குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ் வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே, இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!
| [ 1]
|
ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர் பூதநாதன்; புலி அதள் ஆடையன்; வேதநாதன் விசயமங்கை உளான்; பாதம் ஓத வல்லார்க்கு இல்லை, பாவமே.
| [ 2]
|
கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில் வெள்விடைக்கு அருள்செய் விசயமங்கை- யுள் இடத்து உறைகின்ற உருத்திரன் கிள்ளிட, தலை அற்றது, அயனுக்கே.
| [ 3]
|
திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம் அசைய, அங்கு எய்திட்டு, ஆர் அழல் ஊட்டினான் விசைய மங்கை விருத்தன்; புறத்து அடி விசையின் மங்கி விழுந்தனன், காலனே.
| [ 4]
|
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார் இருள் விள்ளல் ஆக்கி, விசயமங்கைப் பிரான், உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே.
| [ 5]
|
Go to top |
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை- வில்லை ஏற்று உடையான், விசயமங்கைச் செல்வ, போற்றி! என்பாருக்குத் தென்திசை- எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே.
| [ 6]
|
கண் பல் உக்க கபாலம் அங்கைக் கொண்டு உண் பலிக்கு உழல் உத்தமன், உள் ஒளி வெண்பிறைக்கண்ணியான், விசயமங்கை நண்பனை, தொழப்பெற்றது நன்மையே.
| [ 7]
|
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து, வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை ஆண்டவன்(ன்) அடியே நினைந்து, ஆசையால் காண்டலே கருத்து ஆகி இருப்பனே.
| [ 8]
|
வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்! வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான், சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே!
| [ 9]
|
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற விலங்கல் சேர் விரலான் விசயமங்கை வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும், நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே.
| [ 10]
|
Go to top |