சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

2.001 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செந்நெல் அம் கழனிப் பழனத்து  (திருப்பூந்தராய்)  
2.002 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண்டு எலாம் மலர விரை  (திருவலஞ்சுழி)  
2.003 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்  (திருத்தெளிச்சேரி)  
2.004 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரை உலாம் கடலில் பொலி  (திருவான்மியூர்)  
2.005 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்  (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்))  
2.006 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,  (திருவையாறு)  
2.007 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு  (திருவாஞ்சியம்)  
2.008 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் உலாவும் மதி வந்து  (திருச்சிக்கல்)  
2.009 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!  (திருமழபாடி)  
2.010 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீரின் ஆர் மணியும்(ம்) அகில்  (திருமங்கலக்குடி)  
2.011 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,  (சீர்காழி)  
2.012 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறையானை, மாசு இலாப் புன்சடை  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
2.013 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது  (திருக்கோழம்பம்)  
2.014 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,  (திருவெண்ணியூர்)  
2.015 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை  (திருக்காறாயில் (திருக்காறைவாசல்))  
2.016 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))  
2.017 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிலவும், புனலும், நிறை வாள்  (திருவேணுபுரம் (சீர்காழி))  
2.018 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையாய்! எனுமால்; சரண் நீ!  (திருமருகல்)  
2.019 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறத்தால் உயிர் காவல் அமர்ந்து  (திருநெல்லிக்கா)  
2.020 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொழும் ஆறு வல்லார், துயர்  (திருஅழுந்தூர்)  
2.021 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்  (திருக்கழிப்பாலை)  
2.022 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்;  (திருக்குடவாயில்)  
2.023 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மழை ஆர் மிடறா! மழுவாள்  (திருவானைக்கா)  
2.024 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்  (திருநாகேச்சுரம்)  
2.025 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உகலி ஆழ்கடல் ஓங்கு பார்  (திருப்புகலி -(சீர்காழி ))  
2.026 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புடையின் ஆர் புள்ளி கால்  (திருநெல்வாயில்)  
2.027 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு  (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்))  
2.028 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,  (திருக்கருவூரானிலை (கரூர்))  
2.029 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய  (திருப்புகலி -(சீர்காழி ))  
2.030 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறம் பயம் மலிந்தவர் மதில்  (திருப்புறம்பயம்)  
2.031 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  (கருப்பறியலூர் (தலைஞாயிறு))  
2.032 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு  (திருவையாறு)  
2.033 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏடு மலி கொன்றை, அரவு,  (திருநள்ளாறு)  
2.034 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி  (திருப்பழுவூர்)  
2.035 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பரவக் கெடும், வல்வினை பாரிடம்  (திருத்தென்குரங்காடுதுறை)  
2.036 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் ஆர் கழலே தொழுவீர்!  (திருஇரும்பூளை (ஆலங்குடி))  
2.037 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
2.038 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))  
2.039 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,  (சீர்காழி)  
2.040 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
2.041 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண் புகார், வான்புகுவர்; மனம்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))  
2.042 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அக்கு இருந்த ஆரமும், ஆடு  (திருஆக்கூர்)  
2.043 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))  
2.044 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துன்னம் பெய் கோவணமும் தோலும்  (திருஆமாத்தூர்)  
2.045 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தையல் ஓர் கூறு உடையான்,  (கைச்சின்னம் (கச்சன்னம்))  
2.046 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்  (திருநாலூர்மயானம்)  
2.047 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மட்டு இட்ட புன்னை அம்கானல்  (திருமயிலை (மயிலாப்பூர்))  
2.048 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் காட்டும் நுதலானும், கனல்  (திருவெண்காடு)  
2.049 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண்ணின் நேர் மொழி மங்கைமார்  (சீர்காழி)  
2.050 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குன்ற வார்சிலை, நாண் அரா,  (திருஆமாத்தூர்)  
2.051 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீருள் ஆர் கயல் வாவி  (திருக்களர்)  
2.052 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,  (திருக்கோட்டாறு)  
2.053 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ  (திருப்புறவார்பனங்காட்டூர்)  
2.054 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்  (திருப்புகலி -(சீர்காழி ))  
2.055 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலச் சங்க வெண்குழையும் தோடும்  (திருத்தலைச்சங்காடு)  
2.056 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!  (திருவிடைமருதூர்)  
2.057 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமரும் திருமேனி உடையீர்!  (திருநல்லூர்)  
2.058 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை வாழும் அம் கையீர்!  (திருக்குடவாயில்)  
2.059 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலம் கொள் முத்தும் மணியும்  (சீர்காழி)  
2.060 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சிந்தை இடையார், தலையின் மிசையார்,  (திருப்பாசூர்)  
2.061 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!  (திருவெண்காடு)  
2.062 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காயச் செவ்விக் காமற் காய்ந்து,  (திருமீயச்சூர்)  
2.063 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)  
2.064 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
2.065 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கறை அணி வேல் இலர்போலும்;  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
2.066 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திரம் ஆவது நீறு; வானவர்  (திருஆலவாய் (மதுரை))  
2.067 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்ணும் ஓர் பாகம் உடையார்;  (திருப்பெரும்புலியூர்)  
2.068 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் அமர் திங்களும் நீரும்  (திருக்கடம்பூர்)  
2.069 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமர் மேனியினாரும், பிறை  (திருப்பாண்டிக்கொடுமுடி)  
2.070 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,  (திருஆலவாய் (மதுரை))  
2.071 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருந்த மதி சூடி, தெண்  (திருக்குறும்பலா (குற்றாலம்))  
2.072 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்து ஆர் விரல் மடவாள்  (திருநணா (பவானி))  
2.073 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
2.074 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
2.075 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்  (சீர்காழி)  
2.076 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாடிய வெண்தலை மாலை சூடி,  (திருஅகத்தியான்பள்ளி)  
2.077 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்  (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்))  
2.078 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,  (திருவிளநகர்)  
2.079 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பவனம் ஆய், சோடை ஆய்,  (திருவாரூர்)  
2.080 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரிய மறையார், பிறையார், மலை  (திருக்கடவூர் மயானம்)  
2.081 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின்  (திருவேணுபுரம் (சீர்காழி))  
2.082 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண் நிலாவிய மொழி உமை  (திருத்தேவூர்)  
2.083 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீல நல் மாமிடற்றன்; இறைவன்;  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))  
2.084 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காரைகள், கூகை, முல்லை, கள,  (திருநனிப்பள்ளி)  
2.085 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேய் உறு தோளி பங்கன்,  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
2.086 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரையினில் வந்த பாவம், உணர்  (திருநாரையூர்)  
2.087 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
2.088 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துளி மண்டி உண்டு நிறம்  (தென்திருமுல்லைவாயில்)  
2.089 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))  
2.090 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு  (திருநெல்வாயில் அரத்துறை)  
2.091 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
2.092 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பட்டம், பால்நிற மதியம், படர்  (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்)  
2.093 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புரை செய் வல்வினை தீர்க்கும்  (திருத்தெங்கூர்)  
2.094 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாகை ஆயிரம் உடையார், சாமமும்  (திருவாழ்கொளிபுத்தூர்)  
2.095 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடல் வண்டு அறை கொன்றை,  (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு))  
2.096 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்புரி வளரும் பொற்பு  (சீர்காழி)  
2.097 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நம் பொருள், நம் மக்கள்  (சீர்காழி)  
2.098 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரைத்தலைப் பசும் பொனோடு அருங்  (திருத்துருத்தி)  
2.099 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இன்று நன்று, நாளை நன்று  (திருக்கோடி (கோடிக்கரை))  
2.100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படை கொள் கூற்றம் வந்து,  (திருக்கோவலூர் வீரட்டம்)  
2.101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பருக் கை யானை மத்தகத்து  (திருவாரூர்)  
2.102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அன்ன மென் நடை அரிவையோடு  (திருச்சிரபுரம் (சீர்காழி))  
2.103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புல்கு பொன் நிறம் புரி  (திருஅம்பர்மாகாளம்)  
2.104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி கொள் மேனி வெண்  (திருக்கடிக்குளம்)  
2.105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் உலாவிய சடையினர், விடையினர்,  (திருக்கீழ்வேளூர்)  
2.106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!  (திருவலஞ்சுழி)  
2.107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விருது குன்ற, மாமேரு வில்,  (திருக்கேதீச்சரம்)  
2.108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வடி கொள் மேனியர், வான  (திருவிற்குடிவீரட்டம்)  
2.109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி  (திருக்கோட்டூர்)  
2.110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,  (திருமாந்துறை)  
2.111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தளிர் இள வளர் என  (திருவாய்மூர்)  
2.112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாது ஓர் கூறு உகந்து,  (திருவாடானை)  
2.113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி இலங்கும் திருமேனியாளர், புலி  (சீர்காழி)  
2.114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு  (திருக்கேதாரம்)  
2.115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கள் விம்மு குழல்  (திருப்புகலூர்)  
2.116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
2.117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்டு கங்கை சடையில் கரந்தும்,  (திருஇரும்பைமாகாளம்)  
2.118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,  (திருதிலதைப்பதி (மதிமுத்தம்))  
2.119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,  (திருநாகேச்சுரம்)  
2.120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாந்தம் வெண்நீறு எனப் பூசி,  (திருமூக்கீச்சுரம் (உறையூர்))  
2.121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னம் நின்ற முடக்கால் முயற்கு  (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்))  
2.122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விடை அது ஏறி, வெறி  (திருப்புகலி -(சீர்காழி ))  

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.001  
செந்நெல் அம் கழனிப் பழனத்து  
Tune - இந்தளம்   (Location: திருப்பூந்தராய் God: Goddess: )

செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்
பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே?

[1]
மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார்
அகல்வர், தீவினை, நல்வினையோடு உடன் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.002  
விண்டு எலாம் மலர விரை  
Tune - இந்தளம்   (Location: திருவலஞ்சுழி God: காப்பகத்தீசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)

விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?

[1]
வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி
நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.003  
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்  
Tune - இந்தளம்   (Location: திருத்தெளிச்சேரி God: பார்வதீசுவரர் Goddess: சத்தியம்மாளம்மை)

பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!
மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம்
பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?

[1]
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை,
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.004  
கரை உலாம் கடலில் பொலி  
Tune - இந்தளம்   (Location: திருவான்மியூர் God: மருந்தீசுவரர் Goddess: சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்;
உரை எலாம் பொருள் ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர்
வரை உலாம் மடமாது உடன் ஆகிய மாண்புஅதே?

[1]
மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.005  
நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்  
Tune - இந்தளம்   (Location: திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) God: அருள்மன்னர் Goddess: மனோன்மணியம்மை)

நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு
சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!

[1]
தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள்முன்
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல, நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.006  
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,  
Tune - இந்தளம்   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.

[1]
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல்
வாழ்த்தவே.
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.007  
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு  
Tune - இந்தளம்   (Location: திருவாஞ்சியம் God: வாஞ்சியநாதர் Goddess: வாழவந்தநாயகியம்மை)

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்,
என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே.

[1]
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு
வாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால்,
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார், உயர்வானமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.008  
வான் உலாவும் மதி வந்து  
Tune - இந்தளம்   (Location: திருச்சிக்கல் God: நவநீதநாதர் Goddess: வேனெடுங்கண்ணியம்மை)

வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.

[1]
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல்
செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர், வான் இடை
வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.009  
களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!  
Tune - இந்தளம்   (Location: திருமழபாடி God: வச்சிரத்தம்பேசுவரர் Goddess: அழகாம்பிகையம்மை)

களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.

[1]
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழிக் கவுணியன்,
ஒலிசெய் பாடல்கள் பத்துஇவை வல்லார்.......உலகத்திலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.010  
சீரின் ஆர் மணியும்(ம்) அகில்  
Tune - இந்தளம்   (Location: திருமங்கலக்குடி God: புராணவரதேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)

சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.

[1]
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை, எழில் ஆர் பொழில் காழியர்காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.011  
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,  
Tune - இந்தளம்   (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.

[1]
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியு
ஒழியாது கோயில்கொண்டானை, உகந்து உள்கித்
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர
மொழிவார்கள், மூஉலகும் பெறுவார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.012  
மறையானை, மாசு இலாப் புன்சடை  
Tune - இந்தளம்   (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)

மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,
கந்து அண் பூங்காழிஊரன் கலிக்கோவையால்
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.013  
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது  
Tune - இந்தளம்   (Location: திருக்கோழம்பம் God: கோகுலேசுவரர் Goddess: சவுந்தரியம்மை)

நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!

[1]
தண்புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்துஇவை
பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.014  
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,  
Tune - இந்தளம்   (Location: திருவெண்ணியூர் God: வெண்ணிநாயகர் Goddess: அழகியநாயகியம்மை)

சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
மரு ஆரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன்,
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை,
உரு ஆரும் ஒண்தமிழ்மாலைஇவை வல்லார்
பொருஆகப் புக்கு இருப்பார், புவலோகத்தே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.015  
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை  
Tune - இந்தளம்   (Location: திருக்காறாயில் (திருக்காறைவாசல்) God: கண்ணாயிரநாதர் Goddess: கயிலாயநாயகியம்மை)

நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத்
தாரானே! தாமரைமேல் அயன்தான் தொழும்
சீரானே! சீர் திகழும் திருக்காறாயில்
ஊரானே! என்பவர் ஊனம் இலாதாரே.

[1]
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.016  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று  
Tune - இந்தளம்   (Location: எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) God: மணவாளநாயகர் Goddess: யாழ்மொழியம்மை)

அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

[1]
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி,
பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.017  
நிலவும், புனலும், நிறை வாள்  
Tune - இந்தளம்   (Location: திருவேணுபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல் ஆர் வேணுபுரமே.

[1]
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு, நல்
புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை,
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.018  
சடையாய்! எனுமால்; சரண் நீ!  
Tune - இந்தளம்   (Location: திருமருகல் God: மாணிக்கவண்ணர் Goddess: வண்டுவார்குழலி)

சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;
விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

[1]
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.019  
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து  
Tune - இந்தளம்   (Location: திருநெல்லிக்கா God: நெல்லிவனேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)

அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள
மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த
திறத்தால், தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[1]
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின்
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை,
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன,
பகர்வார் அவர் பாவம் இலாதவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.020  
தொழும் ஆறு வல்லார், துயர்  
Tune - இந்தளம்   (Location: திருஅழுந்தூர் God: வேதபுரீசுவரர் Goddess: சவுந்தராம்பிகையம்மை)

தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மா மடம் மன்னினையே.

[1]
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத்
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்,
உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.021  
புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்  
Tune - இந்தளம்   (Location: திருக்கழிப்பாலை God: பால்வண்ணநாதர் Goddess: வேதநாயகியம்மை)

புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்
அனல் ஆக விழித்தவனே! அழகு ஆர்
கனல் ஆடலினாய்! கழிப்பாலை உளாய்!
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே.

[1]
கழி ஆர் பதி காவலனைப் புகலிப்
பழியா மறை ஞானசம்பந்தன சொல்
வழிபாடு இவை கொண்டு, அடி வாழ்த்த வல்லார்,
கெழியார், இமையோரொடு; கேடு இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.022  
திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்;  
Tune - இந்தளம்   (Location: திருக்குடவாயில் God: கோணேசுவரர் Goddess: பெரியநாயகியம்மை)

திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான்; அடியார் புகல,
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே.

[1]
கடுவாய் மலி நீர் குடவாயில்தனில்
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை,
தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன்,
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.023  
மழை ஆர் மிடறா! மழுவாள்  
Tune - இந்தளம்   (Location: திருவானைக்கா God: சம்புகேசுவரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)

மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!
உழை ஆர் கரவா! உமையாள்கணவா!
விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம்
அழகா! எனும் ஆயிழையாள் அவளே

[1]
வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை,
கண் ஆர் கமழ் காழியர்தம் தலைவன்,
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.024  
பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்  
Tune - இந்தளம்   (Location: திருநாகேச்சுரம் God: செண்பகாரணியேசுவரர் Goddess: குன்றமுலைநாயகியம்மை)

பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின் நேர் சடையாய்! விரை காவிரியின்
நன்நீர் வயல் நாகேச்சுரநகரின்
மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே.

[1]
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன்
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன்
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனைச்
சொலல் மாலைகள் சொல்ல, நிலா, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.025  
உகலி ஆழ்கடல் ஓங்கு பார்  
Tune - இந்தளம்   (Location: திருப்புகலி -(சீர்காழி ) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்மினே!

[1]
புல்லம் ஏறிதன் பூம் புகலியை,
நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லும் மாலைஈர் ஐந்தும் வல்லவர்க்கு,
இல்லை ஆம் வினை, இரு நிலத்துளே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.026  
புடையின் ஆர் புள்ளி கால்  
Tune - இந்தளம்   (Location: திருநெல்வாயில் God: அரத்துறைநாதர் Goddess: ஆனந்தநாயகியம்மை)

புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார்,
நடையின் நால்விரல்கோவணம் நயந்த
உடையினார், எமது உச்சியாரே.

[1]
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை,
பண் பயன்கொளப் பாட வல்லவர்,
விண் பயன்கொளும் வேட்கையாளரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.027  
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு  
Tune - இந்தளம்   (Location: இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) God: நீலாசலநாதர் Goddess: நீலாம்பிகையம்மை)

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்,
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான், அடி உள்க, நல்குமே.

[1]
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான்,
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து
அந்தம் இலியை ஏத்து ஞானசம்
பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்மினே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.028  
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,  
Tune - இந்தளம்   (Location: திருக்கருவூரானிலை (கரூர்) God: பசுபதீசுவரர் Goddess: கிருபாநாயகியம்மை)

தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்;
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே.

[1]
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்,
சிந்தையில் துயர் ஆய தீர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.029  
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய  
Tune - இந்தளம்   (Location: திருப்புகலி -(சீர்காழி ) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.

[1]
செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலிதன்மேல்,
அந்தம் முதல் ஆகி நடுவுஆய பெருமானைப்
பந்தன் உரை செந்தமிழ்கள்பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.030  
மறம் பயம் மலிந்தவர் மதில்  
Tune - இந்தளம்   (Location: திருப்புறம்பயம் God: சாட்சிவரதநாதர் Goddess: கரும்பன்னசொல்லம்மை)

மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை;
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து, உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்!

[1]
கருங்கழி பொரும் திரை கரைக் குலவு முத்தம்
தரும் கழுமலத்து இறை தமிழ்க் கிழமை ஞானன்
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்,
பெரும் பிணி மருங்கு அற, ஒருங்குவர், பிறப்பே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.031  
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  
Tune - இந்தளம்   (Location: கருப்பறியலூர் (தலைஞாயிறு) God: குற்றம்பொறுத்தநாதர் Goddess: கோல்வளையம்மை)

சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.

[1]
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப்
பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று,
வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.032  
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு  
Tune - இந்தளம்   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் ஏர் ஆர்
மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.

[1]
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள்
ஈசனை, எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப்
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்,
நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.033  
ஏடு மலி கொன்றை, அரவு,  
Tune - இந்தளம்   (Location: திருநள்ளாறு God: தெர்ப்பாரணியர் Goddess: போகமார்த்தபூண்முலையம்மை)

ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.

[1]
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை,
மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்
பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.034  
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி  
Tune - இந்தளம்   (Location: திருப்பழுவூர் God: வடவனநாதர் Goddess: அருந்தவநாயகியம்மை)

முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன்,
அத்தன், எமை ஆள் உடைய அண்ணல், இடம் என்பர்
மைத் தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச,
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.

[1]
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச்
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி,
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.035  
பரவக் கெடும், வல்வினை பாரிடம்  
Tune - இந்தளம்   (Location: திருத்தென்குரங்காடுதுறை God: குலைவணங்குநாதர் Goddess: அழகுசடைமுடியம்மை)

பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.

[1]
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்,
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல்
சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த
வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.036  
சீர் ஆர் கழலே தொழுவீர்!  
Tune - இந்தளம்   (Location: திருஇரும்பூளை (ஆலங்குடி) God: காசியாரண்ணியேசுவரர் Goddess: ஏலவார்குழலம்மை)

சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே?

[1]
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்,
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார்,
பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.037  
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்  
Tune - இந்தளம்   (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)

சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!

[1]
காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன் இசைமாலை ஈர் ஐந்துஇவை வல்லார்,
வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.038  
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்  
Tune - இந்தளம்   (Location: திருச்சாய்க்காடு (சாயாவனம்) God: சாயாவனேசுவரர் Goddess: குயிலுநன்மொழியம்மை)

நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி,
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி,
தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.

[1]
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை,
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய்,
வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.039  
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,  
Tune - இந்தளம்   (Location: சீர்காழி God: Goddess: )

ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்,
வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல
கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி,
கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும்,
குருகாவையூர், நாரையூர், நீடு கானப்
பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும்,
பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!

[1]
அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற
அமரர்பெருமான், பதி ஆன உன்னி,
கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு
இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில்
இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று,
விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார்,
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.040  
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,  
Tune - சீகாமரம்   (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.

[1]
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை,
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை,
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை
வல்லார்
பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.041  
மண் புகார், வான்புகுவர்; மனம்  
Tune - சீகாமரம்   (Location: திருச்சாய்க்காடு (சாயாவனம்) God: சாயாவனேசுவரர் Goddess: குயிலுநன்மொழியம்மை)

மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும்
கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித்
தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.

[1]
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல் அடியார்
அம் பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங் காழிச்
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம் பந்தம் எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.042  
அக்கு இருந்த ஆரமும், ஆடு  
Tune - சீகாமரம்   (Location: திருஆக்கூர் God: சுயம்புநாதேசுவரர் Goddess: கட்கநேத்திரவம்மை)

அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும்,
தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண்
நீற்றான்;
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[1]
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி
மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி,
நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.043  
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,  
Tune - சீகாமரம்   (Location: திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) God: வைத்தியநாதர் Goddess: தையல்நாயகியம்மை)

கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம்,
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி, சடாயு, என்பார்தாம் இருவர்
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே.

[1]
செடி ஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து
ஆவான்,
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை,
கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம், மறுபிறப்பே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.044  
துன்னம் பெய் கோவணமும் தோலும்  
Tune - சீகாமரம்   (Location: திருஆமாத்தூர் God: அழகியநாதேசுவரர் Goddess: அழகியநாயகியம்மை)

துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?

[1]
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,
கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.045  
தையல் ஓர் கூறு உடையான்,  
Tune - சீகாமரம்   (Location: கைச்சின்னம் (கச்சன்னம்) God: கைச்சினநாதர் Goddess: வேள்வளையம்மை)

தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர் செஞ்சடையான்,
மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான்,
நெய் உலாம் மூ இலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர்
கை உடையான், மேவி உறை கோயில் கைச்சினமே.

[1]
தண்வயல் சூழ் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
கண்நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை,
பண் இசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார்,
விண்ணவராய் ஓங்கி, வியன் உலகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.046  
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்  
Tune - சீகாமரம்   (Location: திருநாலூர்மயானம் God: பலாசவனேசுவரர் Goddess: பெரியநாயகியம்மை)

பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான்,
நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து,
மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே.

[1]
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான்
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தைச்
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு
ஏலும், புகழ்; வானத்து இன்பு ஆய் இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.047  
மட்டு இட்ட புன்னை அம்கானல்  
Tune - சீகாமரம்   (Location: திருமயிலை (மயிலாப்பூர்) God: கபாலீசுவரர் Goddess: கற்பகவல்லியம்மை)

மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக்
கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[1]
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்,
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.048  
கண் காட்டும் நுதலானும், கனல்  
Tune - சீகாமரம்   (Location: திருவெண்காடு God: சுவேதாரணியேசுவரர் Goddess: பிரமவித்தியாநாயகியம்மை)

கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.

[1]
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.049  
பண்ணின் நேர் மொழி மங்கைமார்  
Tune - சீகாமரம்   (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி,
பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை, எம்பெருமான்! என்று என்று உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே.

[1]
பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும் உண்டு எனப்
பெயர் பெற்ற ஊர், திகழ்
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலிக் காழி,
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன்
செந்தமிழ் உரை
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.050  
குன்ற வார்சிலை, நாண் அரா,  
Tune - சீகாமரம்   (Location: திருஆமாத்தூர் God: அழகியநாதேசுவரர் Goddess: அழகியநாயகியம்மை)

குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி, கூர் எரி, காற்றின், மும்மதில்
வென்ற ஆறு எங்ஙனே? விடை ஏறும் வேதியனே!
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!

[1]
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து, மயங்கு இருள்(ள்), எரி ஏந்தி, மாநடம்
ஆடல் மேயது என்? என்று ஆமாத்தூர் அம்மானை,
கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.051  
நீருள் ஆர் கயல் வாவி  
Tune - சீகாமரம்   (Location: திருக்களர் God: களர்முளையீசுவரர் Goddess: அழகேசுவரியம்மை)

நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல்,
ஈண்டு மா மதில்,
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக்களருள
ஊர் உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர்
செஞ்சடை(ம்) மதி
ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!

[1]
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி(ந்) நகர்க் கவுணியன்,
செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள
அந்தி அன்னது ஓர் மேனியானை, அமரர் தம் பெருமானை, ஞானசம்
பந்தன் சொல் இவைபத்தும் பாட, தவம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.052  
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,  
Tune - சீகாமரம்   (Location: திருக்கோட்டாறு God: ஐராபதேசுவரர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)

கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, கார்
அதிர்கின்ற பூம்பொழில்
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை, உள்கி, இணை அடி தொழுது ஏத்தும் மாந்தர்கள்
வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான் ஊடே

[1]
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.053  
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ  
Tune - சீகாமரம்   (Location: திருப்புறவார்பனங்காட்டூர் God: பனங்காட்டீசுவரர் Goddess: திருப்புருவமின்னாளம்மை)

விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்! வரி
பண் அமர்ந்து ஒலி சேர் புறவு ஆர் பனங்காட்டூர்,
பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா! பிறை சேர் நுதல் இடைக்
கண் அமர்ந்தவனே! கலந்தார்க்கு அருளாயே!

[1]
மையின் ஆர் மணி போல் மிடற்றனை, மாசு இல் வெண்பொடிப் பூசும் மார்பனை,
பைய தேன் பொழில் சூழ் புறவு ஆர் பனங்காட்டூர்,
ஐயனை, புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நால்மறை ஞானசம்பந்தன்
செய்யுள் பாட வல்லார், சிவலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.054  
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்  
Tune - சீகாமரம்   (Location: திருப்புகலி -(சீர்காழி ) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்! அடைவோர்க்குக்
கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து ஆனீர்!
பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி,
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே.



[1]
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை,
அப் பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன்,
செப்ப(அ)ரிய தண்தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்,
எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.055  
நலச் சங்க வெண்குழையும் தோடும்  
Tune - காந்தாரம்   (Location: திருத்தலைச்சங்காடு God: செங்கணாயகேசுவரர் Goddess: சௌந்தரியம்மை)

நலச் சங்க வெண்குழையும் தோடும் பெய்து, ஓர்
நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர் கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயில் ஆகத் தாழ்ந்தீரே.

[1]
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை,
ஒளிரும் பிறையானை, உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.056  
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!  
Tune - காந்தாரம்   (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)

பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பூங் கங்கை
தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்!
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த,
இடைமருதில்,
மங்குல் தோய் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[1]
கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன்
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.057  
பெண் அமரும் திருமேனி உடையீர்!  
Tune - காந்தாரம்   (Location: திருநல்லூர் God: பெரியாண்டேசுவரர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)

பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு சடை தாழப்
பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்!
திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு
நல்லூர்,
மண் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[1]
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு
&குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு
நல்லூர்,
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்தன்னைப் பயில் பாடல்
சிந்தனையால் உரை செய்வார், சிவலோகம் சேர்ந்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.058  
கலை வாழும் அம் கையீர்!  
Tune - காந்தாரம்   (Location: திருக்குடவாயில் God: கோணேசுவரர் Goddess: பெரியநாயகியம்மை)

கலை வாழும் அம் கையீர்! கொங்கை ஆரும் கருங்கூந்தல்
அலை வாழும் செஞ்சடையில், அரவும் பிறையும்
அமர்வித்தீர்!
குலைவாழை கமுகம் பொன்பவளம் பழுக்கும் குடவாயில்,
நிலை வாழும் கோயிலே கோயில் ஆக நின்றீரே.

[1]
நளிர் பூந் திரை மல்கு காழி ஞானசம்பந்தன்,
குளிர் பூங் குடவாயில் கோயில் மேய கோமானை,
ஒளிர்பூந்தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார்,
தளர்வு ஆனதாம் ஒழிய, தகு சீர் வானத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.059  
நலம் கொள் முத்தும் மணியும்  
Tune - காந்தாரம்   (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி,
வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்! என
ஏத்தி,
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.

[1]
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்,
தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார்,
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.060  
சிந்தை இடையார், தலையின் மிசையார்,  
Tune - காந்தாரம்   (Location: திருப்பாசூர் God: பாசூர்நாதர் Goddess: பசுபதிநாயகியம்மை)

சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

[1]
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.061  
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!  
Tune - காந்தாரம்   (Location: திருவெண்காடு God: சுவேதாரணியேசுவரர் Goddess: பிரமவித்தியாநாயகியம்மை)

உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.

[1]
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.062  
காயச் செவ்விக் காமற் காய்ந்து,  
Tune - காந்தாரம்   (Location: திருமீயச்சூர் God: முயற்சிநாதேசுவரர் Goddess: சுந்தரநாயகியம்மை)

காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன்
மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!

[1]
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்,
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர் ஐந்தும் மொழிந்து, உள்கி,
ஆடும் அடியார், அகல் வான் உலகம் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.063  
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்  
Tune - காந்தாரம்   (Location: திருஅரிசிற்கரைப்புத்தூர் God: படிக்காசளித்தவீசுவரர் Goddess: அழகம்மை)

மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,
பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே.

[1]
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன்,
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்,
செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்,
அறவன் கழல் சேர்ந்து, அன்பொடு இன்பம் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.064  
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!  
Tune - காந்தாரம்   (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)

தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே!
ஆவா! என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்!
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி,
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.

[1]
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழிச் சம்பந்தன்,
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்,
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.065  
கறை அணி வேல் இலர்போலும்;  
Tune - காந்தாரம்   (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

கறை அணி வேல் இலர்போலும்; கபாலம் தரித்திலர்
போலும்;
மறையும் நவின்றிலர் போலும்; மாசுணம் ஆர்த்திலர் போலும்;
பறையும் கரத்து இலர்போலும்; பாசம் பிடித்திலர் போலும்;
பிறையும் சடைக்கு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[1]
பெண் உரு ஆண் உரு அல்லாப் பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து, வகைவகையாலே,
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள்,
விண்ணவரொடு இனிது ஆக வீற்றிருப்பார், அவர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.066  
மந்திரம் ஆவது நீறு; வானவர்  
Tune - காந்தாரம்   (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

[1]
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.067  
மண்ணும் ஓர் பாகம் உடையார்;  
Tune - காந்தாரம்   (Location: திருப்பெரும்புலியூர் God: வியாக்கிரபுரீசுவரர் Goddess: சவுந்தராம்பிகையம்மை)

மண்ணும் ஓர் பாகம் உடையார்; மாலும் ஓர்பாகம்
உடையார்;
விண்ணும் ஓர் பாகம் உடையார்; வேதம் உடைய விமலர்;
கண்ணும் ஓர் பாகம் உடையார்; கங்கை சடையில் கரந்தார்;
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.

[1]
பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப்
பெருமானை,
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
மறை வளரும் தமிழ்மாலை வல்லவர், தம் துயர் நீங்கி,
நிறை வளர் நெஞ்சினர் ஆகி, நீடு உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.068  
வான் அமர் திங்களும் நீரும்  
Tune - காந்தாரம்   (Location: திருக்கடம்பூர் God: அமுதகடேசுவரர் Goddess: சோதிமின்னம்மை)

வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.

[1]
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.069  
பெண் அமர் மேனியினாரும், பிறை  
Tune - காந்தாரம்   (Location: திருப்பாண்டிக்கொடுமுடி God: கொடுமுடிநாதேசுவரர் Goddess: பண்மொழியம்மை)

பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு
செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[1]
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
பலம் மல்கு வெண்தலை ஏந்தி பாண்டிக்கொடு
முடிதன்னைச்
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார், துயர்
தீர்ந்து,
நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.070  
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,  
Tune - காந்தாரம்   (Location: திருஆலவாய் (மதுரை) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த்
தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம்,
சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்டு அங்கு
ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டு ஆய் நின்ற திருக்கழுமலம் நாம்
பரவும் ஊரே.

[1]
கொச்சைவயம், பிரமன் ஊர், புகலி, வெங்குரு, புறவம்,
காழி,
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பை மூதூர்,
நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி
நம்மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.071  
திருந்த மதி சூடி, தெண்  
Tune - காந்தாரம்   (Location: திருக்குறும்பலா (குற்றாலம்) God: குறும்பலாநாதர் Goddess: குழன்மொழியம்மை)

திருந்த மதி சூடி, தெண் நீர் சடைக் கரந்து, தேவி பாகம்
பொகுந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த
செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இனவண்டு
யாழ்செய்,
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தணசாரல்,
குறும்பலாவே.

[1]
கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்
ஏற்று அண்ணல்,
நம்பான், அடி பரவும் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
இன்பு ஆய பாடல் இவைபத்தும் வல்லார், விரும்பிக்
கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும்; நல்வினைகள் தளரா
அன்றே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.072  
பந்து ஆர் விரல் மடவாள்  
Tune - காந்தாரம்   (Location: திருநணா (பவானி) God: சங்கமுகநாதேசுவரர் Goddess: வேதமங்கையம்மை)

பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, எருது ஏறி,
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண்சாரல்
வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு பாட,
செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே.

[1]
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்,
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.073  
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,  
Tune - காந்தாரம்   (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு,
மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண்
புறவம், மண்மேல்
களங்கம் இல் ஊர்சண்பை, கமழ் காழி, வயம் கொச்சை,
கழுமலம், என்று இன்ன
இளங்குமரன் தன்னைப் பெற்று, இமையவர் தம் பகை
எறிவித்த இறைவன் ஊரே.

[1]
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை, காழி, அமர் கொச்சை,
கழுமலம், அன்பான் ஊர்
ஓக்கம்(ம்) உடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்
புறவம், நண்பு ஆர்
பூக்கமலத்தோன் மகிழ் ஊர், புரந்தரன் ஊர், புகலி,
வெங்குருவும், என்பர்
சாக்கியரோடு அமண்கையர் தாம் அறியா வகை நின்றான்
தங்கும் ஊரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.074  
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்  
Tune - காந்தாரம்   (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் ஊர், குறைவு இலாப்
புகலி, பூமேல்
மாமகள் ஊர், வெங்குரு, நல் தோணிபுரம், பூந்தராய்,
வாய்ந்த இஞ்சிச்
சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை,
காழி, கொச்சை,
காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம்
நாம் கருதும் ஊரே.

[1]
இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன் ஊர்,
இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்,
குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம்
ஆர் பூந்தராய், நீர்ச்
சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை,
கழுமலம் தேசு இன்றிப்
பறி தலையொடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா
அம்மான் ஊரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.075  
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்  
Tune - காந்தாரம்   (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப்
பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண் நயம் கொள் திருநெற்றியான் கலிக் காழியுள
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே.

[1]
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன்
சொல்,
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்,
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.076  
வாடிய வெண்தலை மாலை சூடி,  
Tune - காந்தாரம்   (Location: திருஅகத்தியான்பள்ளி God: அகத்தீசுவரர் Goddess: மங்கைநாயகியம்மை)

வாடிய வெண்தலை மாலை சூடி, வயங்கு இருள
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம், பாவமே.

[1]
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள்
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.077  
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்  
Tune - காந்தாரம்   (Location: திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) God: அறையணிநாதேசுவரர் Goddess: அருள்நாயகியம்மை)

பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது இலா
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார், இளவெண்மதி
சூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல்
ஆடினார், அறையணி நல்லூர் அம் கையால்
தொழுவார்களே.

[1]
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல்
பதிப்
பழி இலா மறை ஞானசம்பந்தன், நல்லது ஓர் பண்பின்
ஆர்
மொழியினால், அறையணி நல்லூர் முக்கண் மூர்த்திதன்
தாள் தொழக்
கெழுவினார் அவர், தம்மொடும் கேடு இல் வாழ் பதி
பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.078  
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,  
Tune - காந்தாரம்   (Location: திருவிளநகர் God: துறைகாட்டும்வள்ளநாதர் Goddess: தோழியம்மை)

ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண
ஆடையர்,
குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு
காவிரி
நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை
நண்ணினார்,
மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே.

[1]
மென் சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவிய
நன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன்,
சீர்
இன்பு உறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப்
போய்,
துன்பு உறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.079  
பவனம் ஆய், சோடை ஆய்,  
Tune - காந்தாரம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

பவனம் ஆய், சோடை ஆய், நா எழா, பஞ்சு தோய்ச்சு
அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல, நீ
வெள்கினாயே?
கவனம் ஆய்ப் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள
கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[1]
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர்
எல்லி அம்போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர், தீது இலார், ஓத நீர் வையகத்தே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.080  
வரிய மறையார், பிறையார், மலை  
Tune - காந்தாரம்   (Location: திருக்கடவூர் மயானம் God: பிரமபுரீசுவரர் Goddess: மலர்க்குழல்மின்னம்மை)

வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

[1]
மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,
அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப்
பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை,
இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.081  
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின்  
Tune - காந்தாரம்   (Location: திருவேணுபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.082  
பண் நிலாவிய மொழி உமை  
Tune - காந்தாரம்   (Location: திருத்தேவூர் God: தேவகுருநாதர் Goddess: தேன்மொழியம்மை)

பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான்,
விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி
தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர்
அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

[1]
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன்,
நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன்,
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.083  
நீல நல் மாமிடற்றன்; இறைவன்;  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருக்கொச்சைவயம் (சீர்காழி) God: Goddess: )

நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த,
நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள்,
திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு
ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு
கொச்சைவயமே.

[1]
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள்
ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா
இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா
இருப்பது அறிவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.084  
காரைகள், கூகை, முல்லை, கள,  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருநனிப்பள்ளி God: நற்றுணையப்பர் Goddess: பர்வதராசபுத்திரி)

காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர்
தொடரி, கள்ளி, கவினி;
சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய
சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள,
வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி
போலும்; நமர்கா

[1]
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி
என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி
ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்
இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை
கெடுதல் ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.085  
வேய் உறு தோளி பங்கன்,  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: Goddess: )

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[1]
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.086  
உரையினில் வந்த பாவம், உணர்  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருநாரையூர் God: சௌந்தரேசர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)

உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல்
தீங்கு குற்றம், உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
ஏத்தி, நித்தம் நினைமின்
வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர்
கங்குல், நங்கை வெருவ,
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே!

[1]
எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை
உள்கி நினையார்,
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழுவான்,
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானசம்பந்தன் உரை
மாலைபத்தும் மொழிவார்,
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது
என்பர், செம்மையினரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.087  
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) God: சித்தநாதேசர் Goddess: அழகாம்பிகையம்மை)

நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி அரியான்;
முன் ஆய ஒளியான்;
நீர் இயல், காலும் ஆகி, நிறை வானும் ஆகி, உறு தீயும்
ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சைப் பேணி, உலகங்கள் ஏத்த, நல்க
உண்டு, பண்டு, சுடலை,
நாரி ஓர் பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில்
நம்பன் அவனே.

[1]
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன்,
முந்தி உண
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில்
நம்பன் அவனை,
ஈனம் இலாத வண்ணம், இசையால் உரைத்த தமிழ் மாலை
பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர்; நிலம் எங்கும் நின்று வழிபாடு
செய்யும், மிகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.088  
துளி மண்டி உண்டு நிறம்  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: தென்திருமுல்லைவாயில் God: முல்லைவனநாதர் Goddess: கோதையம்மை)

துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன், நடம் மன்னு
துன்னு சுடரோன்,
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன், எங்கள்
அரன், ஊர்
களி மண்டு சோலை, கழனிக் கலந்த கமலங்கள் தங்கும்
மதுவின்
தெளி மண்டி உண்டு, சிறைவண்டு பாடு திரு முல்லை
வாயில் இதுவே.

[1]
அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்
செய்த எந்தை, மருவார்
திணி கொண்ட மூன்றுபுரம் எய்த வில்லி, திரு
முல்லைவாயில் இதன்மேல்,
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன்
ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர், அகல்வானம்
ஆள்வர், மிகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.089  
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருக்கொச்சைவயம் (சீர்காழி) God: Goddess: )

அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன் மேல்
பிறையும் சூடுவர்; மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத,
குறைவு இல் அந்தணர் வாழும், கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[1]
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அருமறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர்,
போய்,
முந்தி வானவரோடும் புக வலர்; முனை, கெட, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.090  
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருநெல்வாயில் அரத்துறை God: அரத்துறைநாதர் Goddess: ஆனந்தநாயகியம்மை)

எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[1]
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள் தம்(ம்)அருளை
முறைமையால் சொன்ன பாடல், மொழியும் மாந்தர் தம் வினை போய்ப்
பறையும், ஐயுறவு இல்லை, பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.091  
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)

பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை தவழ்
முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்
தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்,
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது, இகழ் பழி இலரே.

[1]
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு
அமர்ந்தாரைக்
கையினால் தொழுது எழுவான், காழியுள் ஞானசம்பந்தன்,
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார்,
போய்,
பொய் இல் வானவரோடும் புக வலர்; கொள வலர், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.092  
பட்டம், பால்நிற மதியம், படர்  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் God: வர்த்தமானீசுவரர் Goddess: கருந்தார்க்குழலியம்மை)

பட்டம், பால்நிற மதியம், படர் சடைச் சுடர் விடு பாணி,
நட்டம் நள் இருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில்,
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர், தொண்டர்
போற்றி
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சுரத்தாரே.

[1]
பொங்கு தண்புனல் சூழ்ந்து போது அணி பொழில்
புகலூரில்,
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சுரத்தாரை,
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ்பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள், எய்துவர், இமையவர் உலகே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.093  
புரை செய் வல்வினை தீர்க்கும்  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருத்தெங்கூர் God: வெள்ளிமலையீசுவரர் Goddess: பெரியாம்பிகையம்மை)

புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர்
போற்ற,
கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர்
புரங்கள்
இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு;
எழில் சேர்
விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[1]
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரை,
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல்,
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.094  
சாகை ஆயிரம் உடையார், சாமமும்  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருவாழ்கொளிபுத்தூர் God: மாணிக்கவண்ணநாதர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)

சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார்,
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்;
தோகை மா மயில் அனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[1]
நலம் கொள் பூம்பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர்
உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்,
நலம் கொள் சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.095  
பாடல் வண்டு அறை கொன்றை,  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) God: அரைசிலிநாதர் Goddess: பெரியம்மை)

பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல்
கங்கை,
கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி,
வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

[1]
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை, காழி
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை, நாளும்,
சொல்ல வல்லவர், தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த,
வல்ல வான் உலகு எய்தி, வைகலும் மகிழ்ந்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.096  
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை மார்பன்,
எம்பெருமான்,
செங்கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன், எம் சிவன்,
உறை கோயில்
பங்கம் இல் பலமறைகள் வல்லவர், பத்தர்கள், பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.

[1]
ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு...........

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.097  
நம் பொருள், நம் மக்கள்  
Tune - நட்டராகம்   (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து, நீர்,
அம்பரம் அடைந்து, சால அல்லல் உய்ப்பதன் முனம்
உம்பர் நாதன், உத்தமன், ஒளி மிகுத்த செஞ்சடை
நம்பன், மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்மினே!

[1]
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை
அக்கினோடு அரவு அசைத்த அந்திவண்ணர் காழியை,
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்,
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.098  
வரைத்தலைப் பசும் பொனோடு அருங்  
Tune - நட்டராகம்   (Location: திருத்துருத்தி God: வேதேசுவரர் Goddess: முகிழாம்பிகையம்மை)

வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி
வந்து
இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு
காவிரிக்
கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்!
உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு
வல்லமே??

[1]
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ்
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால்,
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே,
குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.099  
இன்று நன்று, நாளை நன்று  
Tune - நட்டராகம்   (Location: திருக்கோடி (கோடிக்கரை) God: கோடீசுவரர் Goddess: வடிவாம்பிகையம்மை)

இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்!
மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல்,
கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே!

[1]
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு மேவிய
செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்
பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.100  
படை கொள் கூற்றம் வந்து,  
Tune - நட்டராகம்   (Location: திருக்கோவலூர் வீரட்டம் God: வீரட்டானேசுவரர் Goddess: சிவானந்தவல்லியம்மை)

படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம்
விட்டபோதின்கண்,
இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே!
குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள்
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே.

[1]
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன்,
பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால்,
அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண்
கோவலூர்தனில்,
விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.101  
பருக் கை யானை மத்தகத்து  
Tune - நட்டராகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

பருக் கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக
நெருக்கி, வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தருக் கொள் சோலை சூழ, நீடு மாட மாளிகைக் கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர்
என்பதே.

[1]
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா
அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை,
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை
வல்ல தொண்டர், வானம் ஆள வல்லர், வாய்மை ஆகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.102  
அன்ன மென் நடை அரிவையோடு  
Tune - நட்டராகம்   (Location: திருச்சிரபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம்
பெருமானார்,
மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம்
தாம்
பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர்
ஆர்
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே.

[1]
பரசு பாணியை, பத்தர்கள் அத்தனை, பை அரவோடு அக்கு
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை, நித்திலப்
பெருந்தொத்தை,
விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை, விண்ணவர்
பெருமானை,
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.103  
புல்கு பொன் நிறம் புரி  
Tune - நட்டராகம்   (Location: திருஅம்பர்மாகாளம் God: காளகண்டேசுவரர் Goddess: பட்சநாயகியம்மை)

புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடிப் போழ் இளமதி
சூடி,
பில்கு தேன் உடை நறு மலர்க் கொன்றையும் பிணையல்
செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம்,
அல்லும் நண் பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை
அடையாவே.

[1]
மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை, ஏறு அமர் பெருமானை,
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.104  
பொடி கொள் மேனி வெண்  
Tune - நட்டராகம்   (Location: திருக்கடிக்குளம் God: கற்பகேசுவரர் Goddess: சவுந்தரநாயகியம்மை)

பொடி கொள் மேனி வெண் நூலினர், தோலினர், புலி உரி
அதள் ஆடை,
கொடி கொள் ஏற்றினர், மணி, கிணின் என வரு குரை
கழல் சிலம்பு ஆர்க்க,
கடி கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
கற்பகத்தை, தம்
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை
மூடாவே.

[1]
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல்
சம்பந்தன்
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அது ஆய்,
மகிழ்வோடும்,
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து
அமர்வானை,
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள், போய்
இறைவனோடு உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.105  
மின் உலாவிய சடையினர், விடையினர்,  
Tune - நட்டராகம்   (Location: திருக்கீழ்வேளூர் God: அட்சயலிங்கநாதர் Goddess: வனமுலைநாயகியம்மை)

மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும்
அரவோடும்
பன் உலாவிய மறைஒலி நாவினர், கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம்தாரினர், புகழ் மிகு
கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட, வீடு ஆமே.

[1]
குருண்ட வார் குழல் சடை உடைக் குழகனை, அழகு அமர்
கீழ்வேளூர்த்
திரண்ட மா மறையவர் தொழும் பெருந்திருக்கோயில்
எம்பெருமானை,
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன்
சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர், சிவகதி பெறுவது திடம்
ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.106  
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!  
Tune - நட்டராகம்   (Location: திருவலஞ்சுழி God: சித்தீசநாதர் Goddess: பெரியநாயகியம்மை)

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல்
வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,
முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.

[1]
மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல்
காழி
நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய
தமிழ்மாலை
ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர்
தம்மை
வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து
அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.107  
விருது குன்ற, மாமேரு வில்,  
Tune - நட்டராகம்   (Location: திருக்கேதீச்சரம் God: கேதீச்சுவரர் Goddess: கௌரிநாயகியம்மை)

விருது குன்ற, மாமேரு வில், நாண் அரவா, அனல் எரி
அம்பா,
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி
எந்நாளும்
கருதுகின்ற ஊர் கனைகடல் கடி கமழ் பொழில் அணி
மாதோட்டம்,
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ, கடுவினை அடையாவே.

[1]
மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர்
மாதோட்டத்து
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை,
அணி காழி
நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு
பாமாலைப்
பாடல் ஆயின பாடுமின், பத்தர்காள்! பரகதி பெறல் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.108  
வடி கொள் மேனியர், வான  
Tune - நட்டராகம்   (Location: திருவிற்குடிவீரட்டம் God: வீரட்டானேசுவரர் Goddess: மைவார்குழலியம்மை)

வடி கொள் மேனியர், வான மா மதியினர், நதியினர் மது
ஆர்ந்த
கடி கொள் கொன்றை அம் சடையினர், கொடியினர், உடை
புலி அதள் ஆர்ப்பர்,
விடை அது ஏறும் எம்மான், அமர்ந்து இனிது உறை
விற்குடி வீரட்டம்,
அடியர் ஆகி நின்று, ஏத்த வல்லார் தமை அருவினை
அடையாவே.

[1]
விலங்கலே சிலை இடம் என உடையவன்,
விற்குடிவீரட்டத்து
இலங்கு சோதியை, எம்பெருமான் தனை, எழில் திகழ் கழல்
பேணி,
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல்
தமிழ்மாலை
வலம் கொடே இசை மொழியுமின்! மொழிந்தக்கால், மற்று
அது வரம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.109  
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி  
Tune - நட்டராகம்   (Location: திருக்கோட்டூர் God: கொழுந்தீசுவரர் Goddess: தேன்மொழிப்பாவையம்மை)

நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே! ஒற்றை
விடைச்
சூலம் ஆர்தரு கையனே! துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து
அழகு ஆய
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதன் இடைப் புகழ் மிகத் தாங்குவர்,
பாங்காலே.

[1]
பந்து உலா விரல் பவளவாய்த் தேன் மொழிப்பாவையோடு
உரு ஆரும்
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர்
நற்கொழுந்தினை, செழும் பவளம்
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து
உரைசெய்த
சந்து உலாம் தமிழ்மாலைகள் வல்லவர் தாங்குவர்,
புகழாலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.110  
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,  
Tune - நட்டராகம்   (Location: திருமாந்துறை God: ஐராவணேசுவரர் Goddess: அழகாயமர்ந்தநாயகியம்மை)

செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி,
செண்பகம், ஆனைக்
கொம்பும், ஆரமும், மாதவி, சுரபுனை, குருந்து, அலர்
பரந்து உந்தி,
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை
உறைகின்ற
எம்பிரான், இமையோர் தொழு, பைங்கழல் ஏத்துதல்
செய்வோமே.

[1]
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
சிரபுரம்பதி உடையவன் கவுணியன், செழுமறை நிறை
நாவன்,
அர எனும் பணி வல்லவன், ஞானசம்பந்தன் அன்பு உறு
மாலை
பரவிடும் தொழில் வல்லவர், அல்லலும் பாவமும் இலர்
தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.111  
தளிர் இள வளர் என  
Tune - நட்டராகம்   (Location: திருவாய்மூர் God: வாய்மூரீசுவரர் Goddess: பாலினுநன்மொழியம்மை)

தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர்
கழல் வீசி,
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக்
கிறிமையார்;
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு
அணிந்து, ஓர் சென்னியின் மேல்
வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[1]
திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத் தேன் நலம்
கானல் அம் திரு வாய்மூர்,
அங்கமொடு அருமறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்தம்
அடி பரவி,
நங்கள் தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன்
தமிழ் மாலை
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி,
உலகுக்கு ஓர் தவநெறியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.112  
மாது ஓர் கூறு உகந்து,  
Tune - நட்டராகம்   (Location: திருவாடானை God: ஆதிரத்தினேசுவரர் Goddess: அம்பாயிரவல்லியம்மை)

மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து, ஏத்துவார் தமை
வாதியா வினை மாயுமே.

[1]
வீடினார் மலி வெங்கடத்து நின்று
ஆடலான் உறை ஆடானை
நாடி, ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட, நோய் பிணி பாறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.113  
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி  
Tune - செவ்வழி   (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

பொடி இலங்கும் திருமேனியாளர், புலி அதளினர்,
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள்(ள்), இடம்
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க(வ்) எறி வார் திரைக்
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே.

[1]
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியு
உரகம் ஆரும் சடை அடிகள் தம்பால் உணர்ந்து
உறுதலால்,
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு, இசை
ஆர் தமிழ்
விரகன் சொன்ன இவை பாடி ஆட, கெடும், வினைகளே

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.114  
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு  
Tune - செவ்வழி   (Location: திருக்கேதாரம் God: கேதாரேசுவரர் Goddess: கௌரியம்மை)

தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக்
கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.

[1]
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான்,
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர்,
வேந்தர் ஆகி உலகு ஆண்டு, வீடுகதி பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.115  
வெங் கள் விம்மு குழல்  
Tune - செவ்வழி   (Location: திருப்புகலூர் God: வர்த்தமானீசுவரர் Goddess: கருந்தார்க்குழலியம்மை)

வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட(வ்) வெறி விரவு
நீர்ப்
பொங்கு செங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள் சூடி, திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ, நாளும்(ம்), இடர் கழியுமே.

[1]
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பல்பொடிப் பூச வல்ல விடை ஊர்தியை,
அந்தம் இல்லா அனல் ஆடலானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.116  
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)  
Tune - செவ்வழி   (Location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) God: காயாரோகணேசுவரர் Goddess: நீலாயதாட்சியம்மை)

கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) நெடு வெண் நிலா,
வேனல் பூத்த(ம்) மராம் கோதையோடும் விராவும் சடை,
வான நாடன், அமரர் பெருமாற்கு இடம் ஆவது
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[1]
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான்
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.117  
மண்டு கங்கை சடையில் கரந்தும்,  
Tune - செவ்வழி   (Location: திருஇரும்பைமாகாளம் God: மாகாளேசுவரர் Goddess: குயிலம்மை)

மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான்
கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம்
எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்,
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.

[1]
எந்தை பெம்மான் இடம், எழில் கொள் சோலை
இரும்பைதனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில்,
அந்தம் இல்லா அனல் ஆடுவானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.118  
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,  
Tune - செவ்வழி   (Location: திருதிலதைப்பதி (மதிமுத்தம்) God: மதிமுத்தநாதேசுவரர் Goddess: பொற்கொடியம்மை)

பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே,
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,
வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.

[1]
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்) மதிமுத்தர்மேல்,
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்
பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச்
சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.119  
தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,  
Tune - செவ்வழி   (Location: திருநாகேச்சுரம் God: செண்பகாரணியேசுவரர் Goddess: குன்றமுலைநாயகியம்மை)

தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின்
பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை,
நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

[1]
கந்தம் நாறும் புனல் காவிரித் தென்கரை, கண்ணுதல்
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல், ஞானசம்
பந்தன் நாவில் பனுவல்(ல்) இவைபத்தும் வல்லார்கள்,
போய்,
எந்தை ஈசன் இருக்கும்(ம்) உலகு எய்த வல்லார்களே

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.120  
சாந்தம் வெண்நீறு எனப் பூசி,  
Tune - செவ்வழி   (Location: திருமூக்கீச்சுரம் (உறையூர்) God: Goddess: )

சாந்தம் வெண்நீறு எனப் பூசி, வெள்ளம் சடை வைத்தவர்,
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டு, ஆங்கு அறிய(ந்) நிறைந்தார் அவர்
ஆர்கொலோ?
வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர்
மெய்ம்மையே.

[1]
மல்லை ஆர் மும் முடிமன்னர் மூக்கீச்சுரத்து அடிகளைச்
செல்வர் ஆக நினையும் படி சேர்த்திய செந்தமிழ்,
நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன்
சொல்ல வல்லார் அவர், வான் உலகு ஆளவும் வல்லரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.121  
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு  
Tune - செவ்வழி   (Location: திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) God: தோன்றாத்துணையீசுவரர் Goddess: தோகையம்பிகையம்மை)

முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து, நீள
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள்,
பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே

[1]
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தன், நல்லார் பயில் பாதிரிப்புலியூர்தனுள்
சந்த மாலைத்தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்,
வந்து தீய(வ்) அடையாமையால், வினை மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 - Thirumurai   Pathigam 2.122  
விடை அது ஏறி, வெறி  
Tune - செவ்வழி   (Location: திருப்புகலி -(சீர்காழி ) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)

விடை அது ஏறி, வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்,
படை அது ஆகப் பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார், குலமும்(ம்) உயர்ந்த(ம்) மறையோர்கள் தாம்
புடை கொள் வேள்விப்புகை உம்பர் உலாவும் புகலியே.

[1]
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில்
எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே.

[11]

This page was last modified on Sun, 10 Mar 2024 22:40:27 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai number