சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்; பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்; முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.
| [ 1]
|
பாகம் மாலை,- மகிழ்ந்தனர்,- பால்மதி; போக, ஆனையின் ஈர் உரி போர்த்தவர் கோகம்மாலை, குலாயது ஓர் கொன்றையும், ஆக, ஆன்நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே.
| [ 2]
|
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்தன்னுளே வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு, நான், துஞ்சும் போழ்து, நின் நாமத் திரு எழுத்து- அஞ்சும் தோன்ற, அருளும் ஐயாறரே.
| [ 3]
|
நினைக்கும் நெஞ்சின் உள்ளார்; நெடு மா மதில்- அனைத்தும் ஒள் அழல்வாய் எரியூட்டினார்; பனைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர் அனைத்துவாய்தலுள் ஆரும் ஐயாறரே.
| [ 4]
|
பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்; அரிய பாடலர்; ஆடலர்; அன்றியும் கரிய கண்டத்தர்; காட்சி பிறர்க்கு எலாம் அரியர்; தொண்டர்க்கு எளியர்-ஐயாறரே.
| [ 5]
|
Go to top |
புலரும் போதும், இலாப் பட்ட பொன்சுடர், மலரும் போதுகளால் பணிய, சிலர்; இலரும், போதும் இலாததும் அன்றியும்; அலரும் போதும் அணியும் ஐயாறரே.
| [ 6]
|
பங்கு அ(ம்)ம்மாலைக் குழலி, ஓர் பால்நிறக் கங்கை, மாலையர் காதன்மை செய்தவர் மங்கை, மாலை மதியமும், கண்ணியும், அங்கமாலையும், சூடும் ஐயாறரே.
| [ 7]
|
முன்னை ஆறு முயன்று எழுவீர்; எலாம் பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள்! மன் ஐ ஆறு மருவிய மாதவன் தன் ஐயாறு தொழ, தவம் ஆகுமே.
| [ 8]
|
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி வானை ஆறு வளாயது காண்மினோ! நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன் அருள் தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே.
| [ 9]
|
அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்; அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சல்! என்று, அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே, அரக்கினான், அடியாலும்-ஐயாறனே.
| [ 10]
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|