வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார், தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம், என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே.
| [ 1]
|
காலகாலர், கரிகான் இடை மாநடம் ஆடுவர், மேலர், வேலைவிடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர், மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம் ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் நயந்ததே.
| [ 2]
|
மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும் ஆய் நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர், ஏழ் ஓசையர், தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்; பாவம் தீர்ப்பர், பழி போக்குவர், தம் அடியார்கட்கே.
| [ 3]
|
சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய் சுவண்டுஆகவே சால நல்ல பொடி பூசுவர்; பேசுவர், மாமறை; சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம், ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே.
| [ 4]
|
கை இலங்கு மறி ஏந்துவர், காந்தள் அம்மெல்விரல் தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர், செய்யமேனிக் கரிய மிடற்றார் திரு வாஞ்சியத்து ஐயர்; பாதம் அடைவார்க்கு அடையா, அருநோய்களே
| [ 5]
|
Go to top |
அரவம் பூண்பர்; அணியும் சிலம்பு ஆர்க்க அகம்தொறும் இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர்; நாமமே பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.
| [ 6]
|
விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே; கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்; பண்ணில் ஆன இசைபாடல் மல்கும் திரு வாஞ்சியத்து அண்ணலார் தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை, அல்லலே.
| [ 7]
|
மாடம் நீடு கொடி மன்னிய தென் இலங்கைக்கு மன் வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர், வேடவேடர், திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப் பாட நீடு மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே
| [ 8]
|
செடி கொள் நோயின் அடையார்; திறம்பார், செறு தீவினை; கடிய கூற்றமும் கண்டு அகலும்; புகல்தான் வரும் நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார், திரு வாஞ்சியத்து அடிகள், பாதம் அடைந்தார் அடியார், அடியார்கட்கே.
| [ 9]
|
பிண்டம் உண்டு திரிவார், பிரியும் துவர் ஆடையார், மிண்டர் மிண்டு(ம்) மொழி மெய் அல; பொய் இலை, எம் இறை; வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லலே.
| [ 10]
|
Go to top |
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால், நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ் ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார், உயர்வானமே.
| [ 11]
|