சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=_3VaGscvF20
4.057
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவாவடுதுறை - கொல்லி அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்)
அஞ்சல்! என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!
[ 1]
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார்
தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன், நான்;
ஆன் உகந்து ஏறுவானே! ஆவடுதுறை உளானே!
[ 2]
கட்டமே வினைகள் ஆன காத்து, இவை நோக்கி, ஆள் ஆய்
ஒட்டவே ஒட்டி, நாளும் உன்னை உள் வைக்க மாட்டேன்-
பட்ட வான் தலை கை ஏந்திப் பலி திரிந்து ஊர்கள் தோறும்
அட்டமா உருவினானே! ஆவடுதுறை உளானே!
[ 3]
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேச மாட்டேன்;
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்;
கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்;
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!
[ 4]
துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை அகப்பட்டேனைக்
கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்துக் கொள்வாய்
மட்டு அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்து(வ்)
அட்டமா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே!
[ 5]
Go to top
கார் அழல் கண்டம் மேயாய்; கடி மதில் புரங்கள் மூன்றும்
ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி
நீர் அழல் சடை உளானே! நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே!
[ 6]
செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்;
குறி இலேன்; குணம் ஒன்று இல்லேன்; கூறுமா கூற மாட்டேன்;
நெறி படு மதி ஒன்று இல்லேன்; நினையுமா நினைய மாட்டேன்;
அறிவு இலேன்; அயர்த்துப் போனேன்-ஆவடுதுறை உளானே!
[ 7]
கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய
சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!
[ 8]
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட,
கடியது ஓர் உருவம் ஆகி, கனல்-எரி ஆகி, நின்ற
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார்
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே.
[ 9]
மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத்
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்)
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவாவடுதுறை
3.004
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இடரினும், தளரினும், எனது உறு
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.056
திருநாவுக்கரசர்
தேவாரம்
மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
Tune - திருநேரிசை:காந்தாரம்
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.057
திருநாவுக்கரசர்
தேவாரம்
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்
Tune - கொல்லி
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
5.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
நிறைக்க வாலியள் அல்லள், இந்
Tune - திருக்குறுந்தொகை
(திருவாவடுதுறை )
6.046
திருநாவுக்கரசர்
தேவாரம்
நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
6.047
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவே, என் செல்வமே, தேனே,
Tune - திருத்தாண்டகம்
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.066
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மறையவன்(ன்) ஒரு மாணி வந்து
Tune - தக்கேசி
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.070
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
Tune - தக்கேசி
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
9.006
சேந்தனார்
திருவிசைப்பா
சேந்தனார் - திருவாவடுதுறை
Tune -
(திருவாவடுதுறை )
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400