சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=U4x9pIXwrqs
1.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருப்புறவம் - குறிஞ்சி அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.
[ 1]
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்
மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.
[ 2]
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே
புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர்
பற்று ஆய், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும்
பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே.
[ 3]
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து,
மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,
பல்-நாள், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும்
பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.
[ 4]
தேவா! அரனே! சரண்! என்று இமையோர் திசைதோறும்,
காவாய்! என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.
[ 5]
Go to top
கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று, அரனே! நின் அடி சரண்! என்னும் அடியோர்க்குப்
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர்
பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.
[ 6]
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன,
கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப்
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே.
[ 7]
பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்;
புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவமே.
[ 8]
மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும்,
மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு
ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர்
பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே.
[ 9]
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்;
மெய் அல தேரர், உண்டு, இலை என்றே நின்றே தம்
கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர்
பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.
[ 10]
Go to top
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்-
இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்புறவம்
1.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நறவம் நிறை வண்டு அறை
Tune - தக்கேசி
(திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று
Tune - குறிஞ்சி
(திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.084
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் இயல் உருவினர், பெருகிய
Tune - சாதாரி
(திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400