சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=hgguAts3gN8
4.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்)
உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,
விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே.
[ 1]
பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம்
கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை
சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு-
ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே.
[ 2]
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று(வ்)
ஆனையின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.
[ 3]
துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று,
விருத்தி தான் தருக! என்று வேதனை பலவும் செய்ய,
வருத்தியால்; வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும்-அதிகை வீரட்டனாரே.
[ 4]
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்
துத்திஐந்தலையநாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து (வ்),
உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று(வ்)
அத்தியின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.
[ 5]
Go to top
வரிமுரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும், -நெஞ்சே!-
கரி உரி மூடவல்ல கடவுளைக் காலத்தாலே;
சுரிபுரிவிரிகுழ(ல்) லாள், துடி இடைப் பரவை அல்குல்
அரிவை, ஒர் பாகர்போலும்- அதிகை வீரட்டனாரே.
[ 6]
நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக;
பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை,
சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே.
[ 7]
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.
[ 8]
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.
[ 9]
ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்,
வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்;
நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று
அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே.
[ 10]
Go to top
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார், திருவிரல்தான்; முருகு அமர்கோதை பாகத்து
அடக்கினார்-என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவதிகை வீரட்டானம்
1.046
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குண்டைக் குறள் பூதம் குழும,
Tune - தக்கராகம்
(திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
Tune - கொல்லி
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
Tune - காந்தாரம்
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.010
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,
Tune - காந்தாரம்
(திருவதிகை வீரட்டானம் )
4.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
இரும்பு கொப்பளித்த யானை ஈர்
Tune - கொப்பளித்ததிருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண் நிலா மதியம் தன்னை
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
முன்பு எலாம் இளைய காலம்
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.104
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாசு இல் ஒள்வாள் போல்
Tune - திருவிருத்தம்
(திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
5.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
கோணல் மா மதி சூடி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.054
திருநாவுக்கரசர்
தேவாரம்
எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
Tune - திருக்குறுந்தொகை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
Tune - ஏழைத்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் )
6.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திரனை மா கங்கைத் திரையால்
Tune - அடையாளத்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் )
6.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
Tune - குறிஞ்சி
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
Tune - காப்புத்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் )
7.038
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தம்மானை அறியாத சாதியார் உளரே?
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400