சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

7.001 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்  (திருவெண்ணெய்நல்லூர்)  
7.002 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;  (திருப்பரங்குன்றம்)  
7.003 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கல்வாய் அகிலும் கதிர் மா  (திருநெல்வாயில் அரத்துறை)  
7.004 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தலைக்குத் தலை மாலை அணிந்தது  (திருஅஞ்சைக்களம்)  
7.005 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நெய்யும் பாலும் தயிரும் கொண்டு  (திருஓணகாந்தன்தளி)  
7.006 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -படம் கொள் நாகம் சென்னி  (திருவெண்காடு)  
7.007 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மத்தயானை ஏறி, மன்னர் சூழ  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))  
7.008 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு  (திருவாரூர்)  
7.009 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)  
7.010 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தேன் நெய் புரிந்து உழல்  (திருக்கச்சிஅனேகதங்காவதம்)  
7.011 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -திரு உடையார், திருமால் அயனாலும்  (திருப்பூவணம்)  
7.012 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த  (திருவாரூர்)  
7.013 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மலை ஆர் அருவித்திரள் மா  (திருத்துறையூர் (திருத்தளூர்))  
7.014 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வைத்தனன் தனக்கே, தலையும் என்  (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))  
7.015 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பூண் நாண் ஆவது ஓர்  (திருநாட்டியத்தான்குடி)  
7.016 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -குரும்பை முலை மலர்க் குழலி  (கலயநல்லூர் (சாக்கோட்டை))  
7.017 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கோவலன் நான்முகன் வானவர் கோனும்  (திருநாவலூர் (திருநாமநல்லூர்))  
7.018 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;  (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)  
7.019 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை  (திருநின்றியூர்)  
7.020 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நீள நினைந்து அடியேன் உமை  (திருக்கோளிலி (திருக்குவளை))  
7.021 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;  (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்))  
7.022 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முன்னவன், எங்கள் பிரான், முதல்  (திருப்பழமண்ணிப்படிக்கரை)  
7.023 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,  (திருக்கழிப்பாலை)  
7.024 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் ஆர் மேனியனே! புலித்தோலை  (திருமழபாடி)  
7.025 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
7.026 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -செண்டு ஆடும் விடையாய்! சிவனே!  (திருக்காளத்தி)  
7.027 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -விடை ஆரும் கொடியாய்! வெறி  (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))  
7.028 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொடி ஆர் மேனியனே! புரி  (திருக்கடவூர் வீரட்டம்)  
7.029 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்;  (திருக்குருகாவூர் வெள்ளடை)  
7.030 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து  (கருப்பறியலூர் (தலைஞாயிறு))  
7.031 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்  (திருவிடையாறு)  
7.032 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கடிது ஆய்க் கடல் காற்று  (திருக்கோடிக்குழகர்)  
7.033 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?  (திருவாரூர்)  
7.034 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்  (திருப்புகலூர்)  
7.035 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி  (திருப்புறம்பயம்)  
7.036 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கார் உலாவிய நஞ்சை உண்டு  (திருப்பைஞ்ஞீலி)  
7.037 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -குருகு பாய, கொழுங் கரும்புகள்  (திருவாரூர்)  
7.038 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தம்மானை அறியாத சாதியார் உளரே?  (திருவதிகை வீரட்டானம்)  
7.039 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தில்லை வாழ் அந்தணர் தம்  (திருவாரூர்)  
7.040 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வள் வாய மதி மிளிரும்  (திருக்கானாட்டுமுள்ளூர்)  
7.041 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முது வாய் ஓரி கதற,  (திருக்கச்சூர் ஆலக்கோயில்)  
7.042 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -எறிக்கும் கதிர் வேய் உரி  (திருவெஞ்சமாக்கூடல்)  
7.043 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நஞ்சி, இடை இன்று நாளை  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
7.044 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது  (திருஅஞ்சைக்களம்)  
7.045 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்  (திருஆமாத்தூர்)  
7.046 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பத்து ஊர் புக்கு, இரந்து,  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
7.047 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!  (திருவாரூர்)  
7.048 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மற்றுப் பற்று எனக்கு இன்றி,  (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம்)  
7.049 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,  (திருமுருகன்பூண்டி)  
7.050 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -சித்தம்! நீ நினை! என்னொடு  (திருப்புனவாயில்)  
7.051 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்  (திருவாரூர்)  
7.052 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முத்தா! முத்தி தர வல்ல  (திருவாலங்காடு (பழையனூர்))  
7.053 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மரு ஆர் கொன்றை மதி  (திருக்கடவூர் மயானம்)  
7.054 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அழுக்கு மெய் கொடு உன்  (திருவொற்றியூர்)  
7.055 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,  (திருப்புன்கூர்)  
7.056 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஊர்வது ஓர் விடை ஒன்று  (திருநீடூர்)  
7.057 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை  (திருவாழ்கொளிபுத்தூர்)  
7.058 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை  (சீர்காழி)  
7.059 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்  (திருவாரூர்)  
7.060 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கழுதை குங்குமம் தான் சுமந்து  (திருவிடைமருதூர்)  
7.061 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஆலம் தான் உகந்து அமுது  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
7.062 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -புற்றில் வாள் அரவு ஆர்த்த  (திருக்கோலக்கா)  
7.063 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மெய்யை முற்றப் பொடிப் பூசி  (பொது -திருமுதுகுன்றம்)  
7.064 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நீறு தாங்கிய திரு நுதலானை,  (திருத்தினைநகர் (தீர்த்தனகிரி))  
7.065 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -திருவும், வண்மையும், திண் திறல்  (திருநின்றியூர்)  
7.066 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மறையவன்(ன்) ஒரு மாணி வந்து  (திருவாவடுதுறை)  
7.067 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,  (திருவலிவலம்)  
7.068 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -செம்பொன் மேனி வெண் நீறு  (திருநள்ளாறு)  
7.069 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -திருவும் மெய்ப் பொருளும் செல்வமும்,  (வடதிருமுல்லைவாயில்)  
7.070 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!  (திருவாவடுதுறை)  
7.071 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -யாழைப் பழித் தன்ன மொழி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
7.072 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -எனக்கு இனித் தினைத்தனைப் புகல்  (திருவலம்புரம்)  
7.073 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கரையும், கடலும், மலையும், காலையும்,  (திருவாரூர்)  
7.074 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மின்னும் மா மேகங்கள் பொழிந்து  (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)  
7.075 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மறைகள் ஆயின நான்கும், மற்று  (திருவானைக்கா)  
7.076 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொருவனார்; புரிநூலர்; புணர் முலை  (திருவாஞ்சியம்)  
7.077 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பரவும் பரிசு ஒன்று அறியேன்  (திருவையாறு)  
7.078 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வாழ்வு ஆவது மாயம்(ம்); இது  (திருக்கேதாரம்)  
7.079 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மானும், மரை இனமும், மயில்  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))  
7.080 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நத்தார் புடை ஞானன்; பசு  (திருக்கேதீச்சரம்)  
7.081 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கொன்று செய்த கொடுமையால் பல,  (திருக்கழுக்குன்றம்)  
7.082 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஊன் ஆய், உயிர் புகல்  (திருச்சுழியல் (திருச்சுழி))  
7.083 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,  (திருவாரூர்)  
7.084 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,  (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்))  
7.085 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வடிவு உடை மழு ஏந்தி,  (திருக்கூடலையாற்றூர்)  
7.086 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -விடையின் மேல் வருவானை; வேதத்தின்  (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்))  
7.087 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்  (திருப்பனையூர்)  
7.088 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்  (திருவீழிமிழலை)  
7.089 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பிழை உளன பொறுத்திடுவர் என்று  (திருவெண்பாக்கம் (பூண்டி))  
7.090 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,  (கோயில் (சிதம்பரம்))  
7.091 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பாட்டும் பாடிப் பரவித் திரிவார்  (திருவொற்றியூர்)  
7.092 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?  (திருப்புக்கொளியூர் (அவிநாசி))  
7.093 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நீரும் மலரும் நிலவும் சடைமேல்  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
7.094 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அழல் நீர் ஒழுகியனைய சடையும்,  (திருச்சோற்றுத்துறை)  
7.095 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மீளா அடிமை உமக்கே ஆள்  (திருவாரூர்)  
7.096 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தூ வாயா! தொண்டு செய்வார்  (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி)  
7.097 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்  (திருநனிப்பள்ளி)  
7.098 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தண் இயல் வெம்மையினான்; தலையில்  (திருநன்னிலத்துப்பெருங்கோயில்)  
7.099 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பிறை அணி வாள் நுதலாள்  (திருநாகேச்சரம்)  
7.100 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தான் எனை முன் படைத்தான்;  (திருக்கயிலாயம்)  
7.101 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் ஆம் இதழி விரை  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.001  
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்  
Tune - இந்தளம்.   (Location: திருவெண்ணெய்நல்லூர் God: தடுத்தாட்கொண்டவீசுவரர் Goddess: வேற்கண்மங்கையம்மை)

பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[1]
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி,
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.002  
கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;  
Tune - இந்தளம்   (Location: திருப்பரங்குன்றம் God: பரங்கிரிநாதர் Goddess: ஆவுடைநாயகியம்மை)

கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; உம்மைக் கொண்டு உழல்கின்றது ஓர், கொல்லைச் சில்லை,
சே, திட்டுக் குத்தித் தெருவே திரியும்; சில பூதமும் நீரும் திசை திசையன;
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ, நும் அரைக் கோவணத்தோடு ஒரு தோல் புடைசூழ்ந்து,
ஆர்த்திட்டதும் பாம்பு; கைக் கொண்டதும் பாம்பு அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .

[1]
பாரோடு விண்ணும் பகலும் ஆகி, பனி மால்வரை ஆகி, பரவை ஆகி,
நீரோடு தீயும் நெடுங் காற்றும் ஆகி, நெடு வெள்ளிடை ஆகி, நிலனும் ஆகி,
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர்; உம் செய்கை எல்லாம்
ஆரோடும் கூடா; அடிகேள்! இது என்? அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.003  
கல்வாய் அகிலும் கதிர் மா  
Tune - இந்தளம்   (Location: திருநெல்வாயில் அரத்துறை God: அரத்துறைநாதர் Goddess: ஆனந்தநாயகியம்மை)

கல்வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிவவின் கரை மேல்
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும், நில வெண்மதி சூடிய, நின்மலனே!
நல் வாய் இல்செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார், இறந்தார் என்று நானிலத்தில்
சொல் ஆய்க் கழிகின்றது அறிந்து, அடியேன் தொடர்ந்தேன்; உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .

[1]
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனைத்
தேர் ஊர் நெடுவீதி நல் மாடம் மலி தென் நாவலர் கோன்-அடித்தொண்டன், அணி
ஆரூரன்-உரைத்தன நல்-தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார்
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர்-அவர் ஆகி, ஓர் விண்முழுது ஆள்பவரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.004  
தலைக்குத் தலை மாலை அணிந்தது  
Tune - இந்தளம்   (Location: திருஅஞ்சைக்களம் God: அஞ்சைக்களத்தீசுவரர் Goddess: உமையம்மை)

தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே? சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே?
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே? அதன் மேல் கதநாகம் கச்சு   ஆர்த்தது என்னே?
மலைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு,
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து  அப்பனே! .

[1]
எம் தம்(ம்) அடிகள், இமையோர் பெருமான், எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன்,
அம் தண்கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து  அப்பனை,
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர் கோன்-நம்பி ஊரன்-சொன்ன
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.005  
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு  
Tune - இந்தளம்   (Location: திருஓணகாந்தன்தளி God: ஓணகாந்தீசுவரர் Goddess: காமாட்சியம்மை)

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்;
கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்;
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு,
உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே!.

[1]
ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம்
ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி,
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.006  
படம் கொள் நாகம் சென்னி  
Tune - இந்தளம்   (Location: திருவெண்காடு God: சுவேதாரணியேசுவரர் Goddess: பிரமவித்தியாநாயகியம்மை)

படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி,
அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்;
மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

[1]
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தன் ஆய வேதன் தன்னை, விரி பொழில் சூழ் நாவலூரன்-
அருத்தியால் ஆரூரன் தொண்டன், அடியன்-கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர், வான் உளாரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.007  
மத்தயானை ஏறி, மன்னர் சூழ  
Tune - இந்தளம்   (Location: எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) God: அயிராவதேசுவரர் Goddess: வாசமலர்க்குழன்மாதம்மை)

மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்!
செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்!
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின், மனத்தீரே!
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .

[1]
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்;
மருது கீறி ஊடு போன மால், அயனும், அறியா,
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்;
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.008  
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு  
Tune - இந்தளம்   (Location: திருவாரூர் God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)

இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு,
பறை கிழித்தனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு,
திறை கொணர்ந்து ஈண்டி, தேவர், செம்பொனும் மணியும் தூவி,
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே.

[1]
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன், தடமுலைக்கண்
அம் சொலார் பயிலும் ஆரூர் அப்பனை, ஊரன் அஞ்சி
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்,
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.009  
மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை  
Tune - இந்தளம்   (Location: திருஅரிசிற்கரைப்புத்தூர் God: படிக்காசுவைத்தவீசுவரர் Goddess: அழகம்மை)

மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை உரித்தீர்; எரித்தீர், வரு முப்புரங்கள்;
சிலைக்கும் கொலைச் சே உகந்து ஏறு ஒழியீர்; சில்பலிக்கு இல்கள் தொறும் செலவு ஒழியீர்
கலைக் கொம்பும் கரி மருப்பும்(ம்) இடறி, கலவம் மயில் பீலியும் கார் அகிலும்
அலைக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே! .

[1]
கடிக்கும்(ம்) அரவால் மலையால் அமரர் கடலைக் கடைய, எழு காளகூடம்
ஒடிக்கும்(ம்), உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர்; உமிழீர்
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு, அருவி இருபாலும் ஓடி, இரைக்கும் திரைக் கை
அடிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.010  
தேன் நெய் புரிந்து உழல்  
Tune - இந்தளம்   (Location: திருக்கச்சிஅனேகதங்காவதம் God: காவதேசுவரர் Goddess: காமாட்சியம்மை)

தேன் நெய் புரிந்து உழல் செஞ்சடை எம்பெருமானது இடம்; திகழ் ஐங்கணை அக்
கோனை எரித்து எரி ஆடி இடம்; குலவானது இடம்; குறையா மறை ஆம்
மானை இடத்தது ஓர் கையன் இடம்; மதம் மாறுபடப் பொழியும் மலை போல்
யானை உரித்த பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

[1]
வீடு பெறப் பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம்; வினை தீரும் இடம்;
பீடு பெறப் பெரியோர் திடம் கொண்டு மேவினர் தங்களைக் காக்கும் இடம்;
பாடும் இடத்து அடியான், புகழ் ஊரன், உரைத்த இம் மாலைகள் பத்தும் வல்லார்
கூடும் இடம்; சிவலோகன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.011  
திரு உடையார், திருமால் அயனாலும்  
Tune - இந்தளம்   (Location: திருப்பூவணம் God: பூவணநாதர் Goddess: மின்னாம்பிகையம்மை)

திரு உடையார், திருமால் அயனாலும்
உரு உடையார், உமையாளை ஒர்பாகம்
பரிவு உடையார், அடைவார் வினை தீர்க்கும்
புரிவு உடையார், உறை பூவணம் ஈதோ! .

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.012  
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த  
Tune - இந்தளம்   (Location: திருவாரூர் God: Goddess: )

வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்,
கூழை ஏறு உகந்தான், இடம் கொண்டதும் கோவலூர்,
தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம்,
வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே .

[1]
மை கொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணன், வலஞ்சுழி
பை கொள் வாள் அரவு ஆட்டித் திரியும் பரமன், ஊர்
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திருப் புன்கூர், நன்று
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.013  
மலை ஆர் அருவித்திரள் மா  
Tune - தக்கராகம்   (Location: திருத்துறையூர் (திருத்தளூர்) God: துறையூரப்பர் Goddess: பூங்கோதையம்மை)

மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி,
குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த்
தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

[1]
மா வாய் பிளந்தானும், மலர் மிசையானும்,
ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்;
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.014  
வைத்தனன் தனக்கே, தலையும் என்  
Tune - தக்கராகம்   (Location: திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) God: மாற்றறிவரதர் Goddess: பாலசுந்தரியம்மை)

வைத்தனன் தனக்கே, தலையும் என் நாவும் நெஞ்சமும்; வஞ்சம் ஒன்று இன்றி
உய்த்தனன் தனக்கே, திருவடிக்கு அடிமை; உரைத்தக்கால், உவமனே ஒக்கும்;
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பித்தரே ஒத்து ஓர் நச்சிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[1]
துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும் தோற்றமும் சிந்தித்துக் காணில்,
மணிப் படு கண்டனை வாயினால் கூறி, மனத்தினால்-தொண்டனேன் நினைவேன்;
பணிப் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்,
பிணிப்பட ஆண்டு, பணிப்பு இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.015  
பூண் நாண் ஆவது ஓர்  
Tune - தக்கராகம்   (Location: திருநாட்டியத்தான்குடி God: கரிநாதேசுவரர் Goddess: மலர்மங்கையம்மை)

பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன்; புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்;
பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்; பிறவேன் ஆகிலும் மறவேன்;
காணீர் ஆகிலும் காண்பன், என் மனத்தால்; கருதீர் ஆகிலும், கருதி,
நானேல், உம் அடி பாடுதல் ஒழியேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .

[1]
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன், கோட்புலி, சென்னி
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான் குடி நம்பியை நாளும் மறவா,
சேடு ஆர் பூங்குழல் சிங்கடி அப்பன்-திரு ஆரூரன்-உரைத்த,
பாடீர் ஆகிலும், பாடுமின், தொண்டீர்! பாட, நும் பாவம் பற்று அறுமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.016  
குரும்பை முலை மலர்க் குழலி  
Tune - தக்கராகம்   (Location: கலயநல்லூர் (சாக்கோட்டை) God: அமிர்தகலைநாதர் Goddess: அமிர்தவல்லியம்மை)

குரும்பை முலை மலர்க் குழலி கொண்ட தவம் கண்டு, குறிப்பினொடும் சென்று, அவள்  தன் குணத்தினை நன்கு அறிந்து,
விரும்பு வரம் கொடுத்து, அவளை வேட்டு, அருளிச்செய்த விண்ணவர்கோன்; கண்  நுதலோன்; மேவிய ஊர் வினவில்
அரும்பு அருகே சுரும்பு அருவ, அறுபதம் பண் பாட, அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில்
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும், கழனிக் கமலங்கள் முகம் மலரும், கலய    நல்லூர் காணே .

[1]
தண் கமலப் பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில்-தடம் கொள் பெருங் கோயில்தனில்,-தக்க வகையாலே
வண் கமலத்து அயன் முன் நாள் வழிபாடு செய்ய, மகிழ்ந்து அருளி இருந்த பரன்   மருவிய ஊர் வினவில்
வெண் கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல்,
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு, கலய நல்லூர் காணே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.017  
கோவலன் நான்முகன் வானவர் கோனும்  
Tune - நட்டராகம்   (Location: திருநாவலூர் (திருநாமநல்லூர்) God: நாவலீசுவரர் Goddess: சுந்தராம்பிகை)

கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய,
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்;
ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

[1]
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்;
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும் கொண்டார்;
தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.018  
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;  
Tune - நட்டராகம்   (Location: திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் God: Goddess: )

மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை;
சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால்,
காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

[1]
கூடலர் மன்னன், குல நாவலூர்க் கோன், நலத் தமிழைப்
பாட வல்ல(ப்) பரமன்(ன்) அடியார்க்கு அடிமை வழுவா
நாட வல்ல(த்) தொண்டன், ஆரூரன், ஆட்படும் ஆறு சொல்லிப்
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.019  
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை  
Tune - நட்டராகம்   (Location: திருநின்றியூர் God: மகாலட்சுமியீசுவரர் Goddess: உலகநாயகியம்மை)

அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்;
பற்றவனார்; எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால்
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

[1]
வாயார், மனத்தால் நினைக்குமவருக்கு; அருந்தவத்தில்-
தூயார்; சுடுபொடி ஆடிய மேனியர்; வானில் என்றும்
மேயார்; விடை உகந்து ஏறிய வித்தகர்; பேர்ந்தவர்க்குச்
சேயார்; அடியார்க்கு அணியவர்; ஊர் திரு நின்றியூரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.020  
நீள நினைந்து அடியேன் உமை  
Tune - நட்டராகம்   (Location: திருக்கோளிலி (திருக்குவளை) God: கோளிலிநாதர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்;
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .

[1]
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன்
நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.021  
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;  
Tune - நட்டராகம்   (Location: திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) God: திருமேற்றளியீசுவரர் Goddess: காமாட்சியம்மை)

நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற
சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும்
எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .

[1]
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச்
சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை
ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.022  
முன்னவன், எங்கள் பிரான், முதல்  
Tune - நட்டராகம்   (Location: திருப்பழமண்ணிப்படிக்கரை God: நீலகண்டேசுவரர் Goddess: வடிக்கண்ணமுதகரநாயகியம்மை)

முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான்,
சென்னியில் எங்கள் பிரான், திரு நீல மிடற்று எம்பிரான்,
மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான்-பழமண்ணிப் படிக் கரையே .

[1]
பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை
அல்லி அம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்த தமிழ்
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும்,
எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.023  
செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,  
Tune - நட்டராகம்   (Location: திருக்கழிப்பாலை God: பால்வண்ணநாதர் Goddess: பொற்பதவேதநாயகியம்மை)

செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
அடியான்; ஆவா! எனாது ஒழிதல் தகவு ஆமே?
முடிமேல் மா மதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே .

[1]
பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி,
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை,
தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.024  
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை  
Tune - நட்டராகம்   (Location: திருமழபாடி God: வச்சிரத்தம்பநாதர் Goddess: அழகம்மை)

பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து,
மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

[1]
ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை,
வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை,
சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.025  
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை  
Tune - நட்டராகம்   (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)

பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;
முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்;
மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே,
என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?.

[1]
பிறை ஆரும் சடை எம்பெருமான்! அருளாய் என்று,
முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை
மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.026  
செண்டு ஆடும் விடையாய்! சிவனே!  
Tune - நட்டராகம்   (Location: திருக்காளத்தி God: காளத்திநாதர் Goddess: ஞானப்பூங்கோதையம்மை)

செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே!
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே!
கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்!
அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

[1]
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள்
ஆரா இன்னமுதை, அணி நாவல் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார், வினை ஆயின போய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார்; பிழைப்பு ஒன்று இலரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.027  
விடை ஆரும் கொடியாய்! வெறி  
Tune - நட்டராகம்   (Location: திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) God: உச்சிவரதநாயகர் Goddess: அஞ்சனாட்சியம்மை)

விடை ஆரும் கொடியாய்! வெறி ஆர் மலர்க் கொன்றையினாய்!
படை ஆர் வெண்மழுவா! பரம் ஆய பரம்பரனே!
கடி ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அடிகேள்! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

[1]
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து, அழகு ஆகி, விழவு அமரும்
கலை ஆர் மா தவர் சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலை ஆர் வாள் நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூ உலகு ஆள்பவரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.028  
பொடி ஆர் மேனியனே! புரி  
Tune - நட்டராகம்   (Location: திருக்கடவூர் வீரட்டம் God: அமிர்தகடேசுவரர் Goddess: அபிராமியம்மை)

பொடி ஆர் மேனியனே! புரி நூல் ஒருபால் பொருந்த,
வடி ஆர் மூ இலை வேல், வளர் கங்கை இன் மங்கையொடும்,
கடி ஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[1]
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர்த் திரு வீரட்டத்துள்
ஏர் ஆரும்(ம்) இறையைத் துணையா எழில் நாவலர்கோன்-
ஆரூரன்(ன்) அடியான், அடித்தொண்டன்-உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.029  
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்;  
Tune - நட்டராகம்   (Location: திருக்குருகாவூர் வெள்ளடை God: வெள்ளிடையப்பர் Goddess: காவியங்கண்ணியம்மை)

இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்!
பித்தனே என்று உன்னைப் பேசுவார், பிறர் எல்லாம்;
முத்தினை, மணி தன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த
வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே; .

[1]
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை,
இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்-
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.030  
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து  
Tune - நட்டராகம்   (Location: கருப்பறியலூர் (தலைஞாயிறு) God: குற்றம்பொறுத்தவீசுவரர் Goddess: கோல்வளைநாயகியம்மை)

சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம்
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவக் கண்டானை; கருப்பறியலூர்,
கொய்ம் மாவின் மலர்ச் சோலைக் குயில் பாட மயில் ஆடும், கொகுடிக் கோயில்
எம்மானை; மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

[1]
பண் தாழ் இன் இசை முரலப் பல்-நாளும் பாவித்துப் பாடி ஆடிக்
கண்டார் தம் கண் குளிரும் களிக் கமுகம் பூஞ்சோலைக் கருப்பறியலூர்
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம் கூறும் கொகுடிக் கோயில்
எண் தோள் எம்பெருமானை நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.031  
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்  
Tune - கொல்லி   (Location: திருவிடையாறு God: Goddess: )

முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம்,
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர்,
பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி,
எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடை மருதே.

