சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

8.216   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்

கோயில் (சிதம்பரம்) -
ஒராக மிரண்டெழி லாயொளிர்
   வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
   தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
   மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
   யேயெம ரெண்ணுவதே.


[ 1]


மணியக் கணியும் அரன்நஞ்ச
   மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
   தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
   துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
   மேன்மே லயலவரே.


[ 2]


பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
   மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
   ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
   நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
   தழங்கும் மணமுரசே.


[ 3]


எலும்பா லணியிறை யம்பலத்
   தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
   கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
   கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
   யென்நீ கருதுவதே.


[ 4]


விசும்புற்ற திங்கட் கழும்மழப்
   போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய்
   கிடந்தரன் தில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற்
   றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
   தளர்கின்ற நன்னெஞ்சமே.


[ 5]


Go to top
மைதயங் குந்திரை வாரியை
   நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
   ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
   லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை
   யும்மல்குற் பைந்தொடியே.


[ 6]


மாவைவந் தாண்டமென் னோக்கிதன்
   பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
   கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
   தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
   தாளின்றென் பைந்தொடியே.


[ 7]


மெல்லியல் கொங்கை பெரியமின்
   நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
   தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங்
   கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை
   சேய்த்தெம் அகல்நகரே.


[ 8]


பிணையுங் கலையும்வன் பேய்த்தே
   ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
   அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
   யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
   டேகினெம் பைந்தொடிக்கே.


[ 9]


இங்கய லென்னீ பணிக்கின்ற
   தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
   லண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
   நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற்
   கண்ணித் திருநுதலே.


[ 10]


Go to top
தாயிற் சிறந்தன்று நாண்தைய
   லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
   கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
   தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
   சிறந்த மதிநுதலே.


[ 11]


குறப்பாவை நின்குழல் வேங்கையம்
   போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
   வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
   வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
   னத்தகும் பெற்றியரே.


[ 12]


நிழற்றலை தீநெறி நீரில்லை
   கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
   னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
   கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
   பாகும்நங் கொற்றவர்க்கே.


[ 13]


காயமும் ஆவியும் நீங்கள்சிற்
   றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவர
   லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங்
   கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம்
   போக்குத் துணிவித்தவே.


[ 14]


மற்பாய் விடையோன் மகிழ்புலி
   யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
   விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
   பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
   வாழி எழுமையுமே.


[ 15]


Go to top
கம்பஞ் சிவந்த சலந்தரன்
   ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
   கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
   நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
   கும்மலர்ச் சீறடிக்கே.


[ 16]


முன்னோன் மணிகண்ட மொத்தவன்
   அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
   தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
   னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
   யாம்விழை பொங்கிருளே.


[ 17]


பனிச்சந் திரனொடு பாய்புனல்
   சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி
   யாவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
   போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
   லாம்புகுந் தெய்துவதே.


[ 18]


வைவந்த வேலவர் சூழ்வரத்
   தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
   முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
   மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந்
   துயிலுமிம் மூதெயிலே.


[ 19]


பறந்திருந் தும்பர் பதைப்பப்
   படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன்
   னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
   தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
   வற்றுமிச் சேணிலத்தே.


[ 20]


Go to top
ஈண்டொல்லை ஆயமும் ஔவையும்
   நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
   நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
   சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
   சேர்க திருத்தகவே.


[ 21]


பேணத் திருத்திய சீறடி
   மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
   யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
   சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும்முன்
   னாமன்னு கானங்களே.


[ 22]


கொடித்தேர் மறவர் குழாம்வெங்
   கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
   வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
   நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
   விண்தோய் கனவரையே.


[ 23]


முன்னோ னருள்முன்னும் உன்னா
   வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
   கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
   தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
   மாடுசிற் றம்பலமே.


[ 24]


விடலையுற் றாரில்லை வெம்முனை
   வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
   மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
   தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
   இன்றிக் கடுஞ்சுரமே.


[ 25]


Go to top
அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்
   ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
   பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
   தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி
   போன்றொளிர் நாடகமே.


[ 26]


கண்கடம் மாற்பயன் கொண்டனங்
   கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
   பருக வருகஇன்னே
விண்கட நாயகன் தில்லையின்
   மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
   கானகந் தண்ணெனவே.


[ 27]


மின்றங் கிடையொடு நீவியன்
   தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
   தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
   வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
   சூழ்தரு சேண்நகரே.


[ 28]


மின்போல் கொடிநெடு வானக்
   கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
   காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
   சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
   தோன்றுநன் னீணகரே.


[ 29]


செய்குன் றுவைஇவை சீர்மலர்
   வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
   பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
   உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
   வற்கிடம் ஏந்திழையே.


[ 30]


Go to top
மயிலெனப் பேர்ந்திள வல்லியி
   னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
   குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
   தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்
   கொலாமின் றயர்கின்றதே.


[ 31]


ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
   யாவருக் கும்மெளிதாந்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
   மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா
   ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
   லாயத்தெம் வாணுதலே.


[ 32]


வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
   தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
   பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
   அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
   யாவன எம்மனைக்கே.


[ 33]


முறுவல்அக் கால்தந்து வந்தென்
   முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
   லாம்முழு துஞ்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன்
   சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகந் தான்படர்
   வானா மொளியிழையே.


[ 34]


தாமே தமக்கொப்பு மற்றில்
   லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
   பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற்
   கானிற் சிலம்படிபாய்
ஆமே நடக்க அருவினை
   யேன்பெற்ற அம்மனைக்கே.


