சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முள்ளின் மேல் முது கூகை
பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4AdIJafuRmY

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.119   முள்ளின் மேல் முது கூகை  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருக்கள்ளில் ; (திருத்தலம் அருள்தரு ஆனந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு சிவானந்தேசுவரர் திருவடிகள் போற்றி )
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை,
வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே.

[1]
ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான்,
ஓடு அலால் கலன் இல்லான்-உறை பதியாக்
காடு அலால் கருதாத கள்ளில் மேயான்;
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே.

[2]
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்
பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி,
கண் ஆர் நீறு அணி மார்பன்-கள்ளில் மேயான்,
பெண் ஆண் ஆம் பெருமான், எம் பிஞ்ஞகனே.

[3]
பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும்
நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான்,
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே.

[4]
விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக்
கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான்
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே.

[5]
நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான்,
கலன் ஆய தலை ஓட்டான்-கள்ளில் மேயான்;
மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே.

[6]
பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம்
குடியா ஊர் திரியினும், கூப்பிடினும்,
கடி ஆர் பூம்பொழில்-சோலைக் கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள், ஆதர்களே.

[7]
திரு நீலமலர் ஒண்கண் தேவி பாகம்
புரிநூலும் திரு நீறும் புல்கு மார்பில்,
கரு நீலமலர் விம்மு கள்ளில், என்றும்
பெரு நீலமிடற்று அண்ணல் பேணுவதே.

[8]
வரி ஆய மலரானும் வையம் தன்னை
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு
அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான்,
பெரியான் என்று, அறிவார்கள் பேசுவாரே.

[9]
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள்,
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே!

[10]
திகை நான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு
பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த,
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list