சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செந்நெல் அம் கழனிப் பழனத்து
பண் - இந்தளம்   (திருப்பூந்தராய் )
Audio: https://www.youtube.com/watch?v=RrNhxvmOdr4
2.002   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண்டு எலாம் மலர விரை
பண் - இந்தளம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Sc0T0tKfZKo
2.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்
பண் - இந்தளம்   (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CekV2gQOEpA
2.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரை உலாம் கடலில் பொலி
பண் - இந்தளம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=os6HVe6Y7So
2.005   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்
பண் - இந்தளம்   (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) அருள்மன்னர் மனோன்மணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ty0Coc7wehY
2.006   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
பண் - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=t9JFCSZSqkU
2.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு
பண் - இந்தளம்   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pVjS5m3tgMs
Audio: https://sivaya.org/audio/2.007 vanni KonRai.mp3
2.008   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வான் உலாவும் மதி வந்து
பண் - இந்தளம்   (திருச்சிக்கல் நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=oLtSekfKGMY
2.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!
பண் - இந்தளம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ClMAJFSSalA
2.010   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீரின் ஆர் மணியும்(ம்) அகில்
பண் - இந்தளம்   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FGwyom8Wso4
2.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
பண் - இந்தளம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=AP0u9l4Mr98
2.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மறையானை, மாசு இலாப் புன்சடை
பண் - இந்தளம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=luXBEgyYc0s
2.013   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது
பண் - இந்தளம்   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=skV88Ai_8sg
2.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,
பண் - இந்தளம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dAneAxCHkd8
2.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை
பண் - இந்தளம்   (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LEEqnGRXMpM
2.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
பண் - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3iP3choR434
2.017   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நிலவும், புனலும், நிறை வாள்
பண் - இந்தளம்   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=0JLxxTgKXOw
2.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடையாய்! எனுமால்; சரண் நீ!
பண் - இந்தளம்   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
Audio: https://www.youtube.com/watch?v=f_ZJk-kJhbA
Audio: https://sivaya.org/audio/2.018 sadaiyai enumaal.mp3
2.019   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அறத்தால் உயிர் காவல் அமர்ந்து
பண் - இந்தளம்   (திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=rFp-_9F8Jus
2.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தொழும் ஆறு வல்லார், துயர்
பண் - இந்தளம்   (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9tjZGkpZQUk
2.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்
பண் - இந்தளம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=GnIaawrtBF4
2.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்;
பண் - இந்தளம்   (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=V5P_0KEoTDE
2.023   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மழை ஆர் மிடறா! மழுவாள்
பண் - இந்தளம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=wUa4AnFyLkc
2.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்
பண் - இந்தளம்   (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DFxah8nE4aY
2.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உகலி ஆழ்கடல் ஓங்கு பார்
பண் - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=KpObSyXQ5g8
2.026   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புடையின் ஆர் புள்ளி கால்
பண் - இந்தளம்   (திருநெல்வாயில் அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=b3eX9Htx6rQ
2.027   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு
பண் - இந்தளம்   (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) நீலாசலநாதர் நீலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_RLOwoMa06k
2.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,
பண் - இந்தளம்   (திருக்கருவூரானிலை (கரூர்) பசுபதீசுவரர் கிருபாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xX-OlINJTaA
2.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய
பண் - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=k7fxm4B3rIM
2.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மறம் பயம் மலிந்தவர் மதில்
பண் - இந்தளம்   (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=TrbvYsHCGkA
2.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுற்றமொடு பற்று அவை துயக்குஅற
பண் - இந்தளம்   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=oBVEIdDfMwg
2.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
பண் - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
2.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏடு மலி கொன்றை, அரவு,
பண் - இந்தளம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=cwZC0zEYn14
2.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி
பண் - இந்தளம்   (திருப்பழுவூர் வடவனநாதர் அருந்தவநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=hcE7aR2PXm8
2.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பரவக் கெடும், வல்வினை பாரிடம்
பண் - இந்தளம்   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=i_rCbmU4gRA
2.036   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீர் ஆர் கழலே தொழுவீர்!
பண் - இந்தளம்   (திருஇரும்பூளை (ஆலங்குடி) காசியாரண்ணியேசுவரர் ஏலவார்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=uzsrRh3l5c0
2.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்
பண் - இந்தளம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_NNuFxcpUok
Audio: https://sivaya.org/audio/2.037 chathuram maraithaan.mp3
2.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்
பண் - இந்தளம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ag1F6pra03Q
2.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
பண் - இந்தளம்   (சீர்காழி )
Audio: https://www.youtube.com/watch?v=5rJFwc-Bt_0
4.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி
பண் - இந்தளம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pJGtwwrKzLE
4.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தீப் புகினும் எமக்கு
பண் - இந்தளம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Vy1mhQrYsfY
4.018   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்று கொல் ஆம் அவர்
பண் - இந்தளம்   (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் )
Audio: https://www.youtube.com/watch?v=cT31jKOzFW0
Audio: https://sivaya.org/audio/4.018 ondru kolaam avaravar.mp3
7.001   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்
பண் - இந்தளம்.   (திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டவீசுவரர் வேற்கண்மங்கையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=g5cyWyIOPY8
7.002   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;
பண் - இந்தளம்   (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9hNg6XWc08I
7.003   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கல்வாய் அகிலும் கதிர் மா
பண் - இந்தளம்   (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=R3l_wdYEp6w
7.004   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தலைக்குத் தலை மாலை அணிந்தது
பண் - இந்தளம்   (திருஅஞ்சைக்களம் அஞ்சைக்களத்தீசுவரர் உமையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=knUvNd5gXAQ
7.005   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
பண் - இந்தளம்   (திருஓணகாந்தன்தளி ஓணகாந்தீசுவரர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4
7.006   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   படம் கொள் நாகம் சென்னி
பண் - இந்தளம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3EHC8lAB16w
7.007   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மத்தயானை ஏறி, மன்னர் சூழ
பண் - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) அயிராவதேசுவரர் வாசமலர்க்குழன்மாதம்மை)
7.008   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
பண் - இந்தளம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9-PHgwe6lTc
7.009   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை
பண் - இந்தளம்   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுவைத்தவீசுவரர் அழகம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FgVItiMOny4
7.010   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தேன் நெய் புரிந்து உழல்
பண் - இந்தளம்   (திருக்கச்சிஅனேகதங்காவதம் காவதேசுவரர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=HJmLRgyDthA
7.011   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   திரு உடையார், திருமால் அயனாலும்
பண் - இந்தளம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=e-2ELLMn29s
7.012   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
பண் - இந்தளம்   (திருவாரூர் )
Audio: https://www.youtube.com/watch?v=wbRoTcLBYNI

