சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
அம்மானே! ஆனந்த வெள்ள மூர்த்தி! அருமறையுள் அருமறையின் பொருளே! வானோர்
தம்மால் ஒன்று(று) அறிவு(வு) அரிய சிவனும், மாலும், சதுமுகனும், உடன் ஆக விளங்கும் சோதி!
இம்மாயப் பிறப்பு(பு) ஆகி, உலகும் தானாய், இரவு(வு) ஆகிப் பகல் ஆகிக் கலந்து நின்ற
அம்மானே! அம்பரம் மீது(து) எழுந்து தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[ 1 ]
ஆயிரம் செங் கதிர் விளங்க, புவனம் தன்னில் அளவு(வு) இறந்த பிறவி தனக்கு(கு) உயிர் ஆய், எங்கும்
மா இருளைக் கடிந்து, மயக்கு(கு) அறுத்து, நாளும் வஞ்சகரை வஞ்சித்திட்டு(டு), அடியேன் உய்ய
ஆயிரம்பாவம்களைந்தே, என்னை ஆண்ட ஆதவன் என்று(று) உலகு(கு) அறியும் ஆதி மூர்த்தி!
ஆயிரம் பேர் உடையானே! அமரர் ஏறே! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .
[ 2 ]
இந்திரியத் துடன் கலந்த கரணம் நான்கும் ஈர்-ஐந்து மாருதமும் மயங்கி ஒன்று(று) ஆய்,
மந்திரங்கள் ஈர்-எட்டும் எட்டும் போற்றி, மணிக்கரத்தால் அடி வணங்கி, சிறப்புச் செய்த
சுந்தரனே! சுடர் ஒளி ஆய் நின்ற சோதி! சூரியனே! தாரணித் துணை ஆய் நாளும்
அந்தரமே திர்ந்து(து) என்னை ஆண்டு கொண்டாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .
[ 3 ]
ஈண்டு நன் மலர் கொண்டு(டு) உன் அடியார் ஏத்த, இருபொழுதும் மறையோர்கள் புனல் கொண்டு(டு) என்றும்
காண்டம் எனும் கடுஞ்சரத்தால் அசுரர் மாள, காதல் இரு மடவார்கள் அருகே நிற்க, பூண்ட ஏழ் புரவிக்
கொணர்ந்து(து) அருணன் ஊர, புவனம் எலாம் ஒளிவிளங்கப் போந்தே, என்னை
ஆண்டு கொண்ட பரமேட்டி! ஆதி மூர்த்தி! ஆதித்தா! அடியேன் என் இடர் தீர்ப் பாயே .
[ 4 ]
உத்தமனே! பத்தர் மனத்து உறையும் தேனே! உதயதிவா கரனே! என் உயிர் ஆய் நின்
வித்தகனே! விடக்கு(கு) உடலில் கொழுநோய் தீர்க்கும் மிகுமருந்தே! விளக்கு(கு) ஒளி ஆய் முளைத்த சோதி!
சித்தம் எனும் திண் கடலில்-திளைத்து நீந்தித் திசை அறியா மரக்கலம் போல் வினாவிக் கீண்டு(டு) இங்கு(கு)
அத்தலத்தே எடுத்து(து) அவனி விளங்கத் தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[ 5 ]
Go to top
ஊக்கம் எனும் பெருஞ்செல்வம் ஒன்று காட்டி உகந்து(து) அளித்த அதிபதியாய் உதிக்கும் சோதி!
பாற்கரனே! பரஞ்சுடரே! பாவ நாசா! பார் அடங்கத் திரிந்து வரும் பரம மூர்த்தி!
பூக்கள் கொண்டு(டு) அடி வணங்கிச் சிறப்புச் செய்து போற்றி செயும் பூதலத்தில் அடியார்க்கு(கு) எல்லாம்
ஆக்கமும் ஆய் மயக்கத்தின் பயனும் ஆனாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்த்தீர்ப் பாயே.
[ 6 ]
எரிகதிர் ஆய் நாயிறு(று) ஆய்த் திங்கள் ஆகி எனப்பல ஆய், யாண்டு(டு) ஊழி தோறும் ஆகி,
கருமமும் ஆய், கருமத்தின் பயனும் ஆகி, காரணம் ஆய், ஆரணமந் திரங்கட்கு(கு) எல்லாம்
தெரிவு(வு) அரிய பொருள் உருவம் ஒன்று(று) ஆய் நின்ற திவாகரனே! ஒருவனே! தேவே! நாளும்
அரு உரு ஆய், உருவம் அது(து) ஆய், எங்கும் நின்ற ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[ 7 ]
ஏவி நலப் பணி உகந்தாய்! எந்தாய்! ஈண்டு(டு) இங்கு(கு) இளமுலையார் புனல் ஆட எழுந்து கூடிக்
கூவும் இளங் குயில் என்ன மயில் என்று(று) எண்ணிக் குளங்கள்தொறும் குடைந்து குடைந்து(து) ஆட நோக்கித்
தேவபிரான் எழுந்தருளும் படி, பொன் சோதித் தேர் ஊர்ந்து பரிமாவும் படையும் சூழ,
ஆவி குளிர்ந்து(து) அவனி தலம் விளங்கத் தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[ 8 ]
ஐ-இரண்டும் பதினைந்தும் ஒன்று ஆய்க் கூடி அம்பலம் சேர் அம்பலத்துக்கு(கு) ஆதி ஆகிக்
கை இரண்டும் படைத்தார், உன் பாதம் கூப்ப; கனி இருப்பக் காய் கவர்ந்த கடைய னேற்குப்
பொய் இருளைக் கடிந்து, நின்னை வணங்க நல்காய்! புலன் ஐந்தும் தொல் குரம்பை புகவே செய்து(து) இங்கு(கு),
ஐயனே! மாயக்கூத்து(து) ஆட்டு கின்ற ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[ 9 ]
ஒட்டு(டு) இயல் ஆர் ஒருவடிவே உரைக்க என்றால் ஒளி உடைய திரு உருவம் பெரிய சோதி!
குட்டம், உடல் கொழுநோய்கள், வாத, பித்தம், கொடிய கயம்,-பாவத்தர் கூடக் கட்டி
இட்டம் உள விளையாட்டும் கோலம் காட்டி-இடர் இன்றி, விடக்கடலில் அடக்கை ஆக்கி,
அட்டகுணம் ஆய், ஆட்ட மூர்த்தி ஆனாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .
[ 10 ]
Go to top
ஓர் எழுத்து(து) ஆய், ஒண் பொருள் ஆய், தேன் ஆய், பால் ஆய், ஒளி அழலின் பழம் ஆகி, உருவம் ஒவ்வாத்
தாரணிக்குத் தான் ஒன்று(று) ஆய், தானும் மூன்று(று) ஆய், தான் எங்கும் கலந்து(து), ஈர் ஏழ் உலகும் மிக்க
பூரணத்தின் அரும்பொருளை-புண்ணி யத்தை, பூதலத்தோர் தொழுது(து) ஏத்தும் புனிதன் தன்னை,
ஆரணத்தின் பயன் தன்னை-அறிந்தாய்! எந்தை! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[ 11 ]
ஒளவனத்தின் அருமறையின் உச்சி உள்ளார் அணிமகர மண்டலப்புண் டரிகத்து(து) உள்ளார்,
ஒளவனத்தார் பாற்கடலின் பள்ளி ஆனார், அயன் ஆனார், மூவர்களும் ஆன சோதி!
ஒளவனத்தில் கொணர் வேடம் புனைந்து மாறா ஆயிரம் பேர் ஒளிகாட்டி, அகிலம் எல்லாம்
ஒளவனத்தில் அருந்துயரம் அகற்றி மாற்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[ 12 ]
This page was last modified on Fri, 10 May 2024 10:07:45 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai song