சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

8.225   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்

கோயில் (சிதம்பரம்) -
உடுத்தணி வாளர வன்தில்லை
   யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை
   யார்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு
   வச்சிலை கண்மலரம்
படுத்தணி வாளிளை யோர்சுற்றும்
   பற்றினர் மாதிரமே.


[ 1]


சுரும்புறு கொன்றையன் தொல்புலி
   யூர்ச்சுருங் கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று
   பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
   றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென் னாவியுந்
   தேய்வுற் றழிகின்றதே.


[ 2]


அப்புற்ற சென்னியன் தில்லை
   யுறாரி னவர்உறுநோய்
ஒப்புற் றெழில்நல மூரன்
   கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
   மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொ
   லாருயிர் தேய்பவரே.


[ 3]


தேவா சுரரிறைஞ் சுங்கழ
   லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
   நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன்
   தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
   தேனரும் பாவியனே.


[ 4]


செய்ம்முக நீல மலர்தில்லைச்
   சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி
   யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
   பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங்
   கீழும் நெடுஞ்சுடரே.


[ 5]


Go to top
பூங்குவ ளைப்பொலி மாலையும்
   ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
   கொள்கநள் ளார்அரணந்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
   சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
   தோமன் உறாவரையே.


[ 6]


தவஞ்செய் திலாதவெந் தீவினை
   யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
   நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
   யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந்
   தொடல்விடு நற்கலையே.


[ 7]


தணியுறப் பொங்குமிக் கொங்கைகள்
   தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென் றின்றெய்து
   மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
   லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை
   யார்கள் பயின்மனைக்கே.


[ 8]


இரவணை யும்மதி யேர்நுத
   லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்கிவ
   ளால்இக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்தில்லை
   யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின
   வாறுநந் தன்மைகளே.


[ 9]


சிவந்தபொன் மேனி மணிதிருச்
   சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி யூரற்
   குலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப்
   பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின
   வந்து திருமனைக்கே.


[ 10]


Go to top
குராப்பயில் கூழை யிவளின்மிக்
   கம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங்
   காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை
   யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன்
   புகுமிக் கடிமனைக்கே.


[ 11]


வந்தான் வயலணி யூர
   னெனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செல்வி சென்றசிற்
   றம்பல வன்னருளான்
முந்தா யினவியன் நோக்கெதிர்
   நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள்
   சூழ்ந்து பயின்றனவே.


[ 12]


வில்லிகைப் போதின் விரும்பா
   அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை
   யோன்தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்
   டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய
   லூரற் கெதிர்கொண்டதே.


[ 13]


புலவித் திரைபொரச் சீறடிப்
   பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
கலவிக் கடலுட் கலிங்கஞ்சென்
   றெய்திக் கதிர்கொண்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்தம்
   பலத்துநின் றோனருள்போன்
றுலவிய லாத்தனஞ் சென்றெய்த
   லாயின வூரனுக்கே.


[ 14]


செவ்வாய் துடிப்பக் கருங்கண்
   பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன் அருளின்
   முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக்
   கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகு
   மெனநினைந் தின்னகையே.


[ 15]


Go to top
மலரைப் பொறாவடி மானுந்
   தமியள்மன் னன்ஒருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின்
   றாள்பள்ளி காமனெய்த
அலரைப் பொறாதன் றழல்விழித்
   தோனம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாளென்னை
   கொல்லோ கருதியதே.


[ 16]


வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
   கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
   யால்நின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
   பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
   யேதக்க வாய்மையனே.


[ 17]


சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்
   கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்
   குதர்செம்ம லூரன்திண்டோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத்
   தில்லை யானருளே
போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது
   வாய்ந்த புதுப்புனலே.


[ 18]


சேயே யெனமன்னு தீம்புன
   லூரன்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
   தீர்சுடர் கின்றகொலந்
தீயே யெனமன்னு சிற்றம்
   பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனஅடி யீர்நெடுந்
   தேர்வந்து மேவினதே.


