சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இயல் இசை எனும் பொருளின்
பண் - கொல்லி   (திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=0dcNVUU6Z8M
3.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மண்ணின் நல்ல வண்ணம் வாழல்
பண் - கொல்லி   (திருக்கழுமலம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=EFcH79qtezA
Audio: https://www.youtube.com/watch?v=zpZCGZOpaeY
Audio: https://sivaya.org/audio/3.024 Mannanil Nalla Vannam.mp3
3.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)
பண் - கொல்லி   (திருந்துதேவன்குடி கர்க்கடகேசுவரர் அருமருந்துநாயகியம்மை)
3.026   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிடி எலாம் பின் செல,
பண் - கொல்லி   (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளையீசுவரர் மகமாயியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=D7O7s5znQTg
3.027   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்
பண் - கொல்லி   (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ஆலந்துறைஈசுவரர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Qdw7TRf0eKk
3.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காலை ஆர் வண்டு இனம்
பண் - கொல்லி   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xTdAl5WG7YY
3.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாரு மன்னும் முலை மங்கை
பண் - கொல்லி   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் வார்கொண்டமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=RWWoxMk9Bt8
3.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,
பண் - கொல்லி   (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) பரதேசுவரர் அலங்காரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4-ivX5pJI7A
3.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரை தரு பவளமும், சீர்
பண் - கொல்லி   (திருமயேந்திரப்பள்ளி திருமேனியழகர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=1iE23OOVx2g
3.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வன்னியும் மத்தமும் மதி பொதி
பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) )
Audio: https://www.youtube.com/watch?v=ksUhEVxZ_eo
3.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீர் இடைத் துயின்றவன், தம்பி,
பண் - கொல்லி   (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nUrPk4HHz-Y
3.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண்ண மா மலர் கொடு
பண் - கொல்லி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=lFGCZUoAzS4
3.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னை நால் மறை அவை
பண் - கொல்லி   (திருத்தென்குடித்திட்டை பசுபதீசுவரர் உலகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=wzA10dNdfbk
3.036   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சந்தம், ஆர், அகிலொடு, சாதி,
பண் - கொல்லி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XwJanp64qjk
3.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரம் முனம் மலரால், புனல்
பண் - கொல்லி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=tqhqYRo6zLU
3.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!
பண் - கொல்லி   (திருக்கண்டியூர் வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dVdbjNbpawc
3.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மானின் நேர் விழி மாதராய்!
பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=s8s-PijeeAY
3.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
பண் - கொல்லி   (சீர்காழி )
Audio: https://www.youtube.com/watch?v=cJ4CFso9SA0
3.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரு ஆர் கச்சித் திரு
பண் - கொல்லி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=G184AcZJfYQ
3.042   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நிறை வெண் திங்கள் வாள்முக
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் அகிலாண்டேசுவரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UspcUKwHxic
4.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல
பண் - கொல்லி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=MKE6sESuM58
4.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
பண் - கொல்லி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=iPZqn1bNwKA
4.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vYtWwNzg12A
4.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய் விராம் மேனி தன்னைப்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=Aa6ZjiSja28
4.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=k69FBvKLoqk
4.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறை அது பாடிப் பிச்சைக்கு
பண் - திருநேரிசை:கொல்லி   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc
4.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=zy7SU8mdaHI
4.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்
பண் - கொல்லி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_3VaGscvF20
4.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9Ua09EHDdBc
4.074   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்
பண் - கொல்லி   (பொது -நினைந்த திருநேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA
4.075   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டனேன் பட்டது என்னே! தூய
பண் - கொல்லி   (பொது -தனித் திருநேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=C8xKUbvG84M
4.110   திருநாவுக்கரசர்   தேவாரம்   சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,
பண் - கொல்லி   (பசுபதித் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=xlQGcinuoIc
7.031   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்
பண் - கொல்லி   (திருவிடையாறு )
Audio: https://www.youtube.com/watch?v=BfEZ3QzwUjA
7.032   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கடிது ஆய்க் கடல் காற்று
பண் - கொல்லி   (திருக்கோடிக்குழகர் அமுதகடநாதர் மையார்தடங்கணம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=t_QtO4-9Rrk
7.033   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
பண் - கொல்லி   (திருவாரூர் )
Audio: https://www.youtube.com/watch?v=-x8t2TE_QZY
7.034   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
பண் - கொல்லி   (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=sGcq0xXT5JA
7.035   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி
பண் - கொல்லி   (திருப்புறம்பயம் சாட்சிவரதேசுவரர் கரும்படுசொல்லம்மை)
7.036   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கார் உலாவிய நஞ்சை உண்டு
பண் - கொல்லி   (திருப்பைஞ்ஞீலி மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
7.037   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   குருகு பாய, கொழுங் கரும்புகள்
பண் - கொல்லி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=YGBV4XLqYbA
7.038   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தம்மானை அறியாத சாதியார் உளரே?
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=fsTkXgqkqbY
Audio: https://www.youtube.com/watch?v=r1DQ7uTccCE
7.039   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தில்லை வாழ் அந்தணர் தம்
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
Audio: https://www.youtube.com/watch?v=F-qNMxHIme8
Audio: https://www.youtube.com/watch?v=j3zT6yhDffM
7.040   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வள் வாய மதி மிளிரும்
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருக்கானாட்டுமுள்ளூர் பதஞ்சலியீசுவரர் கானார்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jdRPem0RxXw
7.041   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முது வாய் ஓரி கதற,
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருக்கச்சூர் ஆலக்கோயில் தினம்விருந்திட்டநாதர் கன்னியுமையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=GAXwrWFKRSE
7.042   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   எறிக்கும் கதிர் வேய் உரி
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவெஞ்சமாக்கூடல் விகிர்தேசுவரர் விகிர்தேசுவரி)
Audio: https://www.youtube.com/watch?v=mRtC8oUEKNQ
7.043   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நஞ்சி, இடை இன்று நாளை
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ju6apsximE4
7.044   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருஅஞ்சைக்களம் )
Audio: https://www.youtube.com/watch?v=yoM_GiP8gR8
7.045   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருஆமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Vbsn6ICya_0
7.046   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்து ஊர் புக்கு, இரந்து,
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=P-LoRs-kJuE

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.003   இயல் இசை எனும் பொருளின்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!
கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!
கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,
நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.

[1]
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;
மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்
அலைவரு மதகரி உரித்தவனே!
இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.

[2]
பாடினை, அருமறை வரல்முறையால்;
ஆடினை, காண முன் அருவனத்தில்;
சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர்
நீடு வெண்பிறை முடி நின்மலனே!
நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்-
தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!

[3]
நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே!
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே!
முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே!

[4]
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
உரிமையின், உலகு உயிர் அளித்த நின்தன்
பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்,
அருமையில் அளப்பு அரிது ஆயவனே!
அரவு ஏர் இடையாளொடும், அலைகடல் மலி புகலி,
பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப்
பொலிந்தவனே!

[5]
அடை அரிமாவொடு, வேங்கையின் தோல்,
புடை பட அரைமிசைப் புனைந்தவனே!
படை உடை நெடுமதில் பரிசு அழித்த,
விடை உடைக் கொடி மல்கு, வேதியனே!
விகிர்தா! பரமா! நின்னை விண்ணவர் தொழ, புகலித்
தகுவாய், மடமாதொடும், தாள் பணிந்தவர் தமக்கே.

[6]
அடியவர் தொழுது எழ, அமரர் ஏத்த,
செடிய வல்வினை பல தீர்ப்பவனே!
துடி இடை அகல் அல்குல்-தூமொழியைப்
பொடி அணி மார்பு உறப் புல்கினனே!
புண்ணியா! புனிதா! புகர் ஏற்றினை! புகலிந்நகர்
நண்ணினாய்! கழல் ஏத்திட, நண்ணகிலா, வினையே.

[7]
இரவொடு, பகல் அது, ஆம் எம்மான்! உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன், வழி அடியேன்;
குர, விரி நறுங்கொன்றை, கொண்டு அணிந்த
அர விரிசடை முடி ஆண்டகையே!
அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னை
இனம் ஆர்தரு தோள் அடர்த்து, இருந்தனை, புகலியுளே.

[8]
உருகிட உவகை தந்து உடலினுள்ளால்,
பருகிடும் அமுது அன பண்பினனே!
பொரு கடல் வண்ணனனும் பூ உளானும்
பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய்
உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ்
வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!

[9]
கையினில் உண்பவர், கணிகநோன்பர்,
செய்வன தவம் அலாச் செதுமதியார்,
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே!
வியந்தாய், வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்கு உடன் இருந்தவனே!

[10]
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர்,
விண்ணவர் அடி தொழ விளங்கினானை,
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்,
நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்;
இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.024   மண்ணின் நல்ல வண்ணம் வாழல்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருக்கழுமலம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் மண்ணில் நல்ல வண்ணம் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகலில் வாழ்த்துவதற்கான பாடல். அமைதியுடனும் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

[1]
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!

[2]
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!

[3]
அயர்வு உளோம்! என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே!
நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே!

[4]
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே!
விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும்,
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!

[5]
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!

[6]
குறைவளை வதுமொழி குறைவு ஒழி, நெஞ்சமே!
நிறைவளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கறைவளர் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே!

[7]
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட,
நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே,
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!

[8]
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!

[9]
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்
ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்!
கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!

[10]
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப்
பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.025   மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)  
பண் - கொல்லி   (திருத்தலம் திருந்துதேவன்குடி ; (திருத்தலம் அருள்தரு அருமருந்துநாயகியம்மை உடனுறை அருள்மிகு கர்க்கடகேசுவரர் திருவடிகள் போற்றி )
மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை
திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே

[1]
வீதிபோக்கு ஆவன; வினையை வீட்டு(வ்)வன;
ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன
தீது இல் தேவன்குடித் தேவர் தேவு, எய்திய
ஆதி அந்தம்(ம்) இலா அடிகள், வேடங்களே

[2]
மானம் ஆக்கு(வ்)வன, மாசு நீக்கு(வ்)வன;
வானை உள்கச் செலும் வழிகள் காட்டு(வ்)வன
தேனும் வண்டும்(ம்) இசை பாடும் தேவன்கு
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே

[3]
செவிகள் ஆர்விப்பன; சிந்தையுள் சேர்வன;
கவிகள் பாடு(வ்)வன; கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே

[4]
விண் உலாவும் நெறி; வீடு காட்டும் நெறி;
மண் உலாவும் நெறி; மயக்கம் தீர்க்கும் நெறி
தெண் நிலா வெண்மதி தீண்டு தேவன்கு
அண்ணல், ஆன் ஏறு உடை அடிகள், வேடங்களே

[5]
பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா,
புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்கு
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே

[6]
கரைதல் ஒன்றும்(ம்) இலை, கருத வல்லார்தமக்கு
உரைவில் ஊனம்(ம்) இலை; உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே

[7]
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்கு
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே

[8]
துளக்கம் இல்லாதன; தூய தோற்றத்தன;
விளக்கம் ஆக்கு(வ்)வன வெறி வண்டு ஆரும் பொழில்
திளைக்கும் தேவன்குடி, திசைமுகனோடு மால்
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே

[9]
செரு மருதம் துவர்த் தேர், அமண் ஆதர்கள்
உரு மருவப்படாத் தொழும்பர்தம் உரை கொளேல்!
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்கு
அருமருந்து ஆவன, அடிகள் வேடங்களே!

[10]
சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை,
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்-
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.026   பிடி எலாம் பின் செல,  
பண் - கொல்லி   (திருத்தலம் திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) ; (திருத்தலம் அருள்தரு மகமாயியம்மை உடனுறை அருள்மிகு காளையீசுவரர் திருவடிகள் போற்றி )
பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?

[1]
நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப்
பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான்,
கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.

[2]
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்
காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை,
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீா
தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.

[3]
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.

[4]
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலா
ஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.

[5]
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீா
வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்-
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.

[6]
மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக்
கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.

[7]
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-
தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.

[8]
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,
கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே

[9]
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்
மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி
கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.

[10]
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்-
நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்
பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.027   படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ; (திருத்தலம் அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு ஆலந்துறைஈசுவரர் திருவடிகள் போற்றி )
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை
உடையினார்; உமை ஒரு கூறனார்; ஊர்வது ஓர்
விடையினார்; வெண்பொடிப் பூசியார்; விரிபுனல்
சடையினார்; உறைவு இடம் சக்கரப்பள்ளியே.

[1]
பாடினார், அருமறை; பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன் எருக்கு அதனொடும்;
நாடினார், இடு பலி; நண்ணி ஓர் காலனைச்
சாடினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

[2]
மின்னின் ஆர் சடைமிசை விரி கதிர் மதியமும்,
பொன்னின் ஆர் கொன்றையும், பொறி கிளர் அரவமும்,
துன்னினார்; உலகு எலாம் தொழுது எழ நால்மறை
தன்னினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

[3]
நலம் மலி கொள்கையார், நால்மறை பாடலார்
வலம் மலி மழுவினார், மகிழும் ஊர் வண்டு அறை
மலர் மலி சலமொடு வந்து இழி காவிா
சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே.

[4]
வெந்த வெண் பொடி அணி வேதியர், விரிபுனல்,
அந்தம் இல் அணி மலைமங்கையோடு, அமரும் ஊர்
கந்தம் ஆர் மலரொடு, கார் அகில், பல்மணி,
சந்தினோடு, அணை புனல் சக்கரப்பள்ளியே.

[5]
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார், உமை ஒரு கூறொடும் ஒலி புனல்
தாங்கினார், உறைவு இடம் சக்கரப்பள்ளியே.

[6]
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம்-
பேரினார்; பெண் ஒரு கூறனார்; பேர் ஒலி-
நீரினார், சடைமுடி; நிரை மலர்க்கொன்றை அம்-
தாரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

[7]
முதிர் இலா வெண்பிறை சூடினார்; முன்ன நாள
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார், வரைதனால்;
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய
சதிரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

[8]
துணி படு கோவணம், சுண்ண வெண் பொடியினர்
பணி படு மார்பினர், பனிமதிச் சடையினர்,
மணிவணன் அவனொடு மலர் மிசையானையும்
தணிவினர், வள நகர் சக்கரப்பள்ளியே.

[9]
உடம்பு போர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள்
விடம் படும் உரை அவை மெய் அல; விரிபுனல்
வடம் படு மலர்கொடு வணங்குமின், வைகலும்,
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே!

[10]
தண்வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
கண் நுதலவன் அடி, கழுமல வள நகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல, பறையும், மெய்ப் பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.028   காலை ஆர் வண்டு இனம்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருமழபாடி ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி )
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும்,
சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே,
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே.

[1]
கறை அணி மிடறு உடைக் கண்ணுதல், நண்ணிய
பிறை அணி செஞ்சடைப் பிஞ்ஞகன், பேணும் ஊர்
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே,
மறை அணி நாவினான் மா மழபாடியே.

[2]
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்,
செந்தமிழ்க் கீதமும், சீரினால் வளர்தர,
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்வு இடம்
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே.

[3]
அத்தியின் உரிதனை அழகு உறப் போர்த்தவன்;
முத்தி ஆய் மூவரில் முதல்வனாய் நின்றவன்;
பத்தியால் பாடிட, பரிந்து அவர்க்கு அருள்செயும்
அத்தனார்; உறைவு இடம் அணி மழபாடியே.

[4]
கங்கை ஆர் சடை இடைக் கதிர் மதி அணிந்தவன்,
வெங் கண் வாள் அரவு உடை வேதியன், தீது இலாச்
செங்கயல் கண் உமையாளொடும் சேர்வு இடம்
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே.

[5]
பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண வரும்
காலனார் உயிர் செகக் காலினால் சாடினான்,
சேலின் ஆர் கண்ணினாள் தன்னொடும் சேர்வு இடம்
மாலினார் வழிபடும் மா மழபாடியே.

[6]
விண்ணில் ஆர் இமையவர் மெய்ம் மகிழ்ந்து ஏத்தவே,
எண் இலார் முப்புரம் எரியுண, நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனல் எழக் காய்ந்த எம்
அண்ணலார்; உறைவு இடம் அணி மழபாடியே.

[7]
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன
சிரத்தினை ஊன்றலும், சிவன் அடி சரண் எனா,
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும்,
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே.

[8]
ஏடு உலாம் மலர்மிசை அயன், எழில் மாலும் ஆய்,
நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவு இடம்
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ, பைம்பொழில்
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே.

[9]
உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்து, அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்மின்!
பொறி பிடித்த(அ)ரவு இனம் பூண் எனக் கொண்டு, மாந்
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே.

[10]
ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான், மேவிய திரு மழபாடியை
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.029   வாரு மன்னும் முலை மங்கை  
பண் - கொல்லி   (திருத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு வார்கொண்டமுலையம்மை உடனுறை அருள்மிகு தீயாடியப்பர் திருவடிகள் போற்றி )
வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்;
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்
நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!

[1]
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு அணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள
அருத்தனார்; அழகு அமர் மங்கை ஓர்பாகமாப்
பொருத்தனார், கழல் இணை போற்றுதல் பொருளதே.

[2]
பண்ணின் ஆர் அருமறை பாடினார், நெற்றி ஓர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள
விண்ணின் ஆர் விரிபுனல் மேவினார், சடைமுடி
அண்ணலார், எம்மை ஆள் உடைய எம் அடிகளே

[3]
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது; பல் பலி
உணங்கல் ஓடு உண்கலன்; உறைவது காட்டு இடை
கணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள்
நிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே!

[4]
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக்
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ள
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்கு
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே

[5]
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன்
ஓதினார், உமை ஒரு கூறனார், ஒண்குழைக்
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்
நாதனார்; திருவடி நாளும் நின்று ஏத்துமே!

[6]
மையின் ஆர் மிடறனார், மான் மழு ஏந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள
தையல் ஓர்பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார்; அடி தொழ, அல்லல் ஒன்று இல்லையே.

[7]
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர்
மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான்,
கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்
தலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே.

[8]
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன்,
தம் கையால்-தொழுது எழ, தழல் உரு ஆயினான்-
கங்கை ஆர் சடையினான்-கருது காட்டுப்பள்
அம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே.

[9]
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள்
வாதினால் உரை அவை மெய் அல; வைகலும்,
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்
ஏரினால்-தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே.

[10]
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்-
அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்-சொல்,
கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்
பரவிய தமிழ் சொல, பறையும், மெய்ப் பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.030   பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,  
பண் - கொல்லி   (திருத்தலம் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) ; (திருத்தலம் அருள்தரு அலங்காரநாயகியம்மை உடனுறை அருள்மிகு பரதேசுவரர் திருவடிகள் போற்றி )
பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பாய் புலி,
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டு இடை,
நித்தம் ஆக(ந்) நடம் ஆடி, வெண் நீறு அணி
பித்தர் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[1]
கயல சேல கருங்கண்ணியர் நாள்தொறும்
பயலை கொள்ள, பலி தேர்ந்து உழல் பான்மையார்
இயலை, வானோர் நினைந்தோர்களுக்கு, எண்ண(அ)ரும்
பெயரர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[2]
கோடல் சால(வ்) உடையார், கொலை யானையின்
மூடல் சால(வ்) உடையார், முளி கான் இடை
ஆடல் சால(வ்) உடையார், அழகு ஆகிய
பீடர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[3]
மண்ணர், நீரார், அழலார், மலி காலினார்
விண்ணர், வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள
பண்ணர், பாடல் உடையார், ஒருபாகமும்
பெண்ணர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[4]
மறையர், வாயின் மொழி; மானொடு, வெண்மழு,
கறைகொள் சூலம்(ம்), உடைக் கையர்; கார் ஆர்தரும்
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னிமேல்
பிறையர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[5]
புற்று அரவம், புலித்தோல், அரைக் கோவணம்,
தற்று, இரவில் நடம் ஆடுவர்; தாழ்தரு
சுற்று அமர் பாரிடம், தொல்கொடியின்மிசைப்
பெற்றர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[6]
துணை இல் துத்தம், சுரிசங்கு, அமர் வெண்பொடி
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும்(ம்), எரி-
கணையினால் முப்புரம் செற்றவர், கையினில்
பிணையர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[7]
சரிவு இலா வல் அரக்கன் தடந்தோள் தலை
நெரிவில் ஆர(வ்) அடர்த்தார், நெறி மென்குழல்
அரிவை பாகம் அமர்ந்தார், அடியாரொடும்
பிரிவு இல் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[8]
வரி அரா என்பு அணி மார்பினர், நீர் மல்கும்
எரி அராவும் சடைமேல் பிறை ஏற்றவர்,
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய
பெரியர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[9]
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்தொறும்
ஏண் இலாத(ம்) மொழிய(வ்), எழில் ஆயவர்;
சேண் உலாம் மும்மதில் தீ எழச் செற்றவர்
பேணு கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[10]
நீரின் ஆர் புன்சடை நிமலனுக்கு இடம் என,
பாரினார் பரவு அரதைப் பெரும்பாழியை,
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.031   திரை தரு பவளமும், சீர்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருமயேந்திரப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு திருமேனியழகர் திருவடிகள் போற்றி )
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,
வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்
அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!

[1]
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,
வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!

[2]
கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும்,
தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும்,
மாங் கரும்பும், வயல் மயேந்திரப்பள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே!

[3]
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும்
மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப்பள்
எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே!

[4]
நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச்
சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன்,
மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப்பள்
கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே!

[5]
சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,
இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-
மந்திரமறை வளர் மயேந்திரப்பள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!

[6]
சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு
படர்சடை மதியினன், மயேந்திரப்பள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே!

[7]
சிரம் ஒருபதும் உடைச் செரு வலி அரக்கனைக்
கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன்,
மரவு அமர் பூம்பொழில் மயேந்திரப்பள்
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே!

[8]
நாக(அ)ணைத் துயில்பவன், நலம் மிகு மலரவன்,
ஆக(அ)ணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்;
மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப்பள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே!

[9]
உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும்,
படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்
இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே!

[10]
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,
நம் பரம் இது என, நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.032   வன்னியும் மத்தமும் மதி பொதி  
பண் - கொல்லி   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே.

[1]
கொடி நெடுமாளிகை, கோபுரம், குளிர்மதி
வடிவு உற அமைதர, மருவிய ஏடகத்து
அடிகளை அடி பணிந்து அரற்றுமின், அன்பினால்!
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே.

[2]
குண்டலம் திகழ்தரு காது உடைக் குழகனை
வண்டு அலம்பும் மலர்க்கொன்றை, வான்மதி, அணி
செண்டு அலம்பும் விடைச் சேடன்-ஊர் ஏடகம்
கண்டு கைதொழுதலும், கவலை நோய் கழலுமே.

[3]
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்
கோலம் ஆர்தரு விடைக் குழகனார் உறைவு இடம்
சால(ம்) மாதவிகளும், சந்தனம், சண்பகம்,
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம், செல்வமே.

[4]
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட,
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்;
பெரியவன்; பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன்; உறைவு இடம் ஏடகக் கோயிலே.

[5]
பொய்கையின் பொழில் உறு புதுமலர்த் தென்றல் ஆர்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி பணிந்து, அரற்றுமின்! அடர்தரும்
வெய்ய வன்பிணி கெட, வீடு எளிது ஆகுமே.

[6]
தடவரை எடுத்தவன் தருக்கு இற, தோள் அடர்
பட, விரல் ஊன்றியே, பரிந்து அவற்கு அருள் செய்தான்;
மடவரல், எருக்கொடு, வன்னியும், மத்தமும்,
இடம் உடைச் சடையினன்-ஏடகத்து இறைவனே.

[8]
பொன்னும், மா மணிகளும், பொருதிரைச் சந்து அகில்
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவு உற;
அன்னம் ஆம் அயனும், மால், அடி முடி தேடியும்
இன்ன ஆறு என ஒணான்-ஏடகத்து ஒருவனே.

[9]
குண்டிகைக் கையினர், குணம் இலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றையும் வன்னியும்
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே.

[10]
கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி வைகை நீா
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை,
நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.033   நீர் இடைத் துயின்றவன், தம்பி,  
பண் - கொல்லி   (திருத்தலம் திருவுசாத்தானம் (கோவிலூர்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான்,
போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ;
கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம்
சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே.

[1]
கொல்லை ஏறு உடையவன், கோவண ஆடையன்,
பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ்
தில்லையான் உறைவு இடம் திரு உசாத்தானமே.

[2]
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தம் கனா ஆக்கினான், ஒரு நொடி;
காமனார் உடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்;
சேமமா உறைவு இடம் திரு உசாத்தானமே.

[3]
மறி தரு கரத்தினான், மால்விடை ஏறியான்,
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ,
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய்
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே.

[4]
பண்டு, இரைத்து அயனும் மாலும், பலபத்தர்கள்
தொண்டு இரைத்தும், மலர் தூவித் தோத்திரம் சொல,
கொண்டு இரைக் கொடியொடும் குருகினின் நல் இனம்
தெண்திரைக் கழனி சூழ் திரு உசாத்தானமே.

[7]
மடவரல் பங்கினன்; மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர,
அடர்தர ஊன்றி, அங்கே அவற்கு அருள்செய்தான்;
திடம் என உறைவு இடம் திரு உசாத்தானமே.

[8]
ஆண் அலார், பெண் அலார், அயனொடு மாலுக்கும்
காண ஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்து உளான்,
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான், இடம்
சேண் உலாம் மாளிகைத் திரு உசாத்தானமே.

[9]
கானம் ஆர் வாழ்க்கையான், கார் அமண் தேரர் சொல்
ஊனமாக் கொண்டு, நீர் உரைமின், உய்ய எனில்
வானம் ஆர் மதில், அணி மாளிகை, வளர் பொழில்,
தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே!

[10]
வரை திரிந்து இழியும் நீர் வளவயல் புகலி மன்,
திரை திரிந்து எறிகடல்-திரு உசாத்தானரை
உரை தெரிந்து உணரும் சம்பந்தன், ஒண் தமிழ் வல்லார்
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.034   வண்ண மா மலர் கொடு  
பண் - கொல்லி   (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட,
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம்
விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர்
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

[1]
வெறி உலாம் கொன்றை அம் தாரினான், மேதகு
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி, ஓர் புண்ணியன்,
மறி உலாம் கையினான், மங்கையோடு அமர்வு இடம்
செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

[2]
ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை-
கூறனார்; கொல் புலித் தோலினார்; மேனிமேல்
நீறனார்; நிறைபுனல் சடையனார்; நிகழ்வு இடம்
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.

[3]
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான், உமையொடும்;
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார்; மேவு இடம்
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்த்
திரையின் ஆர் எறி புனல்-திரு முதுகுன்றமே.

[4]
கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற, ஓர்
இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி,
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்வு இடம்
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

[5]
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார், பெரியது ஓர்
வானம் ஆர் மதியினோடு அரவர், தாம் மருவு இடம்,
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து, உமையொடும்
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.

[6]
மஞ்சர் தாம், மலர்கொடு வானவர் வணங்கிட,
வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே,
அம் சொலாள் உமையொடும்(ம்) அமர்வு இடம் அணி கலைச்
செஞ் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே.

[7]
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
ஏரின் ஆர் முடி இராவணன், எடுத்தான், இற,
வாரின் ஆர்முலையொடும் மன்னனார் மருவு இடம்
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே.

[8]
ஆடினார், கானகத்து; அருமறையின் பொரு
பாடினார்; பலபுகழ்ப் பரமனார்; இணை அடி
ஏடின் ஆர் மலர்மிசை அயனும், மால், இருவரும்
தேடினார் அறிவு ஒணார்; திரு முதுகுன்றமே.

[9]
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்
பேசு மெய் உள அல; பேணுவீர்! காணுமின்-
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம்(ம்) இசை செய,
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே!

[10]
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை
நண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல்
எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப்
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.035   முன்னை நால் மறை அவை  
பண் - கொல்லி   (திருத்தலம் திருத்தென்குடித்திட்டை ; (திருத்தலம் அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி )
முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும்,
தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல்
செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே.

[1]
மகரம் ஆடும் கொடி மன் மத வேள் தனை,
நிகரல் ஆகா நெருப்பு எழ, விழித்தான் இடம்
பகர வாள் நித்திலம், பல்மகரத்தோடும்,
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே.

[2]
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன்,
உருவினால் அன்றியே உருவு செய்தான், இடம்
பருவ நாள், விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினால் மிகு புகழ்த் தென்குடித்திட்டையே.

[3]
உள்-நிலாவு ஆவி ஆய் ஓங்கு தன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
எண் இல் ஆர் எழில் மணிக் கனக மாளிகை இளந்
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே.

[4]
வருந்தி வானோர்கள் வந்து அடைய, மா நஞ்சு தான்
அருந்தி, ஆர் அமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர்
செருந்தி, பூமாதவிப் பந்தர், வண் செண்பகம்,
திருந்து நீள் வளர் பொழில்-தென்குடித்திட்டையே.

[5]
ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றி மால்
கூறினார், அமர்தரும் குமரவேள்தாதை ஊர்
ஆறினார் பொய் அகத்து, ஐஉணர்வு எய்தி மெய்
தேறினார், வழிபடும் தென்குடித்திட்டையே.

[6]
கான் அலைக்கும்(ம்) அவன் கண் இடந்து அப்ப, நீள
வான் அலைக்கும் தவத் தேவு வைத்தான் இடம்
தான் அலைத் தெள் அம் ஊர், தாமரைத் தண்துறை
தேன் அலைக்கும் வயல், தென்குடித்திட்டையே.

[7]
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓல் இடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
காலொடும் கனகமூக்கு உடன்வர, கயல் வரால்
சேலொடும் பாய் வயல்-தென்குடித்திட்டையே.

[8]
நாரணன் தன்னொடு நான்முகன்தானும் ஆய்,
காரணன்(ன்) அடி முடி காண ஒண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ,
சீர் அணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே.

[9]
குண்டிகைக் கை உடைக் குண்டரும், புத்தரும்,
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர், தொழும்
வண்டு இரைக்கும் பொழில்-தண்டலைக் கொண்டல் ஆர்
தெண்திரைத் தண்புனல்,-தென்குடித்திட்டையே!

[10]
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை,
கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம்,
பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.036   சந்தம், ஆர், அகிலொடு, சாதி,  
பண் - கொல்லி   (திருத்தலம் திருக்காளத்தி ; (திருத்தலம் அருள்தரு ஞானப்பூங்கோதையாரம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி )
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம்,
உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும்,
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே.

[1]
ஆலம், மா, மரவமோடு, அமைந்த சீர்ச் சந்தனம்,
சாலம், மா பீலியும், சண்பகம், உந்தியே,
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி,
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே!

[2]
கோங்கமே, குரவமே, கொன்றை, அம் பாதிர்
மூங்கில், வந்து அணைதரு முகலியின் கரையினில்,
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ,
வீங்கு வெந்துயர் கெடும்; வீடு எளிது ஆகுமே.

[3]
கரும்பு, தேன், கட்டியும், கதலியின் கனிகளும்,
அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி
ஒருங்கு வார் சடையினன், காளத்தி ஒருவனை,
விரும்புவார் அவர்கள் தாம் விண்ணுலகு ஆள்வரே.

[4]
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே,
திரை தரு முகலியின் கரையினில், தேமலர்
விரை தரு சடை முடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழல் இணை நித்தலும் நினைமினே!

[5]
முத்தும், மா மணிகளும், முழுமலர்த்திரள்களும்,
எத்து மா முகலியின் கரையினில், எழில் பெற,
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன் தன் காளத்தி அணைவது கருமமே.

[8]
மண்ணும், மா வேங்கையும், மருதுகள், பீழ்ந்து உந்தி
நண்ணு மா முகலியின் கரையினில், நன்மை சேர்
வண்ண மா மலரவன், மால் அவன், காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்மினே!

[9]
வீங்கிய உடலினர், விரிதரு துவர் உடைப்
பாங்கு இலார், சொலை விடும்! பரன் அடி பணியுமின்!
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர,
வாங்கிடும், வினைகளை, வானவர்க்கு ஒருவனே.

[10]
அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி
வட்ட வார் சடையனை, வயல் அணி காழியான்-
சிட்ட நால்மறை வல ஞானசம்பந்தன்-சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.037   கரம் முனம் மலரால், புனல்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்-
பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம் பயில்,
வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும் மேய சீர்ப்
பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள் பேணியே!

[1]
விண்ணில் ஆர் மதி சூடினான், விரும்பும் மறையவன் தன் தலை
உண்ண நன் பலி பேணினான், உலகத்துள் ஊன் உயிரான், மலைப்-
பெண்ணின் ஆர் திருமேனியான்-பிரமாபுரத்து உறை கோயிலு
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம் உடை ஆதியே.

[2]
எல்லை இல் புகழாளனும்(ம்), இமையோர் கணத்து உடன் கூடியும்,
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே,
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே.

[3]
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த, மா மடமாதொடும்,
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான்;
தொடையல் ஆர் நறுங்கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால்,
இடை இலார், சிவலோகம் எய்துதற்கு; ஈது காரணம் காண்மினே!

[4]
வாய் இடை(ம்) மறை ஓதி, மங்கையர் வந்து இடப் பலி
கொண்டு, போய்ப்-
போய் இடம்(ம்) எரிகான் இடைப் புரி நாடகம்(ம்) இனிது ஆடினான்;
பேயொடும் குடிவாழ்வினான்-பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்;
தாய், இடைப் பொருள், தந்தை, ஆகும் என்று ஓதுவார்க்கு
அருள்-தன்மையே!

[5]
ஊடினால் இனி யாவது? என் உயர் நெஞ்சமே!-உறு
வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என்? அழல் அன்று தன் கையில் ஏந்தினான்,
பீடு நேர்ந்தது கொள்கையான்-பிரமாபுரத்து உறை வேதியன்,
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே!

[6]
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி நினைந்திட,
ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள் ஆயினான்;
பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை வீடவே!

[7]
கன்று ஒரு(க்) கையில் ஏந்தி நல்விளவின் கனி பட நூறியும்,
சென்று ஒருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனும் ஆய்,
அன்று அரக்கனைச் செற்றவன்(ன்) அடியும் முடி அவை காண்கிலார்
பின் தருக்கிய தண்பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே!

[8]
உண்டு உடுக்கை விட்டார்களும்(ம்), உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும்,
பண்டு அடக்கு சொல் பேசும் அப் பரிவு ஒன்று இலார்கள்
சொல் கொள்ளன்மின்!
தண்டொடு, அக்கு, வன் சூலமும், தழல், மா மழுப்படை, தன் கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன்-எம் பிரமாபுரத்து உறை கூத்தனே.

[9]
பித்தனை, பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன், கழல் பேணியே, மெய்த்தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து, நன்பொருள் மேவிட
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள்,
பொய்த் தவம் பொறி நீங்க, இன் இசை போற்றி செய்யும்,
மெய்ம் மாந்தரே!

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.038   வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!  
பண் - கொல்லி   (திருத்தலம் திருக்கண்டியூர் ; (திருத்தலம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி )
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள் வேண்டுவீர்
கனைவில் ஆர் புனல் காவிரிக் கரை மேய கண்டியூர் வீரட்டன்,
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள, தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப் பாடி, இவ் வையம்
மாப் பலி தேர்ந்ததே?

[1]
உள்ள ஆறு எனக்கு உரை செய்ம்மின்(ன்)! உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்
பிள்ளைவான் பிறை செஞ்சடை(ம்) மிசை வைத்ததும், பெரு நீர் ஒலி-
வெள்ளம் தாங்கியது என்கொலோ, மிகு மங்கையாள் உடன் ஆகவே?

[2]
அடியர் ஆயினீர்! சொல்லுமின்-அறிகின்றிலேன், அரன் செய்கையை;
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்து உறை பான்மையான்,
முடிவும் ஆய், முதல் ஆய், இவ் வையம் முழுதும் ஆய்,
அழகு ஆயது ஓர்
பொடி அது ஆர் திருமார்பினில் புரிநூலும் பூண்டு, எழு
பொற்பு அதே!

[3]
பழைய தொண்டர்கள்! பகருமின்-பல ஆய வேதியன்
பான்மையை!
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர் வீரட்டன்
குழை ஒர் காதினில் பெய்து உகந்து, ஒரு குன்றின் மங்கை வெரு உறப்
புழை நெடுங்கை நன் மா உரித்து, அது போர்த்து உகந்த
பொலிவு அதே!

[4]
விரவு இலாது உமைக் கேட்கின்றேன்; அடி விரும்பி
ஆட்செய்வீர்! விளம்புமின்-
கரவு எலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
முரவம், மொந்தை, முழா, ஒலிக்க, முழங்கு பேயொடும் கூடிப் போய்,
பரவு வானவர்க்கு ஆக வார்கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே!

[5]
இயலும் ஆறு எனக்கு இயம்புமின்(ன்) இறைவ(ன்)னும் ஆய்
நிறை செய்கையை!
கயல் நெடுங்கண்ணினார்கள் தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன்
புயல் பொழிந்து இழி வான் உளோர்களுக்கு ஆக அன்று,
அயன் பொய்ச் சிரம்,
அயல் நக(வ்), அது அரிந்து, மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே!

[6]
திருந்து தொண்டர்கள்! செப்புமின்-மிகச் செல்வன் த(ன்)னது திறம் எலாம்!
கருந் தடங்கண்ணினார்கள் தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு, ஆல்நிழல், அறம் உரைத்ததும், மிகு வெம்மையார்
வருந்த வன் சிலையால் அம் மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே!

[7]
நா விரித்து அரன் தொல் புகழ்பல பேணுவீர்! இறை நல்குமின்-
காவிரித் தடம் புனல் செய் கண்டியூர் வீரட்டத்து உறை கண்ணுதல்
கோ விரிப் பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும், கொடி வரை பெற
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே!

[8]
பெருமையே சரண் ஆக வாழ்வு உறு மாந்தர்காள்! இறை பேசுமின்-
கருமை ஆர் பொழில் சூழும் தண்வயல் கண்டியூர் உறை வீரட்டன்
ஒருமையால் உயர் மாலும், மற்றை மலரவன், உணர்ந்து ஏத்தவே,
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அத் தன்மையே!

[9]
நமர் எழுபிறப்பு அறுக்கும் மாந்தர்கள்! நவிலுமின், உமைக் கேட்கின்றேன்!
கமர் அழி வயல் சூழும் தண்புனல் கண்டியூர் உறை வீரட்டன்
தமர் அழிந்து எழு சாக்கியச் சமண் ஆதர் ஓதுமது கொள
அமரர் ஆனவர் ஏத்த, அந்தகன் தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே!
[10]
கருத்தனை, பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை கள்வனை,
அருத்தனை, திறம் அடியர்பால் மிகக் கேட்டு உகந்த வினா உரை
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தர் ஆகிலும், பலர்கள் ஆகிலும், உரைசெய்வார்
உயர்ந்தார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.039   மானின் நேர் விழி மாதராய்!  
பண் - கொல்லி   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[1]
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்கு உறு பக்கமா,
மா கதக்கரி போல்-திரிந்து, புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[2]
அத் தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா,
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப் பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்கு உற நக்கம் ஏய்,
சித்திரர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[3]
சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும், கருமை சேர்
கந்துசேனனும், கனகசேனனும், முதல் அது ஆகிய பெயர் கொளா
மந்தி போல்-திரிந்து, ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[4]
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது ஓர் எலியின் தொழில்,
பாட்டு மெய் சொலி, பக்கமே செலும் எக்கர்தங்களை, பல் அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை, கசிவு ஒன்று இலாச்
சேட்டை கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[5]
கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும், குமண மா
சுனகநந்தியும், குனகநந்தியும், திவணநந்தியும் மொழி கொளா
அனகநந்தியர், மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[6]
பந்தணம்(ம்) அவை ஒன்று இலம்; பரிவு ஒன்று இலம்(ம்)! என வாசகம்
மந்தணம் பல பேசி, மாசு அறு சீர்மை இன்றி அநாயமே,
அந்தணம்(ம்), அருகந்தணம், மதிபுத்தணம், மதிசிந்தணச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[7]
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீப்
போலியைப் பணிய(க்)கிலாது, ஒரு பொய்த்தவம் கொடு, குண்டிகை
பீலி கைக்கொடு, பாய் இடுக்கி, நடுக்கியே, பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[8]
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்) அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல்-தலையைப் பறித்து, ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[9]
தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து, இடுக்கே மடுத்து, ஒரு
பொய்த் தவம்
பொங்கு நூல்வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும் பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[10]
எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு ஆலவாய்ச்
சொக்கன் என் உள் இருக்கவே, துளங்கும் முடித்
தென்னன்முன், இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.040   கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்  
பண் - கொல்லி   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார் பேணார்; அல்லோம், நாமே.

[1]
கொன்றை சூடி நின்ற தேவை
அன்றி, ஒன்றும் நன்று இலோமே.

[2]
கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்;
சொல்லாதாரோடு அல்லோம், நாமே.

[3]
கூற்று உதைத்த நீற்றினானைப்
போற்றுவார்கள் தோற்றினாரே.

[4]
காட்டுள் ஆடும் பாட்டு உளானை
நாட்டு உளாரும் தேட்டு உளாரே.

[5]
தக்கன் வேள்விப் பொக்கம் தீர்த்த
மிக்க தேவர் பக்கத்தோமே.

[6]
பெண் ஆண் ஆய விண்ணோர்கோவை
நண்ணாதாரை எண்ணோம், நாமே.

[7]
தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை,
ஆத்தம் ஆக, ஏத்தினோமே.

[8]
பூவினானும், தாவினானும்,
நாவினாலும் ஓவினாரே.

[9]
மொட்டு அமணர், கட்டர்தேரர்,
பிட்டர் சொல்லை விட்டு உளோமே.

[10]
அம் தண் காழிப் பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர் உய்ந்து உளோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.041   கரு ஆர் கச்சித் திரு  
பண் - கொல்லி   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து
ஒருவா! என்ன, மருவா, வினையே.

[1]
மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம்
விதியால் ஏத்த, பதி ஆவாரே.

[2]
கலி ஆர் கச்சி, மலி ஏகம்பம்
பலியால் போற்ற, நலியா, வினையே.

[3]
வரம் ஆர் கச்சிப்புரம் ஏகம்பம்
பரவா ஏத்த, விரவா, வினையே.

[4]
படம் ஆர் கச்சி, இடம் ஏகம்பத்து
உடையாய்! என்ன, அடையா, வினையே.

[5]
நலம் ஆர் கச்சி, நிலவு ஏகம்பம்
குலவா ஏத்த, கலவா, வினையே.

[6]
கரியின் உரியன், திரு ஏகம்பன்,
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே.

[7]
இலங்கை அரசைத் துலங்க ஊன்றும்
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே.

[8]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list