சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.100
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை கொள் கூற்றம் வந்து, பண் - நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DR1a1S4558c |
4.069
திருநாவுக்கரசர்
தேவாரம்
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், பண் - திருநேரிசை (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KeSjq_YinCA |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.100  
படை கொள் கூற்றம் வந்து,
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கோவலூர் வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு சிவானந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம் விட்டபோதின்கண், இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே! குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள் விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே. | [1] |
கரவலாளர் தம் மனைக்கடைகள் தோறும் கால் நிமிர்த்து இரவல் ஆழி நெஞ்சமே! இனியது எய்த வேண்டின், நீ! குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ் செய் கோவலூர், விரவி நாறு கொன்றையான், வீரட்டானம் சேர்துமே. | [2] |
உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது அறிதிரேல்! அள்ளல் சேற்றில் கால் இட்டு, அங்கு அவலத்துள் அழுந்தாதே, கொள்ளப் பாடு கீதத்தான், குழகன், கோவலூர் தனுள் வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே. | [3] |
கனைகொள் இருமல், சூலைநோய், கம்பதாளி, குன்மமும், இனைய பலவும், மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன், பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர், வினையை வென்ற வேடத்தான், வீரட்டானம் சேர்துமே. | [4] |
உளம் கொள் போகம் உய்த்திடார், உடம்பு இழந்தபோதின் கண்; துளங்கி நின்று நாள்தொறும் துயரல், ஆழி நெஞ்சமே! வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர், விளங்கு கோவணத்தினான், வீரட்டானம் சேர்துமே. | [5] |
கேடு மூப்புச்சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும், ஆடு போல நரைகள் ஆய் யாக்கை போக்கு அது அன்றியும், கூடி நின்று, பைம்பொழில் குழகன் கோவலூர்தனுள் வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே. | [6] |
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின் கண், நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால், வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர், விரை கொள் சீர் வெண் நீற்றினான், வீரட்டானம் சேர்துமே. | [7] |
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல், ஈளை, என்று இவை ஊதல் ஆக்கை ஓம்புவீர்! உறுதி ஆவது அறிதிரேல், போதில் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனுள், வேதம் ஓது நெறியினான், வீரட்டானம் சேர்துமே. | [8] |
ஆறு பட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கு ஒரு கூறு பட்ட மேனியான், குழகன், கோவலூர் தனுள் நீறு பட்ட கோலத்தான், நீலகண்டன், இருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான், வீரட்டானம் சேர்துமே. | [9] |
குறிகொள், ஆழி நெஞ்சமே! கூறை துவர் இட்டார்களும், அறிவு இலாத அமணர், சொல் அவத்தம் ஆவது அறிதிரேல், பொறி கொள் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனில், வெறி கொள் கங்கை தாங்கினான், வீரட்டானம் சேர்துமே. | [10] |
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன், பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால், அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண் கோவலூர்தனில், விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.069  
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,
பண் - திருநேரிசை (திருத்தலம் திருக்கோவலூர் ; (திருத்தலம் அருள்தரு சிவானந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்; எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக் கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே! | [1] |
தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகி நிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் விலை கொடுத்து அறுக்க மாட்டேன்; வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்- குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே! | [2] |
வழித்தலைப் படவும் மாட்டேன்; வைகலும் தூய்மை செய்து பழித்திலேன்; பாசம் அற்று, பரம! நான் பரவ மாட்டேன், இழித்திலேன், பிறவி தன்னை; என் நினைந்து இருக்க மாட்டேன்- கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர்க் கோவல் வீரட்டனீரே! | [3] |
சாற்றுவர், ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி காற்றுவர், கனலப் பேசி; கண் செவி மூக்கு வாயுள ஆற்றுவர்; அலந்து போனேன், ஆதியை அறிவு ஒன்று இன்றி; கூற்றுவர் வாயில் பட்டேன்-கோவல் வீரட்டனீரே! | [4] |
தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு நீர்மைப் படுத்திலேன்; பரப்பு நோக்கிப் பல்மலர்(ப்) பாதம் முற்ற அடுத்திலேன்; சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம் கொடுத்திலேன்; கொடியவா, நான்! கோவல் வீரட்டனீரே! | [5] |
மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும் நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து, காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே! | [6] |
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் விடகிலா; ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் இடை இலேன்; என் செய்கேன், நான்? இரப்பவர் தங்கட்கு என்றும் கொடை இலேன்; கொள்வதே, நான்! கோவல் வீரட்டனீரே! | [7] |
பிச்சு இலேன், பிறவி தன்னைப் பேதையேன் ; பிணக்கம் என்னும் ச்சுளே அழுந்தி வீழ்ந்து, துயரமே இடும்பை தன்னுள் சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய், வாழ மாட்டாக் கொச்சையேன் செய்வது என்னே!-கோவல் வீரட்டனீரே! | [8] |
நிணத்து இடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்; மனத்து இடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் கணத்து இடை ஆட்டப் பட்டு, காதலால் உன்னைப் பேணும் குணத்து இடை வாழ மாட்டேன்-கோவல் வீரட்டனீரே! | [9] |
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ் இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி, பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார் குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே. | [10] |