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.001   செந்நெல் அம் கழனிப் பழனத்து  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருப்பூந்தராய் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்
பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே?

[1]
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன் திகழ் கமலப் பழனம் புகு பூந்தராய்ச்
சுற்றி, நல் இமையோர் தொழு பொன்கழலீர்! சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ? பெருமானிரே!

[2]
சங்கு செம்பவளத்திரள் முத்துஅவைதாம்கொடு
பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்,
துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்புஅதே?

[3]
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்,
சோமனும் அரவும் தொடர் செஞ்சடையீர்! சொலீர்
காமன் வெண்பொடிஆகக் கடைக்கண் சிவந்ததே?

[4]
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகுவாயன
புள்ளும் நாள்தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய்,
துள்ளும் மான்மறி ஏந்திய செங்கையினீர்! சொலீர்
வெள்ளநீர் ஒரு செஞ்சடை வைத்த வியப்புஅதே?

[5]
மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்குஎலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,
சோதி அம்சுடர்மேனி வெண்நீறு அணிவீர்! சொலீர்
காதில் அம் குழை சங்கவெண்தோடுஉடன் வைத்ததே?

[6]
வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள்
தருக் கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்,
துரக்கும் மால்விடைமேல் வருவீர்! அடிகேள்! சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே?

[8]
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்,
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர்! சொலீர்
கரிய மால், அயன், நேடி உமைக் கண்டிலாமையே?

[9]
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல்
புண்டரீகம் மலர்ந்து மதுத் தரு பூந்தராய்,
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல்கழலீர்! சொலீர்
குண்டர்சாக்கியர் கூறியது ஆம் குறிஇன்மையே?

[10]
மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார்
அகல்வர், தீவினை, நல்வினையோடு உடன் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.002   விண்டு எலாம் மலர விரை  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவலஞ்சுழி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு காப்பகத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?

[1]
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி,
மூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே?

[2]
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாது அளாய்
வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி,
சுண்ணவெண்பொடிக்கொண்டு மெய் பூச வலீர்! சொலீர்
விண்ணவர் தொழ, வெண்தலையில் பலி கொண்டதே?

[3]
கோடுஎலாம் நிறையக் குவளை மலரும் குழி
மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி,
சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர்
நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?

[4]
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு
போய்,
வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி,
முல்லைவெண்முறுவல் நகையாள் ஒளியீர்! சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே?

[5]
பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில் பல்மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
தேசம் நீர்; திரு நீர்; சிறுமான்மறியீர்! சொலீர்
ஏச, வெண்தலையில் பலி கொள்வது இலாமையே?

[6]
கந்தமாமலர்ச் சந்தொடு கார் அகிலும் தழீஇ,
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
அந்தம் நீர், முதல் நீர், நடு ஆம் அடிகேள்! சொலீர்
பந்தம் நீர் கருதாது, உலகில் பலி கொள்வதே?

[7]
தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?

[8]
தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பல்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?

[9]
உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது இன் அருள
வரம் மனும் பெறல் ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர்! சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே?

[10]
வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி
நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.003   பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருத்தெளிச்சேரி ; (திருத்தலம் அருள்தரு சத்தியம்மாளம்மை உடனுறை அருள்மிகு பார்வதீசுவரர் திருவடிகள் போற்றி )
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!
மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம்
பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?

[1]
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே,
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்!
வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய்
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே?

[2]
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி தவழ்
செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்!
கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோ
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே?

[3]
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும்
தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்!
ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்புஇடம் இன்றியே
வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே?

[4]
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்
செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்!
மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து
வௌவவே,
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே?

[5]
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ, நல்
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்!
குவளை போல் கண்ணி துண்ணென, வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே?

[6]
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்!
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே?

[7]
கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம் சேர்
சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்!
வித்தகப் படை வல்ல அரக்கன் விறல் தலை,
பத்து, இரட்டிக் கரம், நெரித்திட்டது, உம் பாதமே?

[8]
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ்
சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்!
மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே
ஓலம் இட்டிட, எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே?

[9]
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர்,
செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்!
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே?

[10]
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை,
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.004   கரை உலாம் கடலில் பொலி  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவான்மியூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்;
உரை எலாம் பொருள் ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர்
வரை உலாம் மடமாது உடன் ஆகிய மாண்புஅதே?

[1]
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம்
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர்,
சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே?

[2]
கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்
தேன் அயங்கிய பைம்பொழில் சூழ் திரு வான்மியூர்,
தோல் நயங்கு அமர் ஆடையினீர்! அடிகேள்! சொலீர்
ஆனைஅங்க உரி போர்த்து, அனல் ஆட உகந்ததே?

[3]
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச்
செஞ்சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர்,
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன் அருள் வைத்ததே?

[4]
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர் திரு வான்மியூர்,
துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர்
விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?

[5]
போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம்
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர்,
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர்! சொலீர்
மூதெயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்புஅதே?

[6]
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த்
தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்,
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே?

[7]
தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத்
திக்கில் வந்து அலற அடர்த்தீர்! திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர்! அருள் என்? சொலீர்
பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே?

[8]
பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்
திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்,
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர்
எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே?

[9]
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டுஇனம்
செய் தவத்தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்
மெய் தவப் பொடி பூசிய மேனியினீர்! சொலீர்
கைதவச் சமண்சாக்கியர் கட்டுரைக்கின்றதே?

[10]
மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.005   நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) ; (திருத்தலம் அருள்தரு மனோன்மணியம்மை உடனுறை அருள்மிகு அருள்மன்னர் திருவடிகள் போற்றி )
நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு
சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!

[1]
சூலம் உண்டு, மழு உண்டு, அவர் தொல் படை; சூழ் கடல்
ஆலம் உண்ட பெருமான்தன் அனேகதங்காவதம்,
நீலம் உண்ட தடங்கண் உமை பாகம் நிலாயது ஓர்
கோலம் உண்டு; அளவு இல்லை, குலாவிய கொள்கையே!

[2]
செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர்
அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல் ஏறு உடை
நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?

[3]
தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச்
சிந்த வெந்த கதிரோனொடு மாசு அறு திங்கள் ஆர்
அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம்
எந்தை வெந்தபொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே.

[4]
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து
போய்
உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர்
புனல்
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை, எம் ஈசன், எம்மான், இடம் ஆக உகந்ததே.

[5]
தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்!
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம்
வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல்
ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.

[6]
வெருவி வேழம் இரிய, கதிர் முத்தொடு வெண்பளிங்கு
உருவி வீழ, வயிரம் கொழியா, அகில் உந்தி, வெள்
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம்
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே.

[7]
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன்
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான்,
ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம்
வாரம் ஆகி நினைவார் வினைஆயின மாயுமே.

[8]
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம் ஆய்
எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.

[9]
மா பதம் அறியாதவர் சாவகர்சாக்கியர்,
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம்
ஆ பதம் அறிவீர் உளிர் ஆகில், அனேகதங்
காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் ருமமே.

[10]
தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள்முன்
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல, நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.006   கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.

[1]
தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,
பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்;
துன்னஆடை உடுப்பர்; சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே.

[2]
கூறு பெண்; உடை கோவணம்; உண்பது வெண்தலை;
மாறில், ஆரும் கொள்வார் இலை, மார்பில் அணிகலம்;
ஏறும் ஏறித் திரிவர்; இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

[3]
பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர்வாயினார்,
எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற
கண்ணினார்,
வண்ணம் பாடி, வலி பாடி, தம் வாய்மொழி பாடவே,
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

[4]
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே,
வானை ஊடுஅறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன், நெய், பால், தயிர், தெங்குஇளநீர், கரும்பின் தெளி,
ஆன் அஞ்சு, ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே.

[5]
எங்கும் ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதி சூடு மைந்தனும்,
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும் ஆய்
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

[6]
ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம்
சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;
வேதிஆகி, விண் ஆகி, மண்ணோடு எரி காற்றும் ஆய்,
ஆதிஆகி, நின்றானும் ஐயாறு உடை ஐயனே.

[7]
குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய்,
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே.
பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால்,
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

[8]
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்;
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்;
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே.

[9]
மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;
கோலம் ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.

[10]
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல்
வாழ்த்தவே.
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.

[11]
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை,
கலி கடிந்த கையான் கடல்காழியர்காவலன்,
ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள்,
போய்
மலி கொள் விண் இடை மன்னிய சீர் பெறுவார்களே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.007   வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவாஞ்சியம் ; (திருத்தலம் அருள்தரு வாழவந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு வாஞ்சியநாதர் திருவடிகள் போற்றி )
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்,
என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே.

[1]
காலகாலர், கரிகான் இடை மாநடம் ஆடுவர்,
மேலர், வேலைவிடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர்,
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் நயந்ததே.

[2]
மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும் ஆய்
நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர், ஏழ் ஓசையர்,
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்;
பாவம் தீர்ப்பர், பழி போக்குவர், தம் அடியார்கட்கே.

[3]
சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய் சுவண்டுஆகவே
சால நல்ல பொடி பூசுவர்; பேசுவர், மாமறை;
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம்,
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே.

[4]
கை இலங்கு மறி ஏந்துவர், காந்தள் அம்மெல்விரல்
தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர்,
செய்யமேனிக் கரிய மிடற்றார் திரு வாஞ்சியத்து
ஐயர்; பாதம் அடைவார்க்கு அடையா, அருநோய்களே

[5]
அரவம் பூண்பர்; அணியும் சிலம்பு ஆர்க்க அகம்தொறும்
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர்; நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம்
மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.

[6]
விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே;
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்;
பண்ணில் ஆன இசைபாடல் மல்கும் திரு வாஞ்சியத்து
அண்ணலார் தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை,
அல்லலே.

[7]
மாடம் நீடு கொடி மன்னிய தென் இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர்,
வேடவேடர், திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடு மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே

[8]
செடி கொள் நோயின் அடையார்; திறம்பார், செறு தீவினை;
கடிய கூற்றமும் கண்டு அகலும்; புகல்தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார், திரு வாஞ்சியத்து
அடிகள், பாதம் அடைந்தார் அடியார், அடியார்கட்கே.

[9]
பிண்டம் உண்டு திரிவார், பிரியும் துவர் ஆடையார்,
மிண்டர் மிண்டு(ம்) மொழி மெய் அல; பொய் இலை,
எம் இறை;
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை,
அல்லலே.

[10]
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு
வாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால்,
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார், உயர்வானமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.008   வான் உலாவும் மதி வந்து  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருச்சிக்கல் ; (திருத்தலம் அருள்தரு வேனெடுங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு நவநீதநாதர் திருவடிகள் போற்றி )
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.

[1]
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை
சூழ்,
திடம் கொள் மா மறையோர் அவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி
மேவிய
அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.

[2]
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண்கண்ணியினாளை ஒர்பாகன்,
வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.

[3]
கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன் இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்தவெண்நீற்று அண்ணல், வெண்ணெய்ப்பிரான், விரை
ஆர் கழல்
சிந்தைசெய்வார் வினைஆயின தேய்வது திண்ணமே.

[4]
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு
தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்
வெங் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி
மேவவே,
தங்கும், மேன்மை; சரதம் திரு, நாளும், தகையுமே.

[5]
வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ்,
தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்த மலரால் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி
கண்டு இரைத்து, மனமே! மதியாய், கதி ஆகவே!

[6]
முன்னு மாடம் மதில்மூன்று உடனேஎரிஆய் விழத்
துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்,
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடி
உன்னி நீட, மனமே! நினையாய், வினை ஓயவே!

[7]
தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன், மலை
பற்றினான், முடிபத்தொடு தோள்கள் நெரியவே,
செற்ற தேவன், நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உற்று, நீ நினைவாய், வினைஆயின ஓயவே!

[8]
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும்
கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம் அறியார்; திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பல்மலர் தூவ, பறையும், நம் பாவமே.

[9]
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலாக்
கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது, நீர்,
சிட்டன், சிக்கல் வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப்
பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே!

[10]
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல்
செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர், வான் இடை
வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.009   களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருமழபாடி ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி )
களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.

[1]
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள்
ஆச்சிலாத பளிங்கினன்; அஞ்சும் முன் ஆடினான்;
பேச்சினால் உமக்கு ஆவது என்? பேதைகாள், பேணுமின்!
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே!

[2]
உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர்தங்களை
பரம் கெடுப்பவன், நஞ்சை உண்டு பகலோன்தனை
முரண் கெடுப்பவன், முப்புரம் தீ எழச் செற்று, முன்,
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே.

[3]
பள்ளம் ஆர் சடையின் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான், விடை எறிய வேதியன்,
வள்ளல், மா மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரிமின், வினைஆயின ஓயவே!

[4]
தேன் உலாம் மலர் கொண்டு, மெய்த் தேவர்கள், சித்தர்கள்
பால்நெய் அஞ்சு உடன் ஆட்ட, முன் ஆடிய பால்வணன்
வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே, குறி கூடுமே.

[5]
தெரிந்தவன், புரம்மூன்று உடன்மாட்டிய சேவகன்,
பரிந்து கைதொழுவார் அவர்தம் மனம் பாவினான்,
வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான், மழபாடியைப்
புரிந்து கைதொழுமின்! வினைஆயின போகுமே.

[6]
சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு உடை
எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்,
மைந்தன், வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினைஆயின தேயுமே.

[7]
இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை
உரக் கையால் எடுத்தான்தனது ஒண் முடிபத்து இற
விரல் தலை நிறுவி, உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே.

[8]
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்,
காலன் ஆர் உயிர் வீட்டிய மா மணிகண்டனார்
சால நல் அடியார் தவத்தார்களும் சார்வுஇடம்,
மால் அயன் வணங்கும், மழபாடி எம் மைந்தனே.

[9]
கலியின் வல் அமணும், கருஞ்சாக்கியப்பேய்களும்,
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி
பலியும் பாட்டொடு பண் முழவும், பலஓசையும்,
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே!

[10]
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழிக் கவுணியன்,
ஒலிசெய் பாடல்கள் பத்துஇவை வல்லார்.......உலகத்திலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.010   சீரின் ஆர் மணியும்(ம்) அகில்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருமங்கலக்குடி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு புராணவரதேசுவரர் திருவடிகள் போற்றி )
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.

[1]
பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று
ஏத்தவே,
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட,
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே.

[2]
கருங்கையானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார்,
மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பி ஏத்த வல்லார் வினைஆயின வீடுமே.

[3]
பறையினோடு ஒலிபாடலும் ஆடலும் பாரிடம்,
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக்
குறைவு இலா நிறைவே! குணம் இல் குணமே! என்று
முறையினால் வணங்கு(ம்)மவர் முன்நெறி காண்பரே.

[4]
ஆனில் அம்கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி, ஓர்
மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி
ஊன் இல்வெண்தலைக் கை உடையான் உயர் பாதமே
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே.

[5]
தேனும் ஆய் அமுதுஆகி நின்றான், தெளி சிந்தையுள
வானும் ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக்
கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும் வகை, அதே.

[6]
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில் ஆகவே
வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி
ஆளும் ஆதிப்பிரான், அடிகள் அடைந்து ஏத்தவே,
கோளும் நாள் அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே

[7]
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட,
வலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப்
புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர்
மலியும் வான் உலகம் புக வல்லவர்; காண்மினே!

[8]
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,
மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி
ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு
கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே.

[9]
மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர்,
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
செய்யமேனிச் செழும் புனல்கங்கை செறி சடை
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

[10]
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை, எழில் ஆர் பொழில் காழியர்காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.011   நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,  
பண் - இந்தளம்   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.

[1]
நம் மானம் மாற்றி நமக்கு அருள் ஆய் நின்ற
பெம்மானை, பேய் உடன் ஆடல் புரிந்தானை,
அம்மானை, அந்தணர் சேரும் அணி காழி
எம்மானை, ஏத்த வல்லார்க்கு இடை இல்லையே.

[2]
அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்;
பொருந்தானை, பொய் அடிமைத் தொழில் செய்வாருள
விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!

[3]
புற்றானை, புற்று அரவம் அரையின்மிசைக்
சுற்றானை, தொண்டு செய்வார் அவர்தம்மொடும்
அற்றானை, அந்தணர் காழி அமர் கோயில்
பற்றானை, பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

[4]
நெதியானை, நெஞ்சுஇடம் கொள்ள நினைவார்தம்
விதியானை, விண்ணவர்தாம் வியந்து ஏத்திய
கதியானை, கார் உலவும் பொழில் காழி ஆம்
பதியானை, பாடுமின், நும் வினை பாறவே!

[5]
செப்பு ஆன மென்முலையாளைத் திகழ் மேனி
வைப்பானை, வார் கழல் ஏத்தி நினைவார்தம்
ஒப்பானை, ஓதம் உலாவு கடல் காழி
மெய்ப்பானை, மேவிய மாந்தர் வியந்தாரே.

[6]
துன்பானை, துன்பம் அழித்து அருள் ஆக்கிய
இன்பானை, ஏழ் இசையின் நிலை பேணுவார்
அன்பானை, அணி பொழில் காழிநகர் மேய
நம்பானை, நண்ண வல்லார் வினை நாசமே.

[7]
குன்றானை, குன்று எடுத்தான் புயம்நால் ஐந்தும்
வென்றானை, மென்மலரானொடு மால் தேட
நின்றானை, நேரிழையாளொடும் காழியுள
நன்றானை, நம்பெருமானை, நணுகுமே!

[8]
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல் அவை கேட்டு வெகுளேன்மின்!
பூ ஆயகொன்றையினானைப் புனல் காழிக்
கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே!

[9]
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியு
ஒழியாது கோயில்கொண்டானை, உகந்து உள்கித்
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர
மொழிவார்கள், மூஉலகும் பெறுவார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.012   மறையானை, மாசு இலாப் புன்சடை  
பண் - இந்தளம்   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
நொச்சியே, வன்னி, கொன்றை, மதி, கூவிளம்,
உச்சியே புனைதல் வேடம்; விடைஊர்தியான்;
கச்சி ஏகம்பம் மேய கறைக்கண்டனை
நச்சியே தொழுமின்! நும்மேல் வினை நையுமே.

[2]
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல், யாழ், ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவுஇல்லது ஓர்
ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை,
சேராதார் இன்பம் ஆய நெறி சேராரே.

[3]
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப் போய்
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்
சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே.

[4]
சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள
புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம்
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[5]
மழுவாளோடு எழில் கொள் சூலப்படைவல்லார்தம்
கெழு வாளோர், இமையார், உச்சி உமையாள் கங்கை
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம்
தொழுவாரே விழுமியார்; மேல்வினை துன்னாவே.

[6]
விண் உளார்; மறைகள்வேதம் விரித்து ஓதுவார்
கண் உளார்; கழலின் வெல்வார், கரி காலனை;
நண்ணுவார் எழில் கொள் கச்சிநகர் ஏகம்பத்து
அண்ணலார்; ஆடுகின்ற அலங்காரமே!

[7]
தூயானை, தூய ஆய மறை ஓதிய
வாயானை, வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம்
மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.

[8]
நாகம் பூண்; ஏறுஅது ஏறல்; நறுங்கொன்றை, தார்;
பாகம் பெண்; பலியும் ஏற்பர்; மறை பாடுவர்;
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே!

[9]
போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின்! அம் மா எனும் கச்சியுள
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்
நீதியால் தொழுமின்! நும்மேல் வினை நில்லாவே.

[10]
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,
கந்து அண் பூங்காழிஊரன் கலிக்கோவையால்
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.013   நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருக்கோழம்பம் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரியம்மை உடனுறை அருள்மிகு கோகுலேசுவரர் திருவடிகள் போற்றி )
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!

[1]
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய
கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய
செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே.

[2]
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!

[3]
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய
விடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்கு
உடையானை, குளிர்பொழில் சூழ் திருக்கோழம்பம்
உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே!

[4]
காரானை, கடி கமழ் கொன்றைஅம்போது அணி
தாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய
சீரானை, செறி பொழில் கோழம்பம் மேவிய
ஊரானை, ஏத்துமின், நும் இடர் ஒல்கவே!

[5]
பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை,
விண்டார்கள்தம் புரம்மூன்று உடனேவேவக்
கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக்
கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

[6]
சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த
வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை,
கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய
நல்லானை, ஏத்துமின், நும் இடர் நையவே!

[7]
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனைக்
குற்றானை, திருவிரலால்; கொடுங்காலனைச்
செற்றானை; சீர் திகழும் திருக்கோழம்பம்
பற்றானை; பற்றுவார்மேல் வினை பற்றாவே.

[8]
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர்
படியானை, பண்டங்கவேடம் பயின்றானை,
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின்
கொடியானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

[9]
புத்தரும், தோகைஅம்பீலி கொள் பொய்ம்மொழிப்
பித்தரும், பேசுவ பேச்சு அல்ல; பீடு உடைக்
கொத்து அலர் தண்பொழில் கோழம்பம் மேவிய
அத்தனை ஏத்துமின், அல்லல் அறுக்கவே!

[10]
தண்புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்துஇவை
பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.014   சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவெண்ணியூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு வெண்ணிநாயகர் திருவடிகள் போற்றி )
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
சோதியை, சுண்ணவெண்நீறு அணிந்திட்ட எம்
ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை, வேதியர்தாம் தொழும் வெண்ணியில்
நீதியை, நினைய வல்லார் வினை நில்லாவே.

[2]
கனிதனை, கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை, மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை,
நனிதனை, நல்லவர்தாம் தொழும் வெண்ணியில்
இனிதனை, ஏத்துவர் ஏதம் இலாதாரே.

[3]
மூத்தானை, மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க்
காத்தானை, கனிந்தவரைக் கலந்து ஆள் ஆக
ஆர்த்தானை, அழகு அமர் வெண்ணி அம்மான்தன்னை,
ஏத்தாதார் என் செய்வார்? ஏழை, அப் பேய்களே

[4]
நீரானை, நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றைத்
தாரானை, தையல் ஓர்பாகம் உடையானை,
சீரானை, திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை
ஊரானை, உள்க வல்லார் வினை ஓயுமே.

[5]
முத்தினை, முழுவயிரத்திரள் மாணிக்கத்
தொத்தினை, துளக்கம் இலாத விளக்குஆய
வித்தினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அத்தனை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[6]
காய்ந்தானைக் காமனையும், செறு காலனைப்
பாய்ந்தானை, பரிய கைம்மாஉரித் தோல் மெய்யில்
மேய்ந்தானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
நீந்தானை, நினைய வல்லார் வினை நில்லாவே.

[7]
மறுத்தானை, மாமலையை மதியாது ஓடிச்
செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள்
இறுத்தானை, எழில் அமர் வெண்ணி எம்மான்! எனப்
பொறுத்தானை, போற்றுவார் ஆற்றல் உடையாரே.

[8]
மண்ணினை, வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[9]
குண்டரும் குணம் இலாத சமண்சாக்கிய
மிண்டர்கள் மிண்டுஅவை கேட்டு வெகுளன்மின்!
விண்டவர்தம் புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே.

[10]
மரு ஆரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன்,
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை,
உரு ஆரும் ஒண்தமிழ்மாலைஇவை வல்லார்
பொருஆகப் புக்கு இருப்பார், புவலோகத்தே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.015   நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருக்காறாயில் (திருக்காறைவாசல்) ; (திருத்தலம் அருள்தரு கயிலாயநாயகியம்மை உடனுறை அருள்மிகு கண்ணாயிரநாதர் திருவடிகள் போற்றி )
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத்
தாரானே! தாமரைமேல் அயன்தான் தொழும்
சீரானே! சீர் திகழும் திருக்காறாயில்
ஊரானே! என்பவர் ஊனம் இலாதாரே.

[1]
மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர்
விதியானே! விதி உடை வேதியர்தாம் தொழும்
நெதியானே! நீர் வயல் சூழ் திருக்காறாயில்
பதியானே! என்பவர் பாவம் இலாதாரே.

[2]
விண்ணானே! விண்ணவர் ஏத்த விரும்பும் சீர்
மண்ணானே! விண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே! கடிபொழில் சூழ் திருக்காறாயில்
எண்ணானே! என்பவர் ஏதம் இலாதாரே.

[3]
தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே! ஆய நல் அன்பர்க்கு அணியானே!
சேயானே! சீர் திகழும் திருக்காறாயில்
மேயானே! என்பவர்மேல் வினை மேவாவே.

[4]
கலையானே! கலை மலி செம்பொன் கயிலாய
மலையானே! மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே! சீர் திகழும் திருக்காறாயில்
நிலையானே! என்பவர்மேல் வினை நில்லாவே.

[5]
ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு
ஏற்றானே! ஏழ் உலகும் இமையோர்களும்
போற்றானே! பொழில் திகழும் திருக்காறாயில்
நீற்றானே! என்பவர்மேல் வினை நில்லாவே.

[6]
சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள்
ஏத்தானே! ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர்
காத்தானே! கார் வயல் சூழ் திருக்காறாயில்
ஆர்த்தானே! என்பவர்மேல் இடர் அடராவே.

[7]
கடுத்தானே, காலனைக் காலால்! கயிலாயம்
எடுத்தானை ஏதம் ஆக(ம்), முனிவர்க்கு இடர்
கெடுத்தானே! கேழ் கிளரும் திருக்காறாயில்
அடுத்தானே! என்பவர்மேல் வினை அடராவே.

[8]
பிறையானே! பேணிய பாடலொடு இன் இசை
மறையானே! மாலொடு நான்முகன் காணாத
இறையானே! எழில் திகழும் திருக்காறாயில்
உறைவானே! என்பவர்மேல் வினை ஓடுமே.

[9]
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும்
படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை;
கடி ஆரும் பூம்பொழில் சூழ் திருக்காறாயில்
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை, குற்றமே.

[10]
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.016   அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று  
பண் - இந்தளம்   (திருத்தலம் எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) ; (திருத்தலம் அருள்தரு யாழ்மொழியம்மை உடனுறை அருள்மிகு மணவாளநாயகர் திருவடிகள் போற்றி )

திருமணம்‌ கைகூட ஓத வேண்டிய பதிகம்‌
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

[1]
விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.

[2]
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை,
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.

[3]
விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம்
உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய
படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி
அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[4]
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை,
மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச்
செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

[5]
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம்
பழியாமைப் பண் இசைஆன பகர்வானை;
வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.

[6]
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக்
கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை,
மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.
[7]
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள
கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை,
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே

[8]
சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும்,
கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!

[9]
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர்
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை,
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே.

[10]
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி,
பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.017   நிலவும், புனலும், நிறை வாள்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவேணுபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல் ஆர் வேணுபுரமே.

[1]
அரவு ஆர் கரவன், அமை ஆர் திரள்தோள
குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம்
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு
விரவு ஆக வல்லார் வேணுபுரமே.

[2]
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ,
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம்
போகம் தரு சீர் வயல் சூழ் பொழிகள்
மேகம் தவழும் வேணுபுரமே.

[3]
காசு அக் கடலில் விடம் உண்ட கண்டத்து
ஈசர்க்கு இடம் ஆவது இன்நறவ
வாசக்கமலத்து அனம், வன் திரைகள்
வீச, துயிலும் வேணுபுரமே.

[4]
அரை ஆர் கலை சேர் அனமென்னடையை
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே.

[5]
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன்
தளிரும் சடைமேல் உடையான் இடம் ஆம்
நளிரும் புனலில் நல செங்கயல் கண்
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே.

[6]
ஏவும் படை வேந்தன் இராவணனை,
ஆ என்று அலற, அடர்த்தான் இடம் ஆம்
தாவும் மறிமானொடு தண்மதியம்
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே.

[8]
கண்ணன், கடிமாமலரில் திகழும்
அண்ணல், இருவர் அறியா இறை ஊர்
வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே.

[9]
போகம் அறியார், துவர் போர்த்து உழல்வார்,
ஆகம் அறியா அடியார் இறைஊர்
மூகம் அறிவார், கலை முத்தமிழ் நூல்
மீ கம் அறிவார், வேணுபுரமே.

[10]
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு, நல்
புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை,
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.018   சடையாய்! எனுமால்; சரண் நீ!  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருமருகல் ; (திருத்தலம் அருள்தரு வண்டுவார்குழலி உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் திருவடிகள் போற்றி )
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம்.
சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;
விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

[1]
சிந்தாய்! எனுமால்; சிவனே! எனுமால்;
முந்தாய்! எனுமால்; முதல்வா! எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?

[2]
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?

[3]
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?

[4]
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?

[5]
பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே

[6]
வழுவாள்; பெருமான்கழல் வாழ்க! எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?

[7]
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?

[8]
எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?

[9]
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?

[10]
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.019   அறத்தால் உயிர் காவல் அமர்ந்து  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருநெல்லிக்கா ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு நெல்லிவனேசுவரர் திருவடிகள் போற்றி )
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள
மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த
திறத்தால், தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[1]
பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்;
மதிதான் அது சூடிய மைந்தனும் தான்;
விதி தான்; வினை தான்; விழுப்பம் பயக்கும்
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[2]
நலம்தான் அவன்; நான்முகன்தன் தலையைக்
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான்;
புலம் தான்; புகழால் எரி விண் புகழும்
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[3]
தலைதானது ஏந்திய தம் அடிகள்
கலைதான் திரி காடுஇடம் நாடுஇடம் ஆம்;
மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய;
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[4]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list