நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்; என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்; சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை துன்று பொன்சடையானைத் தொழுமினே!
| [ 1]
|
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்; பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்; விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே.
| [ 2]
|
வேட்களத்து உறை வேதியன், எம் இறை; ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்; பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.
| [ 3]
|
அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை- மல்கு வெண்பிறை சூடும் மணாளனார், செல்வனார், திரு வேட்களம் கைதொழ வல்லர் ஆகில்; வழி அது காண்மினே!
| [ 4]
|
துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி நம்பன் ஆகிய நல் மணிகண்டனார், என் பொனார், உறை வேட்கள நன்நகர் இன்பன், சேவடி ஏத்தி இருப்பதே.
| [ 5]
|
Go to top |
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே பொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர், சிட்டனார் திரு வேட்களம் கைதொழ பட்ட வல்வினை ஆயின பாறுமே.
| [ 6]
|
வட்ட மென் முலையாள் உமை பங்கனார், எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார், சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது இட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே!
| [ 7]
|
நட்டம் ஆடிய நம்பனை, நாள்தொறும் இட்டத்தால் இனிது ஆக நினைமினோ- வட்டவார் முலையாள் உமை பங்கனார், சிட்டனார், திரு வேட்களம் தன்னையே!
| [ 8]
|
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர்போல்-திரு வேட்களச் செல்வரே.
| [ 9]
|
சேடனார் உறையும் செழு மாமலை ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய வேடனார் உறை வேட்களம் சேர்மினே!
| [ 10]
|
Go to top |