[ 35]


Go to top
தழுவின கையிறை சோரின்
   தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
   பேதை யறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்டம்
   பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
   யாலுற்றுத் தேய்வித்ததே.


[ 36]


யாழியன் மென்மொழி வன்மனப்
   பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
   துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென்
   றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
   யாரின் அருஞ்சுரமே.


[ 37]


கொன்னுனை வேல்அம் பலவற்
   றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ்
   சேரு மெனஅயரா
என்னனை போயினள் யாண்டைய
   ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென்
   னுள்ளத்தை யீர்கின்றதே.


[ 38]


பெற்றே னொடுங்கிள்ளை வாட
   முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந்
   தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
   தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந்
   தேன்சுடர் வானவனே.


[ 39]


வைம்மலர் வாட்படை யூரற்குச்
   செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
   லாந்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
   றெண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ராற்கண் புதைத்துப்
   பதைக்குமெங் கார்மயிலே.


[ 40]


Go to top
வேயின தோளி மெலியல்விண்
   ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
   தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண்
   ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
   நாடுவன் பொன்னினையே.


[ 41]


பணங்களஞ் சாலும் பருவர
   வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
   இன்னே வரக்கரைந்தால்
உணங்கலஞ் சாதுண்ண லாமொள்
   நிணப்பலி யோக்குவல்மாக்
குணங்களஞ் சாற்பொலி யுந்நல
   சேட்டைக் குலக்கொடியே.


[ 42]


முன்னுங் கடுவிட முண்டதென்
   தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக்
   கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
   தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
   நான்மறை யுத்தமரே.


[ 43]


தெள்வன் புனற்சென்னி யோன்அம்
   பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
   செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
   யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
   யென்று கருதுவனே.


[ 44]


பாலொத்த நீற்றம் பலவன்
   கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
   பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
   இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
   மாணிழை கால்மலரே.


[ 45]


Go to top
பேதைப் பருவம் பின்சென்
   றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
   பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின்
   றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப்
   பற்குரற் பொற்றொடியே.


[ 46]


புயலன் றலர்சடை ஏற்றவன்
   தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
   போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை
   வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று
   வாழி எழிற்புறவே.


[ 47]


பாயும் விடையோன் புலியூ
   ரனையவென் பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக்
   கடப்பவுங் கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில்
   வீசவண் டோலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று
   நிலாவிடும் நீள்குரவே.


[ 48]


சுத்திய பொக்கணத் தென்பணி
   கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
   யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
   மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
   மோவொர் பெருந்தகையே.


[ 49]


வெதிரேய் கரத்துமென் தோலேய்
   சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
   வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
   எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
   வெறுப்பவொ ரேந்தலொடே.


[ 50]


Go to top
மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
   நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
   ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
   னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
   யோஅன்னை சொல்லியதே.


[ 51]


பூங்கயி லாயப் பொருப்பன்
   திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
   திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
   மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
   திண்டிற லாண்டகையே.

[ 52]


மின்றொத் திடுகழல் நூபுரம்
   வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
   றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
   றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
   நீசொன்ன கொள்கையரே.


[ 53]


மீள்வது செல்வதன் றன்னையிவ்
   வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
   னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந்
   நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையி
   னெல்லை யணுகுவரே.


[ 54]


சுரும்பிவர் சந்துந் தொடுகடல்
   முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
   யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
   சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
   நீர்மையர் காணுநர்க்கே.


[ 55]


Go to top
ஆண்டி லெடுத்தவ ராமிவர்
   தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
   தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
   டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
   கீழும் பழனங்களே.


[ 56]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
3.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
6.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
6.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
7.090   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
8.102   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.103   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.104   மாணிக்க வாசகர்    திருவாசகம்   போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (கோயில் (சிதம்பரம்) )
8.109   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
8.110   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.111   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.112   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.113   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.114   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
8.115   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.116   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்   (கோயில் (சிதம்பரம்) )
8.117   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
8.118   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.119   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே   (கோயில் (சிதம்பரம்) )
8.121   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.122   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை   (கோயில் (சிதம்பரம்) )
8.131   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.135   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.140   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
8.145   மாணிக்க வாசகர்    திருவாசகம்   யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.146   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.149   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.151   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி   (கோயில் (சிதம்பரம்) )
8.201   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   முதல் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.202   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.203   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   மூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.204   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   நான்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.205   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஐந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.206   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஆறாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.207   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஏழாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.208   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   எட்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.209   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஒன்பதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.210   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பத்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.211   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினொன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.212   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.213   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.214   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினென்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.215   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினைந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.216   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினாறாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.217   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினேழாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.218   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினெட்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.219   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.220   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.221   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.222   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.223   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.224   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.225   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.001   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.002   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.003   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.004   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.008   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.019   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.020   கண்டராதித்தர்   திருவிசைப்பா   கண்டராதித்தர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.021   வேணாட்டடிகள்   திருவிசைப்பா   வேணாட்டடிகள் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.022   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.023   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.024   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.025   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.026   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா   புருடோத்தம நம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.027   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா   புருடோத்தம நம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.028   சேதிராயர்   திருவிசைப்பா   சேதிராயர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.029   சேந்தனார்   திருப்பல்லாண்டு   சேந்தனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.006   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி   பொன்வண்ணத்தந்தாதி
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.026   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை   கோயில் நான்மணிமாலை
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.032   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song