சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
இரும்பு கொப்பளித்த யானை ஈர் பண் - கொப்பளித்ததிருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண் நிலா மதியம் தன்னை பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=hgguAts3gN8 |
4.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
நம்பனே! எங்கள் கோவே! நாதனே! பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=usvkGu_xksU |
4.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=YUJRfd3R5eI |
4.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
முன்பு எலாம் இளைய காலம் பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு பண் - திருநேரிசை (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=qqYwyD7H4to Audio: https://www.youtube.com/watch?v=kAw-cHbeOLs |
4.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை பண் - திருநேரிசை (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=akD7R8jYKyg |
4.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர பண் - திருநேரிசை (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4bt4zrxddYA |
4.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம் பண் - திருநேரிசை (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Rzf-t3crn3o |
4.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் பண் - திருநேரிசை (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ddugfJ2ujhU |
4.035
திருநாவுக்கரசர்
தேவாரம்
காடு உடைச் சுடலை நீற்றார்; பண் - திருநேரிசை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=WLhQ-ercnlA |
4.036
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆடினார் ஒருவர் போலும்; அலர் பண் - திருநேரிசை (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vEqnNJ_uXuY |
4.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலனை வீழச் செற்ற கழல் பண் - திருநேரிசை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=6AoKNFcSvk4 |
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பண் - திருநேரிசை (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=dul25CK8BMw |
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் பண் - திருநேரிசை:கொல்லி (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vYtWwNzg12A |
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை; பண் - திருநேரிசை (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Ew9877ql9vY |
4.041
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய் விராம் மேனி தன்னைப் பண் - திருநேரிசை:கொல்லி (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=Aa6ZjiSja28 |
4.042
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் பண் - திருநேரிசை:கொல்லி (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=k69FBvKLoqk |
4.043
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அது பாடிப் பிச்சைக்கு பண் - திருநேரிசை:கொல்லி (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc |
4.044
திருநாவுக்கரசர்
தேவாரம்
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண பண் - திருநேரிசை (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CMbzQH4m2vk |
4.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத பண் - திருநேரிசை:கொல்லி (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=zy7SU8mdaHI |
4.046
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து பண் - திருநேரிசை (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oos3CBD7shc |
4.047
திருநாவுக்கரசர்
தேவாரம்
கனகம் மா வயிரம் உந்தும் பண் - திருநேரிசை (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=s9ODsmIO0K0 |
4.048
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) |
4.049
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், பண் - திருநேரிசை (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=asmBSSc4kPU |
4.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
நெடிய மால் பிரமனோடு நீர் பண் - திருநேரிசை (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=In8Ve0q0FGA |
4.051
திருநாவுக்கரசர்
தேவாரம்
நெற்றி மேல் கண்ணினானே! நீறு பண் - திருநேரிசை (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=jI9dsAR0N9g |
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன பண் - திருநேரிசை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=z_yUZuhRewc |
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள் பண் - திருநேரிசை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=OK2k464CXQk |
4.054
திருநாவுக்கரசர்
தேவாரம்
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, பண் - திருநேரிசை:காந்தாரம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=AZ_kpWQFf_Q |
4.055
திருநாவுக்கரசர்
தேவாரம்
தெண் திரை தேங்கி ஓதம் பண் - திருநேரிசை (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2A7VC50MMRY |
4.056
திருநாவுக்கரசர்
தேவாரம்
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் பண் - திருநேரிசை:காந்தாரம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=61iq2NzFuUI |
4.058
திருநாவுக்கரசர்
தேவாரம்
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி பண் - திருநேரிசை:காந்தாரம் (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo |
4.059
திருநாவுக்கரசர்
தேவாரம்
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் பண் - திருநேரிசை (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகேசுவரர் சவுந்தரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nGJFOf8yoo4 |
4.060
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அணி நாவினானை, மறப்பு பண் - திருநேரிசை (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=pyNG2Du5jDU |
4.061
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, பண் - திருநேரிசை (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி) Audio: https://www.youtube.com/watch?v=Ry6uuPOzyEY |
4.063
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பண் - திருநேரிசை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=fkS7G-zK1CU |
4.064
திருநாவுக்கரசர்
தேவாரம்
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; பண் - திருநேரிசை (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=KrX5P0IKkUw |
4.065
திருநாவுக்கரசர்
தேவாரம்
தோடு உலாம் மலர்கள் தூவித் பண் - திருநேரிசை (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=QMgykSuuVcE Audio: https://www.youtube.com/watch?v=0EPWtzYuzW0 |
4.066
திருநாவுக்கரசர்
தேவாரம்
கச்சை சேர் அரவர் போலும்; பண் - திருநேரிசை (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=L0ZzU3V5SJ0 |
4.067
திருநாவுக்கரசர்
தேவாரம்
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பண் - திருநேரிசை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை) |
4.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ள நீர்ச் சடையர் போலும்; பண் - திருநேரிசை (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=TwKXKMpMV4I |
4.069
திருநாவுக்கரசர்
தேவாரம்
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், பண் - திருநேரிசை (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KeSjq_YinCA |
4.070
திருநாவுக்கரசர்
தேவாரம்
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் பண் - திருநேரிசை (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி) Audio: https://www.youtube.com/watch?v=DqQU9K5tRZw |
4.071
திருநாவுக்கரசர்
தேவாரம்
மனைவி தாய் தந்தை மக்கள் பண் - திருநேரிசை (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=-RAZYkaFjcM |
4.072
திருநாவுக்கரசர்
தேவாரம்
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் பண் - திருநேரிசை (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3Wr2qcFBuPM Audio: https://www.youtube.com/watch?v=ad3xSv41u9E |
4.073
திருநாவுக்கரசர்
தேவாரம்
பெருந் திரு இமவான் பெற்ற பண் - திருநேரிசை (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=OvEOqME0sZc |
4.076
திருநாவுக்கரசர்
தேவாரம்
மருள் அவா மனத்தன் ஆகி பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=bz7ls6HtjmQ Audio: https://www.youtube.com/watch?v=tFKw3jGkwP8 |
4.077
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=cGo7sTd0afU |
4.078
திருநாவுக்கரசர்
தேவாரம்
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=0q7NJVbvNjk |
4.079
திருநாவுக்கரசர்
தேவாரம்
தம் மானம் காப்பது ஆகித் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=MZTHaYJyPyE |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.024  
இரும்பு கொப்பளித்த யானை ஈர்
பண் - கொப்பளித்ததிருநேரிசை (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் கரும்பு கொப்பளித்த இன் சொல் காரிகை பாகம் ஆக, சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையில் ஏற்ற, அரும்பு கொப்பளித்த சென்னி, அதிகை வீரட்டனாரே. | [1] |
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி, வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து, செம்பு கொப்பளித்த மூன்று மதில் உடன் சுருங்க, வாங்கி அம்பு கொப்பளிக்க எய்தார்-அதிகைவீரட்டனாரே | [2] |
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த, சடையும் கொப்பளித்த திங்கள், சாந்தம் வெண் நீறு பூசி, உடையும் கொப்பளித்த நாகம், உள்குவார் உள்ளத்து என்றும் அடையும் கொப்பளித்த சீரார்-அதிகை வீரட்டனாரே. | [3] |
கறையும் கொப்பளித்த கண்டர்; காமவேள் உருவம் மங்க இறையும் கொப்பளித்த கண்ணார்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் மறையும் கொப்பளித்த நாவர்-வண்டு பண் பாடும் கொன்றை அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே. | [4] |
நீறு கொப்பளித்த மார்பர்-நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி, கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர் பாகம், ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த, ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே. | [5] |
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த, பிணங்கு கொப்பளித்த சென்னிச் சடை உடைப் பெருமை அண்ணல்- சுணங்கு கொப்பளித்த கொங்கைச் சுரி குழல் பாகம் ஆக, அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே. | [6] |
சூலம் கொப்பளித்த கையர்; சுடர்விடு மழுவாள் வீசி, நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி, மாலும் கொப்பளித்த பாகர்-வண்டு பண் பாடும் கொன்றை, ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே. | [7] |
நாகம் கொப்பளித்த கையர்; நால்மறை ஆய பாடி மேகம் கொப்பளித்த திங்கள் விரிசடைமேலும் வைத்து, பாகம் கொப்பளித்த மாதர் பண் உடன் பாடி ஆட, ஆகம் கொப்பளித்த தோளார்-அதிகைவீரட்டனாரே. | [8] |
பரவு கொப்பளித்த பாடல் பண் உடன் பத்தர் ஏத்த, விரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து(வ்), இரவு கொப்பளித்த கண்டர்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் அரவு கொப்பளித்த கையர்-அதிகைவீரட்டனாரே. | [9] |
தொண்டை கொப்பளித்த செவ்வாய், துடி இடை, பரவைஅல்குல், கொண்டை கொப்பளித்த கோதை, கோல்வளை பாகம் ஆக- வண்டு கொப்பளித்த தீம்தேன் வரிக்கயல் பருகி மாந்தக் கெண்டை கொப்பளித்த தெண் நீர்க் கெடில வீரட்டனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.025  
வெண் நிலா மதியம் தன்னை
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்) உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி, விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே. | [1] |
பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம் கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு- ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே. | [2] |
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று(வ்) ஆனையின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே. | [3] |
துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று, விருத்தி தான் தருக! என்று வேதனை பலவும் செய்ய, வருத்தியால்; வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற அருத்தியார்க்கு அன்பர் போலும்-அதிகை வீரட்டனாரே. | [4] |
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள் துத்திஐந்தலையநாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து (வ்), உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று(வ்) அத்தியின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே. | [5] |
வரிமுரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும், -நெஞ்சே!- கரி உரி மூடவல்ல கடவுளைக் காலத்தாலே; சுரிபுரிவிரிகுழ(ல்) லாள், துடி இடைப் பரவை அல்குல் அரிவை, ஒர் பாகர்போலும்- அதிகை வீரட்டனாரே. | [6] |
நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக; பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை, சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே. | [7] |
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும் வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே. | [8] |
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும் வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே. | [9] |
ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும், வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்; நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே. | [10] |
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக் கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய முடக்கினார், திருவிரல்தான்; முருகு அமர்கோதை பாகத்து அடக்கினார்-என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.026  
நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி! பங்கனே! பரமயோகி! என்று என்றே பரவி நாளும், செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான், அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே! | [1] |
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ மெய்யனாய் வாழமாட்டேன்; வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார் செய்யதாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான், ஐய! நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே! | [2] |
நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்; ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்; சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான், ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே! | [3] |
தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம் என்னும் பொருளுளே அழுந்தி, நாளும், போவது ஓர் நெறியும் காணேன்; இருளும் மா மணிகண்டா! நின் இணை அடி இரண்டும் காண்பான் அருளும் ஆறு அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே! | [4] |
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள் வாழும் அஞ்சினால் அடர்க்கப்பட்டு, இங்கு உழிதரும் ஆதனேனை, அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன் அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே! | [5] |
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி, மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்; பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே! | [6] |
கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம் ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்; அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே! | [7] |
மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி, ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்; கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே! | [8] |
பிணி விடா ஆக்கை பெற்றேன்; பெற்றம் ஒன்று ஏறுவானே! பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்; துணிவு இலேன்; யன் அல்லேன்; தூ மலர்ப்பாதம் காண்பான் அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே! | [9] |
திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும், இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா ஒருவனே! எம்பிரானே! உன் திருப்பாதம் கண்பான், அருவனே! அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.027  
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி நாகம் கச்சா முடக்கினார்; முகிழ் வெண்திங்கள் மொய்சடைக் கற்றை தன் மேல்- தொடக்கினார்; தொண்டைச் செவ்வாய்த் துடி இடைப் பரவை அல்குல் அடக்கினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே. | [1] |
சூடினார், கங்கையாளை; சூடிய துழனி கேட்டு அங்கு ஊடினாள், நங்கையாளும்; ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார், சாமவேதம்; பாடிய பாணியாலே ஆடினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே. | [2] |
கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த அம்பினார்- கெடில வேலி அதிகைவீரட்டனாரே. | [3] |
மறி படக் கிடந்த கையர், வளர் இள மங்கை பாகம் செறி படக் கிடந்த செக்கர்ச் செழு மதிக்கொழுந்து சூடி, பொறி படக் கிடந்த நாகம் புகை உமிழ்ந்துஅழல வீக்கி, கிறிபட நடப்பர்போலும்-கெடில வீரட்டனாரே. | [4] |
நரி வரால் கவ்வச் சென்று நல்-தசை இழந்தது ஒத்த, தெரிவரால்,-மால் கொள் சிந்தை,-தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் வரி வரால் உகளும் தெண் நீர்க் கழனி சூழ் பழன வேலி, அரிவரால் வயல்கள் சூழ்ந்த, அதிகைவீரட்டனாரே. | [5] |
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய், பலா சங்க்கொம்பின் சுள்ளலைச் சுடலை வெண் நீறு அணிந்தவர்-மணி வெள் ஏற்றுத் துள்ளலைப் பாகன் தன்னைத் தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே. | [6] |
நீறு இட்ட நுதலர்; வேலை நீலம் சேர் கண்டர்; மாதர் கூறு இட்ட மெய்யர் ஆகி, கூறினார், ஆறும் நான்கும்; கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையினுள்ளால் ஆறு இட்டு முடிப்பர்போலும்-அதிகைவீரட்டனாரே. | [7] |
காண் இலார் கருத்தில் வாரார்; திருத்தலார்; பொருத்தல் ஆகார் ஏண் இலார்; இறப்பும் இல்லார்; பிறப்பு இலார்; துறக்கல் ஆகார் நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் ஆண் அலார்; பெண்ணும் அல்லார்-அதிகைவீரட்டனாரே. | [8] |
தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செரு வலி அரக்கன் சென்று பேர்த்தலும், பேதை அஞ்ச, பெருவிரல் அதனை ஊன்றி, சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து, அவனை அன்று(வ்) ஆர்த்த வாய் அலற வைத்தார்-அதிகைவீரட்டனாரே. | [9] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.028  
முன்பு எலாம் இளைய காலம்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி, கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி, பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்; அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே! | [1] |
கறைப் பெருங் கண்டத்தானே! காய் கதிர் நமனை அஞ்சி நிறைப் பெருங்கடலைக் கண்டேன்! நீள்வரை உச்சி கண்டேன்! பிறைப் பெருஞ் சென்னியானே! பிஞ்ஞகா! இவை அனைத்தும் அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே! | [2] |
நாதனார் என்ன, நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள் ஏதங்கள் அறிய மாட்டார், இணை அடி தொழுதோம் என்பார் ஆதன் ஆனவன் என்றுஎள்கி,- அதிகைவீரட்டனே!-நின் பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே. | [3] |
சுடலை சேர் சுண்ண மெய்யர்; சுரும்பு உண விரிந்த கொன்றைப்- படலை சேர் அலங்கல் மார்பர்-பழனம் சேர் கழனித் தெங்கின் மடலை நீர் கிழிய ஓடி அதன் இடை மணிகள் சிந்தும் கெடில வீரட்டம் மேய கிளர் சடைமுடியனாரே | [4] |
மந்திரம் உள்ளது ஆக, மறி கடல் எழு நெய் ஆக, இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் சிந்திரம் ஆக நோக்கிக் தெருட்டுவார்-தெருட்ட வந்து கந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே | [5] |
மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி, மெய்ஞ் ஞரம்பு உதிரம் பில்க, விசை தணிந்து, அரக்கன் வீழ்ந்து, கைஞ் ஞரம்பு எழுவிக் கொண்டு, காதலால் இனிது சொன்ன கின்னரம் கேட்டு உகந்தார்-கெடில வீரட்டனாரே. | [6] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.029  
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு
பண் - திருநேரிசை (திருத்தலம் திருச்செம்பொன்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி, வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்; நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள் தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே | [1] |
நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும் மெய்யவர்; பொய்யும் இல்லார்; உடல் எனும் இடிஞ்சில் தன்னில் நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகிச் செய்யவர்; கரிய கண்டர்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [2] |
வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் ஒள்ளியர்; ஊழி ஊழி உலகம் அது ஏத்த நின்ற பள்ளியர்; நெஞ்சத்து உள்ளார்; பஞ்சமம் பாடி ஆடும் தெள்ளியர்; கள்ளம் தீர்ப்பார்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [3] |
தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி; முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி, எந்தை, நீ சரணம்! என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச் சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [4] |
ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்; கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்; நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச் சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே. | [5] |
ஞாலமும் அறிய வேண்டின்,நன்று என வாழல் உற்றீர் காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர் கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில் சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே. | [6] |
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்; எரி, காலே, மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்; தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று திரிகாலம் கண்ட எந்தை-திருச் செம்பொன்பள்ளியாரே. | [7] |
கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும் நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச் சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [8] |
ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும் பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை; தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே. | [9] |
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும், செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.030  
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை
பண் - திருநேரிசை (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார் அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார் தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார் கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [1] |
விண்ணினை விரும்ப வைத்தார்; வேள்வியை வேட்க வைத்தார் பண்ணினைப் பாட வைத்தார்; பத்தர்கள் பயில வைத்தார் மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் கண்ணினை நெற்றி வைத்தார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [2] |
வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார் சோமனைச் சடை மேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார் ஆ மன் நெய் ஆட வைத்தார்; அன்பு எனும் பாசம் வைத்தார் காமனைக் காய்ந்த கண்ணார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [3] |
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார் பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார் பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார் கரியது ஓர் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [4] |
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார் பேர் இருள் கழிய மல்கு பிறை, புனல், சடையுள் வைத்தார் ஆர் இருள் அண்டம் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார் கார் இருள் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [5] |
உள்-தங்கு சிந்தை வைத்தார்; உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் விண்-தங்கு வேள்வி வைத்தார்; வெந்துயர் தீரவைத்தார் நள்- தங்கு நடமும் வைத்தார்; ஞானமும் நாவில் வைத்தார் கட்டங்கம் தோள் மேல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [6] |
ஊனப் பேர் ஒழிய வைத்தார்; ஓதியே உணர வைத்தார் ஞானப் பேர் நவில வைத்தார்; ஞானமும் நடுவும் வைத்தார் வானப்பேர் ஆறும் வைத்தார்; வைகுந்தற்கு ஆழி வைத்தார் கானப்பேர் காதல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [7] |
கொங்கினும் அரும்பு வைத்தார்; கூற்றங்கள் கெடுக்க வைத்தார் சங்கினுள் முத்தம் வைத்தார்; சாம்பலும் பூச வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார்; ஆலமும் உண்டு வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [8] |
சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு(வ்) எதிர் முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார் கதிர் முகம் சடையில் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [9] |
மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன் வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன் நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ, காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.032  
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர
பண் - திருநேரிசை (திருத்தலம் திருப்பயற்றூர் ; (திருத்தலம் அருள்தரு காவியங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு திருப்பயத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட; விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித் தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும் சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே. | [1] |
உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம் வைத்தவர்; ஊழி ஊழி பவர்ந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றி, கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி, சிவந்திட்ட கண்ணர் போலும்-திருப் பயற்றூரனாரே. | [2] |
நங்களுக்கு அருளது என்று நால்மறை ஓதுவார்கள் தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்; தழலன்; தன்னை; எங்களுக்கு அருள்செய்! என்ன நின்றவன்; நாகம் அஞ்சும் திங்களுக்கு அருளிச் செய்தார்-திருப் பயற்றூரனாரே. | [3] |
பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை ஆட வைத்தார் சாத்தனை மகனா வைத்தார்; சாமுண்டி சாம வேதம் கூத்தொடும் பாட வைத்தார்; கோள் அரா, மதியம், நல்ல தீர்த்தமும், சடைமேல் வைத்தார்-திருப் பயற்றூரனாரே. | [4] |
மூவகை மூவர்போலும்; முற்று மா நெற்றிக்கண்ணர் நா வகை நாவர்போலும்; நால்மறை ஞானம் எல்லாம் ஆ வகை ஆவர்போலும்; ஆதிரைநாளர் போலும்; தேவர்கள் தேவர் போலும்-திருப் பயற்றூரனாரே. | [5] |
ஞாயிறுஆய், நமனும் ஆகி, வருணனாய், சோமன் ஆகி, தீ அறா நிருதி வாயுத் திப்பி(ய) ஈசானன் ஆகி, பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன், எந்தை பெம்மான், தீ அறாக் கையர் போலும்-திருப் பயற்றூரனாரே. | [6] |
ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம் ஆய், பெருக்கம் ஆகி, பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய், பிரமன் ஆகி, காவி அம் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார்- திருப் பயற்றூரனாரே. | [7] |
தந்தையாய், தாயும் ஆகி, தரணி ஆய், தரணி உள்ளார்க்கு எந்தையும் என்ன நின்ற ஏழ் உலகு உடனும் ஆகி, எந்தை! எம்பிரானே! என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும் சிந்தையும் சிவமும் ஆவார்- திருப் பயற்றூரனாரே. | [8] |
புலன்களைப் போக நீக்கி, புந்தியை ஒருங்க வைத்து(வ்) இனங்களைப் போக நின்று, இரண்டையும் நீக்கி, ஒன்று ஆய் மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகிச் சினங்களைக் களைவர் போலும்-திருப் பயற்றூரனாரே. | [9] |
மூர்த்தி தன் மலையின் மீது போகாதா, முனிந்து நோக்கி, பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்து, உடன் மலையைப் பற்றி, ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத் தேத்தெத்தா என்னக் கேட்டார்-திருப் பயற்றூரனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.033  
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்; சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே. | [1] |
தேயன நாடர் ஆகித் தேவர்கள்தேவர் போலும்; பாயன நாடு அறுக்கும் பத்தர்கள், பணிய வம்மின்! காயன நாடு கண்டம் கதன் உளார்; காளகண்டர் மாயன நாடர் போலும்-மா மறைக்காடனாரே. | [2] |
அறுமை இவ் உலகு தன்னை ஆம் எனக் கருதி நின்று, வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே; சிறுமதி, அரவு, கொன்றை திகழ் தரு சடையுள் வைத்து மறுமையும் இம்மை ஆவார்-மா மறைக்காடனாரே. | [3] |
கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல் ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி, மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே. | [4] |
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி ஓதப் பண்ணினார்; கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக் கண்ணினார்; கண்ணினுள்ளே சோதி ஆய் நின்ற எந்தை- மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே. | [5] |
அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார் தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார் திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே. | [6] |
கீதராய், கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார் வேதராய், வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் ஏதராய், நட்டம் ஆடி, இட்டம் ஆய்க் கங்கையோடு மாதை ஓர்பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே. | [7] |
கனத்தின் ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும் சினத்தினுள் சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார் போலும்; தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார்-மா மறைக்காடனாரே. | [8] |
தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று இசைப்பார் வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்! காசினை, கனலை, என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு மாசினைத் தீர்ப்பர்போலும்-மா மறைக்காடனாரே. | [9] |
பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில், பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே; துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும், தோகை அஞ்ச, மணி முடிப்பத்து இறுத்தார்-மா மறைக்காடனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.034  
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை, பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து காரிகை, அஞ்சல்! என்பார்-கலி மறைக்காடனாரே. | [1] |
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர் கோனை நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாள்மதி வைத்த எந்தை; அக்கு, அரவு, ஆமை, பூண்ட அழகனார், கருத்தினாலே;- தெக்கு நீர்த் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே. | [2] |
மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி, அகப்படுத்து! என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன் உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே. | [3] |
அந்தரம் தேர் கடாவி, ஆர் இவன்? என்று சொல்லி, உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன் பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச் சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே. | [4] |
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி, கடுக்க ஓர் தேர் கடாவி, கை இருபதுகளாலும் எடுப்பன், நான்; என்ன பண்டம்! என்று எடுத்தானை ஏங்க அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே. | [5] |
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான், கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன் என்று; நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான் தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே. | [6] |
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், மா வலியன் என்று பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக் கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்- முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே. | [7] |
பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி, புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான், மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே! | [8] |
நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி, நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்) ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே. | [9] |
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட, தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை, முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட, அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.035  
காடு உடைச் சுடலை நீற்றார்;
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல் பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில் தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே. | [1] |
முந்தையார்; முந்தி உள்ளார்; மூவர்க்கும் முதல்வர் ஆனார் சந்தியார்; சந்தி உள்ளார்; தவநெறி தரித்து நின்றார் சிந்தையார்; சிந்தை உள்ளார்; சிவநெறி அனைத்தும் ஆனார் எந்தையார்; எம்பிரானார்-இடைமருது இடம் கொண்டாரே. | [2] |
கார் உடைக் கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி ஆய போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர்-பொன்னித் தென்பால் ஏர் உடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம் கொண்டாரே. | [3] |
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் நான்கும், அங்கம், பண்ணினார்; பண்ணின் மிக்க பாடலார்; பாவம் தீர்க்கும் கண்ணினார்; கண்ணின் மிக்க நுதலினார்; காமற் காய்ந்த எண்ணினார்; எண்ணின் மிக்கார்- இடைமருது இடம்கொண்டாரே. | [4] |
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த, பூதங்கள் பாடி ஆடல் உடையவன்; புனிதன்; எந்தை; பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை- ஏதங்கள் தீர நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே. | [5] |
பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவும், சூழ, முறிதரு வன்னி கொன்றை, முதிர்சடை மூழ்க வைத்து, மறிதரு கங்கை தங்க வைத்தவர்-எத்திசையும் ஏறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே. | [6] |
படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல் அரவினோடு சுடர் ஒளி மதியம் வைத்துத் தூ ஒளி தோன்றும் எந்தை; அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர்; அன்பர் தங்கள் இடர் அவை கெடவும் நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே. | [7] |
கமழ்தரு சடையினுள்ளால் கடும் புனல் அரவினோடும் தவழ்தரு மதியம் வைத்து, தன் அடி பலரும் ஏத்த, மழு அது வலங்கை ஏந்தி, மாது ஒருபாகம் ஆகி, எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே. | [8] |
பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம், மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டார் இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே. | [9] |
மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத் தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி, சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்- இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.036  
ஆடினார் ஒருவர் போலும்; அலர்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருப்பழனம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக் கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள் சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும் பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே. | [1] |
போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;-நான் வேவது ஓர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்; கூவல்தான் அவர்கள் கேளார்-குணம் இலா ஐவர் செய்யும் பாவமே தீர நின்றார்-பழனத்து எம் பரமனாரே. | [2] |
கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம் விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர் பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே | [3] |
நீர் அவன்; தீயினோடு நிழல் அவன்; எழிலது ஆய பார் அவன்; விண்ணின் மிக்க பரம் அவன்; பரமயோகி; ஆரவன்; அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப் பார் அகத்து அமுதம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே. | [4] |
ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப் பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய, ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய, பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே. | [5] |
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று, காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத் தான் பாய்ந்து, பின்னும் பாலின் கீழ் நெய்யும் ஆனார்-பழனத்து எம் பரமனாரே. | [6] |
ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும், போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள் சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப் பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே. | [7] |
கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர் தோற்றனார், கடலுள் நஞ்சை; தோடு உடைக் காதர்; சோதி ஏற்றினார் இளவெண்திங்கள், இரும் பொழில் சூழ்ந்த காயம்; பாற்றினார், வினைகள் எல்லாம்;-பழனத்து எம் பரமனாரே. | [8] |
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று, வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப் பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே. | [9] |
குடை உடை அரக்கன் சென்று, குளிர் கயிலாய வெற்பின் இடை மட வரலை அஞ்ச, எடுத்தலும், இறைவன் நோக்கி விடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும் படை கொடை அடிகள்போலும்- பழனத்து எம் பரமனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.037  
காலனை வீழச் செற்ற கழல்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருநெய்த்தானம் ; (திருத்தலம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி )
காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே. | [1] |
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி, தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து, சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வு உற நினைந்த ஆறே! | [2] |
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை தன்னை உறைதர வைத்த எங்கள் உத்தமன்; ஊழிஆய நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடல் ஆமே. | [3] |
வடி தரு மழு ஒன்று ஏந்தி, வார்சடை மதியம் வைத்து பொடி தரு மேனிமேலே புரிதரு நூலர் போலும்- நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி, அடி தரு கழல்கள் ஆர்ப்ப, ஆடும் எம் அண்ணலாரே. | [4] |
காடு இடம் ஆக நின்று, கனல்- எரி கையில் ஏந்தி, பாடிய பூதம் சூழ, பண் உடன் பலவும் சொல்லி ஆடிய கழலர், சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் கூடிய குழகனாரைக் கூடும் ஆறு அறிகிலேனே! | [5] |
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ, தான் அவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன்; செங்கண் ஏற்றன்; தேன் அமர் பொழில்கள் சூழத் திகழும் நெய்த்தானம் மேய கூன் இளமதியினானைக் கூடும் ஆறு அறிகிலேனே! | [6] |
கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில் வீசி, ஞாலமும் குழிய நின்று, நட்டம் அது ஆடுகின்ற மேலவர்-முகடு தோய விரிசடை திசைகள் பாய மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே. | [7] |
பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து அந்திப்போது அனலும் ஆடி, அடிகள், ஐயாறு புக்கார் வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள் சிந்திப்பார் சிந்தை உள்ளார்-திருந்து நெய்த்தானனாரே. | [8] |
சோதி ஆய்ச் சுடரும் ஆனார்; சுண்ணவெண்சாந்து பூசி ஓதி வாய் உலகம் ஏத்த, உகந்து தாம் அருள்கள் செய்வார் ஆதி ஆய் அந்தம் ஆனார்-யாவரும் இறைஞ்சி ஏத்த, நீதி ஆய் நியமம் ஆகி, நின்ற நெய்த்தானனாரே. | [9] |
இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத் தலைஉடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து, சிலை உடன் கணையைச் சேர்த்து, திரிபுரம் எரியச் செற்ற நிலை உடை அடிகள் போலும்-நின்ற நெய்த்தானனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.038  
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே. | [1] |
பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு வெண் நூலும் வைத்தார் கடியது ஓர் நாகம் வைத்தார்; காலனைக் கால் அவைத்தார் வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார் அடி இணை தொழவும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே. | [2] |
உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார் படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார் விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார் அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே. | [3] |
தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி சடையில் வைத்தார் இண்டையைத் திகழ வைத்தார்; எமக்கு என்றும் இன்பம் வைத்தார் வண்டு சேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார் அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே. | [4] |
வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய வைத்தார் கான் இடை நடமும் வைத்தார்; காமனைக் கனலா வைத்தார் ஆன் இடை ஐந்தும் வைத்தார்; ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்- ஐயன் ஐயாறனாரே. | [5] |
சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார் வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார் அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே. | [6] |
பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய் விடை ஏற வைத்தார் சித்தத்தை ஒன்ற வைத்தார்; சிவம் அதே நினைய வைத்தார் முத்தியை முற்ற வைத்தார்; முறை முறை நெறிகள் வைத்தார் அத்தியின் உரிவை வைத்தார்; -ஐயன் ஐயாறனாரே. | [7] |
ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார் நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார் கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார் ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே. | [8] |
பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார் கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார் பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார் ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே. | [9] |
இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார் அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.039  
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத் துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே! தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே. | [1] |
பீலி கை இடுக்கி, நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி, வாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னே! வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே! | [2] |
தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி, ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே! மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே. | [3] |
பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்; தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே. | [4] |
கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி, வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே! மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே! | [5] |
துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்) உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி; நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே! | [6] |
பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம் சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது; மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை! எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே! | [7] |
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,- எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!- தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக் கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே! | [8] |
குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும், திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார் அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப் பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே. | [9] |
அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று, முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ, அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.040  
தான் அலாது உலகம் இல்லை;
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
தான் அலாது உலகம் இல்லை; சகம் அலாது அடிமை இல்லை; கான் அலாது ஆடல் இல்லை; கருதுவார் தங்களுக்கு வான் அலாது அருளும் இல்லை; வார் குழல் மங்கையோடும் ஆன் அலாது ஊர்வது இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. | [1] |
ஆல் அலால் இருக்கை இல்லை; அருந்தவ முனிவர்க்கு அன்று நூல் அலால் நொடிவது இல்லை; நுண் பொருள் ஆய்ந்து கொண்டு மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க, வேலை ஆல் அலால் அமுதம் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. | [2] |
நரி புரி சுடலை தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை; சுரி புரி குழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை; தெரி புரி சிந்தையார்க்குத் தெளிவு அலால் அருளும் இல்லை- அரி புரி மலர்கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே. | [3] |
தொண்டு அலால்-துணையும் இல்லை; தோல் அலாது உடையும் இல்லை; கண்டு அலாது அருளும் இல்லை; கலந்த பின் பிரிவது இல்லை- பண்டை நால்மறைகள் காணாப் பரிசினன் என்று என்று எண்ணி, அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே. | [4] |
எரி அலால் உருவம் இல்லை; ஏறு அலால் ஏறல் இல்லை; கரி அலால் போர்வை இல்லை; காண் தகு சோதியார்க்கு, பிரி இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்- அரி அலால்-தேவி இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே. | [5] |
என்பு அலால் கலனும் இல்லை; எருது அலால் ஊர்வது இல்லை; புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை; துன்பு இலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும் அன்பு அலால் பொருளும் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. | [6] |
கீள் அலால் உடையும் இல்லை; கிளர் பொறி அரவம் பைம் பூண் தோள் அலால்-துணையும் இல்லை; தொத்து அலர்கின்ற வேனில் வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை; மீள ஆள் அலால் கைம்மாறு இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. | [7] |
சகம் அலாது அடிமை இல்லை; தான் அலால்-துணையும் இல்லை; நகம் எலாம் தேயக் கையால் நாள் மலர் தொழுது தூவி, முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து, ஏத்தும் தொண்டர் அகம் அலால் கோயில் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. | [8] |
உமை அலாது உருவம்- இல்லை; உலகு அலாது உடையது இல்லை- நமை எலாம் உடையர் ஆவர்; நன்மையே; தீமை இல்லை; கமை எலாம் உடையர் ஆகிக் கழல் அடி பரவும் தொண்டர்க்கு அமைவு இலா அருள் கொடுப்பார் -ஐயன் ஐயாறனார்க்கே. | [9] |
மலை அலால் இருக்கை இல்லை; மதித்திடா அரக்கன் தன்னைத் தலை அலால் நெரித்தது இல்லை; தடவரைக் கீழ் அடர்த்து; நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை- அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.041  
பொய் விராம் மேனி தன்னைப்
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா! ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன் செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே! | [1] |
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா; எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை- அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடிச் சிட்டராய் அருள்கள் செய்வார், திருச் சோற்றுத் துறையனாரே. | [2] |
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்! பல் இல் வெண்தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர் சொல்லும் நன்பொருளும் ஆவார்-திருச் சோற்றுத் துறையனாரே. | [3] |
கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண் ஓர் பாகம் இறையராய், இனியர் ஆகி, தனியராய், பனி வெண் திங்கள்- பிறையராய், செய்த எல்லாம் பீடராய், கேடு இல் சோற்றுத்- துறையராய், புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே. | [4] |
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்; எந்தையே! ஏகமூர்த்தி! என்று நின்று ஏத்தமாட்டேன்; பந்தம் ஆய், வீடும் ஆகி, பரம்பரம் ஆகி, நின்று சிந்தையுள்-தேறல் போலும்-திருச் சோற்றுத் துறையனாரே. | [5] |
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று மின், பேதை பங்கன் பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திற(ம்)மே! ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத் தீர்த்தம் ஆய்ப் போத விட்டார், திருச் சோற்றுத் துறையனாரே. | [6] |
கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போன, எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது; அந்தோ! முந்து அரா அல் குலாளை உடன் வைத்த ஆதிமூர்த்தி, செந் தாது புடைகள் சூழ்ந்த திருச் சோற்றுத் துறையனாரே. | [7] |
அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத வேண்டா; வெங் கதிரோன் வழீயே போவதற்கு அமைந்து கொண் மின்! அம் கதிரோன் அவ(ன்)னை உடன் வைத்த ஆதிமூர்த்தி- செங் கதிரோன் வணங்கும் திருச் சோற்றுத் துறையனாரே. | [8] |
ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர் சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச் சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே. | [9] |
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில் பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்! கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க, செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.042  
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருத்துருத்தி ; (திருத்தலம் அருள்தரு முகிழாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதேசுவரர் திருவடிகள் போற்றி )
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா; இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்! ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே! | [1] |
சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற இவை ஒரு பொருளும் அல்ல; இறைவனை ஏத்து மி(ன்)னோ! அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்த சுவையினை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! | [2] |
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மி(ன்)னோ! கன்னியை ஒரு பால் வைத்து, கங்கையைச் சடையுள் வைத்து, பொன்னியின் நடுவு தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்ட ஆறே.! | [3] |
ஊன் தலை வலியன் ஆகி, உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் தான் தலைப்பட்டு நின்று, சார் கனல் அகத்து வீழ, வான் தலைத் தேவர் கூடி,வானவர்க்கு இறைவா! என்னும் தோன்றலை, துருத்தியானை தொண்டனேன் கண்டஆறே! | [4] |
உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ! கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! | [5] |
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை மின், நீர்கள் பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த வள்ளலை, வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற துள் அலைத் துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! | [6] |
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்; வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச் சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச் சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! | [7] |
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டா; தூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமி(ந்)னோ! சோமனைச் சடையுள் வைத்துத் தொல்-நெறி பலவும் காட்டும் தூ மணல்-துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே! | [8] |
குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது நின்று கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின், நீர்கள்! விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த தொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டஆறே! | [9] |
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள் அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.043  
மறை அது பாடிப் பிச்சைக்கு
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) ; (திருத்தலம் அருள்தரு திருமேற்றளிநாயகி உடனுறை அருள்மிகு திருமேற்றளிநாதர் திருவடிகள் போற்றி )
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும் கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே. | [1] |
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும் பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக் காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [2] |
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த, பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே. | [3] |
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும் வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக் காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [4] |
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி, தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே. | [5] |
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய், தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே. | [6] |
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார் பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே. | [7] |
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே. | [8] |
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக் கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார் ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள் ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [9] |
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால் கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள் இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.044  
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண
பண் - திருநேரிசை (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ- கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை; செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே. | [1] |
ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்; அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து; பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே! | [2] |
மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார், மழு ஒன்று ஏந்திச் சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழச் செற்ற செல்வர், இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை, தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே! | [3] |
பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்) ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை, வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே! | [4] |
மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, கடை தொறும் பலி கொள்வார், தாம் எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை, கையினால் -தொழ வல்லார்க்குக் கடுவினை களையல் ஆமே. | [5] |
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள் அரு வினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும் திரு வினை, திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல உரு வினை, உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.! | [6] |
கொண்டது ஓர் கோலம் ஆகிக் கோலக்கா உடைய கூத்தன், உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான், எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னை, கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே. | [7] |
படம் உடை அரவினோடு பனி மதி அதனைச் சூடி, கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச, அம்ம! இடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன் நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்த ஆறே! | [8] |
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண் மார்பர் நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று, குன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர்; எம்மை இன் துயில் போது கண்டார்; இனியர்-ஏகம்பனாரே. | [9] |
துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும் ஏத்த அருத்தியால் அன்பு செய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்து(வ்) எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.045  
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம் மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால் கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்) உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே. | [1] |
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று, புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில், அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே. | [2] |
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்! ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே. | [3] |
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே, சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே. | [4] |