சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வான் ஆர் சோதி மன்னு
பண் - தக்கேசி   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=iRUSnpqPJQk
5.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவின் நாதனும், செம்மலர் மேல்
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ydwTP_2V-es

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.073   வான் ஆர் சோதி மன்னு  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருக்கானூர் ; (திருத்தலம் அருள்தரு சிவயோகநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்மேனிநாயகர் திருவடிகள் போற்றி )
வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்
தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி,
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார்
கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.

[1]
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன் மேல், ஓர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர,
போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே.

[2]
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க்கொன்றை,
மறை ஆர் பாடல் ஆடலோடு, மால்விடைமேல் வருவார்;
இறையார்; வந்து, என் இல் புகுந்து, என் எழில் நலமும் கொண்டார்
கறை ஆர் சோலைக் கானூர் மேய பிறை ஆர் சடையாரே.

[3]
விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளை மாலை அது சூடி,
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு, தழை புன்சடை தாழ,
எண்ணா வந்து, என் இல் புகுந்து, அங்கு எவ்வம் நோய் செய்தான்-
கண் ஆர் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே.

[4]
தார் கொள் கொன்றைக் கண்ணியோடும் தண்மதியம் சூடி,
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து,
ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று, என் உள் வெந்நோய் செய்தார்
கார் கொள் சோலைக் கானூர் மேய கறைக்கண்டத்தாரே.

[5]
முளிவெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய்,
எளிவந்தார் போல், ஐயம் என்று, என் இல்லே புகுந்து, உள்ளத்
தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில்
களிவண்டு யாழ்செய் கானூர் மேய ஒளிவெண் பிறையாரே.

[6]
மூவா வண்ணர், முளை வெண் பிறையர், முறுவல் செய்து இங்கே
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார், பொக்கம்பல பேசிப்
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரிநூலர்
தேவு ஆர் சோலைக் கானூர் மேய தேவதேவரே.

[7]
தமிழின் நீர்மை பேசி, தாளம் வீணை பண்ணி, நல்ல
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்,
குமிழின் மேனி தந்து, கோல நீர்மை அது கொண்டார்
கமழும் சோலைக் கானூர் மேய பவளவண்ணரே.

[8]
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான்,
சிந்தையுள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான்,
வந்து என் உள்ளம் புகுந்து மாலைகாலை ஆடுவான்-
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே.

[9]
ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்குமாலை பூண்டு,
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும் கோள் நாகணையானும்
சேமம் ஆய செல்வர், கானூர் மேய சேடரே.

[10]
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை,
பழுது இல் ஞானசம்பந்தன் சொல்பத்தும் பாடியே,
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று,
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.076   திருவின் நாதனும், செம்மலர் மேல்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கானூர் ; (திருத்தலம் அருள்தரு சிவயோகநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்மேனிநாயகர் திருவடிகள் போற்றி )
திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை
உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம்
கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில்
பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!

[1]
பெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி,
உண்டு இறேழு என்று உகவன்மின், ஏழைகாள்!
கண்டு கொண்மின், நீர், கானூர் முளையினை,
புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!

[2]
தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம்
மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்!
காயத்தே உளன், கானூர் முளையினை
வாய்அ(த்)தால் வணங்கீர், வினை மாயவே!

[3]
குறியில் நின்று, உண்டு கூறை இலாச் சமண்
நெறியை விட்டு, நிறைகழல் பற்றினேன்:
அறியல் உற்றிரேல், கானூர் முளை அவன்
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே.

[4]
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல், ஏழைகாள்!
சித்தர், பத்தர்கள், சேர் திருக்கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே.

[5]
கல்வி ஞானக்கலைப் பொருள் ஆயவன்,
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை,
எல்லியும் பகலும்(ம்) இசைவு ஆனவா
சொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே!

[6]
நீரும், பாரும், நெருப்பும், அருக்கனும்,
காரும், மாருதம்-கானூர் முளைத்தவன்;
சேர்வும் ஒன்று அறியாது, திசைதிசை
ஓர்வும் ஒன்று இலர், ஓடித் திரிவரே.

[7]
ஓமத்தோடு அயன்மால் அறியா வணம்
வீமப் பேர் ஒளி ஆய விழுப்பொருள்,
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்;
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே.

[8]
வன்னி, கொன்றை, எருக்கு, அணிந்தான் மலை
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்-
தன்னை வீழத் தனி விரல் வைத்தவன்
கன்னி மா மதில் கானூர்க் கருத்தனே.

[9]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list