சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.099   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வம்பு ஆர் குன்றம், நீடு
பண் - குறிஞ்சி   (திருக்குற்றாலம் குறும்பலாவீசுவரர் குழல்வாய்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=B-abMQIdD-A

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.099   வம்பு ஆர் குன்றம், நீடு  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருக்குற்றாலம் ; (திருத்தலம் அருள்தரு குழல்வாய்மொழியம்மை உடனுறை அருள்மிகு குறும்பலாவீசுவரர் திருவடிகள் போற்றி )
வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக்
கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம்
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை
நம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்!

[1]
பொடிகள் பூசித் தொண்டர் பின் செல்ல, புகழ் விம்ம,
கொடிகளோடும் நாள்விழ மல்கு குற்றாலம்
கடி கொள் கொன்றை, கூவிள மாலை, காதல் செய்
அடிகள் மேய நன்நகர் போலும்; அடியீர்காள்!

[2]
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி,
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போக
நல்கும் நம்பான் நன்நகர்போலும்; நமரங்காள்!

[3]
பக்கம் வாழைப் பாய் கனியோடு பலவின் தேன்,
கொக்கின் கோட்டுப் பைங்கனி, தூங்கும் குற்றாலம்
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும்
நக்கன் மேய நன்நகர்போலும்; நமரங்காள்!

[4]
மலை ஆர் சாரல் மகஉடன் வந்த மடமந்தி
குலை ஆர் வாழைத் தீம்கனி மாந்தும் குற்றாலம்
இலை ஆர் சூலம் ஏந்திய கையான், எயில் எய்த
சிலையான், மேய நன்நகர்போலும்; சிறு தொண்டீர்!

[5]
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணி வாரி,
கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம்
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள், எம்
பெம்மான், மேய நன் நகர்போலும்; பெரியீர்காள்!

[6]
நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள் சோலை,
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்
காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள் எம்
சூலபாணி, நன்நகர் போலும்; தொழுவீர்காள்!

[7]
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ,
கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த
நாதன் மேய நன்நகர் போலும்; நமரங்காள்!

[8]
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று,
குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம்
பிரமனோடு மால் அறியாத பெருமை எம்
பரமன் மேய நன் நகர்போலும்; பணிவீர்காள்!

[9]
பெருந் தண்சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி,
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம்
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப,
அருந் தண் மேய நன்நகர்போலும்; அடியீர்காள்!

[10]
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன்,
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்
நாட வல்ல, நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list