சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.100   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   படை கொள் கூற்றம் வந்து,
பண் - நட்டராகம்   (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DR1a1S4558c
4.069   திருநாவுக்கரசர்   தேவாரம்   செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,
பண் - திருநேரிசை   (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=KeSjq_YinCA

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.100   படை கொள் கூற்றம் வந்து,  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருக்கோவலூர் வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு சிவானந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம்
விட்டபோதின்கண்,
இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே!
குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள்
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே.

[1]
கரவலாளர் தம் மனைக்கடைகள் தோறும் கால் நிமிர்த்து
இரவல் ஆழி நெஞ்சமே! இனியது எய்த வேண்டின், நீ!
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ் செய் கோவலூர்,
விரவி நாறு கொன்றையான், வீரட்டானம் சேர்துமே.

[2]
உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது அறிதிரேல்!
அள்ளல் சேற்றில் கால் இட்டு, அங்கு அவலத்துள்
அழுந்தாதே,
கொள்ளப் பாடு கீதத்தான், குழகன், கோவலூர் தனுள்
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.

[3]
கனைகொள் இருமல், சூலைநோய், கம்பதாளி, குன்மமும்,
இனைய பலவும், மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன்,
பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர்,
வினையை வென்ற வேடத்தான், வீரட்டானம் சேர்துமே.
[4]
உளம் கொள் போகம் உய்த்திடார், உடம்பு இழந்தபோதின்
கண்;
துளங்கி நின்று நாள்தொறும் துயரல், ஆழி நெஞ்சமே!
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த
கோவலூர்,
விளங்கு கோவணத்தினான், வீரட்டானம் சேர்துமே.

[5]
கேடு மூப்புச்சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும்,
ஆடு போல நரைகள் ஆய் யாக்கை போக்கு அது
அன்றியும்,
கூடி நின்று, பைம்பொழில் குழகன் கோவலூர்தனுள்
வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே.

[6]
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்
கண்,
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால்,
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த
கோவலூர்,
விரை கொள் சீர் வெண் நீற்றினான், வீரட்டானம் சேர்துமே.

[7]
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல், ஈளை, என்று இவை
ஊதல் ஆக்கை ஓம்புவீர்! உறுதி ஆவது அறிதிரேல்,
போதில் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனுள்,
வேதம் ஓது நெறியினான், வீரட்டானம் சேர்துமே.

[8]
ஆறு பட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கு ஒரு
கூறு பட்ட மேனியான், குழகன், கோவலூர் தனுள்
நீறு பட்ட கோலத்தான், நீலகண்டன், இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான், வீரட்டானம் சேர்துமே.

[9]
குறிகொள், ஆழி நெஞ்சமே! கூறை துவர் இட்டார்களும்,
அறிவு இலாத அமணர், சொல் அவத்தம் ஆவது
அறிதிரேல்,
பொறி கொள் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர்
தனில்,
வெறி கொள் கங்கை தாங்கினான், வீரட்டானம் சேர்துமே.

[10]
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன்,
பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால்,
அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண்
கோவலூர்தனில்,
விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.069   செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருக்கோவலூர் ; (திருத்தலம் அருள்தரு சிவானந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்;
எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!

[1]
தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகி
நிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்க மாட்டேன்; வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்-
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே!

[2]
வழித்தலைப் படவும் மாட்டேன்; வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன்; பாசம் அற்று, பரம! நான் பரவ மாட்டேன்,
இழித்திலேன், பிறவி தன்னை; என் நினைந்து இருக்க மாட்டேன்-
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர்க் கோவல் வீரட்டனீரே!

[3]
சாற்றுவர், ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி
காற்றுவர், கனலப் பேசி; கண் செவி மூக்கு வாயுள
ஆற்றுவர்; அலந்து போனேன், ஆதியை அறிவு ஒன்று இன்றி;
கூற்றுவர் வாயில் பட்டேன்-கோவல் வீரட்டனீரே!

[4]
தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன்; பரப்பு நோக்கிப் பல்மலர்(ப்) பாதம் முற்ற
அடுத்திலேன்; சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன்; கொடியவா, நான்! கோவல் வீரட்டனீரே!

[5]
மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும்
நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து,
காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே!

[6]
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா; ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடை இலேன்; என் செய்கேன், நான்? இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடை இலேன்; கொள்வதே, நான்! கோவல் வீரட்டனீரே!

[7]
பிச்சு இலேன், பிறவி தன்னைப் பேதையேன் ; பிணக்கம் என்னும்
ச்சுளே அழுந்தி வீழ்ந்து, துயரமே இடும்பை தன்னுள்
சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய், வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வது என்னே!-கோவல் வீரட்டனீரே!

[8]
நிணத்து இடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்;
மனத்து இடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்
கணத்து இடை ஆட்டப் பட்டு, காதலால் உன்னைப் பேணும்
குணத்து இடை வாழ மாட்டேன்-கோவல் வீரட்டனீரே!

[9]
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி,
பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list