சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
பார்வதி திருப்புகழ்

திருப்புகழ் # 110   - அவனிதனிலே  (பழநி)  
திருப்புகழ் # 206   - எந்தத் திகையினும்  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 365   - பரிமளம் மிக உள  (திருவானைக்கா)  
திருப்புகழ் # 420   - சிலைநுதல் வைத்து  (திருவருணை)  
திருப்புகழ் # 470   - அவகுண விரகனை  (சிதம்பரம்)  
திருப்புகழ் # 556   - சத்தி பாணீ  (திருசிராப்பள்ளி)  
திருப்புகழ் # 696   - நிரைதரு மணியணி  (திருமயிலை)  
திருப்புகழ் # 916   - வாளின் முனை  (வயலூர்)  
திருப்புகழ் # 992   - போத நிர்க்குண  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1239   - சலமலம்  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1277   - வரிவிழி பூசலாட  (பொதுப்பாடல்கள்)  

கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி

வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி

அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி

# 110 அவனிதனிலே   (பழநி)  
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
Back to Top

# 206 எந்தத் திகையினும்   (சுவாமிமலை)  
தந்தத் தனதன தனதன தனதன
     தந்தத் தனதன தனதன தனதன
          தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான

எந்தத் திகையினு மலையினு முவரியி
     னெந்தப் படியினு முகடினு முளபல
          எந்தச் சடலமு முயிரியை பிறவியி ...... னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
     னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
          என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ...... முறையோடே
சந்தித் தரஹர சிவசிவ சரணென
     கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
          தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் ...... குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
     னந்தத் திருநட மிடுசர ணழகுற
          சந்தச் சபைதனி லெனதுள முருகவும் ...... வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
     தந்தத் தனதன டுடுடுடு டமடம
          துங்கத் திசைமலை யுவரியு மறுகச ...... லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென
     சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
          துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு ...... மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
     யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
          கந்தப் பரிமள தனகிரி யுமையரு ...... ளிளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
     அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
          கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...... பெருமாளே.
Back to Top

# 365 பரிமளம் மிக உள   (திருவானைக்கா)  
தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான

பரிமள மிகவுள சாந்து மாமத
     முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
          பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
     பரிபுர மலரடி வேண்டி யேவிய
          பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா
விரகனை யசடனை வீம்பு பேசிய
     விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
          வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
     விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
          வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
     மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
          கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
     கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
          கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவண
     னிடியென அலறிமு னேங்கி வாய்விட
          முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
     யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
          முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
Back to Top

# 420 சிலைநுதல் வைத்து   (திருவருணை)  
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
     தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
          திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் ...... தனிலேறிச்
செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை
     தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி
          செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப்
புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்
     பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
          புரிவளை கைக்குட் கலின்க லென்றிட ...... அநுராகம்
புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி
     லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
          புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனே
கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
     மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
          கணகண கட்கட் கணின்க ணென்றிட ...... நடமாடுங்
கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
     முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி
          கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ...... புயவீரா
அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
     யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
          அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே
அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்
     தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
          அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் ...... பெருமாளே.
Back to Top

# 470 அவகுண விரகனை   (சிதம்பரம்)  
தனதன தனதன தானான தானன
     தனதன தனதன தானான தானன
          தனதன தனதன தானான தானன ...... தந்ததான

அவகுண விரகனை வேதாள ரூபனை
     அசடனை மசடனை ஆசார ஈனனை
          அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
     அழிகரு வழிவரு வீணாதி வீணனை
          அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
     வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
          கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங்
களியனை யறிவுரை பேணாத மாநுட
     கசனியை யசனியை மாபாத னாகிய
          கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள லோகனு
     மரகத முழுகிய காகோத ராஜனு
          மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
     மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
          மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
     தெரிசன பரகதி யானாய் நமோநம
          திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந்
திருதரு கலவி மணாளா நமோநம
     திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
          ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.
Back to Top

# 556 சத்தி பாணீ   (திருசிராப்பள்ளி)  
தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
     தத்த தானா தனாதன ...... தந்ததான

சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
     தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
     தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும்
பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
     பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ்
பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித
     பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய்
அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
     யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா
அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
     அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே
சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
     திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா
சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
     தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே.
Back to Top

# 696 நிரைதரு மணியணி   (திருமயிலை)  
தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான

நிரைதரு மணியணி யார்ந்த பூரித
     ம்ருகமத களபகில் சாந்து சேரிய
          இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ...... ரணைமீதே
நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
     முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை
          யொடுபொர இருகர மேந்து நீள்வளை ...... யொலிகூர
விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர
     மிசைதர இலவிதழ் மோந்து வாயமு
          தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக ...... வியனாடும்
வினையனை யிருவினை யீண்டு மாழ்கட
     லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி
          யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது ...... மொருநாளே
பரையபி நவைசிவை சாம்ப வீயுமை
     யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி
          பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை ...... சதகோடி
பகவதி யிருசுட ரேந்து காரணி
     மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி
          படர்சடை யவனிட நீங்கு றாதவள் ...... தருகோவே
குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க
     ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ
          முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு ...... முருகோனே
குலநறை மலரளி சூழ்ந்து லாவிய
     மயிலையி லுறைதரு சேந்த சேவக
          குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
Back to Top

# 916 வாளின் முனை   (வயலூர்)  
தான தனதன தந்தன தந்தன
     தான தனதன தந்தன தந்தன
          தான தனதன தந்தன தந்தன ...... தனதான

வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
     ராஜ நடையினு மம்பதி னும்பெரு
          வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான
வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ
     வாயு நகைமுக வெண்பலு நண்புடன்
          வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய ...... பனிநீருந்
தூளி படுநவ குங்கும முங்குளி
     ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம
          சோதி வளர்வன கொங்கையு மங்கையு ...... மெவரேனுந்
தோயு மளறெனி தம்பமு முந்தியு
     மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்
          சூளை யரையெதிர் கண்டும ருண்டிட ...... லொழிவேனோ
காளி திரிபுரை யந்தரி சுந்தரி
     நீலி கவுரிப யங்கரி சங்கரி
          காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
     ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
          கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது
வேளி னிரதிய ருந்ததி யிந்திர
     தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி
          மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே
வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்
     தீர வருள்தரு கந்தநி ரந்தர
          மேலை வயலையு கந்துள நின்றருள் ...... பெருமாளே.
Back to Top

# 992 போத நிர்க்குண   (பொதுப்பாடல்கள்)  
தான தத்தன தானா தனாதன
     தான தத்தன தானா தனாதன
          தான தத்தன தானா தனாதன ...... தந்ததான

போத நிர்க்குண போதா நமோநம
     நாத நிஷ்கள நாதா நமோநம
          பூர ணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
     நீப புஷ்பக தாளா நமோநம
          போக சொர்க்கபு பாலா நமோநம ...... சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
     வேத னத்ரய வேளே நமோநம
          வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
     யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
          மாயை யிற்சுழி யூடே விடாதுக ...... லங்கலாமோ
கீத நிர்த்தவெ தாளா டவீநட
     நாத புத்திர பாகீ ரதீகிரு
          பாச முத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிப
     மாலி கைக்கும ரேசா விசாகக்ரு
          பாலு வித்ரும காரா ஷடானன ...... புண்டரீகா
வேத வித்தக வேதா விநோதகி
     ராத லக்ஷ்மிகி ரீடா மகாசல
          வீர விக்ரம பாரா வதானவ ...... கண்டசூரா
வீர நிட்டுர வீராதி காரண
     தீர நிர்ப்பய தீராபி ராமவி
          நாய கப்ரிய வேலாயு தாசுரர் ...... தம்பிரானே.
Back to Top

# 1239 சலமலம்   (பொதுப்பாடல்கள்)  
தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
     தனதன தனத்த தத்த ...... தனதான

சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த
     தடியுடல் தனக்கு ளுற்று ...... மிகுமாயம்
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
     தனிலுரு மிகுத்து மக்க ...... ளொடுதாரம்
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
     கருவழி யவத்தி லுற்று ...... மகிழ்வாகிக்
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி
     கடுவினை தனக்குள் நிற்ப ...... தொழியாதோ
மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
     மழுவனல் கரத்துள் வைத்து ...... மருவார்கள்
மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
     மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே
பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
     படையது பொருப்பில் விட்ட ...... முருகோனே
பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
     பலருய அருட்கண் வைத்த ...... பெருமாளே.
Back to Top

# 1277 வரிவிழி பூசலாட   (பொதுப்பாடல்கள்)  
தனதன தான தான, தனதன தான தான
     தனதன தான தான ...... தனதான

வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட
     வளர்முலை தானு மாட ...... வளையாட
மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட
     மதுரமு தூறி வீழ ...... அநுராகம்
இருவரு மேக போக மொருவர்த மாக மாக
     இதமொடு கூடி மாயை ...... படுபோதும்
இருகர மாறு மாறு மறுமுக நீப மார்பு
     மிருகழல் தானு நானு ...... மறவேனே
திருநட மாடு காளி பயிரவி மோடி சூலி
     திரிபுர நீற தாக ...... அனல்மோதுஞ்
சிவைகயி லாச வாசி மலைமகள் நாரி பாரி
     திருமுலை யாயி தாயி ...... யருள்பாலா
குருபர நாத னாகி யரனொரு காதி லோது
     குணநிதி யாசை நேச ...... முருகோனே
குறமக ளார பார முகிழ்முலை மீது தாது
     குலவிய மாலை மேவு ...... பெருமாளே.
Back to Top


This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

paarvathy thiruppugazh