கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.
| [ 1]
|
பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு வெண் நூலும் வைத்தார் கடியது ஓர் நாகம் வைத்தார்; காலனைக் கால் அவைத்தார் வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார் அடி இணை தொழவும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
| [ 2]
|
உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார் படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார் விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார் அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
| [ 3]
|
தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி சடையில் வைத்தார் இண்டையைத் திகழ வைத்தார்; எமக்கு என்றும் இன்பம் வைத்தார் வண்டு சேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார் அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.
| [ 4]
|
வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய வைத்தார் கான் இடை நடமும் வைத்தார்; காமனைக் கனலா வைத்தார் ஆன் இடை ஐந்தும் வைத்தார்; ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
| [ 5]
|
Go to top |
சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார் வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார் அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
| [ 6]
|
பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய் விடை ஏற வைத்தார் சித்தத்தை ஒன்ற வைத்தார்; சிவம் அதே நினைய வைத்தார் முத்தியை முற்ற வைத்தார்; முறை முறை நெறிகள் வைத்தார் அத்தியின் உரிவை வைத்தார்; -ஐயன் ஐயாறனாரே.
| [ 7]
|
ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார் நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார் கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார் ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
| [ 8]
|
பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார் கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார் பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார் ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
| [ 9]
|
இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார் அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
| [ 10]
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|