தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா |
சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே. |
Easy Version: சைவ முதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே பொய்யர் உ(ள்)ளத்து அணுகானே புனித அருள் புரிவாயே கையின் மிசைக் கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா தெய்வ சற் குரு நாதா திருமதுரைப் பெருமாளே. |
Add (additional) Audio/Video Link
|
|
சைவ முதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே ... சைவ
சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து,
சமணர்களை முறியடித்தவனே,
பொய்யர் உ(ள்)ளத்து அணுகானே புனித அருள் புரிவாயே ...
பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து
அருளுவாயாக.
கையின் மிசைக் கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா ... உனது
திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும்
அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே,
தெய்வ சற் குரு நாதா திருமதுரைப் பெருமாளே. ...
இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே,
அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.