[1]
ஊறி வாயினன், நாடிய வன் தொண்டன்-ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள் ஏறு
ஏறுவார் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக்
கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.032  
கடிது ஆய்க் கடல் காற்று  
Tune - கொல்லி   (Location: திருக்கோடிக்குழகர் God: அமுதகடநாதர் Goddess: மையார்தடங்கணம்மை)

கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல்
குடி தான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ?
கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்!
அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே?

[1]
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால்
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார்
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர் தாமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.033  
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?  
Tune - கொல்லி   (Location: திருவாரூர் God: Goddess: )

பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? மலைப் பாவை ஓர்-
கூறு தாங்கிய குழகரோ? குழைக் காதரோ? குறுங் கோட்டு இள
ஏறு தாங்கிய கொடியரோ? சுடு பொடியரோ? இலங்கும் பிறை
ஆறு தாங்கிய சடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

[1]
படி செய் நீர்மையின் பத்தர்காள்! பணிந்து ஏத்தினேன்; பணியீர், அருள்!
வடிவு இலான் திரு நாவலூரான்-வனப்பகை அப்பன், வன் தொண்டன்,
செடியன் ஆகிலும் தீயன் ஆகிலும் தம்மையே மனம் சிந்திக்கும்
அடியன்-ஊரனை ஆள்வரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.034  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்  
Tune - கொல்லி   (Location: திருப்புகலூர் God: அக்கினியீசுவரர் Goddess: கருந்தார்க்குழலியம்மை)

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[1]
தையலாருக்கு ஒர் காமனே! என்றும், சால நல அழகு உடை ஐயனே!
கை உலாவிய வேலனே! என்று, கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.035  
அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி  
Tune - கொல்லி   (Location: திருப்புறம்பயம் God: சாட்சிவரதேசுவரர் Goddess: கரும்படுசொல்லம்மை)

அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த்
தங்கினோமையும், இன்னது என்றிலர், ஈசனார்; எழு, நெஞ்சமே!
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி, வானவர்தாம் தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே.

[1]
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை
அஞ்சி, ஊரன் திருப் புறம்பயத்து அப்பனைத் தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே, புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர், வல்லர், வான் உலகு ஆளவே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.036  
கார் உலாவிய நஞ்சை உண்டு  
Tune - கொல்லி   (Location: திருப்பைஞ்ஞீலி God: மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் Goddess: விசாலாட்சியம்மை)

கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட! வெண் தலை ஓடு கொண்டு,
ஊர் எலாம் திரிந்து, என் செய்வீர்? பலி ஓர் இடத்திலே கொள்ளும், நீர்!
பார் எலாம் பணிந்து உம்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்!
ஆரம் ஆவது நாகமோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

[1]
கை ஒர் பாம்பு, அரை ஆர்த்த ஒர் பாம்பு, கழுத்து ஒர் பாம்பு, அவை பின்பு தாழ்
மெய் எலாம் பொடிக் கொண்டு பூசுதிர்; வேதம் ஓதுதிர்; கீதமும்
பையவே விடங்கு ஆக நின்று, பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள் நீர்;
ஐயம் ஏற்குமிது என் கொலோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.037  
குருகு பாய, கொழுங் கரும்புகள்  
Tune - கொல்லி   (Location: திருவாரூர் God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)

குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரைப்
பருகும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், நினைந்து
உருகும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே?.

[1]
கூடும் அன்னப் பெடைகாள்! குயில்! வண்டுகாள்!
ஆடும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரரைப்
பாடும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், கூடி
ஊடும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.038  
தம்மானை அறியாத சாதியார் உளரே?  
Tune - கொல்லிக்கௌவாணம்   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன்,
கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை, கறை  கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால்  வாழ்கின்ற அறிவு இலா நாயேன்-
எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறை போதும் இகழ்வன் போல்  யானே! .

[1]
என்பினையே கலன் ஆக அணிந்தானை, எங்கள் எருது ஏறும் பெருமானை, இசை      ஞானி சிறுவன்-
வன் பனைய வளர் பொழில் சூழ் வயல் நாவலூர்க்கோன், வன்தொண்டன், ஆரூரன்-   மதியாது சொன்ன
அன்பனை, யாவர்க்கும் அறிவு அரிய அத்தர்-பெருமானை, அதிகை மா நகருள்    வாழ்பவனை,
என் பொன்னை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன்  போல் யானே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.039  
தில்லை வாழ் அந்தணர் தம்  
Tune - கொல்லிக்கௌவாணம்   (Location: திருவாரூர் God: Goddess: )

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[1]
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்;
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்;
திரு ஆரூர்ப் பிறந்தார்கள்  எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.040  
வள் வாய மதி மிளிரும்  
Tune - கொல்லிக்கௌவாணம்   (Location: திருக்கானாட்டுமுள்ளூர் God: பதஞ்சலியீசுவரர் Goddess: கானார்குழலம்மை)

வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை, மறையவனை, வாய்மொழியை, வானவர் தம் கோனை,
புள் வாயைக் கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை, பொன்நிறத்தின் முப்புரிநூல் நான்  முகத்தினானை,
முள் வாய மடல்-தழுவி, முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து, விரை நாறும் முருகு விரி  பொழில் சூழ்,
கள் வாய கருங்குவளை கண் வளரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

[1]
தேவி, அம்பொன்மலைக்கோமன் தன் பாவை, ஆகத் தனது உருவம் ஓருபாகம்    சேர்த்துவித்த பெருமான்;
மேவிய வெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேத      முதலானை;
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப, துறைக் கெண்டை மிளிர்ந்து, கயல்      துள்ளி விளையாட,
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.041  
முது வாய் ஓரி கதற,  
Tune - கொல்லிக்கௌவாணம்   (Location: திருக்கச்சூர் ஆலக்கோயில் God: தினம்விருந்திட்டநாதர் Goddess: கன்னியுமையம்மை)

முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே!
மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா!
கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே?
அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

[1]
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.042  
எறிக்கும் கதிர் வேய் உரி  
Tune - கொல்லிக்கௌவாணம்   (Location: திருவெஞ்சமாக்கூடல் God: விகிர்தேசுவரர் Goddess: விகிர்தேசுவரி)

எறிக்கும் கதிர் வேய் உரி முத்த(ம்)மொடு, ஏலம்(ம்), இலவங்கம், தக்கோலம், இஞ்சி,
செறிக்கும் புனலுள் பெய்து கொண்டு, மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்
முறிக்கும் தழை மா முடப்புன்னை, ஞாழல், குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா,
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

[1]
வஞ்சி நுண் இடையார் மயில் சாயல் அன்னார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே” என்று தான் விரும்பி,
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர் கோன்-வனப் பகை அப்பன், வன் தொண்டன்- சொன்ன
செஞ்சொல்-தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.043  
நஞ்சி, இடை இன்று நாளை  
Tune - கொல்லிக்கௌவாணம்   (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)

நஞ்சி, இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்!
பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்!
முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!

[1]
எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என் சொலார்?
பத்தியினால் இடுவார் இடைப் பலி கொண்மினோ!
எத்திசையும் திரை ஏற மோதிக் கரைகள் மேல்
முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.044  
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது  
Tune - கொல்லிக்கௌவாணம்   (Location: திருஅஞ்சைக்களம் God: Goddess: )

முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்;
நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்;
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால்
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?

[1]
காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக் கண்டத்து,
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய
ஆயின சீர்ப் பகை ஞானி அப்பன், அடித்தொண்டன் தான்,
ஏசின பேசுமின், தொண்டர் காள், எம்பிரானையே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.045  
காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்  
Tune - கொல்லிக்கௌவாணம்   (Location: திருஆமாத்தூர் God: அழகியநாதர் Goddess: அழகியநாயகியம்மை)

காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன்; ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆட்-
பூண்டனன் பூண்டனன்; பொய் அன்று; சொல்லுவன்; கேண்மின்கள்:
மீண்டனன் மீண்டனன், வேதவித்து அல்லாதவர்கட்கே.

[1]
உற்றனன், உற்றவர் தம்மை ஒழிந்து, உள்ளத்து உள்பொருள்
பற்றினன், பற்றினன், பங்கயச் சேவடிக்கே செல்ல;
அற்றனன் அற்றனன்; ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆட்-
பெற்றனன் பெற்றனன், பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.046  
பத்து ஊர் புக்கு, இரந்து,  
Tune - கொல்லிக்கௌவாணம்   (Location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) God: காயாரோகணேசுவரர் Goddess: நீலாயதாட்சியம்மை)

பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, | பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்;
செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; | செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்;
முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-|அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[1]
மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்;| மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்;
கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்!| கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை   உண்டேல்,
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர்| பொன் பூவும் பட்டிகையும் புரிந்து     அருள வேண்டும்;
கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.047  
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!  
Tune - பழம்பஞ்சுரம்   (Location: திருவாரூர் God: Goddess: )

காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்!
கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே!
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே!
மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!

[1]
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி,
மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி-
தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.048  
மற்றுப் பற்று எனக்கு இன்றி,  
Tune - பழம்பஞ்சுரம்   (Location: திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் God: கொடுமுடிநாதர் Goddess: பண்மொழியாளம்மை)

மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[1]
கோணிய பிறை சூடியை, கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானை, பிஞ்ஞகப்பித்தனை, பிறப்பு இ (ல்)லியை,
பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை, படப்பாம்பு அரை-
நாணனை, தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.049  
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,  
Tune - பழம்பஞ்சுரம்   (Location: திருமுருகன்பூண்டி God: ஆவுடைநாயகர் Goddess: ஆவுடைநாயகியம்மை)

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி,
திடுகு மொட்டு எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

[1]
முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மா நகர்வாய்ப்
பந்து அணை விரல் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச்
சிந்தையில் சிவ தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு
எந்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.050  
சித்தம்! நீ நினை! என்னொடு  
Tune - பழம்பஞ்சுரம்   (Location: திருப்புனவாயில் God: பழம்பதிநாயகர் Goddess: பரங்கருணைநாயகியம்மை)

சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்!
மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி,
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.

[1]
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை
அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன
மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க்
குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.051  
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்  
Tune - பழம்பஞ்சுரம்   (Location: திருவாரூர் God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)

பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
பொத்தின நோய் அது இதனைப் பொருள் அறிந்தேன்; போய்த் தொழுவேன்;
முத்தனை, மாமணி தன்னை, வயிரத்தை, மூர்க்கனேன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

[1]
ஏழ் இசை ஆய், இசைப் பயன் ஆய், இன் அமுது ஆய், என்னுடைய
தோழனும் ஆய், யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி,
மாழை ஒண் கண் பரவையைத் தந்து ஆண்டானை, மதி இல்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.052  
முத்தா! முத்தி தர வல்ல  
Tune - பழம்பஞ்சுரம்   (Location: திருவாலங்காடு (பழையனூர்) God: ஊர்த்துவதாண்டவேசுவரர் Goddess: வண்டார்குழலியம்மை)

முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை பங்கா!
சித்தா! சித்தித் திறம் காட்டும் சிவனே! தேவர் சிங்கமே!
பத்தா! பத்தர் பலர் போற்றும் பரமா! பழையனூர் மேய
அத்தா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

[1]
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன், பழையனூர் மேய
அத்தன், ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பு ஆகிச்
சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்-
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.053  
மரு ஆர் கொன்றை மதி  
Tune - பழம்பஞ்சுரம்   (Location: திருக்கடவூர் மயானம் God: பிரமபுரீசுவரர் Goddess: மலர்க்குழல்மின்னம்மை)

மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல
வருவார், விடை மேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ;
திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும்,
பெருமான்-கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[1]
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து,
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்
நாடி, நாவல் ஆரூரன் நம்பி சொன்ன நல்-தமிழ்கள்
பாடும் அடியார், கேட்பார் மேல், பாவம் ஆன பறையுமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.054  
அழுக்கு மெய் கொடு உன்  
Tune - தக்கேசி   (Location: திருவொற்றியூர் God: படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் Goddess: வடிவுடையம்மை)

அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்; அதுவும் நான் படப் பாலது ஒன்று   ஆனால்,
பிழுக்கை வாரியும் பால் கொள்வர்; அடிகேள்! பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்!
வழுக்கி வீழினும் திருப் பெயர் அல்லால், மற்று நான் அறியேன், மறு மாற்றம்;
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .  

[1]
ஓதம் வந்து உலவும் கரை தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை, நாளும்
ஞாலம் தான் பரவப்படுகின்ற நால் மறை அங்கம் ஓதிய நாவன்-
சீலம் தான் பெரிதும் மிக வல்ல சிறுவன், வன் தொண்டன், ஊரன்-உரைத்த
பாடல் பத்து இவை வல்லவர் தாம் போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.055  
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,  
Tune - தக்கேசி   (Location: திருப்புன்கூர் God: சிவலோகநாதர் Goddess: சொக்கநாயகியம்மை)

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக,
வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு    அடியேன்,
எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .

[1]
கம்பம் மால் களிற்றின்(ன்) உரியானை, காமற் காய்ந்தது ஓர் கண் உடையானை,
செம்பொனே ஒக்கும் திரு உருவானை, செழும் பொழில்-திருப் புன்கூர் உளானை,
உம்பர் ஆளியை, உமையவள் கோனை, ஊரன்-வன்தொண்டன்-உள்ளத்தால் உகந்து
அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு-ஐந்தும் வல்லவர் அருவினை இலரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.056  
ஊர்வது ஓர் விடை ஒன்று  
Tune - தக்கேசி   (Location: திருநீடூர் God: சோமநாதேசுவரர் Goddess: வேயுறுதோளியம்மை)

ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை, ஒண்நுதல்-தனிக் கண் நுதலானை,
கார் அது ஆர் கறை மாமிடற்றானை, கருதலார் புரம் மூன்று எரித்தானை,
நீரில் வாளை, வரால், குதி கொள்ளும் நிறை புனல் கழனிச் செல்வம் நீடூர்ப்
பார் உளார் பரவித் தொழ நின்ற பரமனை, பணியா விடல் ஆமே?

[1]
அல்லல் உள்ளன தீர்த்திடுவானை, அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை,
கொல்லை வல் அரவம்(ம்) அசைத்தானை, கோலம் ஆர் கரியின்(ன்) உரியானை,
நல்லவர்க்கு அணி ஆனவன் தன்னை, நானும் காதல் செய்கின்ற பிரானை,
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே?

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.057  
தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை  
Tune - தக்கேசி   (Location: திருவாழ்கொளிபுத்தூர் God: மாணிக்கவண்ணர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)

தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை என்னை நினைக்கத் தருவானை,
கொலைக் கை யானை உரி போர்த்து உகந்தானை, கூற்று உதைத்த(க்) குரை சேர் கழலானை,
அலைத்த செங்கண் விடை ஏற வல்லானை, ஆணையால் அடியேன் அடிநாயேன்-
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

[1]
திருந்த நால்மறை பாட வல்லானை, தேவர்க்கும் தெரிதற்கு அரியானை,
பொருந்த மால்விடை ஏற வல்லானை, பூதிப்பை புலித்தோல் உடையானை,
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன், ஆர் உயிர்க்கு எல்லாம்
மருந்து அனான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.058  
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை  
Tune - தக்கேசி   (Location: சீர்காழி God: பிரமபுரியீசுவரர் Goddess: திருநிலைநாயகியம்மை)

சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை வகுத்து, தன் அருள் தந்த எம் தலைவனை; மலையின்
மாதினை மதித்து, அங்கு ஒர் பால் கொண்ட மணியை; வருபுனல் சடை இடை வைத்த எம்மானை;
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை; எண் வகை ஒருவனை; எங்கள் பிரானை;
காதில் வெண்குழையனை; கடல் கொள மிதந்த கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .

[1]
செழு மலர்க் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு
அழும் மலர்க் கண் இணை அடியவர்க்கு அல்லால், அறிவு அரிது, அவன் திருவடியிணை இரண்டும்;
கழுமல வள நகர்க் கண்டுகொண்டு, ஊரன்-சடையன் தன் காதலன்-பாடிய பத்தும்
தொழு மலர் எடுத்த கை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையும் சூழகிலாவே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.059  
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்  
Tune - தக்கேசி   (Location: திருவாரூர் God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை,
பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

[1]
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை, நச்சு அரவு ஆர்த்த
பட்டியை, பகலை, இருள் தன்னை, பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை,
கட்டியை, கரும்பின் தெளி தன்னை, காதலால் கடல் சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை, மறக்கலும் ஆமே?.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.060  
கழுதை குங்குமம் தான் சுமந்து  
Tune - தக்கேசி   (Location: திருவிடைமருதூர் God: மருதீசுவரர் Goddess: நலமுலைநாயகியம்மை)

கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால், கைப்பர், பாழ் புக; மற்று அது போலப்
பழுது நான் உழன்று உள்-தடுமாறிப் படு சுழித்தலைப் பட்டனன்; எந்தாய்!
அழுது நீ இருந்து என் செய்தி? மனனே! அங்கணா! அரனே! எனமாட்டா
இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .

[1]
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும்
இரைக்கும் காவிரித் தென்கரை தன்மேல் இடைமருது(வ்) உறை எந்தைபிரானை,
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை, உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள்,
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி, நாதன் சேவடி நண்ணுவர் தாமே. .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.061  
ஆலம் தான் உகந்து அமுது  
Tune - தக்கேசி   (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)

ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[1]
எள்கல் இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு,
வெள்ளம் காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.062  
புற்றில் வாள் அரவு ஆர்த்த  
Tune - தக்கேசி   (Location: திருக்கோலக்கா God: சத்தபுரீசுவரர் Goddess: ஓசைகொடுத்தநாயகியம்மை)

புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை; பூதநாதனை; பாதமே தொழுவார்
பற்று வான்துணை; எனக்கு எளி வந்த பாவநாசனை; மேவ(அ)ரியானை;
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் பொன்ற, வென்றி மால்வரை அரி அம்பா,
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

[1]
கோடரம் பயில் சடை உடைக் கரும்பை, கோலக் காவுள் எம்மானை, மெய்ம் மானப்
பாடர் அம் குடி அடியவர் விரும்பப் பயிலும் நாவல் ஆரூரன்-வன்தொண்டன்-
நாடு இரங்கி முன் அறியும் அந் நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர்
காடு அரங்கு என நடம் நவின்றான் பால் கதியும் எய்துவர்; பதி அவர்க்கு அதுவே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.063  
மெய்யை முற்றப் பொடிப் பூசி  
Tune - தக்கேசி   (Location: பொது -திருமுதுகுன்றம் God: Goddess: )

மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர் நம்பி, வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி,
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி, கண்ணும் மூன்றும் உடையாய் ஒரு நம்பி,
செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம் தீ எழச் செற்றது ஓர் வில்லால்
எய்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

[1]
கரக்கும் நம்பி, கசியாதவர் தம்மை; கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம்
பெருக்கும் நம்பி; பெருகக் கருத்தா...

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.064  
நீறு தாங்கிய திரு நுதலானை,  
Tune - தக்கேசி   (Location: திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) God: திருநந்தீசுவரர் Goddess: இளங்கொம்பம்மை)

நீறு தாங்கிய திரு நுதலானை, நெற்றிக் கண்ணனை, நிரை வளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையினானை, குற்றம் இ(ல்)லியை, கற்றை அம் சடை மேல்
ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு அரிய சோதியை, வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே!.

[1]
நீடு பொக்கையின் பிறவியைப் பழித்து, நீங்கல் ஆம் என்று மனத்தினைத் தெருட்டி,
சேடு உலாம் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தின திருவடி இணை தான்
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி, வன் தொண்டன், ஊரன்-உரைத்த
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதிப் பயனே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.065  
திருவும், வண்மையும், திண் திறல்  
Tune - தக்கேசி   (Location: திருநின்றியூர் God: இலட்சுமிவரதர் Goddess: உலகநாயகியம்மை)

திருவும், வண்மையும், திண் திறல் அரசும், சிலந்தியார் செய்த செய் பணிகண்டு-
மருவு கோச்செங்கணான் தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன்-
பெருகு பொன்னி வந்து உந்து பல் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணி,
தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றி, திரட்டும் தென் திரு நின்றியூரானே! .

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.066  
மறையவன்(ன்) ஒரு மாணி வந்து  
Tune - தக்கேசி   (Location: திருவாவடுதுறை God: மாசிலாமணியீசுவரர் Goddess: ஒப்பிலாமுலையம்மை)

மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய, வாரம் ஆய், அவன் ஆர் உயிர் நிறுத்தக்
கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டு கண்டு, அடியேன்,
இறைவன், எம்பெருமான் என்று எப்போதும் ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன்
அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.067  
ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,  
Tune - தக்கேசி   (Location: திருவலிவலம் God: மனத்துணைநாதர் Goddess: மாழையங்கண்ணியம்மை)

ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், உலகு எல்லாம் ஓங்காரத்து உரு ஆகி நின்றானை;
வானம் கைத்தவர்க்கும்(ம்) அளப்ப(அ)ரிய வள்ளலை; அடியார்கள் தம் உள்ளத்
தேன், அங்கத்து அமுது, ஆகி, உள் ஊறும் தேசனை; நினைத்தற்கு இனியானை;
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

[1]
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து, நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று,
தோன்று தோள்மிசைக் களேபரம் தன்னைச் சுமந்த மா விரதத்த கங்காளன்;
சான்று காட்டுதற்கு அரியவன்; எளியவன்தன்னை; தன் நிலாம் மனத்தார்க்கு
மான்று சென்று அணையாதவன் தன்னை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.068  
செம்பொன் மேனி வெண் நீறு  
Tune - தக்கேசி   (Location: திருநள்ளாறு God: தெர்ப்பாரணியயீசுவரர் Goddess: போகமார்த்தபூண்முலையம்மை)

செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை, கரிய கண்டனை, மால் அயன் காணாச்
சம்புவை, தழல் அங்கையினானை, சாமவேதனை, தன் ஒப்பு இலானை,
கும்ப மாகரியின்(ந்) உரியானை, கோவின் மேல் வரும் கோவினை, எங்கள்
நம்பனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

[1]
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை, நாவலூர்ச் சிங்கடி தந்தை,
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது? என்று வனப் பகை அப்பன், ஊரன், வன்தொண்டன்-
சிறந்த மாலைகள் அஞ்சினோடு அஞ்சும் சிந்தையுள் உருகிச் செப்ப வல்லார்க்கு
இறந்து போக்கு இல்லை, வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள், இனிதே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.069  
திருவும் மெய்ப் பொருளும் செல்வமும்,  
Tune - தக்கேசி   (Location: வடதிருமுல்லைவாயில் God: மாசிலாமணியீசுவரர் Goddess: கொடியிடைநாயகியம்மை)

திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள் என்று எண்ணி,
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்;
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

[1]
சொல்ல(அ)ரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு,
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு, அருளிய இறைவனே! என்றும்
நல்லவர் பரவும் திரு முல்லை வாயில் நாதனே! நரை விடை ஏறீ!
பல் கலைப் பொருளே! படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.070  
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!  
Tune - தக்கேசி   (Location: திருவாவடுதுறை God: மாசிலாமணியீசுவரர் Goddess: ஒப்பிலாமுலையம்மை)

கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே!
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா!
செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள்
அங்கணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[1]
வெண்தலை, பிறை, கொன்றையும், அரவும், வேரி மத்தமும், விரவி முன் முடித்த
இண்டை மா மலர்ச் செஞ்சடையானை; ஈசனை; திரு ஆவடுதுறையுள்
அண்டவாணனை; சிங்கடி அப்பன்-அணுக்க வன் தொண்டன்-ஆர்வத்தால் உரைத்த
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும்(ம்) அறுப்பாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.071  
யாழைப் பழித் தன்ன மொழி  
Tune - காந்தாரம்   (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: மறைக்காட்டீசுவரர் Goddess: யாழைப்பழித்தநாயகி)

யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன்,
பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில்
தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.

[1]
பார் ஊர் பல புடை சூழ் வளவயல் நாவலர் வேந்தன்
வார் ஊர் வன முலையாள் உமை பங்கன் மறைக்காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்(ம்) அடித்தொண்டர்
நீர் ஊர் தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர், தாமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.072  
எனக்கு இனித் தினைத்தனைப் புகல்  
Tune - காந்தாரம்   (Location: திருவலம்புரம் God: வலம்புரநாதர் Goddess: வடுவகிர்க்கண்ணம்மை)

எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்;
பனைக் கனி பழம் படும் பரவையின் கரை மேல்
எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும்
மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே.

[1]
குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர், கண்டு அடி வீழ்ந்தவர், கனை கழல்
தண்டு உடைத் தண்டிதன் இனம் உடை அர உடன்
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.073  
கரையும், கடலும், மலையும், காலையும்,  
Tune - காந்தாரம்   (Location: திருவாரூர் God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)

கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும், எல்லாம்
உரையில் விரவி வருவான்; ஒருவன்; உருத்திரலோகன்;
வரையின் மடமகள் கேள்வன்; வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன்; இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

[1]
ஆசை பல அறுக்கில்லேன்; ஆரையும் அன்றி உரைப்பேன்;
பேசில் சழக்கு அலால் பேசேன்; பிழைப்பு உடையேன், மனம் தன்னால்;
ஓசை பெரிதும் உகப்பேன்; ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.074  
மின்னும் மா மேகங்கள் பொழிந்து  
Tune - காந்தாரம்   (Location: திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் God: Goddess: )

மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம்  அடியார்
சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்  நாயேன்
என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை .

[1]
மங்கை ஓர்கூறு உகந்து, ஏறு உகந்து ஏறி, மாறலார் திரிபுரம் நீறு எழச் செற்ற
அம் கையான் கழல் அடி அன்றி, மற்று அறியான்-அடியவர்க்கு அடியவன், தொழுவன்,   ஆரூரன்-
கங்கை ஆர் காவிரித் துருத்தியார் வேள்விக்-குடி உளார், அடிகளைச் சேர்த்திய பாடல்
தம் கையால்-தொழுது, தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்று அமருலகம்   ஆள்பவரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.075  
மறைகள் ஆயின நான்கும், மற்று  
Tune - காந்தாரம்   (Location: திருவானைக்கா God: சம்புகேசுவரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)

மறைகள் ஆயின நான்கும், மற்று உள பொருள்களும், எல்லாத்-
துறையும், தோத்திரத்து இறையும், தொன்மையும், நன்மையும், ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை, நாளும்,
இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.

[1]
ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின்
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார், போய்,
ஏழுமா பிறப்பு அற்று(வ்) எம்மையும் ஆள் உடையாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.076  
பொருவனார்; புரிநூலர்; புணர் முலை  
Tune - பியந்தைக்காந்தாரம்   (Location: திருவாஞ்சியம் God: சுகவாஞ்சிநாதர் Goddess: வாழவந்தநாயகி)

பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு
மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.

[1]
செந்நெல் அங்கு அலங்(கு) கழனித் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும்
பொன் அலங்கல் நல் மாடப் பொழில் அணி நாவல் ஆரூரன்
பன் அலங்கல் நல் மாலை பாடுமின், பத்தர் உளீரே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.077  
பரவும் பரிசு ஒன்று அறியேன்  
Tune - காந்தாரபஞ்சமம்   (Location: திருவையாறு God: செம்பொற்சோதியீசுவரர் Goddess: அறம் வளர்த்த நாயகியம்மை)

பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்;
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன், நான்-
கரவு இல் அருவி கமுகு உண்ண, தெங்கு அம் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[1]
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்;
தேச வேந்தன் திருமாலும், மலர் மேல் அயனும், காண்கிலார்
தேசம் எங்கும் தெளித்து ஆடத் தெண்நீர் அருவி கொணர்ந்து எங்கும்
வாசம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.078  
வாழ்வு ஆவது மாயம்(ம்); இது  
Tune - நட்டபாடை   (Location: திருக்கேதாரம் God: கேதாரேசுவரர் Goddess: கேதாரேசுவரியம்மை)

வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்;
பாழ் போவது பிறவிக் கடல்; பசி, நோய், செய்த பறி தான்;
தாழாது அறம் செய்ம்மின்! தடங்கண்ணான் மலரோனும்
கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே!

[1]
நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன்,
யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன்,
தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த
பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.079  
மானும், மரை இனமும், மயில்  
Tune - நட்டபாடை   (Location: திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) God: பருவதநாதர் Goddess: பருவதநாயகியம்மை)

மானும், மரை இனமும், மயில் இனமும், கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனை நீர்களைப் பருகி,
பூ மா மரம் உரிஞ்சி, பொழில் ஊடே சென்று, புக்கு,
தேமாம் பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பத மலையே.

[1]
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன்
செல்லல்(ல்) உற அரிய சிவன் சீ பர்ப்பத மலையை
அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார்
ஒல்லைச் செல, உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.080  
நத்தார் புடை ஞானன்; பசு  
Tune - நட்டபாடை   (Location: திருக்கேதீச்சரம் God: கேதீசுவரர் Goddess: கௌரியம்மை)

நத்தார் புடை ஞானன்; பசு ஏறிந்(ன்); நனை கவுள் வாய்ப்
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன்;
பத்து ஆகிய தொண்டர் தொழு, பாலாவியின் கரைமேல்,
செத்தார் எலும்பு அணிவான்-திருக்கேதீச்சுரத்தானே.

[1]
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன் நகருள்
சிறை ஆர் பொழில் வண்டு யாழ் செயும் கேதீச்சுரத்தானை
மறை ஆர் புகழ் ஊரன்(ந்)-அடித் தொண்டன்(ந்)-உரை செய்த
குறையாத் தமிழ்பத்தும் சொலக் கூடா, கொடுவினையே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.081  
கொன்று செய்த கொடுமையால் பல,  
Tune - நட்டபாடை   (Location: திருக்கழுக்குன்றம் God: வேதகிரியீசுவரர் Goddess: பெண்ணினல்லாளம்மை)

கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே
நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்-
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!

[1]
பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம்,
கல்லில் வெள்ளை அருவித் தண் கழக்குன்றினை,
மல்லின் மல்கு திரள்தோள் ஊர வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.082  
ஊன் ஆய், உயிர் புகல்  
Tune - நட்டபாடை   (Location: திருச்சுழியல் (திருச்சுழி) God: இணைத்திருமேனிநாதர் Goddess: துணைமாலைநாயகியம்மை)

ஊன் ஆய், உயிர் புகல் ஆய், அகலிடம் ஆய், முகில் பொழியும்
வான் ஆய், அதன் மதி ஆய், விதி வருவான் இடம்-பொழிலின்
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும்-திருச் சுழியல்,
நானாவிதம் நினைவார்தமை நலியார், நமன்தமரே.

[1]
நீர் ஊர் தரு நிமலன், திருமலையார்க்கு அயல் அருகே
தேர் ஊர் தரும் அரக்கன் சிரம் நெரித்தான், திருச் சுழியல்
பேர் ஊர் என உறைவான், அடிப்பெயர் நாவலர்கோமான்
ஆரூரன-தமிழ்மாலைபத்து அறிவார் துயர் இலரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.083  
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,  
Tune - புறநீர்மை   (Location: திருவாரூர் God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)

அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்,
சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு,
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?

[1]
மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை
நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன்
பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார்
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.084  
தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,  
Tune - புறநீர்மை   (Location: திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) God: காளைநாதேசுவரர் Goddess: பொற்கொடியம்மை)

தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், சூது அன மென்முலையாள் பாகமும்,   ஆகி வரும்
புண்டரிகப் பரிசு ஆம் மேனியும்; வானவர்கள் பூசல் இடக் கடல் நஞ்சு உண்ட கருத்து   அமரும்,
கொண்டல் எனத் திகழும், கண்டமும்; எண்தோளும்; கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்;   கண்குளிரக்
கண்டு, தொழப்பெறுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[1]
கன்னலை, இன்னமுதை, கார் வயல் சூழ் கானப் பேர் உறை காளையை, ஒண் சீர் உறை தண் தமிழால்
உன்னி மனத்து அயரா, உள் உருகி, பரவும் ஒண் பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்,
பன்னும் இசைக்கிளவி பத்து இவை பாட வல்லார், பத்தர் குணத்தினராய், எத்திசையும்   புகழ,
மன்னி இருப்பவர்கள், வானின்; இழிந்திடினும், மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.085  
வடிவு உடை மழு ஏந்தி,  
Tune - புறநீர்மை   (Location: திருக்கூடலையாற்றூர் God: நெறிகாட்டுநாயகர் Goddess: புரிகுழலாளம்மை)

வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து,
பொடி அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்,
கொடி அணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[1]
கூடலையாற்றூரில் கொடி இடையவளோடும்
ஆடல் உகந்தானை, அதிசயம் இது என்று
நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்று அறுமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.086  
விடையின் மேல் வருவானை; வேதத்தின்  
Tune - சீகாமரம்   (Location: திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) God: பனங்காட்டீசுவரர் Goddess: அமிர்தவல்லியம்மை)

விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை;
அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா,
மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர்,
சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே!

[1]
பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை,
சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல்,
ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.087  
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்  
Tune - சீகாமரம்   (Location: திருப்பனையூர் God: சவுந்தரேசர் Goddess: பெரியநாயகியம்மை)

மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில்
பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர்,
தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே.

[1]
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில்,
பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர்,
வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன்
செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.088  
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்  
Tune - சீகாமரம்   (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகையம்மை)

நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் நால்மறைக்கு இடம் ஆய வேள்வியுள்
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை,
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும்(ம்) உடனே உறைவு இடம்
அம் பொன் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

[1]
வேத வேதியர், வேட நீதியர் ஓதுவார், விரி நீர் மிழலையுள்
ஆதி வீழி கொண்டீர்; அடியேற்கும் அருளுக! என்று
நாதகீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன்தொண்டன்நல்-தமிழ்
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.089  
பிழை உளன பொறுத்திடுவர் என்று  
Tune - சீகாமரம்   (Location: திருவெண்பாக்கம் (பூண்டி) God: வெண்பாக்கத்தீசுவரர் Goddess: கனிவாய்மொழியம்மை)

பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;
குழை விரவு வடி காதா! கோயில் உளாயே! என்ன,
உழை உடையான் உள் இருந்து, உளோம்; போகீர்! என்றானே!

[1]
மான் திகழும் சங்கிலியைத் தந்து, வரு பயன்கள் எல்லாம்
தோன்ற அருள் செய்து அளித்தாய் என்று உரைக்க, உலகம் எலாம்
ஈன்றவனே! வெண்கோயில் இங்கு இருந்தாயோ? என்ன,
ஊன்றுவது ஓர் கோல் அருளி, உளோம்; போகீர்! என்றானே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.090  
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,  
Tune - குறிஞ்சி   (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)

மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, மனனே! நீ வாழும் நாளும்
தடுத்து ஆட்டி, தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்;
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும், எரி அகலும்; கரிய பாம்பும்
பிடித்து ஆடி; புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[1]
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன்; பைங்கண் ஏற்றன்;
ஊர் ஊரன்; தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்;
ஆரூரன் தம்பிரான்; ஆரூரன்; மீ கொங்கில் அணி காஞ்சிவா அய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.091  
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்  
Tune - குறிஞ்சி   (Location: திருவொற்றியூர் God: படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் Goddess: வடிவுடையம்மை)

பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்-
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே.

[1]
ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவளச் சடையான்
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாட, கழியும், வினையே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.092  
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?  
Tune - குறிஞ்சி   (Location: திருப்புக்கொளியூர் (அவிநாசி) God: அவிநாசியப்பர் Goddess: பெருங்கருணைநாயகி)

எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்;
புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே
பற்று ஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே!

[1]
நீர் ஏற ஏறும் நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியை-
போர் ஏறு அது ஏறியை, புக்கொளியூர் அவிநாசியை,
கார் ஏறு கண்டனை,-தொண்டன் ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை, துன்பமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.093  
நீரும் மலரும் நிலவும் சடைமேல்  
Tune - குறிஞ்சி   (Location: திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) God: சௌந்தரேசர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)

நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்-
வாரும் அருவி மணி, பொன், கொழித்துச்
சேரும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[1]
குறியில் வழுவாக் கொடுங்கூற்று உதைத்த
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம்-
நெறியில் வழுவா நியமத்தவர்கள்
செறியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.094  
அழல் நீர் ஒழுகியனைய சடையும்,  
Tune - கௌசிகம்   (Location: திருச்சோற்றுத்துறை God: தொலையாச்செல்வர் Goddess: ஒப்பிலாம்பிகை)

அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்-
கழை நீர் முத்தும் ககைக்குவையும்
சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.

[1]
சுற்று ஆர் தரு நீர்ச் சோற்றுத்துறையுள்
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து
அற்றார் அடியார் அடி நாய் ஊரன்
சொல்-தான் இவை கற்றார் துன்பு இலரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.095  
மீளா அடிமை உமக்கே ஆள்  
Tune - செந்துருத்தி   (Location: திருவாரூர் God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)

மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

[1]
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.096  
தூ வாயா! தொண்டு செய்வார்  
Tune - பஞ்சமம்   (Location: திருவாரூர்ப்பரவையுண்மண்டளி God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)

தூ வாயா! தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா? கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும்,
நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
ஆவா! என் பரவையுள் மண்டளி அம்மானே!

[1]
கரந்தையும், வன்னியும், மத்தமும், கூவிளம்,
பரந்த சீர்ப் பரவையுள் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.097  
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்  
Tune - பஞ்சமம்   (Location: திருநனிப்பள்ளி God: நற்றுணையப்பர் Goddess: பர்வதராசபுத்திரி)

ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய
சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும்
ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும்
நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

[1]
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி,
கோலம் அது ஆயவனைக் குளிர் நாவல ஊரன் சொன்ன
மாலை மதித்து உரைப்பார், மண் மறந்து வானோர் உலகில்
சால நல் இன்பம் எய்தி, தவலோகத்து இருப்பவரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.098  
தண் இயல் வெம்மையினான்; தலையில்  
Tune - பஞ்சமம்   (Location: திருநன்னிலத்துப்பெருங்கோயில் God: Goddess: )

தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி,
பண் இயல் மென்மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன்
புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்ப
நண்ணிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

[1]
கருவரை போல் அரக்கன் கயிலை(ம்) மலைக்கீழ்க் கதற,
ஒருவிரலால் அடர்த்து, இன் அருள் செய்த உமாபதிதான்
திரை பொரு பொன்னி நன்நீர்த் துறைவன், திகழ் செம்பியர்கோன்,
நரபதி,-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.099  
பிறை அணி வாள் நுதலாள்  
Tune - பஞ்சமம்   (Location: திருநாகேச்சரம் God: செண்பகாரணியேசுவரர் Goddess: குன்றமுலையம்மை)

பிறை அணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ் கணிக்க
நிறை அணி நெஞ்சு அனுங்க(ந்), நீலமால்விடம் உண்டது என்னே?
குறை அணி குல்லை, முல்லை, அளைந்து(க்), குளிர் மாதவி மேல்
சிறை அணி வண்டுகள் சேர்-திரு நாகேச்சுரத்து அரனே!

[1]
குண்டரை, கூறை இன்றித் திரியும் சமண்சாக்கியப்பேய்-
மிண்டரை, கண்ட தன்மை விரவு ஆகியது என்னைகொலோ?
தொண்டு இரைத்து(வ்), வணங்கி, தொழில் பூண்டு, அடியார் பரவும்
தெண்திரைத் தண்வயல் சூழ் திரு நாகேச்சுரத்து அரனே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.100  
தான் எனை முன் படைத்தான்;  
Tune - பஞ்சமம்   (Location: திருக்கயிலாயம் God: Goddess: )

தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே
நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து,
வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்)
ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே.


[1]
ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை,
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன,
ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்,
ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 - Thirumurai   Pathigam 7.101  
பொன் ஆம் இதழி விரை  
Tune -   (Location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) God: Goddess: )

பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரிசடைமேல்
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே!-
துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துணைவண்டு
தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[1]
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர்; களித்தார் மதில் மூன்றும்
இறையில் எரித்தீர்; ஏழ் உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான்?-
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக்கோபுரத்து நெருக்க, மலர்ச்
சிறைவண்டு அறையும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[10]

Back to Top
   
7 - Thirumurai   Pathigam 7.102  
 
Tune -   (Location: God: Goddess: )

விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை குனிய வாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே! பரம யோகி!
கடைத்தலைப் புகுந்து நின்றோம்; கலிமறைக் காடு(ட்) அமர்ந்தீர்!
அடைத்திடும், கதவு தன்னை அப்படித் தாளி னாலே!

[1]
மண் தலத்து(து) அமணர் பொய்யும், தேரர்கள் பொழியும், மாறக்
கண்டனை; அடிகள்! என்றும் கலிமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
தண்டியைத் தானா வைத்தான் என்னும் அத் தன்மை யாலே
எண்திசைக்கு(கு) அறிய வைத்தாய், இக்கதவு(வு) அடைப்பித்து(து) அன்றே!

[10]

Back to Top
   
7 - Thirumurai   Pathigam 7.103  
 
Tune -   (Location: God: Goddess: )

அம்மானே! ஆனந்த வெள்ள மூர்த்தி! அருமறையுள் அருமறையின் பொருளே! வானோர்
தம்மால் ஒன்று(று) அறிவு(வு) அரிய சிவனும், மாலும், சதுமுகனும், உடன் ஆக விளங்கும் சோதி!
இம்மாயப் பிறப்பு(பு) ஆகி, உலகும் தானாய், இரவு(வு) ஆகிப் பகல் ஆகிக் கலந்து நின்ற
அம்மானே! அம்பரம் மீது(து) எழுந்து தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.

[1]
ஒட்டு(டு) இயல் ஆர் ஒருவடிவே உரைக்க என்றால் ஒளி உடைய திரு உருவம் பெரிய சோதி!
குட்டம், உடல் கொழுநோய்கள், வாத, பித்தம், கொடிய கயம்,-பாவத்தர் கூடக் கட்டி
இட்டம் உள விளையாட்டும் கோலம் காட்டி-இடர் இன்றி, விடக்கடலில் அடக்கை ஆக்கி,
அட்டகுணம் ஆய், ஆட்ட மூர்த்தி ஆனாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .

[10]

This page was last modified on Sun, 10 Mar 2024 22:40:27 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai number