சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
66   திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 46 )  

தெருப்புறத்து

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்த தத்தத் தனத்தனா
     தனத்த தத்தத் தனத்தனா
          தனத்த தத்தத் தனத்தனா ...... தந்ததான தனனா

தெருப்பு றத்துத் துவக்கியாய்
     முலைக்கு வட்டைக் குலுக்கியாய்
          சிரித்து ருக்கித் தருக்கியே ...... பண்டைகூள மெனவாழ்
சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்
     மனத்தை வைத்துக் கனத்தபேர்
          தியக்க முற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசி யுடனே
இருப்ப கத்துத் தளத்துமேல்
     விளக்கெ டுத்துப் படுத்துமே
          லிருத்தி வைத்துப் பசப்பியே ...... கொண்டுகாசு தணியா
திதுக்க துக்குக் கடப்படா
     மெனக்கை கக்கக் கழற்றியே
          இளைக்க விட்டுத் துரத்துவார் ...... தங்கள்சேர்வை தவிராய்
பொருப்பை யொக்கப் பணைத்ததோ
     ரிரட்டி பத்துப் புயத்தினால்
          பொறுத்த பத்துச் சிரத்தினால் ...... மண்டுகோப முடனே
பொரப்பொ ருப்பிற் கதித்தபோ
     ரரக்கர் பட்டுப் பதைக்கவே
          புடைத்து முட்டத் துணித்தமா ...... லன்புகூரு மருகா
வரப்பை யெட்டிக் குதித்துமே
     லிடத்தில் வட்டத் தளத்திலே
          மதர்த்த முத்தைக் குவட்டியே ...... நின்றுசேலி னினம்வாழ்
வயற்பு றத்துப் புவிக்குள்நீள்
     திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்
          வயத்த நித்தத் துவத்தனே ...... செந்தில்மேவு குகனே.
Easy Version:
தெருப் புறத்து துவக்கியாய் முலைக் குவட்டைக்
குலுக்கியாய்
சிரித்து உருக்கித் தருக்கியே பண்டை கூளம் என வாழ்
சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய்
மனத்தை வைத்துக் கனத்த பேர் தியக்கம் உற்றுத் தவிக்கவே
கண்டு பேசி
உடனே இருப்பு அகத்துத் தளத்து மேல் விளக்கு எடுத்துப்
படுத்து மேல் இருத்தி வைத்துப் பசப்பியே கொண்டு காசு
தணியாது
இதுக்கு அதுக்குக் கடப்படாம் எனக் கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார் தங்கள் சேர்வை தவிராய்
பொருப்பை ஒக்கப் பணைத்தது ஓர் இரட்டி பத்துப்
புயத்தினால் பொறுத்த பத்துச் சிரத்தினால் மண்டு
கோபமுடனே பொர
பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்த மால் அன்பு கூரு மருகா
வரப்பை எட்டிக் குதித்து மேல் இடத்தில் வட்டத் தளத்திலே
மதர்த்த முத்தைக் குவட்டியே நின்று சேல் இனம் வாழ்
வயல் புறத்துப் புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில்
வாழ் வயத்த
நித்தத் துவத்தனே செந்தில் மேவு குகனே.
Add (additional) Audio/Video Link

தெருப் புறத்து துவக்கியாய் முலைக் குவட்டைக்
குலுக்கியாய்
... தெருவின் வெளிப்புறத்திலேயே கட்டுண்டவராக
நிற்பவர்களாய், மார்பகம் என்னும் மலையைக் குலுக்குபவர்களாய்,
சிரித்து உருக்கித் தருக்கியே பண்டை கூளம் என வாழ்
சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய்
... சிரித்துப் பேசி, வரும்
ஆடவர்கள் மனதை உருக்கியும், அகங்கரித்தும், பழைய குப்பை என்று
வாழும்படி, (வேசியர் குலத்து) இளம் பெண்கள் பெரிதாகக் காப்பவர்கள்
போல இதமான மொழியைக் கூறுபவர்களாய்,
மனத்தை வைத்துக் கனத்த பேர் தியக்கம் உற்றுத் தவிக்கவே
கண்டு பேசி
... செல்வத்தில் மனதை வைத்து, பலமான பேர்வழிகளான
ஆடவர் தம்மேல் மயக்கம் கொண்டு தவிக்குமாறு அவர்களைப் பார்த்தும்
பேசியும்,
உடனே இருப்பு அகத்துத் தளத்து மேல் விளக்கு எடுத்துப்
படுத்து மேல் இருத்தி வைத்துப் பசப்பியே கொண்டு காசு
தணியாது
... உடனேயே (தாங்கள்) இருக்கும் வீட்டின் உள்ளே
தளத்தின் மேல் விளக்கை அணைத்துவிட்டு, படுத்து, மேலே படுக்க
வைத்து, பசப்பு நடிப்புகளை நடித்துக் கொண்டு, (கொடுத்த) பொருள்
போதாமல்,
இதுக்கு அதுக்குக் கடப்படாம் எனக் கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார் தங்கள் சேர்வை தவிராய்
...
இதற்கு வேண்டும், அதற்கு வேண்டும் என்று ஜாலப் பேச்சுக்களைப்
பேசி, கையில் உள்ள பொருள்களை எல்லாம் கக்கும்படிச் செய்து பிடுங்கி,
சோர்வடையும்படி செய்து (விரட்டித்) துரத்துவார்களுடன் சேருவதை
நீக்கி அருள்க.
பொருப்பை ஒக்கப் பணைத்தது ஓர் இரட்டி பத்துப்
புயத்தினால் பொறுத்த பத்துச் சிரத்தினால் மண்டு
கோபமுடனே பொர
... மலைபோல பெருத்ததான இருபது
புயங்களாலும், அவை தாங்கியுள்ள பத்துத் தலைகளாலும், மிகுந்த
கோபத்துடன் (ராவணன்) சண்டை செய்ய,
பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்த மால் அன்பு கூரு மருகா
... மலை
போல கொதித்தெழுந்த போர் அரக்கர்கள் யாவரும் சிதைக்கப்பட்டு
பதைக்கவே அவர்களை அடித்து எல்லாரையும் வெட்டி ஒழித்த (ராமராக
வந்த) திருமால் அன்பு மிக வைத்துள்ள மருகனே,
வரப்பை எட்டிக் குதித்து மேல் இடத்தில் வட்டத் தளத்திலே
மதர்த்த முத்தைக் குவட்டியே நின்று சேல் இனம் வாழ்
...
வயலின் வரப்பின் மேல் எட்டிக் குதித்து மேலே உள்ள வட்டமான நிலப்
பரப்பில் செழிப்புடன் கிடக்கும் முத்தைக் குவியக் கூட்டி நின்று, சேல்
மீன் கூட்டங்கள் வாழும்
வயல் புறத்துப் புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில்
வாழ் வயத்த
... வயற்புரங்களைக் கொண்ட, பூமியில் ஓங்கிய,
திருத்தணிகையில் சிறப்புடன் வாழ்கின்ற வெற்றியாளனே,
நித்தத் துவத்தனே செந்தில் மேவு குகனே. ... என்றும்
உள்ளவனே, திருச் செந்தூரில் வாழ்கின்ற குகனே.

Similar songs:

66 - தெருப்புறத்து (திருச்செந்தூர்)

தனத்த தத்தத் தனத்தனா
     தனத்த தத்தத் தனத்தனா
          தனத்த தத்தத் தனத்தனா ...... தந்ததான தனனா

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song