[ 19]


அரமங் கையரென வந்து
   விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு
   கும்மவ ளன்றுகிராற்
சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச்
   சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதைய
   காத்துநம் பொற்பரையே.


[ 20]


Go to top
கனலூர் கணைதுணை யூர்கெடச்
   செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோ னருள்பெற்
   றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பா
   லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
   லூர்கணப் பூங்கொடியே.


[ 21]


இறுமாப் பொழியுமன் றேதங்கை
   தோன்றினென் னெங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத்
   தான்தில்லை யூரன்திண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
   குப்பெற்ற பெற்றியினோ
டிறுமாப் பொழிய இறுமாப்
   பொழிந்த இணைமுலையே.


[ 22]


வேயாது செப்பின் அடைத்துத்
   தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம்பலமனை
   யாள்தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென்
   கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற்
   பால வியல்புகளே.


[ 23]


விறலியும் பாணனும் வேந்தற்குத்
   தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
   றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை
   மாமரம் போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி
   யோமை யறிந்திலரே.


[ 24]


திக்கின் இலங்குதிண் டோளிறை
   தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக தணிந்துநின்
   றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய
   அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
   வேலெந் தனிவள்ளலே.


[ 25]


Go to top
அன்புடை நெஞ்சத் திவள்பே
   துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின்
   றாடி யிருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்
   தன்னஞ் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய
   லூரன் வரம்பிலனே.


[ 26]


அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்
   பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை
   யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார்
   நனவு கனவுமுண்டேற்
பஞ்சா ரமளிப் பிரிதலுண்
   டோவெம் பயோதரமே.


[ 27]


தெள்ளம் புனற்கங்கை தங்குஞ்
   சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா
   இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகுமொரு காற்பிரி
   யாதுள்ளி யுள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்றகத்
   தேவரும் பான்மையளே.


[ 28]


தேன்வண் டுறைதரு கொன்றையன்
   சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன்
   மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு
   தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ்
   வாறுகொ னண்ணுவதே.


[ 29]


கயல்வந்த கண்ணியர் கண்ணினை
   யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா
   விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத்
   தோனம் பலம்நிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன்
   னாட்டுப் பொலிபவரே.


[ 30]


Go to top
கூற்றாயினசின ஆளியெண்
   ணீர்கண்கள் கோளிழித்தாற்
போற்றான் செறியிருட் பொக்கமெண்
   ணீர்கன் றகன்றபுனிற்
றீற்றா வெனநீர் வருவது
   பண்டின்றெம் மீசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியிற்
   போதிர்அத் தேர்மிசையே.


[ 31]


வியந்தலை நீர்வையம் மெய்யே
   யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற
   வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர்
   அரனிருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த
   விருந்தினர் கார்மயிலே.


[ 32]


தேவியங் கண்திகழ் மேனியன்
   சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணு
   தலாள் தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந்
   தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
   வௌவுதல் கற்றனவே.


[ 33]


உடைமணிகட்டிச் சிறுதே
   ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன்
   நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென்
   தோகையன் னார்கண்முன்னங்
கடைமணி வாள்நகை யாயின்று
   கண்டனர் காதலரே.


[ 34]


மைகொண்ட கண்டர் வயல்கொண்ட
   தில்லைமல் கூரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பின ரென்பதென்
   விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட வூசிகொல் சேரியின்
   விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை
   ஆத்தின்னி போந்ததுவே.


[ 35]


Go to top
கொல்லாண் டிலங்கு மழுப்படை
   யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம்
   நெரியச் செவ் வாய்துடிப்பக்
கல்லாண் டெடேல்கருங் கண்சிவப்
   பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியேன் அடிவலங்
   கொள்வன் பணிமொழியே.


[ 36]


மத்தக் கரியுரி யோன்தில்லை
   யூரன் வரவெனலுந்
தத்தைக் கிளவி முகத்தா
   மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்குங் கழுநீர்
   விருந்தொடென் னாதமுன்னங்
கித்தக் கருங்குவ ளைச்செவ்வி
   யோடிக் கெழுமினவே.


