சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;
பண் - பழந்தக்கராகம்   (திருவேற்காடு வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=MfFlB0vxtJ4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.057   ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;  
பண் - பழந்தக்கராகம்   (திருத்தலம் திருவேற்காடு ; (திருத்தலம் அருள்தரு வேற்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வேற்காட்டீசுவரர் திருவடிகள் போற்றி )
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில்
தெள்ளியார்; அவர் தேவரே.

[1]
ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ் உலகினில்
சேடர் ஆகிய செல்வரே.

[2]
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி,
வேதவித்தகன், வேற்காடு,
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

[3]
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்,
வீழ்சடையினன், வேற்காடு,
தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட,
பாழ்படும், அவர் பாவமே.

[4]
காட்டினானும், அயர்த்திடக் காலனை
வீட்டினான், உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார், வினை ஒல்லையே.

[5]
தோலினால் உடை மேவ வல்லான், சுடர்
வேலினான், உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்,
மாலினார், வினை மாயுமே.

[6]
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர், தீர்க்கமே.

[7]
மூரல் வெண் மதி சூடும் முடி உடை
வீரன் மேவிய வேற்காடு
வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர், செய் கழல்; திண்ணமே.

[8]
பரக்கினார் படு வெண் தலையில் பலி
விரக்கினான் உறை வேற் காட்டூர்,
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினைமினே!

[9]
மாறு இலா மலரானொடு மால் அவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை, குற்றமே.

[10]
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு, நம்பன் கழல் பேணி,
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட, குணம் ஆமே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list