாலை சுரமோடு பிணி தூறிருமல் சூழல் உற மூல கசுமாலம் என நாறி உடல் அழிவேனோ நாலுமுகம் ஆதி அரி ஓம் என அதாரம் உரையாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே நாறு இதழி வேணி சிவ ரூப கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி ஞான குற மாதை தின காவில் மணமேவு புகழ் மயில் வீரா ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவே ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே. |
1025 பொதுப்பாடல்கள் திருப்புகழ் சீதமலம் வெப்பு |
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான வாழ்வோடு சிறக்க அருள்வாயே வளமுடன் வாழ அருள்வாயே |
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த மானபிணி சுற்றி ...... யுடலூடே சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க தீதுவிளை விக்க ...... வருபோதில் தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம தற்கு ...... ளழியாமுன் தாரணி தனக்கு ளாரண முரைத்த தாள்தர நினைத்து ...... வரவேணும் மாதர்மய லுற்று வாடவடி வுற்று மாமயிலில் நித்தம் ...... வருவோனே மாலுமய னொப்பி லாதபடி பற்றி மாலுழலு மற்ற ...... மறையோர்முன் வேதமொழி வித்தை யோதியறி வித்த நாதவிறல் மிக்க ...... இகல்வேலா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. |
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த மானபிணி சுற்றி உடலூடே சேருமுயிர் தப்பி யேகும்வணம் மிக்க தீதுவிளை விக்க வருபோதில் தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரமதற்குள் அழியாமுன் தாரணி தனக்கு ளாரண முரைத்த தாள்தர நினைத்து வரவேணும் மாதர்மய லுற்று வாடவடி வுற்று மாமயிலில் நித்தம் வருவோனே மாலும் அயன் ஒப்பி லாதபடி பற்றி மாலுழலு மற்ற மறையோர்முன் வேதமொழி வித்தை யோதியறிவித்த நாத விறல் மிக்க இகல்வேலா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த பெருமாளே. |
1037 பொதுப்பாடல்கள் திருப்புகழ் வாதந் தலைவலி |
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான |
வாதந் தலைவலி சூலம் பெருவயி றாகும் பிணியிவை ...... யணுகாதே மாயம் பொதிதரு காயந் தனின்மிசை வாழுங் கருவழி ...... மருவாதே ஓதம் பெறுகடல் மோதுந் திரையது போலும் பிறவியி ...... லுழலாதே ஓதும் பலஅடி யாருங் கதிபெற யானுன் கழலிணை ...... பெறுவேனோ கீதம் புகழிசை நாதங் கனிவொடு வேதங் கிளர்தர ...... மொழிவார்தம் கேடின் பெருவலி மாளும் படியவ ரோடுங் கெழுமுத ...... லுடையோனே வேதந் தொழுதிரு மாலும் பிரமனு மேவும் பதமுடை ...... விறல்வீரா மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே. |
வாதம் தலை வலி சூலம் பெரு வயிறு ஆகும் பிணி இவை அணுகாதே மாயம் பொதி தரு காயம் தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே ஓதம் பெறு கடல் மோதும் திரை அதுபோலும் பிறவியில் உழலாதே ஓதும் பலஅடியாருங் கதிபெற யான் உன் கழல் இணை பெறுவேனோ கீதம் புகழ் இசை நாதம் கனிவோடு வேதம் கிளர் தர மொழிவார் தம் கேடின் பெரு வலி மாளும் படி அவரோடும் கெழுமுதல் உடையோனே வேதம் தொழு திரு மாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா மேல் வந்து எதிர்பொரு சூரன் பொடிபட வேல் கொண்டு அமர்செய்த பெருமாளே. |
1194 பொதுப்பாடல்கள் திருப்புகழ் முனை அழிந்தது |
தனன தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான |
முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ...... ப்ரபையான முகமி ழிந்தது நோக்குமி ருண்டது இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது ...... அறிவேபோய் நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு மவச மும்பல ஏக்கமு முந்தின நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது ...... பலநோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சலம லங்களி னாற்றமெ ழுந்தது நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி ...... தருள்வாயே இனைய இந்திர னேற்றமு மண்டர்கள் தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் ...... வெகுகோடி எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர் தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை ...... யெறிவோனே தினைவ னங்கிளி காத்தச வுந்தரி அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு ...... மிளையோனே திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர் குமர கந்தப ராக்ரம செந்தமிழ் தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய ...... பெருமாளே. |
முனை யழிந்தது மேட்டி குலைந்தது வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது ப்ரபையான முகம் இழிந்தது நோக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது அறிவேபோய் நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலும் அவசமும்பல ஏக்கமும் உந்தின நெறிமறந்தது மூப்பு முதிர்ந்தது பலநோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சலமலங்களின் நாற்றமெழுந்தது நிமிஷ மிங்கினி யாச்சுது என் முன்பு இனிது அருள்வாயே இனைய இந்திர னேற்றமும் அண்டர்கள் தலமு மங்கிட வோட்(டி) இருஞ்சிறையிடும் இடும்புள ராக்கதர் தங்களில் வெகுகோடி எதிர்பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசைசிரங்களு நாற்றிசை சிந்திட இடிமுழங்கிய வேற்படையொன்றனை எறிவோனே தினைவனங்கிளி காத்த சவுந்தரி அருகு சென்றடி போற்றிமணஞ்செய்து செகமறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே திரிபுரம்பொடி யாக்கிய சங்கரர் குமர கந்தபராக்ரம செந்தமிழ் தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே. |
1316 பழமுதிர்ச்சோலை திருப்புகழ் துடிகொள் நோய் |
தனன தான தான தத்த தனன தான தான தத்த தனன தான தான தத்த ...... தனதான |
துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க் களமு றானை தேர்நு றுக்கி தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே. |
துடிகொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமுள அநுபூதி பெற்று மகிழாமே உடல்செய் கோர பாழ்வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரி னீடு யோக சித்தி பெறலாமே உருவிலாத பாழில் வெட்ட வெளியிலாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர்போய்க் களமுற ஆனை தேர்நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன்மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில்வீரா முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே. |