[ 37]


கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
   காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் தில்லையன்
   னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்றல்
   துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
   பாலை யரசனுக்கே.


[ 38]


சேறான் திகழ்வயற் சிற்றம்
   பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார்
   வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம்
   மேவும் படிறுவவேங்
காறான் தொடல்தொட ரேல்விடு
   தீண்டலெங் கைத்தலமே.


[ 39]


செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
   பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
   லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
   மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கால்
   அயிற்படைக் கொற்றவரே.


[ 40]


Go to top
மின்றுன் னியசெஞ் சடைவெண்
   மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
   பலவன்தென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம
   தில்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை
   சாலுமன் னெங்களுக்கே.


[ 41]


செழுமிய மாளிகைச் சிற்றம்
   பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி
   லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய
   நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன
   வாறு விரும்புவதே.


[ 42]


திருந்தேன் உயநின்ற சிற்றம்
   பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க்
   கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
   தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
   வருவதொர் வஞ்சனையே.


[ 43]


இயன்மன்னும் அன்புதந் தார்க்கென்
   நிலையிமை யோரிறைஞ்சுஞ்
செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம்
   பலவர்தென் னம்பொதியிற்
புயன்மன்னு குன்றிற் பொருவேல்
   துணையாப்பொம் மென்இருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி
   தேரும் அதரகத்தே.


[ 44]


கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை
   மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
   தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
   யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா
   எம்மைப் பூசிப்பதே.


[ 45]


Go to top
சிலைமலி வாணுத லெங்கைய
   தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந்
   தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற்
   கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
   மாலை கலுழ்ந்தனவே.


[ 46]


ஆறூர் சடைமுடி அம்பலத்
   தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
   டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
   செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
   கங்குற் சிறிதுயிலே.


[ 47]


ஐயுற வாய்நம் அகன்கடைக்
   கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
   தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாம்இதுன் னில்லே
   வருகெனவெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
   யூரன்ன காரிகையே.


[ 48]


காரணி கற்பகங் கற்றவர்
   நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி
   தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்
   தஞ்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க் கூரன்மற்
   றியாவர்க்கும் ஊதியமே.


[ 49]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
3.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
6.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
6.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
7.090   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
8.102   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.103   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.104   மாணிக்க வாசகர்    திருவாசகம்   போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (கோயில் (சிதம்பரம்) )
8.109   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
8.110   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.111   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.112   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.113   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.114   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
8.115   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.116   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்   (கோயில் (சிதம்பரம்) )
8.117   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
8.118   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.119   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே   (கோயில் (சிதம்பரம்) )
8.121   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.122   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை   (கோயில் (சிதம்பரம்) )
8.131   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.135   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.140   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
8.145   மாணிக்க வாசகர்    திருவாசகம்   யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.146   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.149   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.151   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி   (கோயில் (சிதம்பரம்) )
8.201   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   முதல் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.202   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.203   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   மூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.204   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   நான்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.205   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஐந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.206   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஆறாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.207   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஏழாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.208   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   எட்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.209   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஒன்பதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.210   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பத்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.211   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினொன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.212   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.213   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.214   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினென்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.215   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினைந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.216   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினாறாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.217   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினேழாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.218   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினெட்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.219   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.220   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.221   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.222   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.223   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.224   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.225   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.001   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.002   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.003   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.004   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.008   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.019   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.020   கண்டராதித்தர்   திருவிசைப்பா   கண்டராதித்தர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.021   வேணாட்டடிகள்   திருவிசைப்பா   வேணாட்டடிகள் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.022   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.023   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.024   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.025   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.026   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா   புருடோத்தம நம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.027   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா   புருடோத்தம நம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.028   சேதிராயர்   திருவிசைப்பா   சேதிராயர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.029   சேந்தனார்   திருப்பல்லாண்டு   சேந்தனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.006   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி   பொன்வண்ணத்தந்தாதி
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.026   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை   கோயில் நான்மணிமாலை
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.032   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song